25

25

புலத்தில் வேகாத பருப்புகள் இலங்கைத் தேர்தல் களத்தில்

Seveal_K_JHC_in_Jaffnaயாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – யுகே யின் தலைவர் க செவ்வேள் யாழில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றார். பெரும்பாலும் ஆளும்கட்சியின் பட்டியலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட க செவ்வெள் தற்போது சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அல்லது களம் இறக்கப்பட்டு உள்ளார்.

தன்னை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என விளம்பரப்படுத்தும் க செவ்வேள் லண்டனில் சட்டத்தரணி அல்ல என்றும் சட்ட உதவியாளராகவே பணியாற்றி வருகின்றார்.ஆனால் க செவ்வேளுக்காக யாழில் ஒட்டப்பட்ட பிரசுரங்கள் அவரை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என வர்ணித்து இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் சினிமாத்துறையிலும் ஈடுபட்ட க செவ்வேள் சில படங்களையும் தயாரித்து இருந்தார். இவர் படத் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்த வேளையில் இவரது பொறுப்பில் இருந்த அரசியல் தஞ்ச வழக்குகள் சில பாதிக்கப்பட்டு இருந்தது.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மானவரான இவர் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு விசனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் அது அவருடைய அரசியல் தெரிவு என்ற அடிப்படையிலும் பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு உறுப்பினர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என்ற கடப்பாட்டை கொண்டிராததால்  க செவ்வேளிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இன்னும் சிலரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
க செவ்வேளை விடவும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் அருளர், முன்னால் தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் கிறிஸ் சரவணன் ஆகியோரும் லண்டனில் இருந்து சென்று தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

நான் வெறும் வாய்ச்சொல் வீரனல்ல; சொன்னதை செய்து காட்டும் செயல் வீரன் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

president.jpgவெறும் வார்த்தைகளுக்குள் மட்டும் அடங்கிவிடும் ஜனாதிபதியாக இருக்க நான் விரும்பவில்லை. நாட்டை ஒன்றிணைப்பதாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதைப் போன்று அபிவிருத்தி அடையும் தேச மொன்றை கட்டியெழுப்பும் திட்ட த்தையும் வெற்றிகரமாக முடிக்கவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (23) கம்பஹா மாவட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்தோரையும் அலரிமாளிகையில் சந்தித்தார். சுமார் ஆறாயிரம் பேர் வரை இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அங்கு பேசியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டின் எதிர்கால பரம்பரைக்காக அதனை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், எந்தவொரு நிபந்தனைக்கும் அடிபணியாது பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாடு முழுவதும் நடைமுறை ப்படுத்தியது இக்காரணமாகத்தான். நல்லதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவை அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் அங்கு மேலும் கூறியதாவது,

யுத்தத்தில் வெற்றிபெறுவோம் என்பதை நான் அறிந்திருந்தேன். அதற்கான அனைத்து சவால்களுக்கும் நாம் வெற்றிகரமாக முகம் கொடுத்து அவற்றை வெற்றி கண்டோம். இந்த வெற்றிகளை யடுத்து நாட்டின் மற்றொரு பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொள்ள நாம் தயாரானோம்.

மின்சார பிரச்சினைக்கு முகங்கொடுக்க நாம் பாரிய மின்சார திட்டங்களை ஆரம்பித்தோம். வாக்குகள் கிடைக்காமற் போகும் என்ற அச்சத்தால் நுரைச்சோலை மற்றும் மேல் கொத்மலை ஆகிய திட்டங்களை அன்று ஆரம்பிக்காமல் இருந்தனர். ஆனால் வாக்குகளுக்காக நாட்டின் அபிவிருத்தியை பணயம் வைப்பதா இல்லை இவை இரண்டையும் பாதுகாத்துக்கொண்டு நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாக்குகளை விட எதிர்கால பரம்பரைக்காக நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு நடைபெறாவிட்டால், நாம் வெறும் வார்த்தைகளுக்குள் அடங்கிப் போன ஜனாதிபதியாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி நான் இருக்க மாட்டேன் நான் இந்த நாட்டுக்காக செயலாற்ற வேண்டும்.

நெடுஞ்சாலைகள் இன்றி, மின்சாரம் இன்றி, நாட்டில் அபிவிருத்தி இன்றி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. இவை இருந்தால்தான் முதலீட் டாளர்கள் வருவார்கள். இவை அனைத் தையும் சேர்த்துதான் நாட்டைக் கட்டி யெழுப்ப வேண்டும்.

எமது அடிப்படை நோக்கம் நாட்டின் அபிவிருத்தியேயாகும். அது உங்களுக்கு இல்லை. உங்கள் குழந்தைகளுக்கான உங்கள் கடமை. இந்தப் பின்னணியை என்னால் தனித்து செய்ய முடியாது. மஹிந்த சிந்தனையில் நாம் அனைத்து பிரிவுகள் பற்றியும் கூறியுள்ளோம். கலைகள், அபிவிருத்தி, சரித்திரம் இவை அனைத் தைப் பற்றியும் கூறியுள்ளோம்.

நாட்டின் சரித்திரம் தெரியாமல் நாம் எதைப்பற்றி பேசுவது? இன்று சிலருக்கு நாட்டின் சரித்திரம் பற்றிய அறிவு இல்லை. சரித்திரம் பற்றி தெரியாமல் எதிர்காலத்துக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

உலக பொருளாதாரத்துடன் கூட்டுறவை கட்டியெழுப்புவதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்க தாக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் அதே நேரம் இந்த நாட்டை அடிமைப்படுத்த எவருக்கும் இடமளிக்க தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜெனரலின் பேட்டி ஊடகங்களுக்கு கசிந்து சென்றது எவ்வாறு? விசாரணையை ஆரம்பித்தது அரசு

sarath_fonseka-02.jpgஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சார்பான பேட்டிகள் எவ்வாறு ஊடகங்களுக்குக் கசிந்து சென்றன என்பது தொடர்பான முழு அளவிலான விசாரணையை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. கடற்படைத் தலைமையகத்தில் கடுமையான பாதுகாப்பில் இராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் பொன்சேகாவின் பேட்டிகள் எவ்வாறு ஊடகங்களைச் சென்றடைந்தன என்பது தொடர்பாக முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சிக்கு பொன்சேகாவின் கடிதங்கள் கடத்திச் செல்லப்பட்டதாகக் கடந்தவாரம் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இராணுவ நீதிமன்றத்தில் தான் எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என்று பொன்சேகா தெரிவித்ததாகப் பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“எந்தக் குற்றச்சாட்டுகளும் உண்மையற்றவை. அவரிலும் பார்க்க நான் அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதால் அவர் என்மீது பொறாமை கொண்டுள்ளார். அவர் மோசடி செய்தது தொடர்பாக நாம் அவருக்குச் சவால் விடுக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்’ என்று ஜெனரல் கூறியிருந்தார். நான் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக நம்புவதாகவும் தமது வாழ்வுக்கு ஆபத்து என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்தப் பேட்டிகள் தொடர்பாக டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குளுகல்ல பேட்டிகள் எவ்வாறு கசிந்து சென்றது தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்தும் என்று தெரிவித்ததுடன், விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, சனல் 4 க்கு ஜெனரலின் கடிதத்தைக் கசிய விட்டதற்கு எதிரணியே பொறுப்பு என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், ஜெனரல் பொன்சேகாவின் கடிதத்தை பிரிட்டனின் சனல்4 க்கு வழங்கியது ஜே.வி.பி.யின் வேலையென்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்தவாரம் சாடியிருந்தார்.

தனுனவை கைது செய்ய உதவுங்கள்; 10 இலட்சம் ரூபா சன்மானம்

danu.jpgகோட்டை மாஜிஸ்திரேட் நீதவானால் கி 60 / 2010 என்ற வழக்கின் கீழ் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்துவரும் தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கு உரிய தகவல்களை வழங்குபவருக்கு 10 இலட்ச ரூபாவை சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள சுவரொட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேலே உள்ள படத்தில் காணப்படும், 2/12, மங்கள வீதி, மெனிங் டவுன் மாடி வீடு, கொழும்பு – 08 என்ற விலாசத்தில் வசிக்கும் தனுன திலகரட்ன என்ற நபரை கைதுசெய்வதற்கு உரிய தகவலை வழங்குபவருக்கு 10 இல ட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும். தகவல் வழங்க விரும்பு பவர்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் -011– 2328138, பணிப்பாளர்-011– 2447319, பொலிஸ் அதிகாரி –011– 2324994, (24 மணி நேரம்), உதவி பொலிஸ் அதிகாரி – 011 – 2440157, கட்டுப் பாட்டு அறை-011-2422176, பெக்ஸ் –011-2380381, பொது எண் –011–2320141-5 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்று அந்த சுவரொட்டியில் கூறப்பட் டுள்ளது.

வவுனியாவில் ஜென்ஷிலா மஜீத்துக்கு இன்று பாராட்டு

majeed.jpgதுணிச்சல் மிக்க பெண்ணுக்கான விருதினை அமெரிக்காவில் பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஜென்ஷிலா மஜீதை பாராட்டி கெளரவிக்கும் வைபவம் இன்று, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறும்.

குர்ஆனின் படத்துடன் விளம்பரம்; முஸ்லிம்கள் கடும் ஆட்சேபம்

தமிழ்ப் பத்திரிகையொன்றில் திருக்குர்ஆனின் பெரிய அளவிலான படத்துடன் ஒரு கிண்ணத்தையும் பிரசுரித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை முஸ்லிம்கள் கடுமையாக ஆட்சேபிக்கின்றனரென ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

பள்ளிவாசலுக்குச் செல்லும் அனைவரும் பிரார்த்திக்குமாறும், “அல்லாஹ்வே உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள்” என்றும் ஏக வல்ல அல்லாஹ்வையும் அவனுடைய அருள்மறையாம் குர்ஆனையும் மிகவும் நிந்தனை செய்யும் வண்ணம் இவ்வரசியல் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டு ள்ளதை முஸ்லிம் இயக்கங்களும், உலமாக்களும், பொதுமக்களும் எம் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அல்லாஹ்வையும் புனித குர்ஆனை சம்பந்தப்படுத்தி ஒரு தேர்தல் சின்னத்தைப் பிரசுரித்துள்ளமை இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். முஸ்லிம்கள் இந்நாட்டின் வந்தேறு குடிகள் என முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்திய சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரும் இவ்விளம்பரம் முஸ்லிம்களின் உள்ளங்களை ஆழ புண்படுத்தியுள்ளது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாடு பூராவும் சுற்றித்திரிந்து முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்விடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நிச்சயம் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். அடுத்து ஏகவல்ல அல்லாஹுத்த ஆலாவையும், அவனது அருள்மறையையும் மிகவும் கீழ்த்தரமான அரசியல் விளம்பரத்துக்குப் பாவித்ததையிட்டு பொன் சேகாவின் கட்சியும், அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பியும் முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.

புத்தபிரானின் உருவச் சிலைக்குக் கீழே நிர்வாணமான ஒரு பெண்மணியை வரைந்து பெளத்த மக்களை சீற்றமடையச் செய்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ள இத்தருணத்தில் முஸ்லிம்களையும் இவ்விதம் விசனத்துக்குள்ளாக்கும் முறையில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மதங்களை நேசிக்கும் யாவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

மதங்களையும், அவற்றைப் பின்பற்று வோரையும் இவ்விதம் அவமானப்படுத்தி களங்கம் விளைவிக்கின்ற இச்செயற் பாடுகளின் பின்னணியில் மேற்கந்திய சதிகாரக் கும்பல்கள் சியோனிஸ சக்திகள் ஒழிந்திருப்பது முஸ்லிம் உலகுக்கு ஒரு புதிய விடயமல்ல. இந்த யூத சியோ னிஸத்தின் உள்நாட்டு முகவர்களான ஐ.தே.கவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் வாக்களிக்கக் கோரிய சரத் பொன் சேகாவின் இந்த மதவிரோத செயற் பாடுகளுக்கு எதிராக அறிக்கை விடுவார்களா? என முஸ்லிம்கள் கேட்க விரும்பு கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.