அன்புடையீர்,
இறைவன் திருவருளினால் நான் எங்கள் சிவன் கோயிலை ஆரம்பிப்பதற்கு வேண்டிய அங்குரார்ப்பணக் கூட்டத்தை எனது (49 Ravensbourne Park Crescent, Carford, London, SE6 4YG,UK) இல்லத்தில் ஒழுங்கு செய்திருந்தேன். அப்போது ஆண்டு 1993. நானும் துடிப்புடன் இருந்தேன். இக்கூட்டத்திற்கு என்னால் அழைக்கப்பட்டவர்கள்: திருவாளர்கள் வி.கணேசமூர்த்தி, செ.யோகராசா, வ.கிருஷ்ணானந்தராஜ், தி.அருள்தாஸ், சு.பேரின்பநாதன், ந.சிவசுப்பிரமணியம், நா. ஸ்ரீ கெங்காதரன், ஆ.ரவீந்திரன் ஆகிய அப்பெரியார்கள் என் அழைப்பை ஏற்று வந்தனர்.
சிவன் கோயில் அங்குரார்ப்பணப் பூசை Newstead Community Hall, Lee எனும் மண்டபத்தில் நடைபெற்றது மண்டபத்திற்குரிய வாடகை முதலிய பிரதான செலவினங்களையும் நானே உற்சாகத்துடன் பொறுப்பேற்றிருந்தேன். அத்துடன் நானே அடியார்கள் தரிசித்து வரும் மூலஸ்தானத்திலுள்ள சோமஸ்கந்த மூர்த்தியின் திருமேனியையும் மகிழ்வுடன் உபயம் செய்தேன். ஆலயம் அமைந்துள்ள காணியை வாடகைக்கு எடுப்பதற்கு மூலகாரணமாகவும் பின் அக்காணியில் ஆலயம் அமைப்பதற்கான முயற்சிகளையும் ஏனைய அறங்காவலர்களுடைய ஒத்துழைப்புடன் 1993 -1994 இல் நான் மேற்கொண்டேன்.
தொடக்கத்தில் ஆரம்பகால அறங்காவலர்களுடைய நிதி உதவிகள் கிடைக்காமையினால் நிதிப் பற்றாக்குறையின் நெருக்கடியைச் சமாளிக்கும் நிலையும் எனக்கு ஏற்பட்டது. எனினும் என் பணி தயங்காமல் நடந்தது. தற்போது சிவன் நிலையம் அமைக்கப்பட்டுள்ள காணியை வாங்குதவற்கும் நானே மூலகாரணமாக இருந்தேன் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அக்காணியை வாங்குவதற்கு ஏதுவாகும் வகையில் வைத்திய கலாநிதி சீ.நவரத்தினம், வைத்திய கலாநிதி சி சோமசேகரம், கலாநிதி து. ஸ்ரீஸ்கந்தராஜா, அமரர் மு. அழகப்பன் ஆகியோரை அறங்காவலர்களாக வருவதற்க்கு அழைத்தேன். அவர்களும் வந்து எனக்கு ஊக்கம் தந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமரர் க.செல்வேந்திரன், திரு.சோ.பாலசுந்தரம், திரு.த. ஸ்ரீதரன், வைத்திய கலாநிதிகள் சி.இராஜசுந்தரம், சு.சிவதாசன், ஆர். கந்தவேள் ஆகியோர் அறங்காவலர்களாக வருதவதற்கும் மூலகாரணமாக இருந்துள்ளேன் என்பதையும் பெருமையுடன் இன்று நினைவு கூருகிறேன். எனது அழைப்பின் பேரில் ஆரம்பகால அறங்காவலர்களில் சிலர் சில விக்கிரகங்களை தாராள மனதுடன் உபயமாக வழங்கினர். சிலர் அலங்கார உற்சவ உபயகாரர்களாக வந்தனர். மற்றும் சிலர் விசேட உபயகாரர்களாக வந்தனர். பொதுமக்களில் சிலரும் விசேட உபயகாரர்களாக வருவதற்கு அடியேனுடைய உற்சாகமும் பங்கும் பிரயத்தனமும் காரணிகள் ஆகின.
அடுத்த கட்டமாக எம் கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களையும் பொதுமக்களின் உதவியுடன் ஸ்தாபிதம் செய்வதற்கும் அவர்கள் உபயகாரர்களாக வருவதற்கும் நான் எடுத்தபிரயத்தனங்கள் வெற்றியளித்தன. இவ்வாறு எம்கோயில் உருவாக்கப்பட்டது. கோயிலுக்கு அர்ச்சகர்கள் தேடும் கட்டத்தில் இங்கு பணி புரிவதற்கு சிவஸ்ரீ சபாமகேஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீம சுந்தரக் குருக்கள் அவர்களையும் தமிழில் பூசை செய்வதற்கு சிவஸ்ரீ மணிவாசகக் குருக்கள் அவர்களையும் பன்னிரு திருமுறை ஓதுவதற்கு திரு. சாமி தண்டபாணி ஓதுவார் அவர்களையும் அடியேன் மூல காரணமாக இருந்து வரவழைத்தேன். வெற்றிக்கு மேல் வெற்றி வர, நானும் ஊக்கப்பட்டேன்.
இப்பணிகளை எல்லாம் செய்தபின்னர் ஆலயத்தை ஆகம முறைப்படி புனரமைப்தற்கு எண்ணினேன். எனவே கோயில் கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்தவற்கான சிவலிங்கத்தையும் வட இந்தியாவிலிருந்து சுணக்கம் இன்றித் தருவித்திருந்தேன். கோயில் தொடர்ந்து நடந்தது. கோயில் அமைந்துள்ள காணி கோயிலுக்குச் சொந்தமாக இல்லாத படியால் சட்டத்தரணி திருமதி. இந்திரா செபஸ்தியான் அவர்களையும் பொறியியலாளர் (Mr. Payne) திரு.பெயின் அவர்களையும் அறங்காவலர் சபைக் கூட்டத்திற்கு அழைத்து வேண்டிய சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கான ஒழுங்குளையும் என் தர்க்கரீதியான நல்லெண்ணத்துடன் செய்திருந்தேன்.
குறைந்த கால குத்தகைக் காணியில் பெருமளவில் பொதுமக்களின் பணத்தைச் செலவுசெய்து கோயிலை அமைப்பதில் உள்ள சட்டமுறை ஆபத்துக்களால் அது உகந்த வழியல்ல என இவர்கள் இருவரும் தமது ஆலோசனையை அறங்காலர்களின் கவனத்திற்கு முன்வைத்தனர். இந்த ஆலோசனைக்கமைய கோயிலைச்சிறு அளவில் புனரமைப்பதற்கு வேண்டிய விபரங்களை அறங்காலர் சபையில் நான் முன்வைத்தேன். இதற்கான செலவுத்தொகை 200,000 பவுண்களேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆலோசனையைப் பெரும்பான்மையான அறங்காவலர்கள் ஏதோ துரதிஷ்ட்டத்தினால் ஏற்றுக் கொள்ளவில்லை.
இக்காலகட்டத்தில் அறங்காலவர்கள் சபை தன் தலைவரை மாற்றிக் கொண்டது. அத்துடன் நான் செய்து வந்த பணிகளும் முடங்கத்தொடங்கின. என் வேகமும் குறைந்தது. எனினும் விடமனமின்றி தொடர்ந்து என்னால் ஆகியவற்றைச் செய்தேன்.
புதிய தலைவர் கலாநிதி து. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் குறைந்த கால குத்தகைக் காணியில் (Short term Lease) கோயில் கட்டுவதற்கு ஒரு மில்லியன் பவுண்கள் (1,000,000) செலவில் ஒரு ஆடம்பரமான ஆபத்தான திட்டம் வகுத்தார். அத்தொகை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அந்தத்திட்ட விபரங்களை எமது பொதுமக்கள் அறிவதற்கு முன்வைக்க வேண்டுமெனவும் பொதுமக்களின் ஆலோசனைகளையும் இணக்கமும் பெறப்பட வேண்டும் எனவும் எம் அறங்காவலர் சபையை நான் மிகவும் பணிவுடன் வேண்டினேன்.
அதற்கு எம்தலைவர் ஏனோ சம்மதிக்கவில்லை. நானும் எம்தலைவர் கலாநிதி து.ஸ்ரீஸ்கந்தராஜாவின் பெரிய செலவுத் திட்டத்தை ஏற்க என்மனச்சாட்சி இடங்கொடாத நிலையில் அவர்களின் திட்டத்தை பொதுமக்கள் கவனத்திற்கு நானாகவே முன்கொணர்ந்தேன். அறங்காவலர்களின் இத்தவறான திட்டத்தை அடியேன் பொறுப்புணர்வுடன் பொது மக்களின் முன் வைத்த காரணத்தால் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் வேண்டுகோளின் படி அறங்காவலர் சபையிலிருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன்.
நான் முன்னின்று தொடங்கிய கோயிலின் விருத்தியிலும் நிர்வாகத்திலும் நான் பங்குகொள்ள முடியாதநிலை என்னை வெகுவாகப் பாதித்துள்ளது. மேலும் கோயில் நிர்வாகம் செல்லும் போக்கையும் பொறுக்க முடியாது ஈசனிடமே எம் அடியார்கள் மூலம் விண்ணப்பிக்க ஒரு நூலை வெளியிட எண்ணியுள்ளேன். எனவே மேற்கூறிய உண்மை விபரங்கள் எல்லாம் அடங்கிய இலண்டன் சிவன்கோயில் வரலாற்று நூல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது. இந்நூலில் இதுவரை பொதுமக்கள் அறியாத எல்லா விடயங்களையும் கூறலே நலம்.
எனவே எம்ஆலயம் சம்பந்தமான பூரண வரலாறும் விபரங்களும் அடங்கிய அடியார்களுடைய கட்டுரைகளையும் இந்நூலில் சேர்க்க விரும்பி இத்தால் நல்லெண்ணத்துடனும் அன்புடனும் தயவாக உங்களையும் அழைக்கிறேன்.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
Maazaru Printers,
28/8 Muthukalathi Street,
Triplicane
Chennai-5
Tamilnadu (South India).
தயவுசெய்து கட்டுரைகளை விமானத்தபாலில் அனுப்புங்கள். தட்டச்சுவசதி இல்லாதவர்கள் மட்டும் தெளிவான கையெழுத்தில் அனுப்பினால் நான் அவற்றை உசிதமாக உள்ளடக்கத்தெண்டிப்பேன். மின்ஞ்சல் வசதி உள்ளவர்கள் maazaru@rediffmail.com எனும் மின்னஞ்சல் விலாசத்துக்கு முடியுமான கெதியில் அனுப்பி வைக்கவும். உங்கள் கட்டுரைகள் 31.06.2010 கடைசித் திகதிக்கு முன்னதாக எமக்கு அனுப்பி வைக்குமாறு இத்தால் அன்பாக வேண்டுகிறேன். தமிழிலேயே எழுதுவதை விரும்புகிறோம். ஆங்கிலமும் பரவாயில்லை.
இங்ஙனம்
தங்கள் ஆதரவை நாடும்
நடராஜா சச்சிதானந்தன்
நிறுவனர் – இலண்டன் சிவன் கோயில்