13

13

வியூகம் இதழ் 2 ஒரு பார்வை: பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்… தேவை ஒரு புதிய கோட்பாடு : மீராபாரதி

Viyoogam_02_Coverநட்புடன் நண்பர்களுக்கு…
முதலில் வியூகம் இதழ் 2இல் உள்ள “பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்” என்ற கட்டுரை தொடர்பாக எனது கருத்தைக் கூற அழைத்தமைக்கு வியூகம் நண்பர்களுக்கு நன்றிகள். இன்றைய சூழலில் நம்பிக்கையுடன் இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை நண்பர்கள் முன்னெடுப்பதில் உள்ள மன பொருளாதார கஸ்டங்களைப் புரிந்துகொள்கின்றேன். இவ்வாறன தடைகளையெல்லாம் தாண்டி இராண்டாது இதழை வெளியீட்டமை மகிழ்வான விடயமே. வியூகம் இதழ் 2 முக்கியமான நான்கு கட்டுரைகளை தாங்கி வெளிவந்துள்ளது. அவையாவன “சிங்கள தேசியவாதத்தின் தோற்றம் குறித்து” “சுழலியலும் நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சியும்”; “விட்டு வேலைக்கு ஊதியம் தொடர்பான முன்மொழிவுகள்” “பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும்” மற்றும் ஆசிரியர் தலையங்கம் என்பனவாகும். இதில் முதலாவதும் மூன்றாவதும் சிறந்த மொழிபெயர்ப்புகள்.

நான் கருத்துக் கூறவேண்டிய கட்டுரை “பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும்” ஏன்பதாகும்.
இது மிகவும் முக்கியமானதும் ஆழமான கருத்துக்களைக் கொண்டதும் இந்த இதழின் அரைவாசிப் பக்கங்களை ஆதிக்கம் செய்துள்ள கட்டுரை. இக் கட்டுரை தொடர்பான கருத்தை அல்லது விரிவான விமர்சனத்தை முன்வைப்பதற்கு ஆகக் குறைந்தது இரு தடவைகளாவது வாசிக்க வேண்டியதுடன் விரிவான பரந்த ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயங்களைக் கொண்டதுமாகும். அப்பொழுதுதான் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நோக்கி இக் கட்டுரையை நகர்த்துவதற்கு இக் கட்டுரை தொடர்பாக முன்வைக்கும் கருத்துக்கள் பயன்படும். ஆனால் ஒரு கிழமை அவகாசத்திற்குள் அவ்வாறன ஒன்றை செய்யமுடியாது என்பதை நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். ஆகவே நான் இங்கு முன்வைக்கும் கருத்துக்கள் இக் கட்டுரைபற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமாகவும் மற்றும் எனது தேடல்களுக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டதாகவும் ஆகவே மட்டுப்படுத்தப்பட்டதாகவுமே இருக்கும் என்பதை புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். இந்தடிப்படையில் சில கேள்விகளையும் இறுதியில் முன்வைக்கின்றேன்;.

இக் கட்டுரையை பின்வருமாறு முக்கியமான பகுதிகளாகப் பிரிக்கலாம் எனக் கருதுகின்றேன்.
முதலாவது “வர்க்கம், அரசு, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் தோற்றமும் இவை உருவாக்கிய
மேலாதிக்க சித்தாந்தமும் – ஒரு மார்க்சிய பார்;வை”
இரண்டாவது “ரஸியப் புரட்சி, மற்றும் சோவியத்யூனியன் கால ஆனுபவங்கள் – லெனினின் பார்வையில்”
மூன்றாவது “கட்சியும் பாராளுமன்றப் பாதையும்; புரட்சியாளர்களும் – ஒரு கோட்பாட்டுப் பிரச்சனை”
நான்காவது “புரட்சியாளர்களனதும் மார்க்ஸியவாதிகளதும் இடதுசாரிகளதும் பாராளுமன்ற பாதை – நேர் மறை,
எதிர் மறை அனுபவங்கள் – ஒரு வரலாற்றுப் பார்வை”
ஐந்தாவதும் இறுதிப் பகுதியும் “நமது நிலைப்பாடும் செயற்படுவதற்கான வழிமுறைகளும்”

என்று பல்வேறு உப தலைப்புகளைக் கொண்டதாக பிரிக்கலாம். ஆனால் நான் மேற்குறிப்பிட்டவாறு உப தலைப்புகளை வரிசைக் கிரகமாக கட்டுரையில் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறன ஒரு தொடர்ச்சியில்லாது ஒன்றிக்கும் பின் ஒன்று என மாறி மாறி இருப்பதானது வாசிப்பவர்களின் தொடர்ச்சியான ஒரு புரிதலுக்கு தடையாக இருப்பதாக அல்லது இருக்கலாம் என ஒரு வாசகராக உணர்கின்றேன். உப தலைப்புகளுடன் தொடர்ச்சியான தன்மை ஒன்று இருந்திருப்பின் வாசிப்பவர்களுக்கு விடயங்களைப் புரிந்துகொள்வதற்கு இலகுவானதாக இருந்திருக்கும் என நம்புகின்றேன். இவ்வாறு கூறுவதானது எந்தவகையிலும் கட்டுரையின் முக்கியத்துவத்தையும் அது கூறும் விடயங்களையும் குறைத்து மதிப்பிடுவதாகாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். ஏனனில் மேற்குறிப்பிட்டவாறான உப தலைப்புகளின் அடிப்படையில் விடயங்களை விரிவாகவும் ஆழமாகவும் கட்டுரை ஆராய்கின்றது. அதாவது கோட்பாடு, மூலோபாயம் தந்திரரோபாயம் மற்றும் செயற்பாடு என்றடிப்படையில் நோக்கமாகக் கொண்டு கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் “வர்க்கம், அரசு, அரசாங்கம், மற்றும் பாராளுமன்றத்தின் தோற்றமும் இவை உருவாக்கிய மேலாதிக்க சித்தாந்தமும் – ஒரு மார்க்சிய பார்வை” ஏன்ற உப தலைப்பிற்;குள் கட்டுரைiயில் மார்க்ஸின் 1843ம் ஆண்டிலிருந்து 1872ம் ஆண்டு வரை எழுதிய நூல்களில் உள்ள கருத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதைத் தவிர ஏங்கல்ஸ் லெனின் ஆகியோரது நூல்களும் இதில் கூறப்பட்ட கருத்துக்களை வலியுறுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் பின்வருவனவற்றை முக்கிய நிலைப்பாடுகளாக மார்க்ஸியப் பார்வையில் சுட்டிக்காட்டுகின்றது. என நான் விளங்கிக்கொள்கின்றேன்.

வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடே அரசு தோன்றுவதற்கு காரணம் ஆகும். ஆகவே அரசு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டால் வரலாற்றில் இடையில் தோன்றியது. ஆகவே வரலாற்றில் அது நிரந்தரமாக நிலைபெற்றும் இருக்காது என்றும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இல்லாதுபோகும் பொழுது அரசு என்பது தேவையற்ற ஒன்றாகி வலுவிழந்து இல்லாது போகின்றது. ஆதிக்க வர்க்கங்களுக்கு இடையிலான போட்டியில் இறுதியாக முதலாளித்துவ வர்க்கம் தனது முழுமையான கட்டுப்பாட்டை அரசின் மீது செலுத்தும்வகையில் ஆதிக்க வர்க்கங்களுடனான உதாரணமாக நிலப்பிரபுத்துவ வர்க்கத்துனடான சமரசங்களுடாக வெற்றிபெறுகின்றது. இந்த சமரசத்தின்; விளைவாகவே அனைத்து ஆதிக்க வர்க்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் உருவாக்கப்படுகின்றது. இதில் பொதுவாக அரசு என்பது அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தின கருவியாக செயற்படுகின்றது. இந்த அரசைக் கட்டிக்காப்பதற்காக அரசின் இயந்திரமாக அரசாங்கமும் மற்றும் சமூக நிறுவனங்களான கல்வி சமயங்கள் காவற்துரை இராணுவம் என்பனவறின் துணையுடன் செயற்படுகின்றது. ஆகவே அரசு என்பது நடுநிலையானதல்ல எனவும் சுரண்டப்படும் வர்க்கத்தை அடக்குவதற்கான கருவியாக செயற்ப்படுகின்றது. ஏனனில் முதலாளித்துவ அரசானது முதலாளிகள் அதிகாரத்திலும் இருப்பதற்கும் தொழிலாளர்கள் அடக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படுவதுடன் அவ்வாறே தன்னைக் கட்டமைத்துமுள்ளது.

மறுபுறம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய சிந்தனையாளர்களான கிராம்சி அல்தூசார் போன்றவர்களின் கருத்துக்கள் இக் கட்டுரையில் பயன்படுகின்றன. கிராம்சியின் முக்கியமான கேள்வி ஒன்று இங்கு எடுத்தாளாப்படுகின்றது. அதாவது அரசானது தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுகின்ற முதலாளித்துவ வர்க்கத்தின் கருவி எனின் எவ்வாறு இந்த ஆளும் வர்க்கமானது தான் அடக்குபவர்களிடம் இருந்தே தனது ஆட்சிக்கான சம்மதத்தைப் பெருகின்றது. இதற்குக் காரணமாக சிந்தாந்த மேலான்மை என்ற கருத்தின்; முக்கியத்துவத்தை கிராம்சி வலியுறுத்துகின்றார். அதாவது அரசு என்பதை ஆதிக்கம் மற்றும் மேலான்மை என்பவற்றின் இணைவாகவே இவர் பார்க்கின்றார். அல்துசாரோ இதை சிந்தாந்த அரச இயந்திரம் என்று ஒரு கட்டமைப்பாகவே அழைக்கின்றார். அதாவது தமது ஆதிக்கத்தை தொடர்வதற்காக வன்முறையை மட்டும் நம்பிருக்காது சிந்தாந்தம் ஊடான ஆதிக்க வழிமுறைகளான கல்விமுறை, மத நிறுவனங்கள், குடும்பம், மற்றும் அரசியல் கட்சிகள் என்பவற்றிக்கூடாக ஆற்றுகின்றனர். முதலாளித்துவ கட்சிகள் தமது சித்தாந்த மேலான்மையை நிறுவுவதற்கு இவ்வாறு பண்முகத்தன்மையுடன் செயற்படுகின்றனர். மேலும் சில சிந்தனையாளர்கள் அரச கட்டமைப்பு மற்றும் தனிநபர் சார்ந்ததும் இவற்றுக்கும் இடையிலான இயங்கியல் உறவின் அடிப்படையிலும் பார்த்தனர். மனிதர்கள் சித்தாந்தத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் அல்ல. மாறகா சித்தாந்தத்தினுடாகவே தொடர்புகொள்கின்றனர் என்பதும் இது ஆதிக்க சித்தாந்தமாக இருப்புது உண்மையானவையே என்ற கருத்து முக்கியத்துவமானதும் ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்றுமாகின்றது. இத்துடன் இன்னுமொன்றையும் வலியுறுத்த விரும்புகின்றேன். ஆதாவது மனிதர்களது பிரக்ஞையற்ற ஒரு நிலையே தம்மையே அடக்கி ஒடுக்குகின்ற இச் சிந்தாத்தங்கைளை ஏற்றுக்கொள்வதுடன் இச் சிந்தாந்தங்களினுடாகவே சிந்திக்கவும் தொடர்பும் கொள்கின்றனர் என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். இதனால்தான் மனித பிரக்ஞையின் நிலை தொடர்பாக எனது கட்டுரைகளில் நான் தொடர்ந்தும் முக்கியத்துவமளித்து வலியுறுத்துகின்றேன்.

அரச அதிகார வர்க்கமும் முதலாளித்து வர்க்கமும் தேச நல்ன்கள் எனக் குறிப்பிடுவது தமது மூலதனத்தின் நலன்களே. இவ்வாறு நம்பும் படியே சகல சமூக நிறுவனங்களினுடாகவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக செயற்படுகின்றனர். மேலும் இவர்களால் உருவாக்கப்ட்ட தனிச்சொத்துரிமை சட்டமானது பல்வேறு எதிர்விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தியபோதும் அவை குற்றங்களாக கருதப்படுவதில்லை. இவ்வாறு முதாலாளித்துவ வர்க்கம் தனது செயற்பாடுகளை தங்ககு தடையின்றி தொடர்வதற்கான சகல வசதிகளையும் அதிகாரவர்க்கம் செய்து கொடுக்கின்றது என உதாராணங்கள் மூலம் நிறுபிக்கின்றனர். இதேபோல் முதாலாளித்துவ வர்க்கமும் அதிகாரவர்க்கத்தின் தேவைகளை அதாவது தனக்காக மேற்கொள்ளும் அரசியல் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக நிறைவேற்றுகின்றன. குறிப்பாக பணத்தின் தேவை முக்கியமானது. இந்தப் பணத்தை முதலாளிகள் தமது மூதலிலிருந்தல்ல மாறகா தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலமாகவே சேகரித்த மேலதிக பணத்திலிருந்தே அதிகாரவர்க்கத்திற்கு கொடுக்கின்றனர்.

ஆகவே சுரண்டப்படும் வர்க்கங்கள் இந்த அரசைக் கைப்பற்றாது தமது இலக்குகளை உதாரணமாக வர்க்கமற்ற சமுதாயத்தை அடையமுடியாது என்கின்றனர். மேலும் இவ்வாறு கைப்பற்றப்படும் அரசை தமது நோக்கங்களுக்காக அப்படியே பயன்படுத்த முடியாது என்பதால் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும் எனவும் வாதிடுகின்றனர். இதன் நீட்சியாக வர்க்க முரண்பாடுகள் இல்லாது போகும் போது அரசும் அதன் தேவைகளும் இல்லாது போகும். ஆகவே, முதலாளித்துவ அரசுக்குப் பதிலாக புரட்சியின் பின் பட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கொண்டது தான் புரட்சிகர அரசு என முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான புரட்சிகர அரசை வன்முறையுடன் கூடிய புரட்சி இல்லாது முதலாளித்து அரசை இல்லாது ஒழிக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

அதேவேளை அரசு தொடர்பாக இப்படியான ஒரு கோட்பாட்டை அல்லது கருத்தை இலகுவாக முன்வைக்கலாமா என்கின்ற் கேள்வியையும் எழுப்புகின்றனர். காரணம் அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவு இருக்கின்றதா அல்லது இரண்டும் சார்பளவில் சுயாதினமாவையா? அரசு ஆளும் வர்க்கத்தின் அடிமையாகவா அல்லது அதன் நலன்களைக் காப்பனவாக மட்டுமா செயற்படுகின்றது?. அவ்வாறு எனின் எப்படி தொழிலாளர்களது நலன்கள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பான சட்டங்களையும இயற்றுகின்றது?. என சில கேள்விகளையும் முன்வைக்கின்றர்.

பாராளுமன்றம் என்பது மன்னராட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கம் மற்றும் வளர்ந்து வந்த முதலாளித்து வர்க்கத்திற்கும் இடையிலான மோதல்களின் விளைவாக இவர்களைக் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் உருவான ஒரு பொதுவான அமைப்பு. இதிலிருந்து எவ்வாறு கட்சிகள் குறிப்பாக சட்ட வல்லுனர்களை பிரதிநிதிகளாக கொண்ட கட்சிகள் உருவாகின்றன என குறிப்பிடுகின்றனர். இவ்வாறன பிரதிநிதிகளாக ஆளும் வர்க்க ஆண்களாகவே ஆரம்பத்தில் இருந்தனர். பின்பு படிப்படியாக போராட்டங்களின் மூலம் தொழலாளர் பிரதிநிதிகளுக்கும் பெண்களுக்கும் மற்றும் பல்வேறு நிறத்தவர்களுக்கும் அந்தந்த நாட்டின் தன்மைக்கு ஏற்ப அங்கத்துவம் கிடைத்தன. ஆகவே முதலாளித்துவ மற்றும் ஆதிக்க சக்திகள் தமது ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்காக இவ்வாறன குழுக்களுக்கிடையில் சமரசபோக்குகளை அரசு, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் என்பவற்றில் உருவாகின என்கின்றனர். இந்தடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் அதற்கான தேர்தல்கள் என்பது வரையறுக்கப்பட்ட பாத்திரத்தையே வகிக்கின்றது என்கின்ற போதும் இவற்றில் பங்குபற்றுவதற்கும் இவற்றினுடாக செயற்படுவதற்குகான அரசியல் உரிமைகள் சமூக விடுதலைக்கான பயணத்தில் முக்கியத்துவமானவை என்கின்றனர்.

ஆகவே பாரளுமன்றத்தில் புரட்சியாளர்கள் பங்குபற்றுவதற்கான முக்கியமான காரணங்களை ஆதராங்களாக சிலவற்றை முன்வைக்கின்றனர். இதற்காக லெனினின் கருத்துக்களையும் சோவியத்யூனியனின் கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகளையும் அப்படியே ஆதாரமாக முன்வைக்கின்றனர். இதனை “சோவியத்யூனியன் கால ஆனுபவங்கள் குறிப்பாக லெனினின் பார்வையில்” என்ற உப தலைப்புக்குள் அடக்கியிருக்கலாம். இவ்வாறான ஒரு நீண்ட இணைப்பை கட்டுரையின் ஒரு பகுதியாக சேர்த்தமைக்காக இவர்கள் தமது கவலையை தெரிவித்தபோதும் அதன் முக்கியத்துவம் கருதி வெளியீடுவதாக கூறுகின்றார்கள். இதில் கூறப்படுகின்ற விடயங்கள் முக்கியத்துவமானவை ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி இவ்வாறான பகுதிகளை கட்டுரையின் தொடர்ச்சியாக இல்லாது உப தலைப்புகளுடன் வெளிப்படுத்தும் பொழுது வாசிப்பவர்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவானதாக இருந்திருக்கும்.

அடுத்த பகுதி “கட்சியும் பாராளுமன்றப் பாதையும் புரட்சியாளர்களும் ஒரு கோட்பாட்டுப் பிரச்சனை.” இதில் முதன்மையான கருத்தாக முன்வைக்கப்படுவது, பராளுமன்றத்தை “செயல்பூர்வமான புறக்கணிப்புடன்” பொது மனிதர்களின் அரசியல் உரிமை பற்றிய பிரக்ஞையை, வாதப்பிரதி வாதங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களினுடாக வளர்ப்பதற்கான ஒரு களமாக பார்க்கின்றனர். தேர்தல் காலங்களில் பொது மனிதர்கள் அரசியல் கருத்துக்களை அறிவது தொடர்பான விழிப்படன் இருப்பதாலும் அவர்களே தேடுவதாலும் அவர்களிடம் செல்வதற்கான நல்லவொரு சந்தர்ப்பமாக கருதுகின்றனர். மேலும் ஆதிக்க முதலாளித்துவ சக்திகளின் சித்தாந்த மேலாண்மையை விமர்சிப்பதற்கான பொது தளமாக இது இருக்கின்றது. புரட்சிகர சக்திகளை பொது மனிதர்கள் புர்pந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த களங்கள் பயன்படுகின்றன. ஏனனில் அராஜகவாதிகள் நினைப்பதுபோல் போல் எடுத்த எடுப்பில் அரசை கைப்பற்றவோ கவிழ்க்கவோ முடியாது. திட்டமிட்ட செயற்பாடுகள் மூலமாக படிமுறையாகத்தான் செய்யலாம்;. இந்தடிப்படையில் பாராளுமன்றம் என்பது கடந்து செல்லவதற்கான ஒன்றே தவிர அதன் மூலம் முழுமையான நோக்கத்தை அடையமுடியாது. ஆகவே பாராளுமன்றத்திற்கு வெளியேயான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும். ஆகவே புரட்சியாளர்கள் பல்வேறு வழிமுறைகளை அதாவது சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பன்முகத்தன்மைகளையும் சமூகமாற்றத்திற்கான செயற்பாட்டிற்காக பயன்படுத்தவேண்டும் என்கின்றனர்.

சோவியத் புரட்சியின் பின்பு கடந்த 60 ஆண்டுகளில் பரட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகளின் அனுபவங்களையும் அதை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதையும் அடுத்த பகுதிக்குள் அடக்கலாம். அதாவது, “புரட்சியாளர்களின் பாராளுமன்ற பாதை நேர் எதிர் மறை அனுபவங்கள் ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற உப தலைப்புக்குள் இதை அடக்கலாம். இதன் மூலம் பாராளுமன்றப் பாதையின் நேர் எதிர் மறைப் பாத்திரங்களை விவாதிக்கின்றனர். உதாரணமாக சிலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியபோதும் அதைத் தொடர்ந்தும் காப்பாற்ற முடியாமல் போனமையும் இந்தியாவில் தொழிலர்களுக்கு எதிராக மார்க்ஸிய கட்சிகளின் மாநில அரசாங்கங்கள் செயற்பட்டதையும் இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலமைப்பையே இந்த மார்க்ஸியவாதிகள் வடிவமைத்ததையும் பாராளுமன்றத்தின் எதிர்மறை காரணங்களாக குறிப்பிடுகின்றனர். மறுபுறம் நிகரக்குவா வெனிசுலா பொலிவியா நேபாள்ம் போன்ற நாடுகளில் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிது மட்டுமல்லாது முதலாளி வர்க்கம் மற்றும் அமெரிக்க அரசுகளின் மறைமுக நேரடி அழுத்தங்களுக்கு எதராகப் போராடி புரட்சிகரமான முடிவுகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர் என பாராளுமன்றப் பாதையின் நேர்மறை உதாரணங்களையும் விளக்குகின்றனர்.

மேலும் குளோபல் சௌவுத் எனக் கூறப்படுகின்ற மூன்றாம் உலக நாடுகளில் கட்சி, பாராளுமன்றம், மற்றும் தனிநபர் சார்ந்த பிரச்சனைகளையும் அலசுகின்றனர். ஏனனில் இவை ஐரோப்பிய நாடுகளிலிருந்து வித்தியாசமான தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகின்றனர். அதாவது எவ்வாறு ஒரு தனிமனிதர் முழு ஆதிக்கத்தையும் தன்னுள் கொண்டிருக்கின்றார் என்பதையும் அவரே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கின்றார் என்பதையும் விளக்குகின்றனர்.

இறுதிப் பகுதியை “நமது (வியூகம்) நிலைப்பாடும் செயற்படுவதற்கான வழிமுறைகளும்” எனக் கூறலாம். மார்க்சிய வுராலாற்றில் பாராளுமன்றம் தொடர்பாக மூன்று பார்வைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஒன்று பாராளுமன்றப் பாதையே ஒரு வழி என அதில் முழுமையாக நம்பியும் தங்கியும் தேங்கியும் சரணாகதியடைந்திருப்பவர்களது நிலைப்பாடு. இரண்டாவது முற்றகாப் புறக்கணிப்பவர்களான அராஜகவாதிகளது நிலைப்பாடு. மூன்றாவது பாராளுமன்றப் பாதையின் வரையறைகளைப் புரிந்துகொண்டு சமூக மாற்றத்திற்காக அதை எவ்வாறு ஆரோக்கியமாக தமது இலக்கு நோக்கி பயன்படுத்துவது என்ற நிலைப்பாடு. வியூகம் குழுவினர் மூன்றாவது பாதையையே தமது பாதையாக கொண்டுள்ளதுடன் அதற்கான வரையறைகள் பொறுப்புகள் என்ன என்பது தொடர்பாகவும் கவனங் கொண்டுள்ளனர். புரட்சிகர சக்திகளின் சித்தாந்த மேலான்மையை நிறுவுவதற்கான பாதைகளில் இதுவும் ஒரு முக்கியமான செயற்பாட்டிற்கான வழி என்கின்றனர்.

எனது முதலாவது கேள்வி லெனினின் அறிக்கையின் அல்லது கோட்பாட்டு வெளிவந்த பின் பாட்டாளிவர்க்க சர்வதிகாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட அனுபவத்தை குறிப்பாக சோவியத்யூனியன் மற்றும் சீனாவிடம் இருந்தும் நாம் பெற்றிருக்கின்றோம். இந்த சர்வதிகாரமானது பல அல்லது சில அடிப்படை பிரச்சனைகளை தீர்த்திருந்தாலும் மனிதர்களை தங்க குண்டிற்குள் அடைத்தது போலானது எனவும் குறிப்பிடலாம். இதன் அர்த்தம் முதலாளித்து அரசிற்குள் அனைத்தும் நன்று என்பதல்ல. ஆனால் முதலாளித்துவ அரசின் கீழ் அனுபவிக்கப்படுகின்ற அடிப்படை ஐனநாயகம் மனித உரிமைகளைக் சோவியத் மற்றும் சீன அரசின் கீழ் வாழ்கின்ற மனிதர்கள் அனுபவித்தார்களா என்பது கேள்விக்குரியே. ஏனனில் இவ்வாறன ஐனநாயக உரிமைகள் எல்லாம் இந்த நாடுகளில் அர்த்தமிலந்து காணப்படுகின்றன. ஒரு கட்சி ஆட்சிமுறை பன்முகத்தன்மையையும் ஐனநாயக உரிமைகளையும் ஒருபுறம் அழித்துள்ளது என்றால் மிகையல்ல. மறுபுறம் புரட்சிகர கட்சியே ஆதிக்க வர்க்கமாக மாறியுள்ளமை கண்ணால் காண்கின்ற உண்மை. முதலாளித்துவ அரசு கைப்பற்றப்பட வேண்டும் இல்லாது செய்யப்படவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் என்ற சொல்லாடல் அல்லது அந்த செயற்பாட்டுமுறைமை இப்பொழுதும் சரியானது என ஏற்றுக்கொள்கின்றோமா? ஆம் எனின் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பான பதில் என்ன? ஏற்றுக்கொள்ளவில்லை எனின் மாற்று செயற்பாட்டு முறைமை என்ன? என்பதற்கான பதில்கள் முன்வைக்கப்படவேண்டும். இதன் தொடர்ச்சியாக வன்முறை செயற்பாட்டின் மூலம் அரசை கைப்பற்றுவது தொடர்பான விரிவான விளக்கமும் முன்வைக்கப்படவேண்டும். ஏனனில் வன்முறை பாதை என்பது ஆணாதிக்கப் பார்வையிலமைந்த ஒரு செயற்பாட்டு வடிவம் என்பதே எனது புரிதல்.

இரண்டாவது தனிமனிதர்களும் புரட்சிகர கட்சியும் சமூகமும் பொது மனிதர்களும் மற்றும் இவற்றுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான பிரச்சனை. புரட்சி நடைபெற்ற நாடுகளில் குறிப்பாக மேற்குறிப்பிட்ட இரு நாடுகளிலும் தனிமனிதர்கள் குறிப்பாக கட்சித் தலைவர்கள் மிகப் பெரும் அதிகாரம் உள்ள ஆதிக்க சக்திகளாக எவ்வாறு வளர்ச்சி பெற்றனர். இவ்வாறான வளர்ச்சியை தடுப்பதற்கு புரட்சிகர கட்சிக்குள் பொறிமுறை வடிவங்கள் இல்லையா? இந்த நாடுகளில் புரட்சியின் பின் சமூக கட்டமைப்பிலும் பொது மனிதர்களது வாழ்விலும் ஆதிக்க சிந்தனைகளிலும் மாற்றங்கள் இடம் பெற்றனவா? இடம் பெற்றன எனின் எவ்வாறான மாற்றங்கள்.?. இல்லை எனின் ஏன் மாற்றம் ஏற்படவில்லை? புரட்சி நடைபெற்று இவ்வளவு காலத்தின் பின் இன்று இந்த மனிதர்களினதும் சமூகத்தினதும் அதன் ஆதிக்க சித்தாந்தத்தினதும் நிலை என்ன? இவைபற்றிய ஆய்வுகள் முக்கியத்துவமானவை இல்லையா?

வெற்றி பெற்ற புரட்சிகள் எல்லாம் சரியான கோட்பாடு இருந்ததனால் மட்டும் வெற்றி பெற்றன எனக் கூறலாமா? அதற்கான சூழலும் ஆதிக்க சக்திகளது பலவீனமான நிலையும் புரட்சிகளின் வெற்றிக்கு காரணமாக இருக்கவில்லையா?

மூன்றாவது மார்க்ஸ்pன் புகழ் பெற்ற வசனம் இதுவரை தத்துவவாதிகள் சமூகத்தை வியாக்கினமே செய்து வந்தனர். ஆனால் நாம் சமூகத்தை எப்படி மாற்றப் போகின்றோம் என்ற நடைமுறை செயற்பாட்டுற்கான தத்துவத்தை முன்வைக்கின்றோம் என்றார். இதுவே இவர் கடந்தகாலத்திலிருந்து தன்னை முறித்துக் கொண்டு உருவாக்கிய புதிய கோட்பாடு எனலாம். இதேபோல் லெனின் மார்க்ஸின் முன்மொழிவான முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் வர்க்க முரண்பாடுகளின் உச்சத்தில் தான் புரட்சி சாத்தியம் என்பதற்கு மாறாக நிலவுடமை சமூகக் கட்டமைப்பின் இறுதிக் கட்டங்களில் அல்லது முதாலாளித்து சமூக அமைப்பிற்கான ஆரம்ப கட்டங்களில் இருந்த ரஸ்சிய சமூகத்தில் அன்றைய சுழ்நிலைகளால் புரட்சி சாத்தியம் என கண்டு முன்னெடுத்தார். இதுவே இவர் மார்க்ஸியத்தின் உதவியுடன் உருவாக்கி புதிய கோட்பாடு எனலாம். இதேபோல் மாவோவும் இறுக்கமாக நிலவிய சீன நிலவுடைமை சமுதாயத்தில் அதுவும் முதலாளித்துவ வாசனை அற்ற கிராமப் புறங்களிலிருந்தே சீனப் புரட்சியை ஆரம்பித்தார். இப்படி வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் தம் தம் சமூக சுழ்நிலைகளுக்கு ஏற்பவே புதிய கோட்பாடுகளை உருவாக்கி புரட்சியை வழிநடாத்தினர். வியூகம் குழுவினர் இவ்வாறு தமது நிலைப்பாடாக முன்வைக்கும் தமிழ் சமூகம் அதற்கான மாற்றம் தொடர்பான புதிய கோட்பாடு என்ன?

பாராளுமன்றம் தொடர்பாக மார்க்ஸ் மற்றும் லெனினின் வாதங்களை முன்வைத்தனர். பல்வேறு நாடுகளில் வரலாற்று ஆதராங்களை நேர் எதிர் அனுபவங்களை முன்வைத்தனர். இதன் மூலம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் எந்த முரண்பாடு இல்லை. ஆனால் கடந்த காலங்களில் புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தியதிலிருந்து பெற்ற நேர்மறை எதிர்மறை அனுபவங்களில் இருந்து நாம் கற்றது என்ன? கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பயன்படுத்திய புரட்சியாளர்களிலிருந்து வியூகம் குழுவினர் எந்தவகையில் வேறுபடுகின்றனர்.? இவற்றிலிருந்து எவ்வாறான புதிய கோட்பாட்டை முன்வைக்கின்றார்கள்? அல்லது பாராளுமன்றத்திற்கு செல்வதை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட சாதகமான வாதங்களா இவை?

இலங்கை இடதுசாரிகள் குறிப்பாக சிங்கள தேசத்தின் இடதுசாரிகளில் என்எஸ்எஸ்பி அதனது தலைவர் விக்ரமபாகுவின் தலைமையில் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் ஜனநாய விரோத மற்றும் இனவாத செய்றபாடுகளுக்கு எதிராக செயற்பட்டபோதும் மற்றும் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொண்டு அதற்காக செயற்பாடுகளை மதிக்கலாம் ஆதரிக்கலாம். ஆனால்; சமூக மாற்றம் புரட்சி என்ற தளத்தில் அவர்களது செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டனவாக அல்லது பூச்சிய நிலையிலையே இருக்கின்றன. இவர்கள் பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மட்டும் துடிப்பாக செயற்படுகின்றவர்களா மட்டுமே இருக்கின்றனர். இதற்கு காரணம் இவர்களிடம் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட பழைமைவாத மார்க்ஸிய கருத்துக்களா? அல்லது புதிய கோட்பாடுகள் தொடர்பான அக்கறையினமா? ஒரு முறை விக்கிரமபாகுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது தங்களது வீட்டின் விலாசமாக இன்றும் தங்களது சாதிய அடையாளம் உள்ளது என்றும், இது நீங்கள் இன்னும் சாதிய அடையாளத்தை பயன்படுத்துகின்றீர்கள் என்பதற்கு சாட்சியாகவும் இருக்கின்றது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அவ்வாறு சாதிய அடையாளத்தை முனநிறுத்தவில்லை எனின் அதை ஏன் மாற்றக் கூடாது எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அந்த அடையாளத்தைத்தான அனைவரும் குறிப்பாக தபால் தருகின்றவர் அறிந்து வைத்திருக்கின்றர். ஆகவே கடிதங்கள் வந்து சேர்வதற்கு வசதியான தெரிந்த அடையாளமாக அது உள்ளது என ஒரு பொருப்பற்ற உப்புச்சப்பற்ற பதிலை கூறியிருந்தார்.. மேலும் சமூக மாற்றம் ஒன்று நடைபெற்றபின் அதன் தேவை இருக்காது என்றும் அப்பொழுது அந்த அடையாளம் பயன்படுத்தப்படமாட்டாது என்றார். என்னைப் பொருத்தவரை இது ஒரு முக்கியமானதும் விமர்சனத்திற்கும் உரிய ஒரு விடயமாகும். இங்குதான் நாம் நம் மீதான ஆதிக்க சக்திகளது சித்தாந்தங்களை பிரங்ஞைபூர்வமாக நாம் கட்டுடைப்பு செய்யவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. அதாவது நாம் சமூக மாற்றத்திற்காக செயற்படும் அதவேளை சமாந்தரமாக நம்மை நாம் மாற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். புரட்சி ஏற்படும்வரை காத்திருப்பதோ அல்லது புரட்சியின் பின் மாறிவிடுவோம் என்பதோ பொறுப்பற்ற தப்பிக்கும் காரணமே. இவ்வாறு நாம் செய்வது நடைமுறை வாழ்வில் கஸ்டமானதாக இருந்தபோதும், நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமான சகல கணங்களிலும் தளங்களிலும் புரட்சிகரமானவர்களாக நாம், நம் உள் தன்மையிலும், சிந்தனையிலும், வெளி பழக்கவழக்கங்களிலும், உறவுகளிலும்; மாறாதவரை, நாம் எதிர்பார்க்கின்ற சமூக மாற்றத்தை முழுமையாக சாத்தியமாக்க முடியாது என்பது நாம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விடயமாகும்.

மறுபுறம் வியூகம் நண்பர்கள் உயிர்பு காலத்திலிருந்து புதிய கோட்பாடுகளை உருவாக்குவதில் அக்கறை உள்ளவர்களாகவும் அதை நோக்கிய முழுமையாக பங்களிப்புடன் செயற்படுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் பொதுவான சமூக தளத்தில் அவர்களது செயற்பாடு என்பது பூச்சியம் என்றே கூறவேண்டும். இவ்வாறான செயற்பர்ட்டின் வெளிப்பாடுதான் 1998ம் ஆண்டு கட்சியாக தம்மை பிரகடனப்படுத்தி பொது மனிதர்கள் மத்தியில்செயற்பட ஆரம்பித்தபோது அவர்கள் எதிர்கொண்ட அமைப்புத்துறை மற்றும் தனிமனித செய்பாடுகள் தொடர்பான் பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாது இரண்டு வருடங்களுக்குள் கட்சியை களைக்கவேண்டி ஏற்பட்டது. எனது புரிதலில் இதற்கு காரணம் கோட்பாட்டுருவாக்கத்தில் அக்கறையாக செயற்படும் அதேவேளை சமூக மட்டத்திலான செயற்பாடின்மை காரணம் எனலாம். அதாவது தாம் உருவாக்கிய கோட்பாட்டை சரியானதா பிழையானதா என யதார்த்த சமூக அரசியல் நீரோட்டத்துடன் சமாந்தரமாக உரசிப்பார்க்காததே காரணம் என்பேன். இவை இரண்டும் சமாந்தரமாக நடைபோடவேண்டும் என்றே கருதுகின்றேன்.

சமூக மாற்றத்திற்கா செய்ற்படுகின்றவர்களின் வழிகாட்டியாக இருக்கின்ற மார்க்ஸ் லெனின் மாவோ போன்ற பிரதான கோட்பாட்டாளர்கள் சிந்தனையாளர்களாக இருந்தால் என்ன, அதன் பின் வந்த பிற புரட்சியாளர்களாக இருந்தால் என்ன, அனைவரும் அந்த சுழலுக்கான கோட்பாட்டை தாம் உருவாக்கிய அதேநேரம் நடைமுறை அரசியலிலும் பங்கெடுத்ததுடன் அதற்கும் வழிகாட்டினர் என்பதே எனது அறிவு. நடைமுறை அரசியலுக்கு உடாகத்தான தமது கோட்பாடுகளை செழுமைப்படுத்தின்ர் என்பதே எனது புரிதல். ஆனால் தமிழ் சுழலில் உதாரணமாக செந்தில் வேல் தலைமையிலான புதிய ஐனநாயக கட்சியினர் நீண்ட காலமாக இடதுசாரி அரசியலில் செயற்படுகின்றனர். ஆகக் குறைந்ததது அவ்வாறான ஒரு தோற்றத்தை தருகின்றனர். ஆனால் அவர்களிடம் காணப்படும் மரபுவாத சிந்தனையும் அதை அப்படியே பின்பற்றுகின்ற போக்கும் புதிய கோட்பாடுகள் தொடர்பான அக்கறையீனமும் அவர்கள் செயற்படும் சமூகத்தில் குறிப்பான எந்தவொரு தாக்கத்தையும் அவர்களால் ஏற்படுத்த முடியாமலிருக்கின்றது. மறுபுறம் வியூகம் நண்பர்கள் புதிய கோட்பாட்டுருவாக்கத்தில் காண்பிக்கும் அக்கறையை நடைமுறை அரசியலில் காண்பிப்பதாக தெரியவில்லை. பொதுவான அரசியலில் செயற்படுவதற்காக தமக்கான கோட்பாட்டை உருவாக்கும் வரை காத்திருப்பதாகவே தெரிகின்றது. அவ்வாறு இவர்கள் கோட்பாட்டை உருவாக்கும் பொழுது புறச் சுழல் புதியதொரு நிலைமைக்கு மாறியிருக்கும். மீண்டும் அப் புதிய சுழலுக்கு ஏற்ப புதிய கோட்பாட்டின் தேவை ஏற்படும். இதுவே கட்ந்தகாலத்திலும் நடந்தது. இப்பொழுதும் இவர்களுக்கு நடக்கின்றது என்றால் மிகையல்ல. ஆகவே வியூகம் நண்பர்கள் தாம் இருக்கின்றன நாடுகளில் ஒரு சிறு குழுவையாவது அமைத்து கோட்பாட்டுருவாக்கத்திற்கு சமாந்தரமாக நடைமுறை அரசியல் செயற்பாட்டிலும் பங்குபற்றுவதே ஆரோக்கியமானது என்பது எனது நிலைப்பாடு. ஆல்லது 2000ம் ஆண்டும் தமிழிழ மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே மீண்டும் இவர்கள் உருவாக்கப் போகும் கட்சிக்கு எதிர்காலத்தில் எற்படும் என்பதில் சந்தேகமில்லை.

உதராணமாக கனடாவில் வாழும் பெரும்பான்மையான தமிழ் பேசும் மனிதர்கள் தமது வர்க்க சாதிய சமூக மற்றும் புலம் பெயர் தகுதி அல்லது அந்தஸ்திற்கு ஏற்ப லிபரல் கட்சிக்கும் பழைமைவாதக் கட்சிக்குமே அதிகமாக ஆதரவளித்து வாக்களிக்கின்றனர். புதிய ஐனநாயக கட்சி பல விடயங்களில் லிபரல் கட்சியை போன்றது எனவும் வெற்றி பெறாத கட்சி என்ற கருத்துக்கள் பொது மனிதர்கள் மத்தியில் சர்வசாதராரணமாக நிலவுகின்றது. இருப்பினும் தமிழ் பேசும் மனிதர்களைப் பொருத்தவரை தமது அரசியல் கோரிக்கைகளுக்காகவும் இலங்கையின் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் விடுதலைக்காகவும் உறுதியாக ஆதரவளிப்பது மட்டுமல்ல குரலும் கொடுக்கின்ற கட்சி புதிய ஐனநாயக கட்சி என்றால் மிகையல்ல. தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியலின் அடிப்படையில் இக் கட்சிக்கே தமிழ் பேசும் மனிதர்கள் ஆதரவளிக்கவும் இக் கட்சியின் சார்பாகவே தமது பிரதிநிதிகளை ஒன்றுபட்டு நிறுத்தவும் வேண்டும். அவ்வாறு செய்ய முடியுமாயின் நிச்சயமாக புலம் பெயர் தமிழ் பேசும் மனிதர்களுக்கான கனடியப் பிரதிநிதி ஒருவரை தெரிவுசெய்யலாம். ஆனால் தமிழ் பேசும் மனிதர்கள் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு தமக்கு யார் இடம் தருகின்றார்களோ அவர்களுடனையே சந்தர்ப்பவதா பயன்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் தமிழ் பேசும் மனிதர்களுக்கான ஒழுங்கான அரசியல் கட்சி இல்லாமையே. ஆவ்வாறு ஒரு கட்சியை உருவாக்குவதன் மூலம் கனடிய புலம் பெயர் தமிழ் சமூகத்தில் சித்தாந்த மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் இம மனிதர்களை சமூக நலன் சார்ந்த அரசியல் செயற்பாட்டிற்காக வழிநடாத்தலாம். இதையே வியூகம் குழுவினர் தமது கோட்பாட்டு செயற்பாடடுக்கு சமாந்தரமாக பொதுவான தளத்தில் தமது ஆரம்ப செயற்பாடாக முன்னெடுக்கவேண்டும். ஏனனில் எதிர்கால அரசியல் என்பது தளத்திலும் புலத்திலும் சர்வதேரீதியிலும் என் மூன்று தளங்களில் செயற்படவேண்டியிருக்கும். மற்றது புலத்தில் இருக்கின்றவர்களில் அதிகமானவர்கள் தள அரசியல் கதைத்தாலும் அங்கு சென்று செயற்படமாட்டார்கள் என்பது திண்ணம். ஆகவே அவர்கள் புலம் பெயர் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே தமிழ் தேசிய விடுதலைக்கான சமூக விடுதலைக்கான பங்களிப்பை சிறிதளவாவது செய்யலாம். இதை உணர்ந்து வியூகம் குழுவின்ர் செயற்படுவார்களா அல்லது அக்கறை உள்ளவர்களுக்கு வழிகாட்டுவார்களா?

வியூகம் இதழ்கள் 1-2 இல் ஒன்றை நீங்கள் நன்றாக கவனித்தால் ஒரு விடயத்தைப் புரியலாம். அதாவது இக் கட்டுரைகள் ஒரு குழுவின் அல்லது தனிமனிதரின் கருத்துக்களையா பிரதிபலிக்கின்றன என்பதில் சஞ்சிகை முழுக்க தடுமாற்றம் காணப்படுகின்றது. சில கட்டுரைகளில் பொதுவான தளத்தில் “நாம்” எனவும் சில இடங்களில் தனிநபர்சார்ந்து “நான்” என்ற சொற்பிரயோகங்கள் மாறி மாறி வருகின்றன. இது பார்ப்பதற்கு சிறிய பிரச்சனையாக இருக்கல்hம். ஆனால் இது முக்கியமான ஒரு பிரச்சனை. வியூகம் ஒரு குழுவாக செயற்படுகின்றதாயின் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்துக்களாக இருப்பதுடன் இக் கட்டுரைகளில் அவை பிரதிபலிக்கவேண்டும். அல்லது தம் குழுவிற்குள் அவ்வாறான ஒருமித்த பார்வை அல்லது அனைத்துக் கருத்துக்களிலும் உடன்பாடு இல்லை எனின் அதை பொது இடத்தில் முன்வைத்து வெளிப்படுத்து வேண்டும். மேலும் இந்த இதழ்களில் வரும் கருத்துக்கள் கட்டுரையை எழுதியவரின் சொந்தக் கருத்துக்கள் எனவும் வீயூகத்தின் கருத்துக்கள் அல்ல எனவும் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் இவர்கள் அனுப்பு மின்னஞ்சல்களில் அனுப்புகின்றவர்களின் பெயர் ஒன்றும் இருக்காது. மற்றும் நாம் அனுப்பும் மின்னஞல்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்ல ஆகக் குறைந்தது மின்னஞ்சல் கிடைத்ததா என கூட உறுதிசெய்வதில்லை. இவ்வாறான செயற்பாடுகள் இவர்களது பொறுப்பற்றதன்மையை அக்கறையின்மையை காண்பிக்கின்றது.

இச் சந்தர்ப்பத்தில் மனிதர்களின் பண்பு தொடர்பாக நிச்சயமாக கதைக்கப்பட வேண்டும். குறிப்பாக புரட்சிகர மற்றும் சமூக மாற்றத்திற்கான அரசியல் கதைப்பவர்களிடம் இது குறித்த பிரக்ஞை நிச்சயமாக இருக்க வேண்டும். நாம் ஏன் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றோம். அரசியலில் அக்கறை இருப்பதற்கு என்ன காரணம்? அநீதி நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லையா என்பதாலா? அல்லது மனித இனத்தின் மீதான அன்பினால், மனிதர்கள் சுரண்டப்படாது கஸ்டப்படாது சகல உரிமைகளையும் அனுபவித்துக்கொண்டு நலமாக இன்பமாக வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமா? ஆல்லது புpற தொழில்கள் போல் இதுவும் பணம் பெருக்கும் ஒரு தொழிலா? அல்லது பணம் இருப்பவர்களுக்கான பொழுது போக்கான செயற்பாடா அல்லது தமது சமூக அந்தஸ்ததை நிறுவிக்கொள்வதற்கான ஒரு வழியா? இப்படி பல காரணங்களுக்கா சாதாரண அரசியலில் மட்டுமல்ல புரட்சிகர அரசியலில் கூட ஈடுபடுகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

நாம் எந்தளவு உயர்ந்த இலட்சியங்கள் கோட்பாடுகள் தத்துவங்கள் கருத்துகள் என்பவற்றைக் கதைக்கலாம் எழுதலாம். ஆனால் அடிப்படையில் நாம் கதைப்பதன்படி எழுதுவதன் படி நமது இலட்சியக் கனவுபடி ஒரு சிறிதளவாவது செயற்படுகின்றோமா அல்லது மாற்றத்திற்கான முதற்படியகா நம்மை மாற்றுகின்றோமா அல்லது அது தொடர்பாக பிரக்ஞையாவது கொண்டுள்ளோமா என்றால் இல்லை என்றே கூறுவேன். இது தொடர்பான பிரக்ஞை இல்லாது தம்மை மாற்றுவதைப் பற்றிய அக்கறை இல்லாது இருப்பவர்கள் அனுவமும் கல்வியறிவு குறைந்தவர்கள் என்றால் புரிந்துகொள்ளலாம். ஆனால் பல கால வித விதமான சமூக அரசியல் செயற்பாட்டு அனுபவங் பெற்றுக்கொண்டவர்களும் சமூகப் பிரக்ஞையுடன் உயர் கல்வி கற்றவர்களும் கூட இவ்வாறு நடந்து கொள்வது நம்பிக்கையீனத்தையே தருகின்றது. குறிப்பாக நமது பொதுவான சமூக பிரச்சனைகளை கதைக்கும் போது; குறிப்பாக தனிநபர்சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படையாகவும் நேரிடையாகவும் கதைக்கும் பண்பு நம்மிடம் இல்லை. மாறாக ஒருவருக்கு பின்னால் கதைக்கும் பண்பே பரவலாக காணப்படுகின்றது. ஒருவருக்குப் பின்னால் கதைப்பது தவறல்ல. ஆனால் அதற்கு முதலில் குறித்த நபருக்கு முன்னால் கதைத்த அல்லது விமர்சனத்தை வைத்த பின்பே அந்த நபர் இல்லாதபோது கதைப்பது பண்பாகும். அப்பொழுது அதில் தவறில்லை. ஆனால் நாம் மறுதலையாகவே செய்கின்றோம். குறித்த நபருக்கு முன்னால் அவரது வாழ்க்கை கல்வி தொழில் சமூக பதவி தரம் அந்தஸ்து என்பவற்றைப் பொருத்து அவருடனான உறவின் தரத்தைப் பேணுகின்றோம். குறித்த நபர் தொடர்பான விமர்சனங்கள் இருந்தால் அவரது சமூக அந்தஸ்து தேவை என்பவற்றுக்கு ஏற்ப விமர்சனங்களை தவிர்க்கின்றோம் அல்லது காரசாரமாக முன்வைக்கின்றோம். இவ்வாறு விமர்சனங்கள் முன்வைக்காமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணம் இருக்கின்றது. விமர்சனங்களை ஆரோக்கியமாக ஏற்கின்ற மனப் பக்குவம் பண்பு நம்மிடம் இல்லை. மறுபுறம் ஒருவரை நம்க்கு பிடிக்கவில்லை அல்லது உடன்பாடு இல்லை எனின் மூன்றாம்தர பாணியிலான ஆரோக்கியமற்ற பிரயோசனமற்ற விமர்சனங்களை முன்வைப்பது. இவ்வாறன அனுபவங்களே கடந்தகால செயற்பாடுகளின் மூலம் நான் பெற்றவை. இவ்வாறான எதிர்மறை மனிதப் பண்புகள் மற்றும் மனித உறவுகளை நாம் கொண்டிருக்கும் பொழுது சமூக மாற்றத்தை எப்படி ஏற்படுத்துவது. தனி மனித மாற்றம் அவசியமில்லையா? சக மனிதர்களுடனான நமது உறவுகள் மேம்படத்தேவையிலலையா?

இன்று இக் கூட்டத்திலும் இதற்கு முன் வியூகம் ஒழுங்கு செய்த கூட்டங்களுக்கும் வந்த பலர் நாம் முன்பு தமிழிழ மக்கள் கட்சியாக செயற்பட்டபோது எம்மைக் கண்டுகொள்ளவே இல்லை. புறக் கணித்தார்கள். ஜான் மாஸ்டர் இன்று செய்வதைத் தான் அன்றும் செய்தார். ஆனால் அன்று இவருக்கு கனடாவிலுள்ள வேறு நபர்களின் ஆதரவு இருந்தது. இன்று அவர்கள் ஆதரவு இல்லை என்றவுடன் இவர்கள் ஆதரிக்கின்றார்கள். ஆகவே இங்கு கருத்துக்களுக்கா கொள்கைகளுக்கா அல்லது தனி மனிதர்களுக்கா முக்கியத்துவம் கொடுத்து நாம் செயற்பட விரும்புகின்றோம் என்பது எனக்கு கேள்வியாகவே இருக்கின்றது. அன்று ஒரு மாற்றாக உருவான அக் கட்சியை திறந்த மனதுடன் விமர்சனங்களை முன்வைத்து ஆதரித்திரிந்தால் தமிழ் பேசும் மனிதர்களுக்கு எதிரான போர் நடைபெற்றபோது புலிகளின் தலைமைக்கு சார்பற்ற பொது மனிதர்களின் நலன் சார்ந்த உரிமைகள் சார்ந்த ஒரு போராட்டத்தை நாம் ஆகக் குறைந்தது புகலிட நாடுகளிலாவது மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாமல் போய்விட்டது. இதற்கு இப்படியான நமது பண்புகள் தான் காரணம் என்றால் மிகையல்ல.

கட்சிக்குள் புலிகள் இருக்கின்றார்கள் என கூறி அன்று கட்சியை புறக் கணிகத்தவர்கள் இன்று வியூகம் குழுவினர் முன்வைக்கும் கருத்துக்களின் படி முன்னால் புலி உறுப்பினர்களை இனிவருங் காலங்களில் உள்வாங்குவது தவிர்க்க் முடியாது என்பதற்கு என்ன சொல்லப்போகின்றார்கள். நான் இப்படி கூறியவுடன் நான் இன்னாரின் ஆள் என உடனடியாக முத்திரை குத்தாதீர்கள். இன்று நான் எந்த அமைப்பு சாரத ஒரு நபர். ஆனாhல் சமூக மாற்றத்திலும் அதற்காக செயற்பட வேண்டும் என்பதில் மட்டும் அக்கறை கொண்டுள்ள மனிதர். ஆகவே நான் முன்வைக்கும் சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கே முக்கியத்தும் கொடுங்கள். இதன் மூலம் அவற்றுக்கான தீர்வுகளை கண்டுபிடிப்போம். மாறாக வழமைபோல் முத்திரை குத்தி முன்வைக்கும் பிரச்சகைகளை ஓதுக்கிவிடாதீர்கள்.

இப்படியானவர்கள் தான் சமூமாற்றம் மற்றும் புரட்சிகர அரசியல் என்பவற்றில் அக்கறை கொண்டு செயற்படுகின்றோம். உயர்ந்த தத்துவங்கள் கோட்பாடுகள் கருத்துக்கள் என்பவற்றை அள்ளி விசுகின்றோம். என்னைப் பொருத்தவரை நமது மாபெரும் தவறுகளுக்கான அடிப்படை முரண்பாடு இங்குதான் இவ்வாறன பண்புகள் சிந்தனைகள் செயற்பாடுகளில்தான் ஆரம்பிக்கின்றது என்கின்றேன். இதற்குக் காரணம் நாம் எவ்வளவுதான் நமது வாசிப்புக்கள் எழுத்துக்கள் தொடர்பாக பிரக்ஞையாக இருந்தாலும் நம்மைப் பற்றிய பிரக்ஞை நம்மிடம் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதாவது நமக்கு வெளியே உள்ள அனைத்தையும் பற்றி ஒரளவாவது பிரக்ஞையுடன் செயற்படுவோம் செயற்படலாம். ஆனால் நமக்குள்ளே நடப்பவை பற்றிய நம் மன சிந்தனையோட்டங்கள் தொடர்பான பிரக்ஞை என்பது நம்மிடம் மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை எனக் கூடக் கூறலாம். புரட்சிகர முன்னேறிய கோட்பாடு என்பது பிரக்ஞையுடன் தமக்கு வெளியில் அதாவது சமூகத்தில் நடப்பவற்றவை அறிவது புரிவதும் அதிலிருந்து உருவாக்குவதுமாகும். இது உள் அதாவது தனிமனித பிரக்ஞையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? ஒரு புரட்சியில் தனிமனித பிரக்ஞையின் முக்கியத்துவம் என்ன? இவைபற்றிய விரிவான விளக்கத்தை இவர்கள் முன்வைக்க வேண்டும். மனிதப் பிரக்ஞை என்பது முக்கியமான விடயமாக இருந்தபோதும் அது தொடர்பாக விரிவாக கதைப்பதற்கு இது பொருத்தமான இடமல்ல என்பதாலும் இன்றைய எனது பணி அதுவல்ல என்பதாலும் இத்துடன் நிறுத்திக்nhகள்கின்றேன்.

இறுதியாக புரட்சி செய்வது அல்லது சமூகமாற்றத்திற்கான செயற்பாடு என்பது ஒரு அரசாங்கத்தை அல்லது முதலாளித்துவ கம்பனி ஒன்றை நிர்வகிப்பதற்காக செயற்படுவதைவிட பன்மடங்கு ஆற்றலும் மனித வலுவும் தேவைப்படுகின்ற ஒன்று. விஞ்ஞானிகளை விடவும் சமூக அறிஞர்கள் சிந்தனையாளர்களை விடவும் புரட்சியாளர்கள் தமது முழுமையான உடல் மனம் மற்றும் சிந்தனை செயற்பாட்டு பங்களிப்பை முழுமையாகவும் பிரக்ஞைபூர்வமாகவும் வழங்க வேண்டியவர்களாக உள்ளார்கள். அவ்வாறு வழங்காதவிடத்து மேற்குறிப்பிட்ட நிறுவனங்களாலையே முழுநேரம் வேலை செய்தும் தமது நோக்கங்களை நிறைவு செய்ய அவர்களால் முடிவதில்லை. அப்படியிருக்கும் பொழுது இவ்வாறான புரட்சிகர வேலைகளை அரை நேரம் வேலை செய்து நமது உயர்ந்த நோக்கங்களை அடையளாமா என்பது என்முன் உள்ள மிக்பெரிய கேள்வி. ஏனனில் என்னிடம் சிலர் முன்னாள் அல்லது இடதுசாரி மார்க்ஸிய அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்வருமாறு கூறினார்கள். சில முன்னாள் தோழர்கள் கட்சி அங்கத்தவர்கள் போராளிகள் முழுநேரம் கட்சி வேலை செய்ததால்தான் அவர்களது குடும்பம் அழிந்தது அல்லது கஸ்டப்பட்டது. தம்மைப் போல பகுதி நேரம் வேலை செய்திருந்தால் அவ்வாறு நடைபெற்றிருக்காது என. ஆகவே நண்பர்களே சமூக மாற்றத்திற்கான செய்ற்பாட்டில் எது சரியான பாதை? முழமையான அர்ப்பணிப்பா? ஆல்லது பகுதி நேர பங்களிப்பா? ஆல்லது பொழுது போக்கான செயற்பாடா?

புpன்வரும் குறிப்புகள் கடந்த காலங்களில் பழகிய உறவுகளிலிருந்து நான் பெற்ற அனுபவங்கள்.

பல் வேறு தொழிற்சங்க அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து இப்பொழுது வயதுபோனதன் காரணமாக பேச்சு தடுமாறும் பலர் நம் மத்தியில் இருக்கின்றனர். இவர்கள் கதைக்கும் பொழுது குறிப்பாக அரசியல் கதைக்கும் பொழுது அவர்களை புறக்கணிப்பது அல்லது நையாண்டி செய்வது. இவ்வாறு பலவற்றை அவர்களுக்கு எதிராக அல்லது அவர்களை அசிங்கப்படுத்த செய்கின்றோம். இந்த் வயதுப் புறக்கணிப்பும் மதியாமையும் எதானால் செய்கின்றோம்? நாம் செய்கின்ற அரசியலுக்கும் இதற்கு சம்பந்தம் இல்லையா?

பொது இடங்களில் கதைக்கும் பொழுது தாம் மிகவும் நியாயமானவர்களாகவும் உயர்ந்த பண்புள்ளவர்களாகவும் சிலர் கதைக்கின்றனர். ஒரு முறை தமிழீழ மக்கள் கட்சியின் தமிழீழம் பத்திரிகை விற்பதற்காக ஒரு நபரிடன் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து அனுமதி பெற்றுவிட்டே சென்றிருந்தேன். அவருக்கு அந்தப் பத்திரிiகையை வாங்க விருப்பமில்லை. தன்னிடம் தற்பொழுது பணம் இல்லை எனவும் விட்டில் பல இடங்களிலும் தேடித் தேடி ஒரு சதம் ஐந்து;சதம் போன்ற சில்லறைகளைச் சேர்த்து 25 சதமோ 50 சதமோ தந்தார். இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்பவர்களை பகிடி செய்து துன்புறுத்துவது. புத்திரிகை வாங்க விருப்பமில்லை எனின் விருப்பமில்லை என நேரடியாக கூறலாம். அதுவே நேர்மையான பண்பு.

இன்னுமொருவர் பெயர் பெற்ற மனித உரிமையாளர் மற்றும் சிந்தனையாளர். என்னுடன் என்ன பிரச்சனையோ எனக்குத் தெரியாது ஆனால் என்னைக் கண்டவுடன் திரும்பிவிடுவார். ஆல்லது வேறு வழியில் சென்றுவிடுவார். அதாவது என்னுடன் கதைப்பதை தொடர்ந்து தவிர்க்கின்றார். எதுவும் என்னுடன் பிரச்சனை என்றால் நேரடியாக கதையுங்கள் என மின் அஞ்சலும் அனுப்பியிருந்தேன். கதைப்போம் என் பதில் எழுதியிருந்தார். ஆனால் நேரில் கண்டவுடன் பழைய கதையே. ஒருவர் என்னுடன் கதைக்க விரும்பாதபோது அவருக்கு தொந்தரவு செய்வதை நான் விரும்புவதில்லை. ஆனால் பிரச்சனை என்னுடன் கதையாமலிருப்பதல்ல. சமூக அக்கறை உள்ள ஒருவர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றவர் மனித உரிமைகளில் அக்கறை உள்ளவர் மற்றும் மனிதர்களின் நூண்உணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடியவர் என அறியப்பட்டவரின் செயற்பாடுகள் இப்படித்தான் இருக்கும் எனனின் அவர் எழுதுபவைகளிலும் பேசுபவைகளிலும் உள்ள அறம் என்ன? அர்த்தம் என்ன.? பயன் என்ன? அல்லது அவ்வாறு தன்னை வெளிப்படுத்துவதற்காக பகட்டு வேசமா?

சிலர் மனிதர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தாம் விரும்பியவர்களை கட்சியின் அதிகாரப்பிடங்களுக்கு தள்ளிவிடுவதும் விருப்பாதவர்களை வெட்டி விடுவதும் என மனிதர்களையும் அவர்களுடனான உறவுகளை கையாள்பவர்கள். அதாவது மறைமுக செயற்பாடுகள் மூலமாக பயன்படுத்தி தமது நோக்கங்களை முன்னெடுப்பவர்கள்.

இன்னுமொருவர் சமூக மாற்றத்திற்கான அரசியல் செயற்பாட்டாளர். ஆனால் மனித நட்பைவிட தனது உடமைகளை மிகப் பெரிதாக மதித்து நட்பை கொச்சைப்படுத்தி உதறியவர். தனது தவறை இவர் உணர்ந்தார என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

தமிழ் பேசும் சமூகத்தில் இருக்கின்ற மார்க்ஸியர்கள் கம்யூனிஸட்டுக்கள் தமது வீடுகளுக்குள் சாதி பார்ப்பதும் தமது பெண்களை அடக்குவதும் அவர்களது வேலைகளுக்கு மதிப்பு கொடுப்பாததும் சர்வசதாரணமாக நடைப்பவை. இவர்களது பிரக்ஞை சமூகத்தை கட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே. தம்மைப் பற்றிய தமது பிரக்ஞை நிலைபற்றிய மற்றும் சக மனித உறவுகள் பற்றிய பிரக்ஞையில்லாதவர்களாகவே இவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

ஆனால் இவ்வாறன மனிதர்களுடன்தான் நாம் ஆரம்ப அரசியல் செயற்பாடுகளையும் செய்யப்போகிறோம் எனின் நாம் நமது நோக்கத்தை அடைவோம் என்பதில் எனக்கு சந்தேகமே.

புரட்சிகர மாற்றம் என்பது சமூகத்தில் நடப்பது அல்லது சமூகத்தில் உருவாக உழைப்பது மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதரிலும் புரட்சிகர மாற்றத்திற்கான அடிப்படைகளாவது உருவாகவேண்டும். புரட்சி செய்யும் மனிதர்கள் புரட்சியாளர்கள் அல்ல. மாறாக அவர்கள் எந்தளவு தாம் நம்பும் கோட்பாடுகள் கொள்கைகளின் அடிப்படையில் தம்மை மாற்றியுள்ளார்கள் அல்லது மாற்ற முற்படுவதற்கு முயற்சிக்கின்றார்கள் என வாழ்பவர்களளே உண்மையான புரட்சியாளர்கள் என்பது எனது நிலைப்பாடு.

நட்புடன்
மீராபாரதி

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

வியூகம் இதழ் 2- ஒரு பார்வை: பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்…- தேவை ஒரு புதிய கோட்பாடு : மீராபாரதி

வியூகம் சஞ்சிகையின் இதழ் 2 வெளியீடு

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

யாழ் அபிவிருத்திக் கூட்டத்தில் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பினரும் இணைந்து பங்கு கொண்டனர்.

Suresh_P_and_Powzi_Ministerயாழ்ப் பாணத்தில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முதன்முதலாக கலந்து கொண்டுள்ளது. அத்துடன் அனர்த்த செயற்பாட்டு மையத்தையும் ஏனைய அரசு சார்பு அமைச்சர்களுடன் சோந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்துள்ளனர்.

யாழ்.செயலகத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பமாகி நடைபெற்ற, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எம் பௌசி ஏற்பாடு செய்த அபிவிருத்திக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு அனர்த்த செயற்பாட்டு மையத்தை அமைச்சர் பௌசி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோர் திறந்து வைத்த போது அதில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் இணைந்து கொண்டார்.

Suresh_P_and_Douglas_D_MPs_12Sep10இது வரை காலமும் யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் நடைபெற்றக் கூட்டங்களில் அரசு சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  ஆனால் மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் நடைபெற்ற அபிவிருத்த்திக் கூட்டங்களில் கூட்டமைப்பு நாமாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் பின்னர் அரசாங்கத்தின் அபிவிருத்தி, மீள்குடியமர்வுப் பணிகளுக்கு தமது ஆதரவு உண்டு என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, யாழ்.குடாநாட்டடில் அனர்த்த முகாமைத்துவ செயற்திட்டங்கள் 167 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் என் அமைச்சர் ஏ.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை பிணையிலாவது விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

Magazine_Prisonநீண்டகாலமாக தென்னிலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை பிணையிலாவது விடுதலை செய்யுமாறு அவர்களின் பெற்றோர் உறவினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போது பல்வேறு சந்தாப்பங்களில் நாட்டின் பல பாகங்களிலும் வைத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர். யுவதிகளின் விடுதலை குறித்து பல தடவைகள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பலர் குடும்பத் தலைவர்களாகவிருப்பதால் சம்பத்தப்பட்ட குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையில வாடுகின்றமையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  பிணையிலாவது இவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கைதிகளின் பெற்றோர். உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிறந்து ஒரு நாளான குழந்தையொன்று வீதியோரத்தில் மீட்பு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்!

பிறந்து ஒருநாளான ஆண் குழந்தையொன்று பையினால் சுற்றப்பட்ட நிலையில் வீதியோர பற்றைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் செம்பியன் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது.

நேற்றுக் காலை குறிப்பிட்ட வீதி வழியாக சென்று கொண்டிருந்த கொக்குவில் வாசி ஒருவர் சாக்குப் பைக்குள்ளிருந்து குழந்தையொன்றின் அழுகுரலை அவதானித்துள்ளார். அதனை அவர் அயலவர்களிடம் கூறவே அயலவர்கள் வந்து அக்குழந்தையை மீட்டெடுத்தனர் உடல் நீலம் பாரித்த நிலையில், தெர்ப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் அக்குழந்தை காணப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பெற்ற தாய் பிறந்த குழந்தையை அனாதரவாக கைவிட்டு விட்டு தலைமறைவான சம்பவம் கிளிநொச்சி மருத்துவமனையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.  பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு விட்டு தாய் தலைமறைவு. கிளிநொச்சி மருத்துவமனையில் சம்பவம்! கடந்த 30 ஆண்டுகால யுத்தம் சமூகத்தின் விழுமியங்களையும் தனிமனித உள்ளுணர்வுகளையும் சிதைத்துள்ளதன் வெளிப்பாடாக இவ்வாறான சம்பவங்களைக் காண முடிகிறது.

குறிப்பிட்டக் குழந்தை யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளும் அக்குழந்தையின் தாயாரைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கில் புதிதாக 25 கரையோர பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

SL_Navyவடக்கு கிழக்கு கரையோரங்களில் 25 புதிய பாதுகாப்பு முகாம்களை அமைக்கவிருப்பதாக  இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கரையோர பாதுகாப்பிற்காக இ;ம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பாதுகாப்பிற்கு சிக்கலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் இம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் தடுப்பதற்காகவே இம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் புலிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர்கள் ஆயதங்களுடன் வடக்கு கிழக்கு கடலூடாக ஊடுருவுவதைத் தடுக்க படையினர் ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் சேயலாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னர் படையினர் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முழு உண்மைகளை வெளிக் கொண்டு வராத பாடங்கள்! : வடக்கான்ஆதாம்

Douglas_Devananda_at_Islandsகற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன் உரையாற்றிய எமது முன்னாள் தோழரும் இங்குள்ள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உரையில் பெரும்பகுதியானவற்றுடன் ஒத்துப்போகும் அதேவேளையில் அவர் சொல்ல மறந்த கதை (சேரனின் படம் அல்ல) சிலவற்றை நாம் கூறிக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முதலாவதாக அவர் சிங்கள மக்களை விழித்து இந்த உரையை ஆற்றியுள்ளார் போலுள்ளது. ஏனெனில் அப்பாவி மக்களான உங்களைக் கொன்றொழித்த புலிகளின் தலைமையை உங்கள் மனங்களில் வைத்து நீங்கள் தமிழ் மக்களைப் பார்க்காதீர்கள். தமிழ் மக்களைப் போல் உங்களையும் நேசிக்கும் எங்களைப் போன்றவர்களின் முகங்களுக்கு ஊடாக பாருங்கள் தமிழ் மக்களை பல்லின சமூக மக்கள் வாழும் இலங்கைத் தீவில் ஓர் இனம் உயர்ந்தும், இன்னொரு இனம் தாழ்ந்தும் ஏற்றத் தாழ்வுகளோடு வாழும் அரசியல் சூழ்நிலை இருக்குமாயின் அது இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கவே வழி சமைக்கும் என கூறியுள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் தமிழ் மக்களுக்கும் வேண்டும் என அவர் நினைக்கவில்லை அல்லது தமிழ் மக்களை விழித்து அப்பாவி மக்களான உங்களை கொன்றொழித்த சிங்கள இராணுவத்தின் ஊடாக சிங்கள மக்களைப் பார்க்காதீர்கள் என்று கூறியிருக்க வேண்டும். அவர் அதை கூற மறுக்கிறார். ஏன்? தமிழ் மக்கள் தெளிந்து விட்டார்கள் என கருதுகின்றாரா? அல்லது அவரைப் போல் எல்லா இனங்களையும் நேசிக்கும் தலைவர்கள் சிங்கள் மக்கள் மத்தியில் இல்லை என நினைக்கிறாரா?

இலங்கைத் தீவிலே வாழும் அனைத்து இனங்களும் செழித்து வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அதற்கு எந்தவித ஊசலாட்டமும் இன்றி உண்மைகளை எடுத்து வைப்பதன் மூலமே பாடங்களை கற்க முடியும். அல்லது விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் புலித் தலைமை செய்ததை புலியின் முகவர்கள் தமிழ் மக்களுக்கு மறைத்து விட்டதைப் போன்றே முடியும் என்பது திண்ணம்!

“கடந்த ஐம்பது வருடகால இலங்கை வரலாற்றை மீட்டுப்பார்க்கும்போது ஒரு முக்கியமான உண்மை பளிச்சிட்டுத் தெரிகின்றது. அதாவது சாதாரண தமிழ் மக்களின் நியாபூர்வமான கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களிடத்தில் சரிவர எடுத்துக் கூறப்படவில்லை. அதேபோலவே சாதாரண சிங்கள மக்களின் நட்புணர்வும் இயை புணர்வும் இணைந்து செல்லும் பாங்கும் தமிழ் மக்களிடத்தே எடுத்துக் கூறப்படவேயில்லை. இந்த மௌன இடைவெளியை இல்லாமல் செய்வதன் மூலமாகவே நாம் ஒன்றுபட்ட பிரிக்கப்பட முடியாத இலங்கையை ஏற்படுத்தலாம்” என கூறுகின்றார்.

சரி! இவரது கட்சி எத்தனை கூட்டங்களை சிங்கள மக்கள் மத்தியில் நடத்தியுள்ளது. தமிழ் மக்களின் நிலமைகளை சிங்கள மக்கள் புரிந்து கொண்டார்களா? (என்ன நடக்குது இங்கே ஒன்றுமே புரியவில்லை என்ற கவிதைதான் ஞாபகம் வருகின்றது) இவர் செய்ததெல்லாம் சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்ற சிக்கலான ஆட்களுடன் அரங்கம் அமைத்ததுதான்.! புலிகளை வென்றதற்காக விழா எடுப்பவர்களுடன் இனப்பிரச்சனை பற்றிய விளக்கக் கூட்டம் நடத்துமாறு கோரினால் நன்றாக  இருந்திருக்கும்! மேலும் ஈபிடிபி கட்சியானது சிங்கள மக்கள் மத்தியிலும் சேவைகளைப் புரிந்து தேசிய கட்சியாக வளர வேண்டும். சிங்கள மக்கள் விரும்பியிருந்த போதும் டக்ளஸ் தன்னை ஒரு தமிழ் தலைவனாகவே கருதி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்றார்.

இவ் ஆணைக்குழு முன் முழுஉண்மைகளையும் பேசுவதன் மூலமே பாடங்களை கற்றறிய முடியும் என்பதே யதார்தமாகும். ஆனால் மாண்பு மிகு மந்திரியார் சிங்கள அதிகார மட்டங்களுக்கு நோகாமல் அவர்களது கடந்த கால நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்களை மட்டுப்படுத்திக் கூறியும் புலித் தலமை இழைத்த குற்றங்களை உரத்துக் கூறுவதன் மூலம் (இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவர் புலிகளின் குற்றங்களை மிகைப்படுத்தி கூறவில்லை) யாரையோ திருப்திப்படுத்த முயற்சிக்கிறார் போலும். தொடர்ந்து வந்த அரசுகளாலும் இராணுவத்தாலும் புலிகளாலும் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்கள் சொல்லில் அடங்காது. இவற்றைசொல்ல மறுப்பவர்ளை தமிழ் மக்கள் ஒருபோதும் தமது தலைவர்களாக கருத மாட்டார்கள். இவரது உரையில் தமிழ்மக்களை விட சிங்கள மக்களே அதிகம் பாதிப்படைந்துள்ளார்கள் போன்ற கருத்தே தொக்கி நிற்கின்றது.

ஜனநாயக வழியில் முப்பது வருடங்கள் (1947-1977) போராடிய தமிழர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள் என்பதும் இந்த சந்தர்ப்பத்தை அயல்நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டன என்பதையும் தனது இருப்பு நிலை (மந்திரி பதவி) காரணமாக தெளிவாக எடுத்து வைக்க மறந்து புலிகளுக்கெதிரான பிரசங்கத்தையே (நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.) செய்துள்ளார். இடையிடையே அரசுகளின் தவறுகளையும் அவர்களின் மனம் கோணாமல் தெளித்துள்ளார்.

சுதந்திரமடைந்த உடனேயே இந்திய வம்சாவழி குடியுரிமை பறிப்புச் சட்டம் அதைத் தொடர்ந்து தனிச்சிங்கள சட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் என வேகமெடுத்த சிங்கள ஆட்சியாளர்களின் அநியாயங்கள் தரப்படுத்தலில் வந்து நின்ற போதே ஆயுதப் போராட்டத்திற்கான சூழ்நிலை ஏற்பட்டதென்பதை இவர் அங்கு அடித்து சொல்ல மறந்தாரா அல்லது தவிர்த்தாரா?

இணைப்பு மொழியாக இருந்த ஆங்கிலத்தை சுய பாசை திட்டத்தின் மூலம் இல்லாதொழித்து இன்று இவர் கூறும் உலகமயமாக்கலில் ஒரு பகுதியான கோல் சென்றர் தகவல் தொழில் நுட்பம் போன்ற தொழில் வாய்ப்புக்களுக்கு ஆப்பு வைத்தவர்கள் யார்? ஒரு முட்டாள் பிரபாகரனின் எதிர்காலம் பற்றிய அறிவின்மையை எடுத்துக் கூறிய மந்திரியார் தொடர்ந்து வந்த இலங்கை அரசுகளின் மக்களின்; எதிர்காலம் பற்றிய தவறான திட்டங்களினால் தென்கிழக்காசியாவிலேயே அதிக கல்லியறிவு பெற்ற ஒரு நாட்டை சுடுகாடாக்கியது பற்றி கூற மறந்துள்ளார்.

மாறி வரும் உலகப் போக்கை புரிந்து கொண்டு உலக ஒழுங்கைப் புரிந்து கொண்டு……. எனவும் அவர் கூறியுள்ளார். மிக உண்மையான விடயம். இதை புலிகள் புரிந்து கொள்ளாதது மடமை. ஆனால் இவர் செய்யும் அரசியலுக்கு இது மிகவும் தேவைப்படுகின்றது என்பதே எமது கருத்தாகும். நாளை நிலமை மாறி உலக ஒழுங்கு மாறினால் இவரது நிலமை என்ன?

“இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்குப் பிந்திய காலந்தொட்டு இன்றுவரை இலங்கையில் எந்தவொரு இனக்கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை. அவ்வாறானதொரு நிகழ்வைத் தூண்டி விடுவதற்கு இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டிருக்கவும் இல்லை. இந்த நிகழ்வானது இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்குப் பின்னரான இலங்கை அரசின் ஆட்சியாளர்களின் குணாம்ச ரீதியான மாற்றத்தை எம் முன்பாக ஒப்புவித்து நிற்கிறது “

இந்த கருத்தானது தனது அரசியலுக்கு வலு சேர்க்க டக்ளஸ் கூறும் வாய் வார்த்தைகள் ஆகும். டக்ளஸ் கூறும் இக்காலத்தில் ஒரு இனக்கலவரம் என்பது தமிழ் ஈழத்திற்கான அல்லது புலிகளின் அரசியலுக்கான மைல்கல் என்பது முட்டாள் புலிகள் போல் அல்லாது மிகப் புத்திசாதுரியமான இலங்கை அரசிற்கு புரியாதது அல்ல. அதனால் தான் புலிகள் அப்பாவி சிங்கள மக்களை பல தடவை கொலை புரிந்து இனக்கலவரம் ஏற்பட முயற்சி செய்தார்கள் என்பது டக்ளஸிற்கும் புரியாதது அல்ல.

உண்மைகளை தெலைத்து விட்டு அல்லது தமது அரசியல் நலன் கருதி தவிர்த்து விட்டு, வசதியாக மறந்து விட்டு பாடங்களைப் படிக்க முடியாது. எனவே அழகிய இலங்கைத் தீவில் எல்லா இன மக்களும் நன்றாக வாழ பிரச்சனை எங்கே உள்ளது  என அறிய வேண்டும். லண்டனில் இலங்கை தூதரகத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி தான் ஒரு பௌத்தர் என கூறுகின்றார். அது அவரது உரிமை. அது அவரது அடையாளம். இதே போல் சிறுபான்மை மக்களும் சொல்லுவதற்கு வழி விட வேண்டும்.!!

பிரபல பாடகி சொர்ணலதா காலமானார்

suwarna-latha.jpgஇந்தியா வின் பிரபல பாடகி சொர்ணலதா நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சுவர்ணலதா (37)  சிகிச்சைப் பலனின்றி  சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா 25 தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் கடந்த ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார்.

இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதாவிற்கு ஹார்மோனியமும், கீ போர்டு இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரியும். 1989ஆம் ஆண்டு முதல் பாடி வரும் சுவர்ணலதா, இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் “மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து இவர் அலைபாயுதே படத்தில் பாடிய ‘எவனோ ஒருவன்”, பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய ‘உசிலம் பட்டி பெண்குட்டி’ காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கருத்தம்மா’ படத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் ‘போறாளே பொன்னுத்தாயி….’ எனும் பாடாலை பாடியதற்காக சொர்ணலதா தேசிய விருதும் பெற்றார். இவர் ஏறத்தாழ 7500க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

‘தளபதி’ பாடத்தில் ‘ராக்கம்மா கையைத் தட்டு…’, ‘சத்திரியன்’ படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, ‘சின்னத்தம்பி’ படத்தில் ‘போவோமா ஊர்கோலம்’, ‘நீ எங்கே…’, ‘என் ராசவின் மனசிலே’ படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…’, ‘காதலன்’ படத்தில் ‘முக்காலா…’, ‘அலை பாயுதே’ படத்தில் ‘எவனோ ஒருவன்…’, ‘பம்பாய்’ படத்தில் ‘குச்சி குச்சி ராக்கம்மா…’, ‘இந்தியன்’ படத்தில் ‘மாயா மச்சிந்ரா…’ போன்றன. இவர் பாடிய பாடல்களுள் பிரபலமானவை.

நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு; அரச ஊழியருக்கு வாய்ப்பு அதிகரிப்பு

அரச சேவை தொழிற்சங்கங்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரச ஊழியர்களின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்பின் போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 20 வீதமான வாய்ப்பு 30 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 2007 ஜுலை மாதத்திற்கு முன் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள இரண்டாவது மொழித்தேர்ச்சி நடைமுறையை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற இனிமேல் 30 வீதமான அரச ஊழியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் இத்தகையவர்கள் அரச நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு இரண்டு தடவையே தோற்ற முடியும் என்ற நிலை மாறுவதுடன் இவர்கள் நான்கு தட வைகள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் அலவி மெளலானாவின் தலைமையில் ஏழு தொழிற்சங்கச் கூட்ட மைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

ஐ. தே. க உட்பூசல்: ரணிலின் அழைப்புக்கு காத்திருக்கும் அதிருப்திக்குழுவின் 25 எம்.பிக்கள்

unp_logo.jpgகட்சித் தலைவரிடமிருந்து அழைப்பு வரும்வரையே காத்திருப்பதாக ஐ.தே.கவில் தனித்துச் செயற்பட தீர்மானித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவிக்கின்றது. இன்றோ நாளையோ அழைப்பு வரலாமென குழு நம்புவதுடன், எவ்வாறெனினும் கட்சித் தலைவருடனான பேச்சுவார்த்தையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படுமென இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க எம்.பி. தலதா அத்துகோரள தெரிவித்தார். கட்சித் தலைவருடனான பேச்சுவார்த் தைக்குப்பின் குழு கூடி கலந்துரையாட உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ.தே.க வின் கட்சி உட்பூசலுக்கு ஒரு வாரகாலத்தில் தீர்வு காண தவறுமிடத்து அக்கட்சியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்துச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். அத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது அந்த 25 பேரும் தனியான குழுவாக அமரவும் எதிர்பார்த்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இது தொடர்பில் குருநாகல் மாவட்ட ஐ. தே.க எம்.பி. தயாசிறி ஜயசேகர பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். எனினும் இதற்கான தீர்க்கமான பதிலொன்றை ஐ. தே. க. தலைமை நேற்று வரை முன்வைக்கவில்லை.

இதேவேளை, சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளரெனத் தெரியவருகிறது. இதற்காக ஏனைய எதிர்க்கட்சிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரியவருகிறது. ஏற்கனவே 60 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 17 உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துவிட்டனர்.

இதனையடுத்து தற்போது 43 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் மேலும் 25 பேர் விலகினால் 18 பேர் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருப்பர் என ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அதிருப்தி குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் கட்சியை விட்டு தனித்து இயங்கப் போவதாக எச்சரித்துள்ளனர். தமது கோரிக்கையை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவின் சிறந்த நாடு இலங்கை – பிரிட்டிஷ் ஆய்வில் உலகில் 8வது இடம்

sri-lanka000.jpgதியாக மனப்பான்மையுடன் தான உணர்வும் புன்னகையும் கொண்ட மக்கள் வாழும் உலக நாடுகளில் இலங்கை எட்டாவது இடத்தில் உள்ளது. Charities aid foundation என்ற பிரிட்டிஷ் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இருந்து இது தெரியவந்து ள்ளது.

தியாக மனப்பான்மையுடன் கூடிய மக்கள் வசிக்கும் உலக நாடுகளில் எட்டாம் இடத்தில் உள்ள இலங்கை ஆசிய நாடுகளிடையே முதலாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் உலகில் முதல் 18 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் வருமாறு,

1. அவுஸ்திரேலியா, 1. நியூசிலாந்து 3. அயர்லாந்து, 3. கனடா, 5. சுவிட்சர்லாந்து, 5. அமெரிக்கா, 7. நெதர்லாந்து, 8. பிரிட்டன், 8. இலங்கை, 10. ஆஸ்திரியா, 11. லாகோஸ், 11. சியராலியோன், 13. மோல்டா, 14. ஐஸ்லாந்து, 14. துர்க்மெனிஸ்தான், 16. கயானா , 16. கட்டார், 18. ஹொங்கொங், 18. ஜெர்மனி, 18. டென்மார்க், 18. கினி.