14

14

மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் -நீதியமைச்சு செயலாளர் தெரிவிப்பு

images-00.jpgமரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதியமைச்சின் செயலாளர் சட்டத்தரணி சுகத கம்லத் தெரிவித்தார். மரண தண்டனை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இது ஒருபோதும் குற்றங்களை குறைத்துவிட உதவப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தீர்ப்புகள் சுயாதீனமாக அமைய வேண்டும். இதில் எத்தரப்பினரதும் அழுத்தங்கள் இருக்க முடியாது. நீதித்துறையின் கெளரவம் இதன்மூலம் பாதுகாக்கப்படல் வேண்டும்.

அதிசய ஆமை

ggggg.jpgகொழும்பு ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதிசய ஆமை ஒன்றினை தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இவ்வதிசய ஆமையின் முன் பகுதியில் இரண்டு தலைகள், நான்கு கைகளும், பின் பகுதியில் இரண்டு கால்களும் காணப்படுகிறது.

அதன் தலை இருக்கும் இடத்தில் ஓடு இரண்டாக பிளவுபட்டுள்ளது போல் காட்சி தருகிறது. இரண்டு தலைகளிலும் உள்ள இரண்டு வாய்களாலும் உணவு உட்கொள்ள முடியும் என மிருகக் காட்சிசாலை பணிப்பாளர் ஆனந்த லொக்கு ரணமுக கூறினார்.

மூன்று வாரங்கள் வயதுடைய இவ்வாமை மிருகக் காட்சிசாலை மிருக வைத்திய பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.