06

06

பொன்சேகா மீதான விசாரணை அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இராணுவச் சட்டங்களை மீறி நடந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான  விசாரணைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசு10ரியவின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய 2ஆவது நீதிமன்ற விசாரணைக் குழுவின் இன்றைய கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை, சரத் பொன்சேகா மீது விசாரணை  மேற்கொள்ளும் முதலாவது நீதிமன்ற குழுக்கூட்டமும் இன்று நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது

பொன்சேகா மூலம் வாக்குப்பெற்று ஹதுன்நெத்தியை சபைக்கு அனுப்ப திட்டம்- ஏமாறவேண்டாம் என்கிறார் விமல் வீரவன்ச

சரத் பொன்சேகாவை காட்டி வாக்குகளைப் பெற்று பின்னர் சுனில் ஹந்துன்நெத்தியை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி தீட்டியுள்ளது.

எனினும் இந்த திட்டத்துக்குள் சிக்கி ஏமாற வேண்டாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு மாவட்ட வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது- அரசியலமைப்பின் 89 (இ) மற்றும் 91 (1) (அ) ஆகிய ஷரத்துக்கள் மூலம் ஒருவர் பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான தகுதி பற்றி விளக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் இரு வழக்குகள் விசாரணையில் உள்ளன.

தற்போதைய நிலையில் அவர் அந்த வழக்குகளில் குற்றவாளியாக காணப்படும் சாத்தியமே அதிகமாக உள்ளது. சரத் பொன்சேகா இவ்வாறு குற்றவாளியாக தண்டனைக்குள்ளாகுமிடத்து ம. வி. மு. வேட்பாளர் சுனில் ஹந்துன்நெத்தியை சரத் பொன்சேகாவுக்கு பதிலாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே ம. வி. மு. திட்டமாகும். பொன்சேகாவை கூடிய வாக்குகளைப் பெற்று அவருக்கு பதில் ஹதுன்நெத்தியை பாராளுமன்றம் அனுப்பும் ம. வி. மு. சதியில் எவரும் ஏமாந்துவிடக் கூடாது என்று தனது அறிக்கையில் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

“தமிழ்க்கூட்டமைப்புடன் இணைந்து அரசமைப்பதில் பிரச்சினை இல்லை” – விஜித ஹேரத்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை இணைத்து அரசாங்கத்தை அமைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென ஜனநாயகத் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து 11 மாதங்கள் கடந்த நிலையில், இனவாதத்தைத் தோற்கடிக்க மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதில் தவறு என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்துக்கு இது மிகவும் முக்கியமான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ராஜகீய மாவத்தையிலுள்ள ஜெனரல்சரத்பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.ஜெனரல் பொன்சேகா தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விஜித ஹேரத் கே.பி.,கருணா ஆகியோரின் தேவைகளை நிறைவேற்றவே அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியிருக்கும் புலிகளின் தேவைகளை நிறைவேற்றவே அரசு முயற்சிப்பதாக அவர் சாடினார்.

அதேவேளை, ஏப்ரல் 22 இல் பாராளுமன்றம் கூடும் போது ஜெனரல் சரத்பொன்சேகா சமுகமளிப்பாரெனவும் அங்கு தனது கன்னியுரையை ஆற்றுவாரெனவும் விஜிதஹேரத் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி ஆதரவாளர் சுட்டுக்கொலை

குருநாகல் பரந்தர பகுதியில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐ.ம.சு.முன்னணி ஆதரவாளரொருவர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பிக்கப் வாகனமொன்றில் இவர் வீடுநோக்கி பயணிக்கும் போதே பிக்கப்பின் பின்னாலிருந்து இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவரின் பிரேத பரிசோதனைகள் குருணாகல் பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.இறந்தவர் ரிதிகம றம்பொடகமவைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் படுகாயம் இதேவேளை, குருணாகல் மகாவ பிரதேசசபைத் தலைவர் இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து குருணாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குருணாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலல்ல பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன் போது மகாவ பிரதேசசபைத் தலைவர் எஸ்.எம்.வீ.கே. சேனநாயக்க படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய பத்து ரூபா நாணயக்குற்றி வெளியீடு

10rupees.jpgபுதிய பத்து ரூபா நாணயக் குற்றியொன்றை மத்திய வங்கி நேற்று (5) வெளியிட்டது. மத்திய வங்கியின் வருடாந்த ஆண்டறிக்கையை வெளியிடும் வைபவம் நேற்று மத்திய வங்கியில் நடைபெற்றது. முதலாவது நாணயக்குற்றியை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

அவசரகால சட்ட நீடிப்பு; பாராளுமன்றம் இன்று கூடுகிறது

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காகப் பாராளுமன்றம் இன்று 6 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் வகையில் இன்று இரண்டாவது தடவையாக பாராளுமன்றம் கூடுகின்றது.