18

18

வன்னிப் படுகொலைகளும் அதன் நினைவு கூரலும்! : பாண்டியன் தம்பிராஜா

May_18_Remembranceபுலி துதிபாடிகள் வன்னிப் படுகொலைகளை நினைவு கூரத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு பிரபாகரன் கோமணத்துடன் வீழ்ந்து கிடந்த நாள்தான் நினைவிற்கு வருகின்றது. இந்த வியாபாரிகளுக்கு அரச இராணுவத்தாலும் புலிகளாலும் கொல்லப்பட்ட எம் சகோதரர்கள் மேல் எந்தவித நினைவும் இல்லை.

மனித நேயத்தின் அடிப்படையில்தான் பிறர் மீது அன்பு செலுத்துவது ஆகும். பாசிச புலித்தலைமைக்கு அது பற்றி கவலை ஒரு போதும் இருந்ததில்லை. அவர்களுக்கு புலியினது இருப்பே பிரதானமானது. புலி அமைப்பு என்பது மக்களுக்காகவே அன்றி புலிக்காக மக்கள் அல்ல. மாறாக புலி மக்களின் அழிவில் தம்மை பாதுகாக்க முயன்றனர் என்பது உங்களுக்கு தெரிந்ததே.

மறுபக்கமாக மனித நேயத்தின் அடிப்படையில் புலிகளின் இந்த மனித விரோத நடவடிக்கைகளை விமர்சித்த ஜனநாயக வெங்காயங்கள் வன்னி படுகொலைகளை மறுத்து மறைக்க முயல்வது எந்த வகையில் நியாயமானது.

நண்பர்களே! ஏங்களுக்கு இந்த படுகொலைகளை கண்டித்து நினைவு கூர மிகுந்த விருப்பம் உண்டு. ஆனால் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இருக்கும் வரை அவர்கள் இப்படுகொலையில் புலிகளின் பங்கை ஏற்கும் வரையில் அவர்களுடன் இணைந்து நினைவு கூருவது சாத்தியமில்லை.

ஐயோ என் சொந்தங்களே, உங்களை எண்ணி அழக் கூட முடியவில்லை. ஏனெனில் அதற்கு கூட இங்கு வியாபாரிகள் உண்டு!

வலி வடக்கு மீள்குடியேற்றத்தில் இணைந்து செயற்பட யாழ் பா உ க்கள் முடிவு! தீர்க்கமான முடிவு எடுக்காவிடில் யாழ் பா உ க்களுக்கு எதிராக போராட்டம்!!

Mavai_Senathirajahஅதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமான வலி.வடக்கில் மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக இரு வாரங்களில் சாதகமான முடிவெடுக்கப்படும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (May 17 2010) தெல்லிப்பழையில்  நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் ஆர்.சி நடராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எஸ். சிறிதரன், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு தயாராக இருப்பதாக மாவை சேனாதிராசா இக்கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் சகலரும் இணைந்து செயற்பட முன்வந்தால், தானும் பங்களிப்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

யாழ் மாவட்டத்தின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் இது குறித்த முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, இக்கூட்டத்தில் தலைமையுரை நிகழ்த்திய வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத்தின தலைவர் ஆர்.சி. நடராசா குறிப்படுகையில் வலி.வடக்கு மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் தீர்க்கமாக முடிவை அறிவிக்காவிடில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினாகள் ஒன்பது பேருக்கும் எதிராக போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜீ- 15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிக்க வழிவகை செய்வேன் – ஜனாதிபதி

mahinda-raja_1.jpgபாரிய அபிவிருத்திகள் தொடர்பான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையினை ஊக்குவிக்கும் வகையில் ஜீ-15 அமைப்பானது ஜீ-08 அமைப்புடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையினை உண்மையானதாகவும் யதார்த்தமுள்ளதாகவும் ஆக்குவதற்கு தெளிவான முறையொன்று தேவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ஜீ-15 அமைப்பின் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தி செயற்பாட்டை தோற்றுவிப்பதற்காக பொருளாதாரம், நிதி, விஞ்ஞானம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்புவதற்கும் தனியார் மற்றும் அரச நிறுவனங்களிலுள்ள திறமைசாலிகள் மற்றும் தனிப்பட்ட அனுபவசாலிகளைக் கொண்ட செயற்பாட்டு படையொன்றை நியமிப்பது பொருத்தமானதெனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஈரான் இஸ்லாமிய குடிய ரசுக்குப் பின் ஜீ-15 அமைப்பின் தலைமையை இலங்கை பொறுப்பேற்பது மிகவும் மகிழ்ச்சியுடனேயேயாகும். அடுத்த ஆண்டு இந்த அமைப்பின் அரச தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நாம் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளோம். கடந்த காலங்களில் இந்த அமைப்புக்கு மிகவும் திறமையாக வழிகாட்டி வந்த கலாநிதி, மஹ்மூத் அஹ்மட் நெஜாட்டுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.

தெற்கின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஜீ-15 அமைப்பு மற்றும் அந்தத் துறையின் சம்பிரதாயங்களை தொடர்ந்து மேற்கொள்வ தற்கு வழிகாட்டிய உங்களுடைய அர்ப்பணிப் பான சேவைக்கு நாம் மதிப்பளிக்கிறோம்.

எவ்வாறாயினும் எமது இந்த அமைப்புக்கு புனர்வாழ்வளித்து அதனைத் தொடர்ந்து முன்நோக்கி கொண்டு வருவதற்குரிய சூழ்நிலை இருப்பதாக நான் நம்புகிறேன். நாம் இப்போது ஒரு சுற்றுவட்டத்தை முடித்துக் கொண்டுள்ளோம். எங்களது அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது சர்வதேச பொருளாதார மற்றும் அரசியலில் மாற்றம் ஏற்பட்ட ஒரு யுகத்திலாகும். நாங்கள் இன்று 20 வருடத்தை பூர்த்தி செய்வது இந்த பூகோளமயம் மாற்றமடைகின்ற சந்தர்ப்பத்திலாகும்.

சவால்களைக் கொண்ட சூழ்நிலை, நீண்ட எதிர்காலத்துக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. நாங்கள் முதன்மை வழங்கக் கூடிய துறைகள் அநேகமானவை. பிணக்கு முடிவடைந்தாலும் எங்களால் கட்டியெழுப்பப்பட வேண்டியவை இன்னமும் முடிவடையவில்லை.

உலகெங்கும் நடைபெறுகின்ற இயற்கை அழிவுகளை சுட்டிக் காட்டுவது காலநிலை விபரீதங்களை நிர்வகிப்பதற்கு பூகோள ரீதியாக நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகும். அதற்கிடையில் நாங்கள் எதிர்நோக்குகின்ற அபிவிருத்தி சவால்கள் ஏராளமானவை. அவை வறுமையொழிப்பு, பட்டினியொழிப்பு, அனைவருக்கும் கல்வி, சுகாதார சேவையை பெற்றுக் கொடுத்தல் மக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பனவாகும். நான் கூறிக் கொள்வதென்னவென்றால் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எங்கள் அமைப்புக்குள் தீர்வுகள் இருப்பதாக நான் நம்பவில்லை. எனினும் செல்வச் செழிப்பு மிக்க மிக ஒற்றுமையான எங்கள் அமைப்புக்கூடாக நீண்டகால நோக்கங்களை நிறைவேற்றுவதற்குரிய விசேட நடவடிக்கை எடுக்கலாமென்பது எனது நம்பிக்கையாகும்.

தலைமைப் பொறுப்பை கையேற்ற இந்த சந்தர்ப்பத்தில் ஜீ-15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிப்பதற்கு வழிவகை செய்வேன் என அவர் உறுதியளித்தார்.  இச் செயற்பாடுகளின் மூலம் இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் பூரண ஒத்துழைப்பு கிட்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியினால் ஏழு பேர் நியமனம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஏழு அங்கத்தினர் ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

சகல இனங்களையும் பல்கலாசாரத்தையும் பிரதிபலிப்பதான இக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியும் ஓய்வுபெற்ற சட்ட மா அதிபருமான சித்தரஞ்சன் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் ஏனைய அங்கத்தினர்களாக கலாநிதி ரொஹான் பெரேரா, எச். எம். ஜி. எஸ். பலிகக்கார, பேராசிரியர் எம். ரீ. எம். ஜிப்ரி, சி. சண்முகம், திருமதி மனோராமநாதன், மெக்ஸ்வெல் பரனகம ஆகியோரும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

நாட்டின் சகல சமூகங்களினதும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டதாகச் செயற்படும் இவ்வாணைக்குழுவானது அது தொடர்பான விடயங்களை விசாரணை செய்து அதன் அறிக்கையையும் விதப்புரைகளையும் ஆறு மாத காலத்திற்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

சகல அரசாங்க ஊழியர்களும் நபர்களும் தேவையான தகவல்களையும் ஒத்துழைப்பினையும் இதற்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். ஆணைக்குழுக்கள் விசாரணைச் சட்டத்தின் 14ம் பிரிவின் 393ம் அத்தியாயத்தின் கீழான விதிகளுக்கிணங்க இவ்வாணைக்குழு இயங்கும்.

இவ்வாணைக்குழுவில் அங்கத்தவரான டாக்டர் ரொஹான் பெரேரா வெளி விவகார அமைச்சின் சட்ட ஆலோசகரும் சர்வதேச சட்ட ஆணைக்குழுவுக்கு ஆசிய பிராந்தியத்திற்காக ஒதுக்கப்பட்ட ஏழு ஆசனங்களில் ஒரு ஆசனத்துக்காக ஐ. நா. பொதுச்சபையினால் வேட்பாளராக நியமிக்கப்பட்டவராவார்.

எச். எம். ஜீ. எஸ். பலிகக்கார ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியாகப் பணிபுரிந்தவராவார்.

பேராசிரியர் எம். ரீ. எம். ஜிப்ரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் பிரதித் தலைவராவார்.

சி. சண்முகம் முன்னாள் திறைசேரியின் செயலாளராவார்.

திருமதி மனோ இராமநாதன் முன்னாள் நீதியரசர் பி. ராமநாதனின் மனைவியும் பிரதி சட்ட வரைஞராகப் பணியாற்றுபவருமாவார். மெக்ஸ்வெல் பரணகம முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர்.

எட்டு மாவட்டங்களில் பெரும் மழை; வெள்ளம் சுமார் 2 இலட்சம் பேர் நிர்க்கதி; 6 பேர் பலி

rain.jpgநாட்டின் பல்வேறு பாகங்களிலும் நேற்று பெய்த மின்னலுடன் கூடிய அடை மழை காரணமாக அறுவர் உயிரி ழந்திருப்பதுடன் 16 பேர் காயமடைந் திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கைளுக்கான பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.

rain.jpgஎட்டு மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரத்து 75 குடும்பங்களைச் சேர்ந்த, ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 908 பேர் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் பெய்த அடை மழை வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளா கியிருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே நேற்றைய மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டங்களிலுள்ள 18 வீடுகள் முழுமையாகவும் 47 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அடை மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரும் மின்னல் தாக்கியதில் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர். இதேவேளை 11 பேர் மழையினாலும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்து வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுகங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருவதாகவும் பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார். இம்மழை காரணமாக மேல் மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும், போக்குவரத்துகளும் பெரிதும் பாதிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இம்மழையினால் மேல் மாகாணத்திலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியதே இதற்குக் காரணமாகும். அதனால் தாழ் நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் துரிதமாக வழிந்தோடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளும் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இக்கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 15 ஆயிரத்து 65 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்திலுள்ள குடுப்பிட்டிய ஓயா பெருக்கெடுத்துள்ளது என்றார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கம்பஹா மாவட்ட இணைப்பாளர் குறிப்பிடுகையில், இம்மழை காரணமாக கம்பஹா – மினுவாங்கொட, கம்பஹா – ஜாஎல, கம்பஹா – உருதொட்ட, பெலும்மகஹா – வெலிவேரிய வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன என்றார். கொழும்பு மாவட்ட இணைப்பாளர் கூறுகையில், மழை காரணமாக 1913 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புவக்குபிட்டிய ஓய உட்பட இப்பிரதேசத்திலுள்ள மூன்று ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இம்மாவட்டத்திலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றார்.

இதேவேளை களுத்துறை, பண்டாரகம, பாணந்துறை பகுதிகளில் வெள்ளத்தினால் 2720 குடும்பங்களைச் சேர்ந்த 13316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  களுத்துறையில் வெள்ளத்தினால் ஒரு வீடு முற்றாகச் சேதமுற்றுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளன. குகுலே கங்கை மின்சார திட்டத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

களுத்துறையில் 1406 குடும்பங்களைச் சேர்ந்த 6890 பேரும், பாணந்துறையில் 1300 குடும்பங்களைச் சேர்ந்த 6370 பேரும், பண்டாரகமையில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் வரவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக களுத்துறை பிரதேச செயலாளர் சிறிசோம லொகுவிதான தெரிவித்தார். களுகங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம்; இடியுடன் கடும் மழை தொடரும்; மக்களுக்கு எச்சரிக்கை!

9colombo.jpgதிருகோண மலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம் நிலை கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனாஹெந்த வித்தாரன தெரிவித்தார்.

இந்தத் தாழமுக்கத்தினதும், தென்மேல் பருவ பெயர்ச்சி மழை பெய்வதற்கான அறிகுறியாகவுமே தென்பகுதியில் கடும் மழை பெய்து வருவதாகவும் அவர் கூறினார். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிக மழை வீழ்ச்சி நிட்டம்புவவில் 313.6 மி.மீ. ஆகப் பதிவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் மேல், தென், சப்ரகமுவ மாகாணங்களில் இடி, மின்னலுடன் கடும் மழை பெய்ய முடியும் என வானிலை அவதான நிலையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

இக்காலப்பகுதியில் இடி, மின்னல் மற்றும் அதிக மழை காரணமான பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அந்நிலையம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது. வானிலையாளரான கயனாஹெந்த வித்தாரண மேலும் கூறுகையில், வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் தற்போது இலங்கைக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழைவீழ்ச்சிப் பதிவுப்படி நிட்டம்புவவில் 313.6 மி.மீ, மக்காவிட்ட 223.5 மி.மீ, ஹங்வெல்ல 210 மி.மீ, கலட்டுவாவ 219.5 மி.மீ, குக்குலேகங்கை 188 மி.மீ, அவிசாவளை 157 மி.மீ. என்றபடி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல் 2.30 மணியுடன் முடிவுற்ற 6 மணி நேர மழைவீழ்ச்சி பதிவுப்படி இரத்த மலானையில் 169.5 மி.மீ. கொழும்பில் 126 மி.மீ. என்றபடி மழை பெய்துள்ளது என்றார்.