22

22

யாழ்.மேயரும் அவரது செயலரும் நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.!

Jaffna_Mayor_Yogeswari_Patkunamநீதி மன்றத்தை அவமதித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக நேற்று (May 21 2010) விசாரணைகளுக் குட்படுத்தப்பட்ட யாழ். மேயர் திருமதி ப. யோகேஸ்வரி மற்றும் அவரது செயலாளர் திரு கு.பற்கணராசா இருவரும் நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவர் மீதான வழக்குகள் தனித்தனியே யாழ். நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. நீதவானின் சமாதான அறையில் மேயருக்கெதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.

மேயரின் செயலாளர் மீதான வழக்கு திறந்த நீதி மன்றத்தில் நடைபெற்றது.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக வழக்கைத் தொடர்ந்து நடத்தி குற்றவாளியாகக் காணப்பட்டால் 7 வருடங்களுக்கு சிவில் உரிமையை இழக்க  வேண்டி வரும் என தெரிவித்த நீதவான்  மன்னிப்புக் கேட்டு வழக்கிலிருந்து விடுபடப்போகிறிர்களா அல்லது வழக்கினைத் தொடர்ந்து நடத்தப் போகிறீர்களா என கேட்ட போது வழக்கிலிருந்து விடுபடவிரும்பவதாகத்  தெரிவித்த மேயர் நீதிமன்றத்திடம் பகிரங்க மன்னிப்பைக் கோரினார். இதனையடுத்து அவரை வழக்கிலிருந்து விடுவிடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மேயருக்குத் தெரிவித்த அதே கருத்தை மேயரின் செயலாளருக்கும் நீதவான் தெரிவித்தார். அவரும் மன்னிப்புக் கோரியதன் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு வழக்கிலிருந்து அவரும்  விடுவிக்கப்படுவதாக நிதவான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து கண்காணிப்புப் பணிகளில் அதிகளவு பொலிஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து கண்காணிப்பு நடைமுறைகள் தற்போது கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றன. வழமையை விடவும் அதிகளவிலான பொலிஸார் கடமையிலீபடுத்தப்பட்டு.  யாழ்.நகரின் வீதிகள் அனைத்திலும் வீதி ஒழுங்கு நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதன் ஆவணங்கள் பரிசோனைக்குட்படுத்தப்படுவதோடு, போக்குவரத்து வீதி ஒழுங்ககளைக் கவனத்தில் கொள்ளாத சாரதிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டப்பணமும் அறவிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் தலைக் கவசத்திற்குள் கைத்தொலைபேசியை செருகிய படி உரையாடிக்கொண்டு செல்வது யாழ்ப்பாணத்தில் வழக்கமாகவுள்ளது. தற்பொது அவ்வாறு செல்பவர்களுக்கு தண்டம் அறிவிடப்படும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடத்தல் சம்பவங்களையடுத்து வான் முதலான வாகனங்களும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்படத்தக்கது.

கனடா: தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

Viyoogamமே 18 2009ல் முடிவுக்கு வந்த வன்னி யுத்தம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. வன்னி யுத்ததத்தில் நிகழ்ந்த மிக மோசமான மனித அவலமும் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்ட இலங்கை அரசு தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாரில்லாததுமான அரசியல் சூழல் இலங்கை அரசுக்கு எதிரான தொர்ச்சியான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. இதன் எதிரொலியாக நீண்ட அரசியல் பின்னணியை உடையவர்களின் கூட்டு முயற்சியாக மே 18 இயக்கம் கடந்த ஆண்டு உருவானது தெரிந்ததே.

மே 22ல் நடந்து முடிந்த வன்னி யுத்தத்தினை நினைவுகொள்ளும் நிகழ்வு ஒன்றை மே 18 இயக்கம் கனடாவில் ஏற்பாடு செய்துள்ளது. ‘தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள் மதிப்பீடும் கலந்தரையாடலும்’ என்ற தலைப்பில் இந்நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘நடந்து முடிந்த இனப்படுகொலைகளில் இருந்து மீள் எழுச்சி கொள்ளும் நாளாக மே 18யை நினைவுகூருவோம்’ என மே 18 இயக்கம் தனது அழைப்பிதழில் கேட்டுக் கொண்டு உள்ளது. ( மேலதிக தகவல்களுக்கு: May18_Movement_Discussion )

மே 18 இயக்கம் தனது அரசியல் கொள்கை இதழாக வியூகம் சஞ்சிகையை வெளியிட்டு வருவதும் அதன் வெளியீட்டு நிகழ்வு கனடா லண்டன் பாரிஸ் ஆகிய நகரங்களில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்