12

12

”இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Douglas_D_and_Rajaparksa_Mஜனாதிபதி தலைமையிலான இந்தியப் பயணம் வெற்றிகரமானதாக அமைந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த 8ம் திகதி செவ்வாய் கிழமை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்தியா பயணமாகினர். பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இக்குழுவினரோடு சென்றிருந்தார். இக்குழுவினர் நேற்று (Jun 11 2010) நாடு திரும்பியுள்ள நிலையில், இப்பயணம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பம் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், இவற்றில் மீள்குடியேற்றம், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டதாகவும், நடைமுறைச்சாத்தியமான விடயமாக தாம் வலியுறுத்தி வரும் 13வது திருத்தச்சட்டத்துடன் மேலதிக அதிகாரங்கள் அடங்கியதான தீர்வுத்தட்டம் ஒன்றையே இந்தியாவும் விரும்புகிறது எனவும்,  இந்தியப் பிரதமர் இதனை ஜனாதிபதிடமும் வலியுறுத்தியபோது  ஜனாதிபதியும் அதனை ஒப்புக் கொண்டு, அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி பிரதிபா பட்டீல், காங்கிரஸ் கடசியின் தiலைவி திருமதி சோனியா காந்தி. ஏதிர்கட்சியினர், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் ஆகியோருடனான சந்திப்பகளில் பல விடயங்களை  அவர்கள் எற்றுக்கொண்டுள்ளனர். வடமாகாணத்தில் புகையிரத பாதை அமைப்பதற்கு இலகு கடனாக 800மில்லியன் அமெரிக்க டொலர்களையும். காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் ஆகியவற்றின் புனரமைப்பு, யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல், யாழில் கலாசார மண்டம் ஒன்றை அமைத்தல் போன்றவற்றிற்கான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.  நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வடக்கு மக்களுக்கு 50 ஆயிரம் விடுகளை அமைக்க ஆயிரம் கோடி ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நூறு வீடுகளை அமைக்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் உதவி.

red-cross.jpgகிளி நொச்சியில் 50 வீடுகளை அமைப்பதற்கான முதற்கட்ட உதவிகளை இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்கும் ஆரம்பப் பணிகளுக்காக தலா 50 ஆயிரம் ரூபா நிதியுதவி செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசப் பிரிவில் நூறு வீடுகளை அமைப்பதற்கு செஞ்சிவைச்சங்கம் திட்டமிட்டுள்ளது. இவை கரைச்சிப் பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள விவேகானந்தநகர், அனந்தபுரம்,  கணேசபுரம்  ஆகிய கிராமங்களில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலி தமிழகத்தில் குண்டுத்தாக்குதல்

track.gifவிடுதலை புலிகளின்  ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தமிழ் நாட்டின் விலுபுரம் மாவட்டத்தில் உள்ள புகையிரத தண்டவாளம் ஒன்றில் குண்டு வெடிக்க செய்துள்ளனர். இச்சம்பவம்  இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இக்குண்டு வெடிப்பு காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டமையை கண்டித்தே இக்குண்டு வெடிப்பு  இடம்பெற்றதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம் அப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  இக்குண்டு வெடிப்பு காரணமாக சென்னைக்கான பல புகையிரத சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன

வடமாகாண சபை அலுவலகத்தை கிளிநொச்சியில் அமைக்க ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

cha.jpgவட மாகாணசபை அலுவலகத்தை கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிப்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது திருகோணமலையில் இயங்கிவரும் இந்த அலவலகம் வடமாகாணத்தின் மையப்பகுதியில் அமைக்கப்படுவதே பொருத்தமானது என கருதப்படுவதால்ää கிளிநொச்சி நகருக்கும் இரணைமடுச்சந்திக்கும் இடைப்பட்டää ஏ-9 விதிக்கு மேற்காக அமைந்துள்ள அறிவியல்நகர் இதற்குப் பொருத்தமான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் முன்னர் விடுதலைப்பலிகளால் அமைக்கப்பட்டுள்ள பல கட்டடங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிமாவட்டங்களில் தற்காலிகமாக வசிக்கும் கிளிநொச்சி மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர அழைப்பு.

நிவாரண முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளிமவாட்டங்களில் வசித்துவரும் கிளிநொச்சி மாவட்ட கண்டாவளைப் பிரதேசச் செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் சோந்த மக்களும் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்வதற்கான ஆயத்தநிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பதிவுகளை உரிய பகுதிகளில் நீக்கம் செய்து விட்டு எதிர்வரும் 21, 22 அகிய திகதிகளில்  கிளிநொச்சி தர்மபுரம் மகாவித்தியாலயத்தில் காலை 9 மணிதொடக்கம் பிற்பகல் 2 மணிவரை வருகை தந்து மீள் குடியமர்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் கோரியுள்ளார்.

மேலும் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சிää சிவிக்சென்ரர், மாயவனூர்,  இராமநாதபுரம்ää ஆகிய கிராமசேவை அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் தாங்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் இடங்களிலுள்ள பதிவுகளை நீக்கிவிட்டு எதிர்வரும் 22ம் திகதி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தில் தங்கள் பதிவகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணிபுரிய வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கான உதவிப்பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களை அனுமதிக்குமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் வன்னியில் 3000 அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வந்தன எனவும், அவை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் எனவும்  அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் இந்நிறுவனங்கள் வன்னியில் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வன்னியில் போரினால் அழிவடைந்துள்ள பொதுமக்களின் வீடுகளைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை என அரசாங்கம் வெளிப்படையாகவே அறிவித்துவிட்ட நிலையில் அரசசார்பற்ற வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களின் உதவி அத்தியாவசி தேவையாக இருப்பதனை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். மீளக்குடியமரும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 12 கூரைத்தடுகளினால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிப்பது சிரமமானதாக உள்ளமையை வன்னியில் மீளக்குடியமர்நதுள்ள மக்களின் நிலையை நேரில் பார்வையிடுகின்ற பொது தெரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது. தற்போது  இடைக்கிடையே பெய்து வருகின்ற மழையினால் அவதிப்படுகின்ற இம்மக்கள் எதிர்வரும் பருவமழையின் போது பெரும் அவலங்களை எதிhகொள்ள வேண்டிவரும் என்பதும் குறிப்படத்தக்கது.

நெடுங்கேணி கொள்ளைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சுட்டிற்கு இலக்கானவர் உயிரிழந்தார்.

நெடுங்கேணி கொள்ளைச் சம்பவத்தில் துப்பாக்கிச்சு10ட்டிற்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் உயிழந்தார். கடந்த 9ஆம் திகதி நெடுங்கேணியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் பெண்ணொருவரின் கைகளைத்தண்டித்து அவரது நகைகளை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனா. அப்பெண்ணின் கணவரான இராசலிங்கம் (வயது 64) என்பவரை துப்பாக்கியாலும் சுட்டனர். கைத் துண்டிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் மருத்துவ சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த பெண்ணின் கணவரான இராசலிங்கம் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவியான விக்னேஸ்வரி கைத்துண்டிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் புளியங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இச்சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். நகரில் முறையற்ற நடைபாதை வியாபாரிகள் மீது நடவடிக்கை.

யாழ். நகரப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட இடங்களில் நடைபாதை வியாபாரம் செய்த வந்த 24 பேர் Jun 10 2010ல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 17 பேர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்ட்டவர்களின் விற்பனைப் பொருட்களும் அகற்றப்பட்டன. பழவகைகள். உடைகள், ‘பான்ஸி’ பொருட்கள் என்பனவற்றை விற்பனை செய்த நடைபாதை வியாபாரிகள் மீதே இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு  நீதிமன்றத்தினால்  தலா 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. சில பொருட்கள் மீள ஒப்படைக்கப்பட்டன. சில பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை. ஏனையோர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

போர் முடிவடைந்து ஏ-9 பாதை திறந்த விடபட்டதன் பின்  தென்னிலங்கையிலிருந்து வந்த பெருமளவிலான நடைபாதை வியாபாரிகள் யாழ்.நகரை முற்றுகையிட்டு கண்ட இடங்களிலும் தங்கள் வியாபரத்தை மேற்கொண்டனர். யாழ. பஸ்நிலையம் உட்பட பல இடங்களிலிருந்த இவ்வியாபார நடவடிக்கைகள் அகற்றப்பட்டுள்ள போதிலும் மேலும் பல இடங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய,  சுகாதாரமற்ற வியாபார நடவடிக்iகைகளை சில வியாபாரிகள் மேற்கொண்டு வருகின்றனா. இவ்வாறு வியாபாரா நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள. மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

புலிகள் தொடர்பான படங்களை கைத்தொலைபேசியில் வைத்திருந்ததாக வவனியாவில் ஒருவர் கைது.

கைத்தொலைபேசியில் புலிகள் தொடர்பான விடியோ காட்சிப் படங்களை வைத்திருந்தாகக் கூறி வவனியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பாவற்குடாப் பகுதியில் வைத்து இவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் பற்றிய வீடியோ காட்சிகள், புகைப்படங்கள், பாடல்கள் என்பன அவரது கைத்தொலைப்பேசியில் காணப்பட்டதாகக் கூறியே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேலதிக விசாரணகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய பாடல் போட்டி 2010 : விமர்சனம்- நோர்வே நக்கீரா

lena.jpg2010க்குரிய ஐரோப்பிய பாடல் போட்டி நோர்வேயில் 29.05.2010 சனிக்கிழமை மாலை 200லட்சம் நோவேயியன் குரோண்கள் செலவில் வெற்றிகரமாக வெற்றிகரமாக நடந்தேறியது. இதற்கான காரணம் ஒர் அகதியின் பாடலே. அலெக்சாண்டர் றிபாக் அகதிக்குழந்தையாக நோர்வே நாட்டில் குடிபுகுந்த இந்த இரஸ்சிய இளைஞனே சென்றவருடம் நோர்வேக்கு வெற்றியைத் தேடித்தந்து நோவேயை உலகமட்டத்தில் ஒருபடி உயர்ந்தினான். நோர்வேயின் வடபகுதியில் அகதி அந்தஸ்துக் கோரியபோது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அன்றே அவன் திரும்பிப் போயிருந்தால் இன்று நோவே ஒருநல்ல திறமைசாலியை இழந்திருக்கும். அவனது பெற்றோர்கள் இசைவல்லுனர்கள். கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவிபாடும் என்பதுபோல் இசையுடன் கூடிவளர்ந்த காரணத்தாலும் மரபணுக்களில் இசைவாழ்ந்து கொண்டிருந்ததாலும் இசை சரளமாகவே அவனுக்கு வந்தது. அகதி என்பவர்கள் பணம், உயிர்பாதுகாப்பு மட்டும் தேடிவரவில்லை, திறமைகளுடனும்தான் வருகிறார்கள் என்பதை புலத்து நாடுகள் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். தம்திறமைகளை வெளிப்படுத்துவதும். அத்திறமைகளை நாடுகள் நல்ல முறையில் பயன்படுத்துவதும் மனித உயர்வுக்கு இன்றியமையாதது. இது பிறந்தநாட்டுக்கும் புகுந்த நாட்டுக்கும் பெருமை சேர்க்கும்.

எந்தநாடு இப்போட்டியில் வெல்கிறதோ அந்த நாட்டில்தான் அடுத்த பாடல் போட்டி நடைபெறும். இது பெருமைக்குரியது மட்டுமல்ல வியாபார ரீதியாகப் பணம் பண்ணும் காரியமாகவும் மாறியுள்ளது. சென்றவருடம் 2009ல் நோர்வே வென்றகாரணத்தால் இந்தவருடம் இப்போட்டி இங்கே நடத்தப்பட்டது. பிரபல விமர்சகரான எஸ்பன் ஏ ஆமுன்சன் என்பவர் தனது விமர்சனத்தில் இம்முறை பெரும்பாலான பாடல்கள் உப்புச்சப்பில்லாத ஒரு சத்துக்குக் கூட உதவாதபாடல்கள் என்றும், பிரான்சின் பாடல் சரித்திரத்தைக் கறைப்படுத்துமாறு அமைந்தாகவும் தான் இம்முறை வந்தபாடல்களைக் கண்டு அதிர்ந்து போனதாக எபிசி செய்திகளுக்கு அழிந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜேமனிய நாட்டு லேனா எனும் 19வயதுப் பெண் இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் அப்பாடலின் தரம்பற்றி பலர் தரக்குறைவாகப் பேசுவதையே கேட்கக்கூடியதாக இருந்தது. இதனால் பணம் கொடுத்து வெற்றியை வாங்கினார்களா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பிரான்ஸ், ஸ்பெயின், சர்பியா போன்ற சிலநாடுகளே தமது மொழியில் பாடல்களைப் பாடினார்கள். 80வீதமான பாடல்கள் ஆங்கில மொழியிலேயே அமைந்திருந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டியின் ஆரம்ப காலங்களில் தமது மொழியிலேயே பாடல்கள் பாடப்பட வேண்டும் எனும் வரையறை இருந்தது. இக்காலத்தில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாக் கொண்ட நாடுகளின் பாடல்கள் புள்ளிகளை அதிகமாகப் பெற்றார்கள். இதனால் வரையறை தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக ஆங்கிலத்தை வெறுக்கும் பழைய சோவியத்து நாடுகள் ஜேர்மனி போன்ற நாடுகள் கூட ஆங்கிலத்திலேயே பாடினார்கள். இப்போட்டிக்கு வரும் பாடல்கள் தத்தமது நாடுகளில் நடுவர்களாலும் அந்நாட்டு மக்களின் புள்ளிகளாலும் வென்ற பாடல்களே. இதனால் இந்த ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்திலே உணர்வுகள் பாடலாக்கப்படும் நிலை தென்படுகிறது. ஆங்கிலத்தில் பாடியபாடல்களில் உச்சரிப்புப்பிழையை பலர் அவதானித்திருக்கலாம். பிறமொழியில் பாடுவதாலேயோ என்னவோ பலபாடல்களில் உயிரக்காணோம். பிறமொழிப் பாடல்களால் சுயமொழி அழிப்புடன் ஆங்கிலமொழிச் சீரழிவும் சேர்ந்தே நடைபெறுவதைக் காணலாம். இது உலகமயமாதலில் ஒரு விளைவே. ஆட்சிகளையும், அதிகாரங்களையும் தன்னகத்ததே கொண்டிருந்த நாடுகளின் மொழிகள் உ.ம் ஆங்கிலம், பிரான்ஸ், இரஸ்சிய, அராபிய மொழிகள் மற்றைய மொழிகளை விழுங்கும் நிலை உருவாகியுள்ளதை உணரமுடிகிறது.

மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி 10சதவீதமான மொழிகள் பத்து வருடங்களில் இடம் தெரியாமல் போகின்றன. ஒவ்வொரு 10 வருடத்துக்கும் ஒவ்வொரு மொழிகளிலும் 10சதவீதமான மொழி கலப்படைகிறது. உலகமயமாதலினால் ஒரு புதியகாலணித்துவமே உருவாகி வருகிறது. ஆய்வாளர்களின் கூற்றை விட மிகவேகமாகவே இவை நடந்தேறுகின்றன. இதனால் சில முக்கிய மொழிகள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள் ஏன் இனமே அழியும் காலவரிப்பு நடைபெறுகிறது. இக்காலவரிப்பில் தமிழ்மொழியும் ஒன்று. கொன்னைத்தமிழான சென்னைத்தமிழில் இதை அழகுறக் காணலாம்.

பூகோளரீதியாக இஸ்ரேவேல் அமைந்திருப்பது மத்தியகிழக்கிலேயே. இதை எதற்காக ஐரோப்பாவிற்குள் சேர்த்து போட்டிகளில் பங்குபற்ற வைக்கிறார்கள். இதில் இருந்து ஐரோப்பியர்களின் நட்புறவும், நடுநிலையற்ற போக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படி நடுநிலையற்றவர்களே இஸ்ரேலிய பாலஸ்தீன உடன்படிக்கையை ஒஸ்லோ ஒப்பந்தம் என்று உருவாக்கினார்கள். இங்கே எப்படி பாலஸ்தீனத்தின் நலன்கள் நடுநிலையுடன் கவனிக்கப்பட்டிருக்கும் என்பது கேள்விக் குறியாகிறது. இரண்டாவது உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக இன்று பாலஸ்தீனத்துக்கு இழைக்கும் அநியாயங்களை நியாயப்படுத்த முடியாது. இஸ்ரவேலுக்கு ஐரோப்பிய பாடல் போட்டியில் இடம் உண்டு எனில் ஏன் பாலஸ்தீனத்துக்கு இது இல்லாமல் போனது?

பாடல்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்படும்போது எந்தநாட்டுக்கு தமது அதிகூடிய புள்ளிகளை அறிவிப்பார்கள் என்பதை நாம் முன்கூட்டியே சொல்லக் கூடியதாக இருந்தது. தம் உறவு நாடுகளுக்கும் அயல்நாடுகளுக்கும் புள்ளிகளை அள்ளி வளங்கியதைக் காணமுடிந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டி என்பது திறமைகளை வெளிக்கொணரவோ அன்றேல் நல்ல தரமான பாடல்களை தரவோ முயற்சிக்கவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

ஸ்பானியப்பாடல் அரங்கேறி முடியும் வேளை குழுவில் இல்லாத ஒருவன் உள்ளே புகுந்து மேடையிலுள்ளவர்கள் போல் நடித்துவிட்டு இறங்கி ஓடிவிட்டான். இவ்வளவு பிரமாண்டமான பெருவிழாவில் நோவேயின் பாதுகாப்புப் போதாது என்பது பலரது குறையாக இருந்த போதிலும் நோவே போதியளவு சீரணியற்ற நகரபாதுகாவலர்களை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்போலிப்பேர்வழி உடனடியாக சான்விக்கா நகரபாதுகாவலர் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு 15000 குரோண்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஒருகாலத்தில் பெயருக்கும், தமது பிள்ளைகளை மேடையேற்றுவதற்கும், விலாசத்துக்குமாக பலர் புலிகளுக்கு பணம் கொடுத்ததைப் பலர் அறிவர். அதேபோல் ஒன்றுதான் இதுவும். இந்த ஆசாமியிடம் கேட்டபோது நான் 15000 குரோண்கள் கொடுத்து விலாசம் வாங்கியுள்ளேன் என்றாராம். இவர் ஒரு பிரபல்ய உதைபந்தாட்டம் நடந்து கொண்டிருந்தபோது வெறும் உடம்புடன் நடுமைதானத்தால் ஓடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு களியாட்ட நிகழ்வாக இருந்தாலும் பயன்படுத்தப்படும் பணத்தொகை மிகப்பெரிது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. எத்தனையோ நல்ல தரமான பாடல்கள் இருந்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டபடி தீர்ப்பு ஜேர்மனிக்கு வழங்கப்பட்டது போன்று அமைந்துள்ளது. தாம்விரும்பும் நாடுகளுக்கு தரம்பாராது புள்ளியிடுவது ஒருபுறம், தமக்குப் பிடிக்காத நாடுகள், இனம் என்பதை தள்ளிவைப்பது என்பது மறுபுறம். இது துவேச வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்துவிடும். இனிவருங்காலங்களிலாவது இப்படியான சீர்கேடுகள் இன்றி தரமான பாடல்களை கருத்து, இசை, காட்சி, பாவம் (பாடலின் உயிர்) போன்ற காரணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தரமான பாடல்களைத் தருவார்களா?

எதிர்பார்ப்புகளுடன்
நோர்வே நக்கீரா