30

30

நிரூபமாராவ் இன்று வருகை

nerupama.jpgஇந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் இன்று இலங்கை வருகிறார். இரு தரப்புச் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்திட்டங்களை நேரில் சென்று பார்வையிடுவாரென வும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் உள்ளிட்ட குழுவினர் வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

தாய்லாந்து சர்ச்சையில் இழுபட்டிருக்கும் இலங்கை

தாய்லாந்தில் கிளறிவிடப்பட்டுக்கொண்டிருக்கும் சர்ச்சையில் இலங்கையும் விவாதிக்கப்படும் விடயமாக மேலெழுந்திருக்கிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஆயுத வியாபாரியிடம் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பிரதமர் தக்சின் சினாவத்ரா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக வெளியான செய்தி குறித்து தாய்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்தே அந்நாட்டு சர்ச்சையில்இலங்கையும் விவாதிக்கப்படும் விடயமாக மேலெழுந்திருக்கிறது.

ஜனநாயகக் கட்சி எம்.பி.யும் தாய்லாந்துப் பிரதமர் அபிஜித் வெஜ்ஜிவாவின் நெருங்கிய உதவியாளருமான சிறி சோக்சோபா ரஷ்ய ஆயுத வியாபாரியான விக்ரர் போட்டை கேள்வி எழுப்பியிருப்பதாக தாய்லாந்து ஊடகம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விக்ரர் போட் கடந்த வருடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இரகசியமாக சந்தித்திருந்தாரா என்பது பற்றியும் இலங்கை மார்க்கத்தில் செல்வதற்கு இருந்த ஆயுதங்களுடான விமானத்தை தடுத்து வைப்பதற்கும் இந்தச் சந்திப்புக்கும் இடையில் தொடர்புகள் உள்ளனவா என்பது பற்றியும் சிறிசோக் சோபா, விக்ரர் போட்டை கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏப்ரலில் தான் போட்டை சந்தித்திருந்தை சனிக்கிழமை சிறிசோக் சோபா உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், உயர்மட்ட உதவியாளர் என்ற உத்தியோகபூர்வ ரீதியில் தான் சந்தித்தாரென்பதை சிறிசோக் சோபா மறுத்திருந்தார்.

இலங்கைப் பெண்களை வேலைக்கு அமர்த்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிபந்தனைகள்

sri-lankan-maids.jpgஇலங்கை யிலிருந்து வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கொள்கைகள், நிபந்தனைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிப்பதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்திருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள், இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகங்களூடாக இந்தத் தீர்மானம் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவிக்கப்படும் என்று வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எல்.கே. றுகுணுகே கூறியுள்ளார்.

இந்தக் கொள்கைகள், நிபந்தனைகளுக்கு நாடுகள் இணங்க வேண்டும். பணிப்பெண்களாகத் தொழிலுக்கு அமர்த்துவதற்கு முன் இவற்றுக்கு இணங்கியிருக்க வேண்டும். அதேசமயம், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அதிகாரிகள் பணிப்பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் றுகுணுகே கூறியுள்ளார்.

தொழிலுக்கு அமர்த்துவோரால் வீட்டுப் பணிப்பெண்கள் சித்திரவதை, கொடுமைக்கு இலக்காகும் போது அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சர்வதேச அமைப்புகள் உதவ வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

ஜனாதிபதிப்பதவியில் ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே இருக்கமுடியும்

அரசாங்கம் முன்வைக்கவிருக்கும் உத்தேச அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கான விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவியில் ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே இருக்கமுடியும் என்ற அம்சத்தை முற்றாக நீக்கும் விதத்திலேயே அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படவிருக்கின்றது.

அமரர் தொண்டமானின் 98வது ஜனன தினம்

tondaman.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் 98 ஆவது பிறந்த தினத்தின் நிமித்தம் இன்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

கொழும்பில் பழைய பாராளுமன்ற முன்றலிலுள்ள அமரர் தொண்டமானின் உருவச் சிலைக்கு பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு மலர்மாலை அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து பிரதியமைச்சர் தலைமையில் இ. தொ. கா. வின் தலைமையகமான செளமிய பவனில் அமரர் தொண்டமானின் ஆத்ம சாந்திக்காகப் பூஜைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை இ. தொ. கா. செயலாளர் நாயகமும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று காலை 8.00 மணிக்கு அன்னாரது குடும்ப உறவினர்கள் சகிதம் ரம்பொட தொண்டமான் கலாநிலையத்திலுள்ள அமரர் தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிப்பார்.

இதேவேளை கொட்டகலை தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தில் கற்கையைப் பூர்த்தி செய்தவர்களுக்கு ஸ்தாபகர் தின சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுகின்றார். அத்தோடு அமரர் தொண்டமானின் நினைவாக கொட்டகலையைச் சேர்ந்த 150 ஏழைக் குடும்பங்களுக்கு கால் நடைகளும், வழங்கப்படவுள்ளன. லிந்துல, திலிக்குற்றி தோட்டத்தில் குளிரூட்டி நிலையமொன்றும் திறந்து வைக்கப்படவுள்ளது.

வடக்கு கிழக்கில் முன்பள்ளி ஆசிரியருக்கு நம்பிக்கை நிதியம்

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு ((CHILDREN TRUST FUND) சிறுவர் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது.

இந்த நிதியத்தை ஸ்தாபிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறுவர் மேம்பாட்டு மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நிதியத்திற்கு முதற் கட்ட மாக (SAVE THE CHILDREN) சேவ் த சில்ரன் அமைப்பு 100 மில் லியன் ரூபா நிதியை வழங்கியு ள்ளதாக தெரிவித்த அவர், வெகு விரைவில் இது ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிதியத்திற்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து நிதியுதவிக ளைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், இதற்காக திறைசேரியும் அனுமதி வழங்கியுள் ளது என்றும் குறிப்பிட்டார்.

மாதாந்தம் 2000 ரூபாவை கொடுப் பனவாக வழங்க திட்டமிட்டுள்ளது டன் முதற்கட்டமாக 500 முன்பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர் என்றும் தெரிவித்தார்.

அரச இலவச மருந்தை மோசடி செய்வோருக்கு ஆயுள் தண்டனை – சட்டத்திருத்தம் விரைவில் வருகிறது

mini.jpgஅரசாங் கத்தினால் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருந்து வகைகளைத் தனியார் மருந்தகங்களுக்கு சட்ட விரோதமான முறையில் வழங்குபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவிருக்கின்றது.

இம்மருந்து வகைகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் தனிநபர்களுக்கும் இத்தண்டனையை விதிக்கக் கூடிய வகையில் சட்டம் திருத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரச ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒரு தொகை மருந்து வகைகளை புறக் கோட்டையிலுள்ள தனியார் மருந்தகமொன் றுக்கு நபரொருவர் வழங்கியுள்ளார். இந் நபருக்கும், இம் மருந்து வகைகளை கொள்வனவு செய்த தனியாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

இதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மருந்துப் பொருள் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் வருடாந்த அமர்வு நேற்று முன்தினம் கொழும்பில் நடை பெற்றது. இந்த அமர்வில் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்று கையில், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப் படும் மருந்து வகைகளின் ஒரு தொகுதி புறக்கோட்டையில் தனியார் மருந்தக மொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட் டிருந்த சமயம் இரு வாரங்களுக்கு முன் னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர் பான புலன்விசாரணையை குற்றப் புல னாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

“எமக்கு இந்த மருந்து வகைகள் கொண்டு வந்து தரப்பட்டது. அதனை வாங்கி நாம் விற்பனை செய்தோம். மற்றபடி எமக்கு எதுவும் தெரியாது என்று தனியார் மருந்தக வர்த்தகர் வாக்கு மூலம் அளித்துள்ளார். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத பதிலாகும். குறித்த வர்த்தகர் சிறுபிள்ளை அல்லவே. இப்படியான அர்த்தமற்ற கூற்றுக்களை நம்புவதற்கு அரசாங்கமோ, நானோ தயாரில்லை.

இப்படியான மோசடிகள் நீண்டகாலமாக இடம் பெற்று வந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படாததால் அவை கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்திருக்கின்றது. இவ்வாறான முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்கும் தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளும் போதியதாக இல்லை. அதன் காரணத்தினால் இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றவகையிலான சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள் ளேன்.

இப்படியான செயலில் ஈடுபடுவோரு க்கு ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத் தேசித்திருக்கின்றேன் என்றார்

மு.காவின் தீர்மானத்திற்கு ஹிஸ்புல்லாஹ் வரவேற்பு

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக சிறுவர் மேம்பாட்டு மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் பிரிந்து பிளவுபட்டு இருப்பது அரசியல் ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் மு.கா.வின் இந்தத் தீர்மானத்தை முழு மையாக வரவேற்பதாக அவர் மேலும் தெரிவித்தார். மு. கா.வின் இந்த செயற்பாடானது முஸ்லிம்கள் பற்றிய நல் லெண்ணத்தை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மத்தியில் ஏற்படுத்தியுள் ளது. முஸ்லிம்கள் எமது அரசியல் உரிமைகளையும் தேவைகளையும் அரசுடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே பொருத்தமானதாகும்.

முரண்பட்ட அரசியல் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண முடியாது என்று தெரி வித்த பிரதியமைச்சர், இந்தத் தீர்மானத் திற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள் வதாகவும் குறிப்பிட்டார்