23

23

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் ; அமைச்சர்கள் 37; பிரதி அமைச்சர்கள் 39

newcabinet.jpgபுதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர்.

“புதிய அமைச்சர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒருவரோடு ஒருவர் பகைத்துக்கொள்ளாது ஒற்றுமையாகச் செயற்பட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவேண்டும்”  என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.  ஜனாதிபதி ஆற்றிய உரையின்போதே இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

“மக்கள்  தமது தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். மக்களுக்கு சேவை செய்யவே அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தமது பொறுப்புக்களை உணாந்து செயற்படுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை அமைச்சர்கள் நிறைவேற்றவேண்டும். அமைச்சர்களின் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை பொறுப்புக்கூறவேண்டும்” என்றும் ஜனாதிபதி கூறினார்.

புதிய அமைச்சரவையில் மூன்று முஸ்லிம்களும் ஒரு தமிழரும் இடம்பெற்றுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசியும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராக ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சராக ரிசாத் பதியுதீனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேசமயம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் பிரதியமைச்சர் பதவிகளில் இரண்டு தமிழரும் ஒரு முஸ்லிமும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் முத்துசிவலிங்கம், விநாயக மூர்த்தி முரளீதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ் புல்லாஹ் ஆகியோரே அவர்களாவர்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களின் பட்டியல்

1. பிரதமர் தி.மு. ஜயரத்ன – புத்தசாசனம், மதவிவகாரம்
2. ரட்ணசிறி விக்ரமநாயக்க – அரச முகாமைத்துவம், மறுசீரமைப்பு
3. நிமல் சிறிபால டி சில்வா – நீர்ப்பாசனம், நீர்வள முகாமைத்துவம்
4. ஏ.எச்.எம். பெளஸி – இடர் முகாமைத்துவம்
5. மைத்திரிபால சிறிசேன – சுகாதாரம்
6. சுசில் பிரேம ஜயந்த – எரிபொருள் தொழிற்துறை
7. தினேஷ் குணவர்தன – நீர்வழங்கல், வடிகாலமைப்பு
8. டக்ளஸ் தேவானந்தா – பாரம்பரிய கைத்தொழில், சிறுகைத்தொழில்
9. ஏ.எல்.எம். அதாவுல்லா – உள்ளூராட்சி, மாகாண சபைகள்
10. டி.யூ. குணசேகர – புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு
11. ரிசாத் பதியுதீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
12. விமல் வீரவன்ச – நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு, பொது வசதிகள்
13. பஷில் ராஜபக்ஷ – பொருளாதார அபிவிருத்தி
14. பாட்டலி சம்பிக்க ரணவக்க – மின்சக்தி எரிசக்தி
15. பி. தயாரத்ன – அரசவளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி
16. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் – வெளிவிவகாரம்
17. டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன – பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்
18. சுமேதா ஜீ. ஜயசேன – பாராளுமன்ற விவகாரம்
19. மில்றோய் பெர்னாண்டோ – மீள்குடியேற்றம்
20. ஜீவன் குமாரதுங்க – தபால் தொலைத் தொடர்புகள்
21. பவித்ரா வன்னியாரச்சி – தேசிய மரபுரிமைகள், கலாசாரம்
22. அநுர பிரியதர்ஷன யாப்பா – சுற்றாடல்
23. திஸ்ஸ கரலியத்த – சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம்
24. அதாவுட செனவிரத்ன – நீதி
25. காமினி லொக்குகே – தொழில் உறவுகள் திறன் அபிவிருத்தி
26. பந்துல குணவர்தன – கல்வி
27. மஹிந்த சமரசிங்க – பெருந்தோட்ட கைத்தொழில்
28. ராஜித சேனாரத்ன – கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி
29. பியசேன கமகே – சுதேச வைத்தியம்
30. எஸ். பி. நாவின்ன – தேசிய மொழி, சமூக ஒருங்கமைப்பு
31. ஜனக பண்டார தென்னக்கோன் – காணி, காணி அபிவிருத்தி
32. பீலிக்ஸ் பெரேரா – சமூக சேவைகள்
33. சி.பி. ரத்நாயக்க – விளையாட்டுத்துறை
34. மஹிந்த யாப்பா அபேவர்தன – விவசாயம்
35. குமார வெல்கம – போக்குவரத்து
36. டளஸ் அழகப்பெரும – இளைஞர் விவகாரம் வேலைவாய்ப்பு
37. ஜோன்சன் பெர்னாண்டோ – கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம்

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரதியமைச்சர்களின் பட்டியல்

1. சாலிந்த திசாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில்
2. டிலான் பெரேரா – பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்
3. சுசந்த புஞ்சி நிலமே – கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி
4. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன – பொருளாதார அபிவிருத்தி
5. சந்ரசிறி கஜதீர -நிதி, திட்டமிடல்
6. ஜகத் புஷ்பகுமார – விவசாயம்
7. டி. பி. ஏக்கநாயக்க – கல்வி
8. மஹிந்த அமரவீர – சுகாதாரம்
9. ரோஹித அபேகுணவர்தன – துறைமுகம், விமான சேவைகள்
10. எஸ். எம். சந்ரசேன – நீர்ப்பாசனம், நீர்வள முகாமைத்துவம்
11. குணரத்ன வீரக்கோன் – தேசிய மரபுரிமை, கலாசாரம்
12. மேர்வின் சில்வா – தகவல், ஊடகத்துறை
13. பண்டு பண்டாரநாயக்க – சுதேச வைத்தியத்துறை
14. ஜயரத்ன ஹேரத் – கைத்தொழி, வர்த்தகம்
15. தயாஸ்ரீ த திசேரா – துறைமுகம், விமான சேவைகள்
16. துமிந்த திசாநாயக்க – தபால், தொலைத் தொடர்புகள்
17. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – பொருளாதார அபிவிருத்தி
18. லசந்த அலகியவன்ன – நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள்
19. ரோஹண திசாநாயக்க – போக்குவரத்து
20. எச். ஆர். மித்ரபால – கால்நடை அபிவிருத்தி
21. நிர்மல கொத்தலாவல – பெருந்தெருக்கள்
22. பிரேமலால் ஜயசேகர – மின்சக்தி, மின்வலு
23. கீதாஞ்சன குணவர்தன – வெளிவிவகாரம்
24. விநாயகமூர்த்தி முரளிதரன் – மீள்குடியேற்றம்
25. இந்திக்க பண்டாரநாயக்க – உள்ளூராட்சி, மாகாண சபைகள்
26. முத்து சிவலிங்கம் – பொருளாதார அபிவிருத்தி
27. சிறிபால கம்லத் – காணி, காணி அபிவிருத்தி
28. டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க – இடர் முகாமைத்துவம்
29. சந்ரசிறி சூரியாரச்சி – சமூக சேவைகள்
30. நியோமல் பெரேரா – கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம்
31. சரத் குணரத்ன – அரச வளங்கள், தொழில் முயற்சி
32. நந்திமித்ர ஏக்கநாயக்க – உயர்கல்வி
33. நிருபமா ராஜபக்ஷ – நீர்வழங்கல், வடிகாலமைப்பு
34. லலித் திசாநாயக்க – தொழில்நுட்பம், ஆராய்ச்சி
35. சரண குணவர்தன – எரிபொருள் துறை
36. ரெஜினோல்ட் குரே – நீதி
37. விஜித் விஜயமுனி சொய்சா – புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
38. எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா – சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகாரம்
39. வீரக்குமார திசாநாயக்க – பாரம்பரிய கைத்தொழில், சிறுகைத்தொழில் அபிவிருத்தி

Following are the Ministers and their portfolios:
 
 Minister – Portfolio

 His Excellency the President Mahinda Rajapaksa
(1) Defence
(2) Finance & Planning
(3) Ports & Aviation
(4) Highways
D. M. Jayaratne –Buddhasasana & Religious Affairs
Ratnasiri Wickramanayake –Public Management & Reforms
Nimal Siripala de Silva – Irrigation & Water Resource Development
A. H. M. Fowzie – Disaster Management
Maithripala Sirisena – Health
Susil Premajayantha – Petroleum Industries
Dinesh Gunawardena – Water Supply & Drainage
Douglas Devananda – Traditional Industries & Small Enterprise Development
A. L. M. Athaullah – Local Government & Provincial Councils
D. E. W. Gunasekera – Rehabilitation & Prison Reforms
Rishad Bathiyutheen – Industry & Commerce
Wimal Weerawansa – Construction, Engineering Services,  Housing & Common Amenities
Champika Ranawaka – Power & Energy
Basil Rajapaksa – Economic Development
P. Dayaratne – State Resources & Enterprise Development
(Prof) G. L. Peiris – Foreign Affairs
John Seneviratne – Public Administration & Home Affairs
(Mrs.) Sumedha Jayasena – Parliamentary Affairs
Milroy Fernando – Resettlement
Jeewan Kumaratunga – Post & Telecommunication
Pavithra Wanniarachchi – National Heritage & Cultural Affairs
Anura Priyadarshana Yapa – Environment
Tissa Karaliyadde – Child Development & Women’s Affairs
Athauda Seneviratne – Justice
Gamini Lokuge – Labour Relations & Productivity Improvement
Bandula Gunawardena – Education
Mahinda Samarasinghe – Plantation
Rajitha Senaratne – Fisheries & Aquatic Resources
Piyasena Gamage – Indigenous Medicine 
S. B. Navinne – National Languages & Social Integration
Janaka Bandara Tennekoon – Lands & Land Development
Felix Perera – Social Services
C. B. Rathnayake – Sports
Mahinda Yapa Abeywardena – Agriculture
Kumara Welgama – Transport
Dullas Alahaperuma – Youth Affairs
Johnston Fernando – Co-operatives & Internal Trade
 
Following are the Deputy Ministers and their portfolios:

 Deputy Minister

Salinda Dissanayake – Plantation and Industries 
Dilan Perera – Public Administration and Home Affairs
Susantha Punchinilame – Fisheries and Aquatic Resources Development 
Lakshman Yapa Abeywardena – Economic Development
Chandrasiri Gajadeera – Finance and Planning
Jagath Pushpakumara – Agriculture
T. B. Ekanayake – Education
Mahinda Amaraweera – Health
Rohitha Abeygunawardena – Ports and Aviation
S. N. Chandrasena – Irrigation and Water Resources Management
Gunaratne Weerakoon – National Heritage and Cultural Affairs
Mervyn Silva – Mass Media and Information
Pandu Bandaranayake – Indigenous Medicine
Jayaratna Herath – Industry and Commerce
Dayashritha Tissera – Ports and Aviation
Duminda Dissanayaka – Posts and Telecommunication
Ranjith Siyambalapitiya – Economic Development
Lasantha Alagiyawanne – Construction, Engineering Services, Housing and Common Amenities
Rohana Dissanayake  – Transport
H. R. Mithrapala – Livestock Development
Nirmala Kothalawala – Highways
Premalal Jayasekera – Power and Energy
Geethanjana Gunawardena – External Affairs
Vinayagamoorthy Muralitharan – Resettlement 
Indika Bandaranayake – Local Government and Provincial Councils
Muthu Sivalingam – Economic Development
Siripala Gamlath – Lands and Land Development
W. B. Ekanayake – Disaster Management
Chandrasiri Suriyarachchi – Social Services
Neomal Perera – Co-operatives and Internal Trade 
 Sarath Gunaratne – State Resources and Enterprise Development
Nandimithra Ekanayake – Higher Education
Nirupama Rajapaksa – Water Supply and Drainage
Lalith Dissanayake – Technology and Research
Sarana Gunawardena – Petroleum Industries
Reginold Cooray – Justice
Vijithmuni Zoysa – Rehabilitation and Prison Reforms
N. L. A. M. Hisbullah – Child Development and Women’s Affairs
Weerakumara Dissanayake – Traditional Industries and Small Enterprise Development

சரத் பொன்சேகா கன்னி உரை

sarath_.jpgஇலங் கையில் சட்டத்தின் ஆட்சி நிலைபெற வேண்டும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த 12 தினங்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து சரத் பொன்சேகா அவர்கள் பொது இடத்தில் பேசிய முதலாவது தருணம் இதுதான்.

சுருக்கமான தனது உரையில், முதலில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை வாழ்த்திய பிறகு, பொன்சேகா அவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தாக்கிப் பேசினார். இலங்கைக்கு, ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும், தனிநபர் மற்றும் ஊடக சுதந்திரமும் தேவை என்று அவர் கூறினார். தான் வருத்தத்துடன் பேசுவதாக கூறிய அவர், பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வெள்ளை உடையில் வந்திருந்த பொன்சேகா அவர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன், பார்வையாளர் அமரும் பகுதியை நோக்கி கையசைத்தார்.

இலங்கையராக ஒருங்கிணைந்து எமது சக்தியை வெளிப்படுத்துவோம் – சபையில் பிரதமர்

dm-jayaratna.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பை வழங்கி இலங்கையராக ஒன்றிணைந்து எமது சக்தியை உலகுக்கு வெளிப்படுத்துவோம் எனப் புதிய பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று (22) பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையில் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தைச் சரியாக வழிநடத்துவதற்குப் பாரிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டிய பிரதமர் ஜயரட்ன, சபாநாயகரைத் தெரிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று அடுத்த ஆறு வருட காலத்திற்கும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று ஆரம்பமானபோது புதிய சபாநாயகரைத் தெரிவுசெய்த பின்னர் பிரதமர் ஜயரட்ன உரையாற்றினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :-

‘முழு நாட்டு மக்களுக்கும் சேவையாற்றக் கூடிய ஒரு வாய்ப்பு இப்போது கிடைக்கின்றது. புதிய சபாநாயகர் (சமல் ராஜபக்ஷ) புரிந்துணர்வுடன் செயற்படக்கூடியவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தந்தையாரின் அரசியல் வழியைப் பின்பற்றி 30 வருட கால யுத்தத்தை ஒழித்துக்கட்டி நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறார். அவரது சகோதரர் சபைக்குத் தலைமைதாங்குவது சிறப்பானதாகும்.

இந்த நாட்டில் ஐந்து இனத்தவர்கள் வாழ்கிறார்கள்.  அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே இலங்கையர்கள் என்ற ரீதியில் செயற்படுவோம். எமது மக்கள் அனைவரும் எந்தப் பாகுபாடும் இன்றி வாழ வழிசமைக்க நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். மக்களின் ஆணையை நடைமுறைப்படுத்தும் போது நாம் எமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இலங்கையை உலகின் உன்னத நாடாக்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் இலக்கை அடைய நாம் பாடு படுவோம்’ என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

சபையின் கெளரவம் பேணப்பட வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

ranil.jpgஎதிர்க் கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறுவதற்கான உரிமை பேணப்படுவதுடன் சபையின் கெளரவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய சபாநாயகரைப் பாராட்டி உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். “நாம் எல்லோரும் சேர்ந்து சபாநாயகரைத் தெரிவு செய்துள்ளோம். 1989 முதல் உங்களுடன் (சபாநாயகருடன்) பழகி இருக்கிறேன்.

இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. நான் சபையில் இல்லாதபோது தான் எங்கள் கட்சியினர் உங்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள். நீங்கள் இங்கு ஒரு கட்சியின் சார்பில் அமரவில்லை. முழுப் பாராளுமன்றத்தின் சார்பிலும் தெரிவாகியுள்Zர்கள்.

எனவே நீங்கள் இந்தப் பாராளுமன்றத் தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். எமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சுதந்திரமும் உரிமையும் இருக்க வேண்டும். 1835 இலிருந்து ஆசியாவின் பழைமையான பாராளுமன்றமாக இது விளங்குகிறது.

இந்தச் சபையின் உரிமைகளைப் பாதுகாப்பீர்கள் என நம்புகிறேன். புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் முன்னாள் பிரதமருக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன். புதிய உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

வட ஐரோப்பா வழமைக்கு திரும்பியது

srilankan-airlines.jpgஐஸ்லாந்து எரிமலை சாம்பல் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக விமான போக்குவரத்தில் நீடித்த தடைக்குப் பின்னர் வட ஐரோப்பிய வான்போக்குவரத்து பாதை பெரும்பாலும் வழமைக்குத் திரும்பியுள்ளது. ஒரு வாரத்துக்குரிய முழுமையான எண்ணிக்கையில் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் குறைந்தளவான சேவை ரத்துகளே எதிர்பார்க்கப்படலாம் எனவும் ஐரோப்பிய வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் நோர்வேயும் சுவீடனும் தமது வான் போக்குவரத்து மார்க்கத்தில் சில பகுதிகளை மீண்டும் மூடியுள்ளன. காற்றில் புதிய சாம்பல் மேகங்கள் அள்ளுண்டு வந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்கள் பல முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடையை விமர்சித்துள்ளன. இரண்டு பில்லியன் டொலர்கள் வரை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறும் இந்த நிறுவனங்கள் நிதி ரீதியான உதவிகளை கோரியுள்ளன.

முஸம்மிலுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படாமை குறித்து விமல் வீரவன்ச அதிருப்தி

wimal-weerawansa.gifதேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஹமட் முஸம்மிலுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படாமை குறித்து கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். தேசியப் பட்டியல் மூலம் முஹமட் முஸம்மில் மற்றும் அசல ஜாகொட ஆகியோரை நியமிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்த போதிலும், இறுதி நேரத்தில் அசல ஜாகொடவிற்கு மட்டுமே தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து காதர் இராஜினாமா

cadar.jpgஐ. தே. கவின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய கண்டி மாவட்ட எம்.பி. ஏ. ஆர். எம். அப்துல் காதர் முடிவு செய்துள்ளார். அடுத்தடுத்து கட்சியில் அவர் வகிக்கும் ஏனைய பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்யவும் காதர் எம்.பி. தீர்மானித்துள்ளார்.

இராஜினாமாக் கடிதங்களை அடுத்துவரும் ஓரிரு தினங்களுக்குள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காதர் எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அப்துல் காதர் எம்.பி. :- கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் ஐ. தே. க. சார்பில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாமென்று கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

தேர்தல்களில் மாவட்டம் தாவும் ஹக்கீமை கண்டியில் நிறுத்த வேண்டாம் என்றும் சுட்டிக்காட்டினேன். சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை இதன்மூலம் தோற்றம் பெறும் என்ற உண்மையையும் விபரித்தேன். ஆனால், அவர் எனது கருத்தை ஏற்கவில்லை. மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றதன் மூலம் முஸ்லிம்கள் மீது நம்பிக்கையற்ற தன்மை இன்று சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் எனது கருத்தை கட்சித் தலைவர் ஏற்கவில்லை. அதனால் பொம்மையாக அப்பதவியில் இருக்க நான் தயாரில்லை. 21 வருடமாக ஐ. தே. க. எம்.பியாக இருந்த எனக்கு இப்போது கட்சியின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது. தலைமை எதேச்சதிகாரமாக செயற்படுகிறது. கடந்த காலங்களில் சிங்கள மக்களின் வாக்குகள் சுமார் 40000 வரை எனக்கு கிடைத்து வந்துள்ளது. இந்த முறை 10,000 வாக்குகளே எனக்கு கிடைத்தன. சிங்கள மக்கள் முஸ்லிம்கள் மிது நம்பிக்கையற்றுப் போனமையே இதற்குக் காரணம்.

அதுமட்டுமன்றி முஸ்லிம்களும், மூன்று முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கவில்லை. முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு வித்தியாசம் இதற்குச் சான்று. முஸ்லிம் – சிங்கள மக்கள் மத்தியிலான இந்த மனப்போக்குக்குக் காரணம் ஹக்கீம் கண்டியில் போட்டியிட்டதே. மட்டுமன்றி ஹக்கீம் போட்டியிடாவிட்டிருந்தால் ஐ. தே. க. 5 ஆசனங்களைப் பெற்றிருக்கும். கட்சிக்கு ஆசனம் குறைந்ததற்கும் ஹக்கீமே காரணம்.

ஐ. தே. க தனக்குக் கிடைத்த தேசியப் பட்டியலையும் பொருத்தமாக செய்யவில்லை. கட்சித் தலைமை எதேச்சதிகாரமாக செயற்பட்டுவிட்டது.

கொழும்பு முஸ்லிம்களுக்காக முன்னாள் எம்.பி. மஹ்ரூபை தேசியப் பட்டியல் மூலம் நியமித்திருக்க வேண்டும். கட்சிக்காக நிறைய அர்ப்பணிப்புக்களைச் செய்தவர் அவர். மு. காவுக்கு இரண்டு பேரை வழங்கியதை கண்டிக்கின்றேன். இதில் ஒன்றை மஹ்ரூபுக்கு வழங்கியிருக்க முடியும் என்றார்.

60 வருட காலத்திற்குப் பின்னர் பாராளுமன்றத்தில் புதிய அணுகுமுறை – இரா.சம்பந்தன்

Sambanthan_R_TNAஅறுபது வருட காலத்திற்குப் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் புதியதொரு நிலைமை தோன்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பாராளுமன்றமாவது நியாயமானதும் நீதியானதுமான தீர்வைக் காணுமெனத் தாம் நம்புவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார். ஏழாவது பாராளுமன்றத்திற்கான முதலாவது அமர்வு நேற்று ஆரம்பமான போது புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகரைப் பாராட்டி உரை யாற்றினார்கள். இதன்போது சம்பந்தனும் உரையாற்றினார்.

சம்பந்தனின் உரை நேற்று முற்றிலும் வித்தியாசமான ஓர் அணுகுமுறையை வெளிப்படுத்தியது. விபரம் வருமாறு :-

‘சபாநாயகர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு எனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்ற பாராளுமன்றம் முதன் முறையாகக் கூடியபோது சபாநாயகர் தெரிவு எவ்வாறு இடம்பெற்றது என்பது என் ஞாபகத்திற்கு வருகிறது. ஆளுந் தரப்புக்கும் எதிர்த் தரப்புக்கும் இடையில் போட்டி ஏற்பட்டதால் முழு நாளும் வாக்கெடுப்பு நடந்தது.

இறுதியில் ஒரு வாக்கில் சபாநாயகர் தெரிவானார். நாம் 22 வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தோம். இம்முறை நீங்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்Zர்கள். இது இந்தச் சபை உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. நான் உங்கள் தெரிவை வரவேற்கிறேன். உங்களின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கிறேன்.

30 வருடகால யுத்தம் முடிவடைந்த நிலையில், சபை கூடுவதாகப் பிரதமர் உரையாற்றும் போது கூறினார். அது பொருத்தமான கருத்து. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது உண்மை. நாட்டு மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததை நாம் வரவேற்கின்றோம்.

அதே சமயம், நாட்டில் சமாதானம், நீதி, நேர்மை ஏற்பட்டுவிட்டதாக நாம் கருத முடியாது, ஏற்க முடியாது. நீதி, நியாயம் மக்களுக்குக் கிடைக்க இந்தப் பாராளுமன்றம் பணியாற்ற வேண்டும். இதற்கு முன் இருந்த பாராளுமன்றங்கள் அந்த நிலையில் இருக்கவில்லை. கடந்த 60 வருட காலமாக நியாயமான, நீதியான தீர்வைக்காண்பதற்கு முடியவில்லை. புதிய பாராளுமன்றம் அதனை நிறைவேற்றும் என நம்புகிறேன். அரசியல் சாசனத்தையும் நிலையியற் கட்டளைகளையும் பாதுகாப்பது மாத்திரமன்றி மரபுகளும் உள்ளன.

பாராளுமன்றத்தின் கெளரவம் முழுமையாக உங்களில் (சபாநாயகரில்) தங்கியிருக்கிறது. உங்களின் கெளரவம் பாராளுமன்ற கெளரவத்தில் தங்கியிருக்கிறது. இதனைப் பிரிக்க முடியாது’ என்றும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

பிரதி சபாநாயகர் பிரியங்கர; குழு. பிரதி தலைவர் சந்திரகுமார்

paa.jpgஏழாவது பாராளு மன்றத்தின் பிரதி சபா நாயகராக பிரியங்கர ஜயரட்ன ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க ப்பட்டார். அதேநேரம் குழுக்களில் பிரதித் தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபை நடவடிக்கைகள் புதிய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று (22) ஆரம்பமானபோது காலை 9.50 மணியளவில் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.

சபாநாயகரின் அறிவிப்பை யடுத்து முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க, பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்னாள் பிரதி சபாநாய கராகவிருந்த பிரியங்கர ஜயரட்னவின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஜோன் அமரதுங்க வழிமொழிந்தார்.

வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் பிரதி சபாநாயகரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து குழுக்களின் பிரதித் தலைவரைத் தெரிவு செய்யுமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டதும் சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழிமொழிந்தார். குழுக்களின் பிரதித் தலைவரும் ஏகமனதாகத் தெரிவானார்.

பொதுவாக ஏழாவது பாராளுமன்றத்தின் ஆரம்பம் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகவே அமைந்திருந்தது. ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் இணக்கப்பாட்டுடன் நாட்டு நிர்வாகத்தை ஆரம்பித்தமை விசேட அம்சமாக இருந்தது.

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

parliament.jpgஇலங் கையின் ஏழாவது பாராளுமன்றத்திற்கான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் உத்தியோகபூர்வ நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் பிரதமர், சபாநாயகர், கட்சித் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்று நடைபெறவுள்ள இப் பதவிப் பிரமாண வைபவம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புதியவர்களுக்கும், இளையவர்களுக்கும் முன்னுரிமையளிக்கப்படுவதோடு 40 பேரைக் கொண்டதாக இந்த அமைச்சரவை அமையவுள்ளது. கடந்த அமைச்சரவைகளில் அமைச்சர்களாகத் திகழ்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் பலருடன் புதிய முகங்கள் பலவும் இம்முறை அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்கின்றனர்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்முறை அமைச்சர் தெரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை 40 பேரைக் கொண்டதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து ஒரு அமைச்சருக்குப் பல அமைச்சுப் பொறுப்புக்கள் ஒப்ப டைக்கப்படுகின்றன.