April

April

மதுபானக்கடைகள் பூட்டு

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாளையும், நாளை மறுதினமும் மதுபான கடைகளை மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளிலும் மதுபான கடைகள் மூடப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கிறது.

9 ஆம் திகதி அரச, வங்கி விடுமுறை

எதிர்வரும் 9 ஆம் திகதி அரச மற்றும் விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திஸாநாயக்க இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.

எனவே, அரச கூட்டுத்தாபனங்களின், நியதிச் சபைகளின் தலைவர்கள், மற்றும் தொழில் தருநர்கள் அனைவரையும், தங்களது அனைத்து ஊழியர்களுக்கும் 2010ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குமாறு தொழிலமைச்சர் அதாவுத செனவிரட்ன கேட்டுள்ளார்.

பொன்சேகா மீதான விசாரணை அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இராணுவச் சட்டங்களை மீறி நடந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான  விசாரணைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசு10ரியவின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய 2ஆவது நீதிமன்ற விசாரணைக் குழுவின் இன்றைய கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை, சரத் பொன்சேகா மீது விசாரணை  மேற்கொள்ளும் முதலாவது நீதிமன்ற குழுக்கூட்டமும் இன்று நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது

பொன்சேகா மூலம் வாக்குப்பெற்று ஹதுன்நெத்தியை சபைக்கு அனுப்ப திட்டம்- ஏமாறவேண்டாம் என்கிறார் விமல் வீரவன்ச

சரத் பொன்சேகாவை காட்டி வாக்குகளைப் பெற்று பின்னர் சுனில் ஹந்துன்நெத்தியை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி தீட்டியுள்ளது.

எனினும் இந்த திட்டத்துக்குள் சிக்கி ஏமாற வேண்டாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு மாவட்ட வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது- அரசியலமைப்பின் 89 (இ) மற்றும் 91 (1) (அ) ஆகிய ஷரத்துக்கள் மூலம் ஒருவர் பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான தகுதி பற்றி விளக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் இரு வழக்குகள் விசாரணையில் உள்ளன.

தற்போதைய நிலையில் அவர் அந்த வழக்குகளில் குற்றவாளியாக காணப்படும் சாத்தியமே அதிகமாக உள்ளது. சரத் பொன்சேகா இவ்வாறு குற்றவாளியாக தண்டனைக்குள்ளாகுமிடத்து ம. வி. மு. வேட்பாளர் சுனில் ஹந்துன்நெத்தியை சரத் பொன்சேகாவுக்கு பதிலாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே ம. வி. மு. திட்டமாகும். பொன்சேகாவை கூடிய வாக்குகளைப் பெற்று அவருக்கு பதில் ஹதுன்நெத்தியை பாராளுமன்றம் அனுப்பும் ம. வி. மு. சதியில் எவரும் ஏமாந்துவிடக் கூடாது என்று தனது அறிக்கையில் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

“தமிழ்க்கூட்டமைப்புடன் இணைந்து அரசமைப்பதில் பிரச்சினை இல்லை” – விஜித ஹேரத்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை இணைத்து அரசாங்கத்தை அமைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென ஜனநாயகத் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து 11 மாதங்கள் கடந்த நிலையில், இனவாதத்தைத் தோற்கடிக்க மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதில் தவறு என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்துக்கு இது மிகவும் முக்கியமான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ராஜகீய மாவத்தையிலுள்ள ஜெனரல்சரத்பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.ஜெனரல் பொன்சேகா தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விஜித ஹேரத் கே.பி.,கருணா ஆகியோரின் தேவைகளை நிறைவேற்றவே அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியிருக்கும் புலிகளின் தேவைகளை நிறைவேற்றவே அரசு முயற்சிப்பதாக அவர் சாடினார்.

அதேவேளை, ஏப்ரல் 22 இல் பாராளுமன்றம் கூடும் போது ஜெனரல் சரத்பொன்சேகா சமுகமளிப்பாரெனவும் அங்கு தனது கன்னியுரையை ஆற்றுவாரெனவும் விஜிதஹேரத் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி ஆதரவாளர் சுட்டுக்கொலை

குருநாகல் பரந்தர பகுதியில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐ.ம.சு.முன்னணி ஆதரவாளரொருவர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பிக்கப் வாகனமொன்றில் இவர் வீடுநோக்கி பயணிக்கும் போதே பிக்கப்பின் பின்னாலிருந்து இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவரின் பிரேத பரிசோதனைகள் குருணாகல் பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.இறந்தவர் ரிதிகம றம்பொடகமவைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் படுகாயம் இதேவேளை, குருணாகல் மகாவ பிரதேசசபைத் தலைவர் இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து குருணாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குருணாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலல்ல பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன் போது மகாவ பிரதேசசபைத் தலைவர் எஸ்.எம்.வீ.கே. சேனநாயக்க படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய பத்து ரூபா நாணயக்குற்றி வெளியீடு

10rupees.jpgபுதிய பத்து ரூபா நாணயக் குற்றியொன்றை மத்திய வங்கி நேற்று (5) வெளியிட்டது. மத்திய வங்கியின் வருடாந்த ஆண்டறிக்கையை வெளியிடும் வைபவம் நேற்று மத்திய வங்கியில் நடைபெற்றது. முதலாவது நாணயக்குற்றியை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

அவசரகால சட்ட நீடிப்பு; பாராளுமன்றம் இன்று கூடுகிறது

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காகப் பாராளுமன்றம் இன்று 6 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் வகையில் இன்று இரண்டாவது தடவையாக பாராளுமன்றம் கூடுகின்றது.

திருகோணமலை மாவட்டமும் வட கிழக்கு மாகாண அரசும் – பே பரமானந்தம்

30 வருடம் சிங்கள தமிழ் இன யுத்தத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருகோணமலை மாவட்டம் முதன்மையான இன அழிவை எதிர்நோக்கிய ஒரு மாவட்டமாகும். இலங்கை சுதந்திரமடைந்து 63 வருடங்கள் ஆகியும் இம்மாவட்டத்திற்கென ஒரு அரசாங்க அதிபராக தமிழர் ஒருவரை நியமிக்க முடியாத அரசியற் கட்சிகள் அல்லது தமிழ்த் தலைமைகள். பேரினவாதம் திட்டமிட்டபடி தனது பெரும்பான்மை சிங்களக் குடியேற்றத்தை ஆதரித்து தமிழரின் விகிதாசாரத்தை குறைத்து காட்டவே தமிழர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்கவில்லை. உதாரணமாக தமிழில் கண்தளை- கிராமம் பின்னாளில் கந்தளே, மணலாறு- வெலிஓயா, குமரேசன்கடை- கோமரன்கடவெல. இப்படி மாற்றுவதற்கு சிங்கள அரசாங்க அதிபர் தேவைப்படுவதால்தான் இந்த ஏற்பாடு.

1987ம் ஆண்டு நடைமுறைக்குவந்த மாகாண அரசின் முதல் முதல்வராக தமிழர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க முடிந்தது. அதையும் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் புலிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து மாகாண அரசைக் கலைக்கும்வரை துணை போனார்கள். அதனால் அந்தச் சந்தர்ப்பமும் இல்லாது போனதுடன் தமிழர் ஒருவரை திருமலை அரசாங்க அதிபராக்க கிடைத்த சந்தர்ப்பமும் இல்லாமற் போனது.

அப்போது வடக்கு கிழக்கு 7 மாவட்டங்களும் இணைத்ததே மாவட்ட அரசு. இப்போது கிழக்கு மாகாணசபை அம்பாறை- மட்டக்களப்பு- திருகோணமலை மூன்றும் சேர்ந்து கிழக்கு மாகாணம். மற்றைய நான்கும் சேர்ந்து வடமாகாணம். இது சட்டத்தால் மட்டுமே பிரிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் மக்களின் இதயங்களில் இணைக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டும் உயிர் வாழ்ந்து வருகிறது.

மாவட்ட சபையைக்கூட தர மறுக்கும் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் மத்தியில் இலங்கை இந்திய உடன்படிக்கையே தமிழ்மக்களின் இனப் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைந்தது. வடகிழக்கு எல்லைகளைப் பாதுகாக்க (ரிஎன்ஏ) தமிழ் தேசிய இராணுவம் சிவிஎவ் பிரஜைகள் பாதுகாப்புப் படை பொலிஸ். இவர்களுக்குச் சம்பளமாக மாதாந்த 4500 ரூபா. நான்கு வருடங்களின் பின் நிரந்தர நியமனம். 20000 பேர்கொண்ட தமிழ் முஸ்லிம் இளைஞர்களை உள்வாங்கிய சட்டரீதியில் சிறுபான்மை சமூகங்களைக் கொண்ட இராணுவ அமைப்பு. அதுமட்டுமல்ல அரச பதவிகளில் விகிதாசாரம் பேணப்படல் வேண்டும்.

ஓருபுறம் சிங்கள கடும் போக்காளர்கள் இந்தியஅரசு தமிழர்களுக்கு தனிநாடு ஒன்றை பெற்றுக் கொடுத்து விட்டது போன்ற எண்ணத்தை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி இந்தியாவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தது. மறுபுறம் புலிகளும் அப்போதைய தமிழ் தலைமைகளும் வெறும் பொம்மை அரசு என்று கூறி நிராகரித்தது. அப்படியிருந்தும் இந்தியா தனது உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவே இலங்கையை நிர்ப்பந்தித்தது.

இதை சாதகமாக புலிகளும் பாவித்து இந்திய தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாக்க பிரேமதாசாவுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியப்படைகளை இலங்கையைவிட்டு வெளியேற்றியது. பிரேமதாசாவும், ‘நானும் புலிகளும் அண்ணன் தம்பிகள் எங்களின் பிரச்சனைகளை நாங்கள் பேசித் தீர்ப்போம், முதலில் நீங்கள் வெளியேறுங்கள்’ என்று மாகாணஅரசைக் கலைத்து சகவாசம் செய்து தமிழ்தேசிய இராணுவத்திற்கு எதிராக சிறீலங்கா ஆமியுடன் இணைந்த புலிகள் ரிஎன்ஏ முற்றாக தாக்கியழித்தனர்.

எழுபத்திரண்டு மாகாணஅரச உறுப்பினர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபையில் தன்னாதிக்கமும் இறைமையும் உள்ள ஈழ ஜனநாயக சோசலிசக் குடியரசு ஆக முதலமைச்சரால் பிரகடனப்படுத்தப்பட்டு இன்றுவரை ஒரு தனிநாடாகவே இருந்து வருகிறது. இதையும் இந்தியாவே முன்னின்று செய்தது. அந்த அளவுக்கு இந்தியா நட்புடன் இருந்த நேரம். காஸ்மீர் ஆந்திரா போன்ற பல உள்நாட்டுப் பிரச்சனைகள் இருந்தும் இந்தியா பகிரங்கமாக இதை அங்கீகரித்தது. இதன்முலம் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பதையே இந்தியா விரும்பியதை உணரலாம். 13வது திருத்தச் சட்டத்தினை ஏற்று முதலமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்யும் ஒரு முதலமைச்சர் அரசபணியின் நிமித்தம் வெளிநாடு ஒன்றிற்குச் செல்ல வேண்டுமாயின் ஆளுனரின் அனுமதியைப்பெற்று செல்ல வேண்டும். ஆனால் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அடிக்கடி அரச பயணமாக இந்திய இராணுவ விமானம் மூலம் ஆளுனரின் எதுவிதமான அனுமதியும் இன்றி இந்தியா சென்று வந்தார். அந்தளவுக்கு இந்தியா வடகிழக்கை தனது மானிலங்களில் ஒன்றாகவே கையாண்டு வந்தது. ஆனால் அப்போது சிங்களப் பத்திரிகைகள் இதுபற்றி கண்டனத்தையும் செய்திருந்தது.

தந்தை எஸ்ஜேவி செல்வநாயகம் சொன்னது போல் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வந்தால் வடகிழக்குத் தலைநகரம் திருகோணமலை என்ற அவரது கனவை நனவாக்க உழைத்து அதை திருமலையில் நிறுவிய தவராஜா தம்பிராஜா அவரையும் புலிகள் நிலாவெளியில் வைத்து சுட்டுக் கொன்றுவிட்டனர்.

சந்திரிகா அம்மையாரின் காலத்தில் ஒருதீர்வுத் திட்டம் நீலன் திருச்செல்வம் தலைமையில் தயாரிக்கப்பட்டது. அதையும் எதிர்த்த புலிகள் அவரையும் கொலைசெய்தனர் அதை உடந்தையாய் இருந்து தயாரித்த தோழர் கேதீஸ்- லோகநாதனை கொழும்பில் வைத்துக் கொலை செய்தனர். இப்படித் தமிழ் மக்களின் தீர்வுகள் எல்லாவற்றிலேயும் இவர்கள் தங்கள் கெடுபிடியைக் காட்டி இல்லாதொழித்து விட்டனர்

இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தநேரம் பெரும்பாலான சிங்களக் குடியேற்றவாசிகள் திருகோணமலைக் கோட்டை முகாமுக்குள் தஞ்சம் புகுந்து அகதியாக இருந்தனர். அவ்வளவுக்கு பெரும்பான்மையினர் அஞ்சியிருந்தனர். குடியேற்றமும் குறைந்து காணப்பட்டது.

1989ம் ஆண்டு புலிகள் 4ம் கட்டை சிங்களவர்கள் செறிந்து வாழும் பகுதியில் ஒரு கண்ணிவெடியை வைத்து விட்டனர். இச்சம்பவத்தில் மொழிபெயர்ப்பாளராக சென்றபோது இந்திய இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். political officer welcome என என்னை வரவேற்ற அவர் சொன்னார், 35 லட்சம் தமிழர்களின் அமைதிக்காக 100 கோடி இந்திய குடிமக்களின் அமைதியைக் கெடுக்க இந்தியா விரும்பாது. அது தமிழ்நாட்டை மையமாக வைத்தே அவர் அதைச் சொன்னதாக நான் இப்போது உணர்ந்தேன். தமிழர்களுக்கு சகல அந்தஸ்தும் கிடைக்க இந்தியா பாடுபடும். மூக்கு இருக்கும் வரைக்கும் சளி இருக்கும் என்பதுபோல் இந்தியா இருக்கும்வரை புலிகள் நினைப்பதுபோல் இந்தியாவைப் புறம்தள்ளி ஒரு தீர்வை அடைய முடியாது. இன்றைய புலிகளின் தோல்வியில் இருந்து அதை இன்றும் நினைவுபடுத்திப் பார்க்கின்றேன். எவ்வளவு உண்மையென்று எண்ணிப் பாருங்கள்.

வடகிழக்கில் 72 மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபையில் தன்னாதிக்கமும் இறைமையும் உள்ள ஈழ ஜனநாயக சோசலிஷக் குடியரசு ஆக வடகிழக்கின் முதல் முதல்வர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் தலைமையில் பிரகடனப்படுத்தப்பட்டு இன்றுவரை ஜனநாயக மரபுகளுக்கு அமைவாக அது பிரிக்க முடியாததொரு தனிநாடாகவே இருந்து வருகிறது. இதையும் உலகின் மிகப்பெரிய வல்லின ஜனநாயக இந்தியப் பேரரசே முன்னின்று அங்கீகரித்தது. அது ஒரு பெரிய அரசியல் ஸ்ரண்ட் அந்த அளவுக்கு இந்தியா நம்முடன் இருந்தநேரம் காஸ்மீர்- ஆந்திரம் மேற்குலகம் தமிழ்நாடு போன்ற இந்தியாவிலேயே தனிநாட்டுக் கோஷம் உள்நாட்டிலும் நெருக்கடி இருந்தும் பொருட்படுத்தாது செய்தது. இதன்மூலம் சிறுபான்மையினருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க இந்தியா செயற்பட்டதை உணரலாம்.

மதத்தால் பாக்கிஸ்தான் பிரிந்ததைப்போல் மொழியால் பங்களாதேஸ் பிரிந்ததுபோல் யேசுநாதரின் ஒரே மதத்தின் (கிறிஸ்தவ) இருவேறு (புரட்டஸ்தான்- கத்தோலிக்கம்) தத்துவப் படிப்பாளர்களால் ஐசடயனெ- ழேசவா ஐசயடயனெஇளுழரவா பிரிந்ததுபோல் இனத்தால்- திராவிடன், மொழியால்- தமிழன் கொடுத்த தாயகப்பிரதேசம் கலை கலாச்சாரம் பூர்வீகம் இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்தே இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஈழப் பிரகடனத்தை ஆமோதித்ததை உணரலாம். உதாரணமாக 1983ம் ஆண்டு தரைவழிப் பாதையூடாக இந்தியா உணவு அனுப்ப விழைந்தபோது ஜேஆர் அரசு தடுத்து நிறுத்தியது. பின்னர் விமானமூலம் இந்தியா உணவு போட்டது. இலங்கை இறையான்மை எங்கே போனது. இதிலிருந்து இந்தியாவே ஆசியாவின் பேரரசு என்பதை உணரலாம். தமிழர்களின் அன்றைய வெற்றிக்கும் இந்தியாதான் காரணம் இன்றைய தோல்விக்கும் இந்தியாதான் காரணம்.

புலிகளின் தவறான மூட அரசியலால் உலகின் 4வது வல்லரசைத் தாக்கி வெற்றி கொண்டதாகப் பெருமைப்படும் அளவுக்கு ஒரு அறிலீலிகளான ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் எவ்வளவு அனுபவம் பெற்றவர்கள் எத்தனை யுத்தத்தில் பங்கெடுத்தார்கள் என்பதை எண்ண மறந்துவிட்டோம். இன்று முழுத் தமிழ்ச் சமுதாயமும் பாதிக்கப் பட்டுள்ளோம். இலங்கையில் தனக்கு ஏற்பட்ட தோல்வியில், புலிகளின் பங்களிப்பை எண்ணிய இந்தியா அன்று தொடக்கம் புலிகளுக்கு எதிரான விக்கெட்டுக்களை அடிக்கத் தொடங்கியது. இன்று முழுப் புலிகளையும் அழித்து ஆசியாவில் தன்னை எதிர்க்கும் சக்திகளுக்கு தானே ஆசியப் பேரரசு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

மாவட்ட சபையைக்கூட தரமறுக்கும் பேரினவாத அரசியலாளர்கள் மத்தியில் இலங்கை இந்திய உடன்படிக்கையே தமிழ்மக்களின் உரிமைப் போருக்கான சிறந்த தீர்வாக அமைந்தது. அதுமட்டுமல்ல அந்த ஒப்பந்தத்தை மட்டும்தான் இலங்கை வரலாற்றில் பெரும்பாலான கட்சிகள் அடங்கலாக அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் சரத்துக்கள் பற்றி கொஞ்சம் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். வடகிழக்கு இணைந்த மாகாண அரசு அந்த அரசின் எல்லைகனளை அந்த அரசின் இராணுவ பணிகளை கையாள ஒரு இராணுவக் கட்டமைப்பு ரிஎன்ஏ தமிழ் தேசிய இராணுவம் இவர்களுக்கு சம்பளமாக மாதம் 4500 ரூபாய் நான்கு வருடத்தின் பின பணி நிரந்தரம். 20 000 பேரைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் முஸ்லிம் சழூகங்களைக் கொண்ட சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசின் இராணுவம்.

அரச பதவிகளில் சிறுபான்மைச் சமூகங்களின் விகிதாசார அடிப்படையில் அனைத்துப் பதவிகளும் கடைப்பிடிக்க வேண்டும். நான்கு வருடங்களின் பின் வடகிழக்கில் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தி வடகிழக்கு இணைந்து இருப்பதா இல்லையா என்று மக்கள் கருத்துக்கு விடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படு;ம்

ஒருபுறம் சிங்களவர்களும் சிங்கள கட்சிகளும், ஜேவிபி தமிழர்களுக்கு போதிய அதிகாரம் கொண்ட தனிநாடு ஒன்றை இந்திய அரசு பெற்றுக் கொடுத்து விட்டதாக சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து இந்திய எதிர்ப்பு அலையை உருவாக்கியது. மறுபுறம் புலிகளும் அப்போதைய தமிழ்த் தலைமைகளும் ஒன்றும் இல்லாத ஒரு பொம்மை அரசை தமிழ்மக்கள் மத்தியில் இந்திய அரசு திணித்து விட்டதாக தமிழர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அதையும் முற்றாக நிராகரித்து விட்டனர். அப்படியிருந்தும் இந்தியப் பேரரசு தனது உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவே இலங்கையை நிர்ப்பந்தித்தது.

எப்படியும் மாகாண அரசைக் கலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த ரணசிங்க பிரேமதாசா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்து புலிகளும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து ரிஎன் ஏ இராணுவத்துக்கு எதிராக கடும் தாக்குதல்கள் தொடுத்து அதை முற்றாக அழித்தனர். மற்றைய இயக்கங்கள் இராணுவத்துடன் பேசினால் காட்டிக் கொடுப்போர், ஒட்டுப்படை, தேசத்துரோகிகள்: புலிகள் இணைந்தால் இராஜதந்திரம். அன்று புலிகள் அழித்த, தமிழ் இராணுவம் இருந்திருந்தால் 20000 தமிழ் பேசும் படையணி.

நிராயுதபாணிகளாக நிற்கும் ஒருவரை ஆயுதங்களால் தாக்குவது தர்மத்துக்கு முரணானது1990 ஆண்டு 19.06.90- யூன் மாதம் தமிழ்நாட்டில் இந்தியாவில் கோடம்பாக்கம் ….காலனியில் உள்ள ராணி அப்பாட்மென்ட்டில் வைத்து புலிகளால் சுட்டுக் கொலட்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் தலைவர் பத்மநாபாவும் 13 முன்னணித் தோழர்களும் கொல்லப்பட்ட சமயம் 19.06.91 திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டில் ஒருவருட அஞசலிக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் ஒருபகுதியை இவர்களின் இன்றைய நிலையில் மீட்பது பொருந்தும் என நினைக்கின்றேன். இவர்களால் தாக்கியழிக்கப்பட்ட இயக்கங்கள் தலைமை கொடுத்துக் கொண்டிருக்க இவர்கள் மட்டும் அழிந்து போயினர்: பாருங்கள் இவர்களின் இன்றைய அழிவை அன்றே கட்டியம் சொன்னதுபோல் உணர்கின்றேன்.

நண்பா புலியே மானிட உயிரின் மாண்பினை மதி

இன்றேல் அழிவே உனது கதி.

ஓடமும் ஒருநாள் வண்டிலேறும் வண்எயும் ஒருநாள் ஓடடத்தில் ஏறும் இதை நீ மறந்து விடாதே.

காலமும் நாமும் இதற்குப் பதிலளிப்போம். விரிந்து பரந்த உலகில் நாம் வீழ்ந்து விட்டோம், ஆசைகளால் பிரிக்கப் பட்டோம், பாசத்தால் இறுக்கப்பட்டோம், பண்பை மறந்து விட்டோம். ஆனால் மறந்தவை மறந்தவை அல்ல. உன் இழி குணங்களால் நீயே அழிக்கப்படுவாய,; இழிகுணம் உள்ள சமூகம் அழிந்ததாக எமது வரலாறே இயம்புகிறது.

எமது இதிகாச புராணங்கள் வேத நூல்கள் மறை ஆகம சிவாகமங்கள் அனைத்தும் ஜனநாயக கருத்துச்சுதந்திர மரபுகளை அடியொற்றி, அது மறுக்கப்பட்ட போது போர்வெடித்த வரலாற்றை, படித்தும் அறிந்தும் இவ்வாறு செயல்பட்டதானது எமது இனத்துக்கு ஏற்பட்ட இழுக்கு என்பது மட்டும் எனது கணிப்பீடு.

திருகோணமலைத் தேர்தல் சூடுபிடித்துள்ள இன்றைய தினத்தில் களத்தில் சம்பந்தர் நின்று தமிழர்களுக்கு இதுவரை எதுவித பெயர் சொல்லிக் கதைக்கும் அளவுக்கு எதையும் செய்யவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலையில் திருமண உறவில் குடியேறிய பெரியபொடி சூரியமூர்த்தி தமிழர்களின் சிங்கள மயமாக்கலை மெல்ல முடியாத நிலையில் தமிழருக்கென ஒரு தமிழ் மார்க்கெட்டைக் கட்டினார். இன்றும் மக்கள் சொல்லிக் கதைக்கிறார்கள். 2002ம் ஆண்டு அந்த மார்க்கெட்டைத் திறக்க பெரும்பான்மை விடவில்லை ஆனால் அவன் கட்டினான் என்று தமிழர்கள் இன்னமும் வியப்புடன் பேசுகிறார்கள். ஏனெனில் ஒரு துணிவு மிக்க மகனாக இருந்து செய்தார்;. ஆனால் எம்பி சம்பந்தருக்குப் போட்ட வாக்குகளை அவருக்குப் போட்டடிருந்தால் கொஞ்சமேனும் முன்னேற்றம் கண்டிருக்கலாம். கடற்படைத் தளத்திற்குச் செல்லும் வழியில் இருந்த காணிகளில் தமிழர்கள் குடியேறச் செய்தார். எம்பியால் ஏன் முடியவில்லை?

புலிகளின் தற்கொலைக் குண்டுகள் வெடித்துக் கொல்லப்படும் உயிர்களின் எண்ணிக்கையிலேயே பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற உத்தி அல்லது திட்டம் தீட்டி அரசியல் பின்பலமோ அல்லது ஆராமையோ எதுவுமே இல்லாது எம்பி துரைரட்ணசிங்கம் புலிகள் சம்பந்தருக்கும் தனக்கும்தான் போடச் சொன்னார்கள் என்ற மாயையை சொல்லியே கடந்தமுறை எம்பி ஆனார். புலிகளின் அடுத்த வன்னி என வர்ணிக்கப்பட்ட கட்டைப்பறிச்சான் என்பது மட்டுமே இவரது அரசியல் விளம்பரம். மிகவும் அமைதியானார் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்.

இம்முறையும் பல மோசடிப் பேர்வழிகளையும் தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்;படுத்த சில பண முதலைகளையும் சம்பந்தர் தமிழர்களின் மீட்பர்களாக சித்தரிக்க முற்படுகின்றார்.

திருகோணமலையில் பெரும்பாலான தமிழ்ப் பகுதிகள் மட்டும் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி. நகரங்களை அண்டிய பகுதி அரச கட்டுப்பாட்டுப் பகுதி. இப்படிப் பிரிக்கப்பட்டு தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி எனக் காரணம் காட்டி எதுவிதமான அரசபணிகளும் நடைபெறவில்லை. மற்றைய சமூகங்கள் வாழும் பகுதிகள் பெரும்பாலும் அபிவிருத்தி செய்யப்பட்டே வந்தது. ஆனால் தமிழ்ப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

யாழ்ப்பாணம் தோழர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு முரளீதரன் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்னின்று அபிவிருத்தி செய்வதைப்போல திருகோணமலைக்கு யார்? புணரமைப்புக்குப் பதிலாக சம்பந்தர் தலைமை திருகோணமலை தமிழர்களை புதைத்து வருகிறார்கள். இந்த தேர்தலில் இவர்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட தமிழர்கள் அணிதிரள வேண்டும்

பொன்சேகாவுக்கு எதிராக 2வது புதிய இராணுவ நீதிமன்றம் ஜனாதிபதியினால் நியமனம் – இரு நீதிமன்றங்களின் அமர்வுகள் நாளை

sarath_fonseka-02.jpgமுன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அடங்கிய இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தை புதிதாக நியமித்துள்ளார். இந்த நீதிமன்றத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எம். பி. மீரிஸ¤ம், உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் எஸ். டபிள்யூ. எல். தவுளகள, மேஜர் ஜெனரல் எம். ஹதுருசிங்க ஆகியோரும் இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அட்வகேட்டாக கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் அமர்வும், ஏற்கனவே கூடிய முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வும் நாளை 6ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது. இராணுவக் கொடுக்கல் வாங்கல்கள், மற்றும் இராணுவ விதிமுறைகளை மீறியமை என்று குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்த இரண்டாவது நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுக்வுள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சென்ற மார்ச் மாதம் 17ம் திகதி கூடிய போது அதன் அமர்வுகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதணையடுத்து மீண்டும் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நாளை மீண்டும் கூடவுள்ளது என்று இராணுவ தலைமையகம் தெரிவித்தது.