23

23

காஸ்ச் பொயின்றில் பணம் எடுக்க முற்பட்டவரிடம் பணம் பறிமுதல்!

லண்டன் றெட் பிறிஜ் பிகைவ் லேனில் உள்ள பார்க்ளேய்ஸ் வங்கி காஸ்ச் பொயின்ரில் பணம் எடுக்க முற்பட்டவரின் பணத்தை இளைஞர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். மார்ச் 11 காலை பதினொரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் வங்கியின் CCTVயில் தெளிவாகப் பதிவாகி இருந்ததுடன் அவ்வாதாரங்கள் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளைச் செயலாளர் பொன் சிவசுப்பிரமணியம் அவர்களே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார். தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முற்பட்ட போது காஸ்ச் பொயின்ரில் இருந்து வந்த 300 பவுண்களையும் ஏற்கனவே அவர் வங்கியில் இருந்து எடுத்திருந்த 400 பவுண்களையும் அவரது வொல்லற்றையும் பறிகொடுத்துள்ளார் பொன் சிவசுப்பிரமணியம்.

தான் எதிர்பார்த்திராத வகையில் ஓரிரு நிமிடங்களுக்குள் நடந்த இந்தச் சம்பவத்தால் தனது வங்கிக் நடவடிக்கைகளை வங்கி உறைநிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார் பொன் சிவசுப்பிரமணியம். CCTVயில் சம்பவம் பதிவாகி இருந்த போதும் சம்பந்தப்பட்டவரைக் கைது செய்து தனது பணத்தை மீளப்பெற முடியுமா? என்பது சந்தேகம் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

ஏப்ரல் தேர்தலில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் 25 வீதத்தால் வீழ்ச்சி அடையலாம்!!! : த ஜெயபாலன்

gajendrakumar_ponnampalamSambanthan_R_TNAஏப்ரல் 8ல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படும் தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ் வாக்குகள் பெருமளவில் சிதறிச் செல்கின்ற நிலையில் உள்ளதால்  2010 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் வரை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2004 தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்து 23 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றிருந்தனர். இவர்களில் 22 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் ஒருவர் ஈபிடிபி யின் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டு இருந்தார். இத்தேர்தலில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படக் கூடிய தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 15 ஆகக் குறையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ஆயுத முனையில் இடம்பெற்ற போட்டி பெரும்பாலும் இருமுனையினதாக அமைந்ததால் தமிழ் வாக்குகள் சிதறுண்ணாமல் இருந்தது. அதனால் ஜனநாயகமற்ற அரசியல் பலம்வலுவானதாக அமைந்தது. ஆனால் இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் (ஜீனியர் விகடனில் மட்டுமே வாழ்கின்றனர்.) ஆயுத பலத்தினால் அவர்கள் கட்டியிருந்த ஒற்றுமை சிதறி அவர்களுடைய அரசியல் ஆதரவுத் தளம் ஈடாடியுள்ளது. அதனால் தமிழ் வாக்குகள் மிகவும் சிதறிப் போயுள்ளது.

2004 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் 9 ஆசனங்களுள் 9 ஆசனங்களும், வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுள் 5 ஆசனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுள் 4 ஆசனங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுள் 2 ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுள் ஒரு ஆசனமும் தமிழ் பிரதிநிதிகளுக்கு அதாவது ஈபிடிபி கட்சிக்கு ஒரு ஆசனமும் ஏனையவை விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் கிடைத்தது. வடக்கு, கிழக்குப் பிரதேசத்துக்குரிய 31 ஆசனங்களுள் 23 ஆசனங்கள் தமிழ் பிரதிநிதிகளுக்குக் கிடைத்தது. இம்முறை 15 ஆசனங்களாகக் குறைந்துவிடலாம் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக மே 18க்குப் பின்னான அரசியலில் ஆர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இருந்து ஓரம்கட்டியது. அதனால் அவர்களில் கிசோர் சிவநாதன், கனகரத்தினம், க தங்கேஸ்வரி ஆகியோர் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணிக்குச் சென்றனர். ந சிறிகாந்தா, எம்கே சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஜனாதிபதித் தேர்தலின் போதே இடதுசாரி முண்ணணியுடன் இணைந்து கொண்டனர். ஏனையவர்கள் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டனர். இவர்கள் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் கட்சியின் பட்டியலில் போட்டியிடுகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இந்த முன்னணியின் குறிப்பான நபர்கள். குறிப்பாக வன்னி யுத்தத்தின் போது வெளிநாடுகளில் தங்கி இருந்து வெளிநாட்டில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரண்டறக் கலந்த இவர்களுக்கு வடக்கு கிழக்கில் ஆதரவுத் தளம் இருக்கின்றதோ இல்லையோ புலம்பெயர்ந்த நாடுகளில் பலமான ஆதரவுத் தளம் உள்ளது.

போட்டியிடுகின்ற கட்சிகள்:

தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் (தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி), தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட், ஈழவர் ஜனநாயகக் கட்சி, இடதுசாரி முன்னணி, என தமிழர் தரப்பு கட்சிகளும் அத்துடன் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி உட்பட சிங்கள கட்சிகளிலும் பல தமிழர்கள் போட்டியிடுகின்றனர். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் போட்டியிடுகிறது.

தேர்தல் களம்:

யாழ் மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 324 வேட்பாளர்கள், 15 அரசியல் கட்சிகளிலும்; 12 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். 250 000 குறைவானவர்களே யாழ் மாவட்டத்தில் வாக்களிக்க கூடியவர்களாக உள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 6 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 253 வேட்பாளர்கள் 16 அரசியல் கட்சிகளிலும் 12 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2 66 976.

திருகோணமலை, மூதூர், சேருவல தொகுதிகளை உள்ளடக்கிய திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 217 வேட்பாளர்கள்  17 அரசியல் கட்சிகளிலும், 14 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். 241,133 வாக்காளர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.

கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதிகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 360 வேட்பாளர்கள்  17 அரசியல் கட்சிகளிலும் 28 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்பு  மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 333 644 ஆகும். 

அம்பாறை மாவட்டத்தில் 7 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 660 வேட்பாளர்கள் 18 அரசியல் கட்சிகளிலும் 48 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 420 835.

இலங்கையிலேயே அதிகூடுதலான பிரிவுகள் போட்டியிடுகின்ற மாவட்டமாக அம்பாறையும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பும் உள்ளது.

யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் துரத்தியடிக்கப்பட்டதால் இழக்கப்பட்ட அவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் இத்தடவை அவர்களுக்கு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டி:

வடக்கு கிழக்கில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்த ஏகபிரதிநித்ததுவம் இத்தேர்தலில் அடிபட்டுப் போய்விடும் நிலையே உள்ளது. இருந்தாலும் வடக்கு கிழக்கில் கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 முதல் 10 வரையிலான ஆசனங்களை வடக்கு கிழக்கில் தக்க வைக்கும் என எதிர்வு கூறல்கள் உள்ளது. தமிழ் தேசியத்திற்கான முன்னணி ஆர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் சவாலாக அமையும். தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தாங்கள் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த ஆர் சம்பந்தனை திருகோணமலையில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தீவிரமாக உள்ளது. இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவு ஊடகங்கள் பெரும் ஆதரவை வழங்கி உள்ளன. புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளத்தால் உருவாக்கப்பட்ட புதிய துரோகியாக ஆர் சம்பந்தன் உள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர் குரலை தாயக மக்கள் செவிமடுக்கின்றார்களா என்பதும் இத்தேர்தலில் தெரிந்துவிடும்.

முல்லைத்தீவில் மீள்குடியேறிய மக்களுக்காக 3700 வீடுகள் – 2 ஆயிரம் வீடுகளை புனரமைக்கவும் திட்டம்

house.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்போருக்காக 3700 வீடுகளை புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி செல்வராஜா தெரிவித்தார். இதேவேளை மோதல்களின் போது சேதமடைந்த 2 ஆயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் இடம்பெயர்ந்தோருக்கு பல்வேறு உதவி களைச் செய்யவுமென முன்வந்த தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் 15க்கு ஜனாதிபதி செயலணி அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் யுஎன். ஹெபிட்டாட், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், நர்ட் ஆகிய தன்னார்வு நிறுவனங்களே வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளன.