29

29

பணிப்பெண்களை ஜோர்தானுக்கு அனுப்புவதற்கு தொடர்ந்தும் தடை

இலங்கைப் பெண்களை ஜோர்தானுக்கு பணிப் பெண்களாக அனுப்புவதற்கு இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளமை தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

இலங்கை பணிப் பெண்களுக்கு 200 டினாரை மாதாந்த சம்பளமாக வழங்க வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை ஏற்றுக் கொண்டாலேயே ஜோர் தானுக்கு பணிப்பெண்களாக இலங்கையரை அனுப்ப முடியும் என பணியகத்தின் தலைவர் அறிவித்திருந்தார்.

இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி

malinga.jpgஇலங்கை, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று தம்புள்ளையில் இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சங்கக்கார துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தில்சானும், ஜயவர்தனவும் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை பிரவீன் குமார் வீசினார்.

முதல் ஓவரில் 3 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. 3 ஆவது ஓவரில் தில்சான் 2 பவுண்டரி விளாசினார். அதன் பின் இருவரும் அடித்து விளையாடினார்கள். இதனால் இலங்கை
அணியின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தன. 9.1 ஓவரில் இலங்கை அணி 50 ஓட்டங்களை தொட்டது. சிறப்பாக விளையாடிய தில்சான் அரை சதம் அடித்தார். அவர் 36 பந்தில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் இந்த ஓட்டங்களை எடுத்தார். 15.4 ஓவரில் இலங்கை அணி 100 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி 20.2 ஓவரில் 121 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது முதல் விக்கெட்டை இழந்தது. ஜயவர்தன 39 ஓட்டங்களில் இசாந்த் சர்மா பந்தில் தி. கார்த்திக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தரங்க 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சங்கக்கார களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய தில்சான் அதிக பட்சமாக 115 பந்துகளில் 110 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்கஸரும் அடங்கும். சங்கக்கார 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீச்சில் இசாந்த் சர்மா, முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை எடுத்தது.

இந்தப் போட்டியில் அதிக பட்சமாக தில்சான் சதம் அடித்தார். அவர் 115 பந்துகளில் 110 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். சங்கக்கார 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் இசாந்த் சர்மா, முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை எடுத்தது.