11

11

தேசம்நெற் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியத்தின் 7 வது திரையிடல் நிகழ்வில் 5 குறும்படக் காட்சிகள்

Film_Screeningதேசம் நெற் இணையத்தளமும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து வழங்கும் 7வது திரையிடல் நிகழ்வு சேர்பிற்றன் சறேயில் இடம்பெறவுள்ளது. யூன் 12 மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகவுள்ள இத்திரையிடல் நிகழ்வில் சதா பிரணவனின் இடி முழக்கம், பொன் சுதாவின் நடந்த கதை, பிரேமா சந்தானகுலத்தின் நோய் வீதி, ஜ வி ஜனாவின் மூன்று இரவு நாலு பகல், பாஸ்கரின் நதி ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. இத்திரைப்படங்கள் இந்தியாவிலும் ஜரோப்பிய திரைப்பட விழாக்களிலும் பரிசில்கள் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2008 முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 4வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. புலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சி இதுவாகும்.

தேசம்நெற் ஈழநண்பர்கள் திரைப்படக் கழகத்தின் காட்சியிடலில் உங்கள் படைப்புகளையும் காட்சிப்படுத்தி கலந்துரையாடலை மேற்கொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும்.

7வது திரையிடல் நிகழ்வு:
     காலம்: 12.06.2010
     நேரம்:  மாலை 6 மணி
     இடம்: The Cornerhouse, 116 Douglas Road, Surbiton, Surrey.

    படத்தின் பெயர்                              நேர அளவு         இயக்குனர்

1) இடி முழக்கம்                                  21 நிமிடம்            சதா பிரணவன்

2) நடந்த கதை                                    23 நிமிடம்            பொன் சுதா

3) நோய் வீதி                                       20 நிமிடம்            பிரேமா சந்தானகுலம்

4) மூன்று இரவு – நாலு பகல்     21 நிமிடம்            ஜ.வி. ஜனா

5) நதி                                                         8 நிமிடம்            பாஸ்கர்

படங்கள் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப் படும். சிற்றுண்டி- பானம் அத்துடன் இராப் போசனமும் வழங்கப்படும்.

கடந்த திரையிடல் நிகழ்வில் இலாபமாக வந்த £50.00  மன்னாரில் உள்ள பார்வை குறைந்த சிறுவர்களுக்கு கண்ணாடி வழங்குவதற்காக அனுப்பி வைத்துள்ளோம்.

அன்பளிப்பு: £5.00  தனிநபர். சிறுவர்கள் அனுமதி இலவசம்.

தொடர்புகளுக்கு: ஆர் புதியவன்     07988  589 923
                                     த ஜெயபாலன்    07800  596 786

இரவு 9.30 முதல் மு.ப. 9.30 வரை பயன்படுத்தினால் சலுகை – சட்டவிரோத மின்பாவனைக்கு கடும் தண்டனை

9chnpika.jpgஅதிக பயன்பாடு குறைந்த நேரங்களில் மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைக் கட்டணம் வழங்கவும் மின்சாரப் பட்டியலை முழுமையாக ஒரு மாதத்துள் செலுத்துபவர்களுக்கும் சலுகை வழங்கவும் மின்சார சபை தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அதிக மின்பாவனை குறைந்த நேரங்களான இரவு 9.30 மணி முதல் காலை 9.30 மணி வரையிலான காலப் பகுதியில் மின்பாவனையை மேற்கொள் ளுமாறு தொழிற்சாலைகளிடமும் கோரவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். மின்சக்தி அமைச்சில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் சுமார் 4 மில்லியன் பேர் மின்சார சபைக்கு வாடிக்கையாள ர்களாகவுள்ளனர். ஒரு கோடி மக்கள் மின்சாரத்தை பாவிக்கின்றனர். சாதாரணமாக வீட்டுப் பாவனைகள் இரவு 8.30க்குப் பின்னர் மின் பாவனை குறைவடைகின்றன. குறிப்பிட்ட மின்பாவனை குறைவான காலப் பகுதிக்குள் நீர் வழங்கல் சபை நீர்வழங்கலுக்காக மின்சாரத்தை பயன்படுத்துமேயானால் அவர்களுக்கும் மின் கட்டணத்தில் சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சாலைகளில் அதிக பயன்பாடு நேரங்களில் மின்சாரத்தைப் பாவிப்பார்களேயானால் மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் கூடுதலாக மின் பாவனையை மேற்கொள்ளும் தேசிய நீர் விநியோக சபை, ஹோட்டல்கள் மற்றும் குளிர்சாதனம் போன்ற வகைகளுக்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படு கின்றது. இவை அதிக பயன்பாடு நேரங் களில் மின்சாரப் பாவனையை தவிர்த்து அதிக பாவனையற்ற நேரங்களில் பயன் படுத்துமாறும் இலங்கை மின்சார சபை அறிவுறுத்தவும் உள்ளது. 2012ம் ஆண்டில் நாட்டில் உள்ள சகல வீட்டுப் பாவனையாளருக்கும் மின்சாரத்தை வழங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மின்சார பட்டியலிலுள்ள கட்டணத்தை 2 1/2 மாதத்துக்குப் பின்பே பாவனையாளர்கள் செலுத்துகின்றனர். ஒரு மாதத்துக்குள் பட்டியலிலுள்ள தொகையை முற்றாக செலுத்துபவருக்கும் சலுகையொன்றை வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 4.5 மில்லியன் ரூபா தண்டப் பணமாக அறவிடப் பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் வித்தியாகொடை தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் சட்டவிரோத மின் பாவனையாளர்கள் கண்டு பிடிக்கப் பட்டனர். சட்டவிரோத மின் பாவனையாளர்களை கண்டறிந்து தண்டப் பணம் அறவிடும் திட்டம் எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜூன் (1)ம் திகதி ஜூன் (3) திகதி வரை காலப் பகுதியிலேயே மின்சார சபையின் திடீர் சோதனைக் குழுவொன்று மேற்கொண்ட நட வடிக்கையின் பேரிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டன. பொலிஸாரின் அனுசரணையுடன் சம்பந்தப்பட்டோருக்கு, எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டே உடனுக்கு உடன் தண்டப் பணம் செலுத்தக்கூடிய வகையில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அவர் மேலும் தகவல் தருகையில் :- கிளிநொச்சியிலிருந்து சுன்னாகம் வரை செல்லக்கூடிய மின்சாரத் திட்டமொன்று அடுத்த மாதம் அமுல்படுத்துவதற்கு வெளிநாட்டு நன்கொடை நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத் திடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடன் அட்டை பாவனைமுறை தொடர்பில் சட்டத் திருத்தம் – மோசடியைத் தடுக்க திட்டம்

கடன் அட்டை (கிரடிட் காட்) மோசடிகளைத் தடுப்பதற்கு காத்திரமான செயற்திட்டமொன்றினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதற்கிணங்க கடன் அட்டைப் பாவனைமுறை தொடர்பில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதுடன் அவ்விபரங்களை வர்த்தமானியில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர்; கடனட்டை மோசடிகளைத் தடுக்கும் ஒரு அம்சமாக கடனட்டை சேவை வழங்குநர்கள் தமது விபரங்களை மத்திய வங்கியில் பதிவது கண்டிப்பானதாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.