21

21

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களும் இணையப் பாவனையும் : செல்வி எம்.ஐ.எப் நபீலா

செல்வி எம்.ஐ.எப் நபீலா தமிழ்த்துறை இறுதியாண்டு
சப்பிரகமுவை பல்கலைக்கழக மாணவி மேற்கொண்ட ஆய்வின் ஒரு பகுதி கட்டுரையாகத் தரப்படுகின்றது. இப்பகுதி ”இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்” என்ற தலைப்பில் எழுதப்பட்டது.  எம்.ஐ.எப் நபீலா “தமிழ் இலக்கியத்துறையில் புன்னியாமீன்”  எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வின் ஒரு பகுதியே மேற்படி கட்டுரையாகும்.  
த.ஜெயபாலன்

._._._._._.
 
இணையத்தள பாவனை சர்வதேச அளவில் வெகு தீவிரமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும்கூட, எமது இலங்கையில் அதன் வேகம் மந்தகரமான நிலையிலேயே அமைந்துள்ளது. இலங்கையில் இணையத்தளம் பற்றிய அறிவு அல்லது விளக்கம் மக்கள் மத்தியில் குறைவாக காணப்படுவதும் இணையத்தள சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகரித்துக் காணப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக 20ஆம் நூற்றாண்டுகளில் இறுதிக்கட்டங்களில் ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் இணையத்தள இணைப்புகள் வழங்கப்பட்ட போதிலும்கூட, டவுண்லோட் – தரவிரக்கத்திற்கேற்ப கட்டணங்கள் அறவிடப்பட்டமையினால் பாவனையாளர்களுக்குப் பெருந்தொகையான பணத்தினை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக புரோட்பேண்ட் இணையத்தள இணைப்பு வசதியை ஸ்ரீலங்கா டெலிகொம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பிரதான நகரங்களை மாத்திரம் மையப்படுத்தியிருந்த இவ்விணைப்பானது தற்போது அகில இலங்கை ரீதியில் வியாபிக்கப்பட்டு வருகின்றது. புரோட்பேண்ட் இணையத்தள சேவைக் கட்டணம் நிலையான கட்டணத்தைக் கொண்டிருப்பதினால் தரவிரக்க பரப்பளவில் கவலை கொள்ளத் தேவையில்லை. இதன் காரணத்தினால் தற்போது படிப்படியாக இணையத்தள பாவனையாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் இத்தொகை பல மடங்குகளாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்க முடியும். அதேநேரம், இலங்கையில் போட்டியாக செயல்படும் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் எஸ்.எல்.ரி. சிட்டிலிங்க், மொபிடெல், மற்றும் சன்டெல், லங்காபெல், டயலொக், எடிசலாட், எயாடெல், ஹட்ச், டயலொக் சீ.டி.எம்.எ. போன்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் இச்சேவையினை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருவதை அவதானிக்கின்றோம்.
 
மத்திய காலத்தில் உருவான அறிவியல் எழுச்சியுடன் படிப்படியாக ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால் அச்சுத் தொழில்நுட்பம் (Printing Technology) தோன்றியது. அதற்கு தமிழ்மொழியும் ஈடுகொடுத்தது, அதன் விளைவாகவே இன்றைய தமிழ் உயர்ந்த நிலையில் உள்ளது. தொடர்தேர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சியில் 20ம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றம் இன்றைய கணனியுகம் (Age of Computer) ஆகும். இந்த யுகத்தையும் தமிழ் மொழி மிகவும் நுட்பமான முறையில் எதிர்கொண்டு வருகிறது.
 
இன்று தட்டச்சு செய்தல், கணக்குகள் பதிதல், விபரங்களை சேகரித்தல் போன்ற சிறிய தேவைகள் முதல், விண்வெளியில் செயற்படுகிற ஏவுகணைகளை மாத்திரமல்லாமல் விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கூட பூமியிலிருந்து கட்டுப்படுத்தி, செயற்படுத்தக்கூடிய உயர்மட்டப் பணிகள் வரை இயக்கும் கருவியாக கணனி மாறிவிட்டது. இன்றைய கணனி யுகத்தில் தனி மனிதராக இருக்கட்டும் அல்லது பன்னாட்டுத் தொழில் நிறுவனமாக இருக்கட்டும் கணனியின்றி அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான தகவல்களைத் தரவுகளாகச் சேமித்துவைத்தல் (Database Development), தேவைப்படும்போது தகவல்களைத் தேடியெடுத்தல் (Information Extaction and Retrieval), மின்னஞ்சல் அனுப்புதல் (e-mail)வினாடிகளில் உலகெங்கும் இணையத்தளம் (Internet and Web) மூலம் தொடர்பு கொள்ளுதல், இணையத்தளம் மூலம் தொழில் மற்றும் வணிகத் தொடர்புகளை மேற்கொள்ளுதல் (E-commerce) என்று கணனியின் பயன்பாடுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இன்றைய காலகட்டத்தில செய்திப் பரிமாற்றத்திலும் இணையம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.
 
இலங்கையில் பெரும்பாலான பிறமொழி தேசிய அச்சு ஊடகங்கள் இணையங்களை பயன்படுத்துவதைப் போல தமிழ்மொழி மூல தேசிய பத்திரிகைகளும், இணையத்தில் தமிழ் தளங்களினூடாக செய்திகளை உடனுக்குடன் தரவேற்றம் செய்கின்றன. உதாரணமாக இலங்கையின் முன்னணித் தேசிய தமிழ் பத்திரிகைகளான தினக்குரல், வீரகேசரி, தினகரன், சுடர் ஒளி போன்ற (தேசிய நாளிதழ்களும், வாராந்த இதழ்களும்) தத்தமது இணையத்தளங்களினூடாக செய்திகளை தரவேற்றம் செய்து வருகின்றன. இங்கு செய்திகளை கள எழுத்துருவில் மாத்திரமல்ல பத்திரிகைகளை முழுமையாக (ஈ – பேப்பர்) மின் பத்திரிகை மூலமாகவும் வாசிக்கக்கூடியதாக இருக்கும். அச்சு ஊடகங்களை விட இணைய ஊடகங்கள் ஒலி, ஒளி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதினாலும் அவை வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வருகின்றன.

 இணையங்களில் செய்திகள் மாத்திரமல்ல, இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற இலக்கியப் படைப்புகளையும் பிரசுரித்து வருகின்றன. இதற்கென தனி வளையமைப்புக்களும் உள்ளன. திரட்டிகளின் உதவி கொண்டு தேடல்கள் மூலம் எமக்குத் தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும். மேலும், குறித்த ஆக்கங்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கூட, வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீன தொழில்நுட்ப மாற்றத்துடன் இணையங்களும் பல புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இணையத்தளத்தின் மூலம் மின்னணுக் கல்வி (E-learning) மின்னணுக் கருத்தரங்கம் (E-conference) ஆகியவைகூட இன்று நடைமுறையில் உள்ளன. பல்லூடகக் கருவியாகவும் (Multi media) கணனி இன்று பரிணமித்துள்ளது. எனவே எழுத்து, பேச்சு, படம் என்று பலவகைப்பட்ட ஊடகங்கள் வழியே ஒருவர் உலகெங்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிரமாண்டமான வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது.

 ஸ்ரீலங்கா டெலிகொம்மினது பதிவுகளுக்கமைய உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2010 முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையில் இணையத்தள பாவனையாளர்கள் 1,776,200 என அறிய முடிகின்றது. இது மொத்த சனத்தொகையின் 8.3மூ ஆகும். 2000ஆம் ஆண்டு முதல் இலங்கையின் இணையத்தளப் பாவனை குறித்த அறிக்கை பின்வருமாறு
 
ஆண்டு பாவனையாளர்கள். சனத்தொகை வீதம்
2000           121,500           19,630,230            0.5 %
2007           428,000           19,796,874            2.2 %
2008           771,700           21,128,773            3.7 %
2009        1,163,500           21,324,791             5.5 %
2010        1,776,200           21,513,990             8.3 %
http://www.internetworldstats.com/asia/lk.htm
 
மேற்படி அறிக்கையின் பிரகாரம் 2007 ஆம் ஆண்டின் பிறகு இணையத்தள பாவனை வேகமாக அதிகரித்துள்ளமைக்கான பிரதான காரணியாக புரோட் பேண்ட் இணையத்தள இணைப்பு அறிமுகமானதை குறிப்பிடலாம். 2015 ஆம் ஆண்டு ஆகும் போது இணையத்தளப் பாவனை 30% மாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
உலகளாவிய ரீதியில் இன்று இணையத்தளப் பாவனையாளர்கள் தொகை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இணையங்களின் துணையினையே நாடியுள்ளனர். ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இணையப் பாவனை செய்திப் பரிவர்த்தனை இலக்கிய பரிமாற்றம் என்பவற்றை விட கல்வித் துறை அபிவிருத்திற்கும் விசாலமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. உலகளாவிய இணையத்தள பாவனைப் பற்றிய கணிப்பீட்டுப் புள்ளி விபரம் வருமாறு
 
WORLD INTERNET USAGE AND POPULATION STATISTICS
 
உலக வலயங்கள் சனத்தொகை டிச.31, 2000 நிகழ்காலம் வீதம்
Africa            1,013,779,050         4,514,400          110,931,700           10.9 %
Asia               3,834,792,852       114,304,000        825,094,396           21.5 %
Europe              813,319,511       105,096,093         475,069,448           58.4 %
Middle East        212,336,924          3,284,800           63,240,946           29.8 %
North America    344,124,450       108,096,800         266,224,500           77.4 %
Latin America
/Caribbean          592,556,972         18,068,919          204,689,836           34.5 %
Oceania
/ Australia             34,700,201          7,620,480            21,263,990           61.3 %
WORLD TOTAL
                      6,845,609,960        360,985,492        1,966,514,816           28.7 %
 
இங்கு சனத்தொகை எனும் போது 2010 ஆம் ஆண்டின் உத்தேச சனத்தொகையாகும்.
டிச.31, 2000 வரை இணையத்தளப் பாவனையாளர்கள்.
நிகழ்காலம் எனும் போது செப்டம்பர் 2010 வரை கணிப்பிடப்பட்டுள்ளது.
http://www.internetworldstats.com/stats.htm
 
உலகில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் முகவரி info.cern.ch அதன் சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். 2010 செப்டெம்பர் மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்தப் பாவனையாளர்களின் எண்ணிக்கை 1966,514,816 ஆகும். இணையதளங்கள் உருவாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட ஒரு முக்கிய காரணமாய் அமைவது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது. ஆனாலும் அன்றைக்கு Tim Berners-Lee; முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். அதன் முகவரி வருமாறு http://www.w3.org/history/19921103-hypertext/hypertext/ www/theproject.html
 
உலக அளவில் 28.7 வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதே நேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே இணையப்பாவனையே காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் இணையப்பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட வெகுவாகக் குறைந்திருக்கலாம். செப்டம்பர் 2010இல் இலங்கையின் வட பகுதிக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் புரோட் பேண்ட் இணைய இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்பகுதிகளிலும் இணையப்பாவனை அதிகரிக்கப்படலாம் எனக் கருத இடமுண்டு.

தமிழ் இணைய உலகில் தேசம்நெற் கட்டுரையாளர் புன்னியாமீன்:
 
Punniyameen_P_Mஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே அதிகளவில் நாட்டம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் விட்டால் வேறு ஊடகங்களில்லை என்று கூறுமளவிற்கு மரபு ரீதியான அணுகுமுறைகளிலேயே இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக மரபு ரீதியான வழிமுறைகளைப் பேணி வந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இன்றும் அதே முறைகளை கடைபிடித்து வருவதினால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மாத்திரமே எழுத்துலகில் சோபித்து வர முடியும். இணையத்தள ஊடகங்களின் வளர்ச்சி ஏற்படும்போது இத்தகைய கட்டுப்பாடுகள் தகர்த்தப்படுவதினால் புதிய எழுத்தாளர்கள் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உருவாகின்றது. சிலநேரங்களில் எழுத்துக்கள் தரமின்றிப் போய் விடலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட, இதுவொரு புரட்சிகரமான மாற்றமாக அமைய இடமுண்டு.
 
இத்தகைய பின்னணிகளின் மத்தியில் இலங்கையில் இணையத்தளங்களின் ஊடாக தமது படைப்புகளை முன்வைப்பதில் இலங்கை தமிழ் எழுத்தாளர் புன்னியாமீனின் பங்களிப்பு விசாலத்துவமிக்கதாக அமைகின்றது. இதுவரை இவரின் 300க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் சர்வதேச ரீதியிலான இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன. இதனால் சர்வதேச ரீதியில் தமிழ் இணையத்தள வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு பெயராகவே இவரின் பெயர் பிரபல்யம் பெற்றுள்ளது. அண்மையில் புன்னியாமீன் இணையத்தளங்களில் பிரசுரமான 70 கட்டுரைகளை தொகுத்து சர்வதேச நினைவு தினங்கள் எனும் பெயரில் 03 பாகங்களை வெளியிட்டிருந்தார். இம்முயற்சி பற்றி இந்தியாவில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “…உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் (புன்னியாமீன்) இணையத்தளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்…”. இதிலிருந்து இணையத்தளங்களில் புன்னியாமீனுக்குள்ள ஈடுபாடு பற்றி எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
 
கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களின் பெயர் பதிந்திருப்பதற்கு இணையத்தளங்களில் வெளிவரும் அவரது ஆக்கங்களே ஒரு பிரதான காரணியாக அமையலாம். இலங்கையில் அரசியல் பற்றிய ஆய்வுகள், இலங்கை அரசியல் சிறுபான்மை இனத்தவர்கள் பற்றிய ஆய்வுகள், விஞ்ஞானம், வரலாறு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கலாக சர்வதேச நினைவுதினங்கள் பற்றி விரிவான ஆய்வுக்குறிப்புகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் என பல்வேறு துறைகளிலும் இவரின் எழுத்துக்கள் முத்திரை பதித்து வருகின்றன. இலங்கை எழுத்தாளர்களிடையே இணையங்களில் எழுதுவதில் தற்போதைய நிலையில் இவர் முதன்மை இடத்தில் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.
 
இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் இந்த காலகட்டங்களில் இவரின் ஆக்கங்கள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, நோர்வே, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ் தீவுகள் போன்ற நாடுகளை தளமமைத்துக் கொண்டு இயங்கும் நூற்றுக்கணக்கான இணையத்தளங்களில் இவருடைய பல ஆக்கங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. கூகூல் http://www.google.lk, யாஹ{ http://www.yahoo.com, எம்.எஸ்.என்.http://www.msn.com திரட்டிகளிலிருந்து இணையத்தள தேடல்களின் அடிப்படையில் இதுவரை 183 இணையத்தளங்களில் இவரின் ஆக்கங்களையும், இவர்பற்றிய ஆக்கங்களையும் காண முடிகின்றது. இவரின் ஆக்கங்கள் பிரசுரமான இந்த இணையத்தள முகவரிகளின் ஆங்கில அகரவரிசைப்படி கீழ்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
 
www.24dunia.com/tamil, www.360news.in, www.abc.net,www.ads.clicksor.com, www.alaai.co.cc, www.alaikal.com, www.amalathaselroy.blogspot.com, www. andamansaravanan.blogspot.com, www.anonasurf.com, www.aruvi.com, www. asafardeen.blogspot.com, www.athirady.info, www.bestestsite.info, www. Best queen12.blogspot.com, www.bit.ly, www.blogcatalog.com, www.blogcop. com, www.blogger-index.com, www.blogs.oneindia.in, www.bogy.in, www. bname.ru, www.chat.oneindia.in, www.cmr.fm, www.comedy fans.wordpress. com, www.content.usatoday.com, www.dazy.sk, www. deccannetwork.com, www.de-de.facebook.com, www.dekrizky.us, www.dillee pworld.blogspot.com, www.thedipaar.com, www.eelamtoday.com, www.eera anal.org, www.encyk. fotelikisamochodowe.net, www.engaltheaasam. com, www.en.wordpress. com,www.ethamil.blogspot.com www.facebook.com, www. faroo.com, www. fetna.org ,www.firmy24.podhale.pl, www.flexalution. com, www.freer.info, www. friendfeed.com. www.google.com, www.geotamil. com, www.groups. google.co.in, www.groups.google.com, www.groups. google.dk, www.groups. google.fr, www.groups.google.ge, www.groups. google.gr, www.groups. google.to, www.ikmahal.com, www.ilakkiyainfo.com, www.ilankainet.com, www.ilayamalar.blogspot.com, www.ilbts.org , www.india everyday.com, www. indiantoday.com, www.infokarirterkini.co.cc, www.inioru. com, www.kalai mahan.blogspot.com, www.kalanjiam.com, www.kannadi puthagam.blogspot. com, www.karuthurimai.net, www.kattankudi.info, www.kavi mathy.wordpress. com, www.kevins.nl, www.kingwebnewspaper .blogspot.com, www.komsc. com, www.koodal1.blogspot.com, www.kopi-welcomemyblog.blogspot.com, www.kulantamil.com, www.lakehouse.lk, www.lankamuslim.org, www.linux 24web.info, www.live.athirady.org, www. maatru.net, www.manitham.net, www.masdooka.wordpress.com, www.meel parvai.net, www.meettal.blogspot. com, www.mixx.com, www.mnmanas. blogspot.com, www.muelangovan. blogspot.com, www.mulaggam.com, www.mullivikkaal.com, www.mykathi ravan.com, www.mytoday.com, www.namathu.blogspot.com, www.nayanaya. mobi, www.nerudal.com, www.neruppu.com, www.newathirady.com, www. news.writeka.net, www.news.thiratti.com, www.nkl4u.in, www.noolaham.org/, www.ns3.greynium.com, www.onlineinet.com, www.oodaru.com, www.ottran. com, www.penniyam.com, www.puhali.com, www.push2check.com, www. puzha.com, www.radio.ajeevan.com, www.ragil.info, www.rammalar. wordpress.com, www.ramnadinfo.com, www.rasigancom.blogspot.com, www. rizardview.blogspot.com, www.sangamamlive.com, www.search.webdunia.com, www. singakkutti.blogspot.com, www.sitedossier.com, www.shaseevanweblog. blogspot.com, www.shakthienews.com, www.space2world.com, www.spider. com.au, www.srisagajan.blogspot.com, www.sumanasa.com, www.supperlinks. blogspot.com, www.surfblocked.net, www.sri.lanka.asia, www.ta.indli.com, www.tamil10.com, www.tamilalai.org, www.tamilauthors.com, www.tamil. bingra.com, www.tamil.com, www.tamilalai.org, www.tamilexpress. webnode.com, www.tamilkudumbam.com, www.tamilnirubar.org, www.tamil newsnetwork.com, www.tamilnews.cc, www.tamil.net, www.tamilsguide.com, www.tamilish.com, www.tamilmanam.net, www.tamilsguide.com, www.tamil velibkp.blogspot.com, www.tamil.webdunia.com, www.ta.wikipedia. org, www. taweet.com, www.ta.wordpress.com, www.techtamil.in, www. teleindia. comm, www.thakval.info, www.thatstamil.oneindia.in, www.thaynilam. com, www.thedipaar.com, www.theendlessinfo.com, www.thenee.com, www.thenee. eu, www.thesamnet.co.uk, www.thinakaran.lk, www.thinakaran. lk/vaaraman jari, www.thinakkural.com, www.thiru2050.blogspot.com, www. thoora.com, www.tmpolitics.net, www.twitter.com, www.twurl.nl, www.ubervu. com, www. udaru.blogdrive.com www.usa-learning.blogspot.com, www.ustamil. blogspot. com, www.valaipookkal.com, www.vallinam.com, www.viyapu.com, www. wap.orlingo.com, www.webjosh.com, www.webmanikandan.blogspot.com, www. worldub.blogspot.com, www.xna.no, www.yarl.com 
 
செப்டம்பர் 26. 2010இல் சுவிஸ் அரசின் கலாசார வானொலியான கனல்கா சர்வதேச வானொலி நிகழ்ச்சியில் பிரபல குறுந் திரைப்பட இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான அ. ஜீவன் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலின் போது “…தான் இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா இணையத்தளத்திலும், சங்கமம் லைவ் இணையத்தளத்திலும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற், தமிழ்நிரூபர் போன்ற இணையளத்தளங்களிலும், பிரான்ஸை மையமாகக் கொண்டியங்கும் இலங்கை நெற் இணையத்தளத்திலும் மூலமாக எழுதுவதாக குறிப்பிட்டார். அதேநேரம், அதிரடி, புதிய அதிரடி, முழக்கம், எங்கள் தேசம், நெருப்பு, கண்ணாடி, ஊடரு, பெண்ணியம் போன்ற பல இணையத்தளங்களும் இவரின் ஆக்கங்களை முதன்மையாக பிரசுரித்துள்ளன.
 
இணையத்தளங்களிலுள்ள ஒரு பொதுவான பண்பு ஒரு இணையத்தளத்தில் வெளிவரக்கூடிய தரமான ஆக்கங்கள் வேறும் இணையத்தளங்களில் மீள் பிரசுரம் செய்யப்படுவதனை குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீனின் அண்மைக்கால சில ஆக்கங்கள் 20 தொடக்கம் 30 வரையிலான இணையத்தளங்களில் மறுபிரசுரமானதை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக 2010 செப்டம்பரில் பிரசுரமான அன்னை தெரேசா நூற்றாண்டுவிழா எனும் கட்டுரை 24 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல 14 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த உலகிலே தரையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் எனும் கட்டுரை 20 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. 24 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம் எனும் கட்டுரை மொத்தம் 16 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல சர்வதேச இளைஞர் ஆண்டைப் பற்றி இவரால் ஆகஸ்ட் 2010ல் எழுதப்பட்ட கட்டுரையும் 34 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன.
 
இவ்வாறாக ஒரே ஆக்கம் உலகளாவிய ரீதியில் காணப்படக்கூடிய பல நாடுகளை தளமாக அமைத்து இயங்கும் இணையத்தளங்களில் பிரசுரமாகும்போது எழுத்தாளரின் முக்கியத்துவம் அதிகமாகின்றது. அதேநேரம்ää மேற்குறிப்பிட்ட உதாரணப்படி மீள்பிரசுரம் செய்துள்ள இணையத்தளங்கள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளை தளமாகக் கொண்டு இயங்குபவை என்பதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
 
இணையத்தளங்களில் காணப்படக்கூடிய மற்றுமொரு சிறப்பம்சமாக வாசகர்களின் பின்னூட்டங்களைக் குறிப்பிடலாம். குறித்த கட்டுரை தொடர்பில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலமாக இணையத்தளத்துக்குத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கும். இந்த அடிப்படையில் புன்னியாமீனின் ஆக்கங்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள பின்னூட்டங்களை அவதானிக்குமிடத்து இவரது எழுத்துக்குக் சர்வதேச மட்டத்தில் காணப்படும் வரவேற்பினை அவதானிக்க முடிகின்றது.
 
அதேநேரம், தற்போதைய நிலையில் இலங்கை எழுத்தாளர்களிடையே இணையத்தள பயன்படுத்தல்கள் குறைவாகக் காணப்பட்ட போதிலும்கூட, 2007 முதல் 2010 வரை தமிழ் மொழி மூல இணைய எழுத்துக்களை ஆராயுமிடத்து புன்னியாமீனின் பெயர் தனியிடத்தில் முன்னணியில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
உசாத்துணை:
கலாபூசணம் புன்னியாமீன் – சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 1, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-43-6
கலாபூசணம் புன்னியாமீன் – சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 2, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-44-3
கலாபூசணம் புன்னியாமீன் – சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 3, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-45-0
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை சிறப்பு மலர் 2010. தமிழ் நாட்டு அரசு
http://www.internetworldstats.com/asia/lk.htm
http://www.internetworldstats.com/stats.htm
http://www.google.lk/
http://www.yahoo.com/
http://www.msn.com/

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு

den.jpgஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளிடமிருந்து 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தினர் மீட்டெடுத்ததாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் தொடக்க நிகழ்வின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர கேட்டிருந்த வாய் மூல விடைக்கான வினா வுக்கு பதிலளிக்கும் வகையி லேயே அமைச்சர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். பிரதமர் சார்பில் ஆளும்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இக்கேள்விக்கு பதிலளித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தின் 58வது படைப் பிரிவும் இராணுவ பொலிஸ் பிரிவும் இணைந்து மீட்டெடுத்தன. அத்தங்கத்தின் பெறுமதி 490 மில்லியன் ரூபாய் ஆகும். இத்தங்கம் தொடர்பாக நியமிக்கப் பட்டுள்ள சபையினர் சட்டப்படி அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைத்து வருகின்றனர் என்றார்.

முகாம்களிலும் சிறுவர் இல்லங்களிலும் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.. மதபோதகர் தலைமறைவு!

மன்னார் சிறுவர் இல்லமொன்றில் சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சிறுவர் இல்லம் நேற்று புதன் கிழமை மூடப்பட்டது.

இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது: மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள ‘என் இரட்சகர்’ என்ற சிறுவர் இல்லத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பலர் பராமரிக்கப்பட்டு வந்தனர். மதபோதகரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான அ.அமிர்தலிங்கம் (வயது 45) என்பவர் இதனை நடத்தி வந்தார்.  பாடசாலை விடுமுறை நாட்களில் சிறுமிகள் சிலரை மன்னார் பெரியகமம் பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு வீட்டு வேலைகளுக்காக மதபோதகர் அழைத்துச் செல்வதுண்டாம்.  இந்நிலையிலேயே சிறுமிகள் மீதான துஸ்பிரயோகம் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து மேலும் ஒரு சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி குறித்த இரு சிறுமிகளையும் வைத்தியப் பரிசோதனைகளுக்குட்படுத்துமாறும், குறித்த சிறுவர் இல்லத்தை முடி அங்குள்ள சிறுவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறும் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை நீதவான் இவ்வாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று புதன் கிழமை குறித்த சிறுவர் இல்லம் மூடப்பட்டது. மதபோதகர் தலைமறைவாகியுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

Constantine_Tஇலங்கையில் இருந்து தேசம்நெற் ஆசிரியர் ரி கொன்ஸ்ரன்ரைன்:

இச்சம்பவம் தொடர்பாக தற்போது இலங்கையில் உள்ள தேசம்நெற் ஆசிரியர் ரி கொன்ஸ்ரன்ரைன் தகவல் அளிக்கையில் வடமாகாணத்தில் கிறிஸ்தவச் செல்வாக்குள்ள மன்னார் மாவட்டத்தில் எழுந்தமானமாக சில கிறிஸ்தவ குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இவர்கள் பெண்கள் குழந்தைகளுக்கு புகலிடம் வழங்குகிறோம் என்ற பெயரில் அவர்களை துஸ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வறுமையும் சமூகக்கட்டுமானமும் சீரழிந்துள்ள சூழலில் இவ்வாறான தவறான சக்திகள் அதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். வறுமை காரணமாக பல பெற்றோர் இவ்வாறான இல்லங்கள் பற்றிய எவ்வித மதிப்பீடுகளும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை போலியான இல்லங்களில் ஒப்படைக்கின்றனர் எனத் தெரிவித்தார் ரி கொன்ஸ்ரன்ரைன். தாய் தலைமறைவான நிலையில் இரட்டைகளாகப் பிறந்த குழந்தைகளை வைத்தியசாலையில் இருந்து கிறிஸ்தவ சகோதரிகளால் முறையாகப் பராமரிக்கப்படும் இல்லம் ஒன்றில் ஒப்படைத்த காட்சியைத் தான் நேரில் பார்த்ததாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

இடப்பெயர்வுகள் முகாம் வாழ்வுகள் பெண்கள் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகத்தை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட ரி கொன்ஸ்ரன்ரைன் தற்போதுள்ள வவுனியா முகாமில் இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய முறைப்பாடுகள் அதகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். வயது குறைந்த பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் முகாம்களுக்குள் அதிகரித்துள்ளதாகவும் இவை பெரும்பாலும் முகாம்களில் உள்ளவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் சுட்டிக்காட்டினார். மேலும் பல பெண்களுடனான பாலியல் உறவுகளும் முகாம்களில் அதிகரித்துள்ளதாகவும் இவை மிகுந்த சமூகச் சீரழிவை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றைக் கட்டுப்படுத்த முகாம்களில் சைவ குருக்களை அழைத்து வந்து மத போதணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சிந்தனையை இந்தச் சைவக் குருக்கள் மூலம் உபதேசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான முகாம்கள் மூடப்பட்டுள்ள போதும் இறுதி யுத்தம் நடந்த பகுதிகளில் வெடிபொருட்கள் துப்பரவு செய்யப்படாத இடங்களைச் சேர்ந்த மக்களும் எப்போதுமே தமக்கு நிரந்தர வாழ்விடத்தையும் நிரந்தர தொழில்வாய்ப்பையும் கொண்டிராத மக்களும் இன்னமும் முகாம்களில் தங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். முகாம் வாழ்வுமுறை துரிதமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

ருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல் – மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

pro.jpgருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மெண்டிஸ் நேற்றுக்காலை பல் கலைக்கழக மாணவர் குழுவொன்றி னால் தாக்கப்பட்டுள்ளார். மக்கட் பண்பியல் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களிடையே நேற்று இடம்பெற்ற மோதலை சீர்செய்வதற்காக உபவேந்தர் அவ்விடத்துக்கு சென்றிருந்த போதே குறித்த மாணவக் குழு உபவேந்தரை தாக்கியுள்ளது.

காயமடைந்த உபவேந்தர் மாத்தறை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சிரேஷ்ட மாணவ ஆலோசகரான சமன் சந்தன என்பவரும் சில மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக உபவேந்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். அண்மைக்காலமாக ருஹுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்குமிடையிலான மாணவ ஒன்றியமும் விஞ்ஞான பீட மாணவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டதில் ஏழு பட்டதாரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எம். என். ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் பத்மசிறியின் மேற்பார்வையில் விசேட பொலிஸ் குழுவொன்று இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

கே.பி. மீதான அடிப்படை விசாரணை இன்னரும் பூர்த்தியடையவில்லை அரசாங்கம் அறிவிப்பு

விடு தலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் மீதான அடிப்படை விசாரணை இன்னும் முடிவடையவில்லை என நேற்று புதன்கிழமை சபைக்கு அறிவித்துள்ள அரசாங்கம், கே.பி. உட்பட கைதான விடுதலைப்புலி சர்வதேச செயற்பாட்டாளர்கள், வன்னிப் படை நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட முக்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முடக்கி அவ்வமைப்பிற்கு சொந்தமான சொத்துகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.தயாசிறி ஜயசேகர எழுப்பியிருந்த கேள்விகளுக்கு ஆளுந்தரப்பு பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த பதில்களிலேயே இது பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. கே.பி. கைது செய்யப்பட்டு 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் சம்பந்தப்பட்ட அடிப்படை விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை விசாரணைகள் முடிவடையும் வரை கே.பி. பாதுகாப்புத் தரப்பின் பொறுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கே.பி. அண்மைய தினமொன்றில் வன்னி பிரதேசத்துக்கான விஜயமொன்றுக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன, அடிப்படை விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை உறுதி செய்து கொள்வதற்கென அவர் வன்னிப் பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகக் கூறினார்.

”போரின் பின்னான தற்போதைய முன்னேற்றம் திருப்தி தருவதாக இல்லை” யாழ். வந்த ஐரோப்பிய பிரதிநிதிகள்

Commonwealth_Parliamentary_Associationபோர் முடிவுற்றாலும் மக்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. தற்போதைய நிலை தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என நேற்று புதன் கிழமை  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய பிரதிநிதிகள் தெரிவித்தள்ளனர். இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சம்மேளனம், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று புதன் கிழமை யாழப்பாணத்திற்கு வருகை தந்து, யாழ். அரசாங்க அதிபர் மற்றும் சிவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை யாழ். அரச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

தாம் நேரடியாக அவதானித்த வகையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது புரிந்து கொள்ளக்கூடியதாகவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். போரின் பின்னான தற்போதைய முன்னேற்றம் குறித்து தமக்கு திருப்தி இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Commonwealth_Parliamentary_Associationபோர் முடிவடைந்தமை மகிழ்ச்சியானதுதான் ஆனால், போர் முடிவுற்ற போதும் மக்களால் சுதந்திரமாக நடமாடவோ, பேசவோ முடியாத நிலை உள்ளது எனவும், பயங்கவரவாதத்தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் எனபன தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளமையே இத்றகுக் காரணம் எனவும்,  இந்நிலை நீடிக்குமானால் திட்டமிட்ட- கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் தோன்றா விட்டாலும் சிறியளவிலான வன்முறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம் எனவும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஐரோப்பிய பிரதிநிகளிடம் கலந்துரையாடலின் போது  சுட்டிக்காட்டினர்.

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களும் பிணையில் விடுவிப்பு.

விசுவமடுவில் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதான குற்றச்சட்டில் வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நான்கு இராணுவச் சிப்பாய்களுக்கும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த யூன் மாதம் 6ஆம் திகதி விசுவமடுவில் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவச்சிப்பாய்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களையும் பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி திருமதி கொஸ்வத்த பிணைமனு ஒன்றை கடந்த 10ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.  இம்மனுவை ஆட்சேபித்து பாதிக்கப்ட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் வாதாடியிருந்தார். வழக்கு விசாரணைகள் பூர்த்தியடைந்த நிலையில்  20ஆம் திகதி பிணைமனு மீதான தீர்ப்பினை வழங்குவதாக நீதவான் பெ.சிவகுமார் அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்று 20ஆம் திகதி புதன்கிழமை குறித்த நான்கு சிப்பாய்களுக்கும் நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்படுவதாக நீதவான் அறிவித்தார். இச்சிப்பாய்கள் 25 அயிரம் ரூபா காசுப் பிணையிலும், ஒவ்வொருவரும் மூன்று பேரின் ஐந்து இலட்ச ருபா சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் உத்தரவிட்டார். மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் அறிவித்த நீதவான் குறித்த நபர்கள் வெளிநாடுகளுக்குப் பயணமாவதைத் தடுக்குமாறும் சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

மன்னாரில் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெள்ளிக்கிழமை ஆரம்பம். ஞாபகார்த்த விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

மன்னார் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ச் செம்மொழி மாநாடு மன்னாரில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் தமிழியல் துறையில் அரும்பணியாற்றிய பெரியோர்களின் பெயரில் ஞாபகார்த் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விருது பெறும் பதினைந்து பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்த்தூது தனிநாயகம் விருதை ஜின்னா சரிபுதீன், அறுமுகநாவலர் விருதை பேராசிரியர் சிவலிங்கராஜா, சுவாமி விபுலானந்தர் விருதை பேராசியரியர் அ.சண்முகதாஸ், சோமசுந்தரப்புலவர் விருதை கவிஞர் மேமன்கவி, வித்துவான் ரகுமான் விருதை திருமதி ந.சிறீதேவி, சுவாமி ஞானப்பிரகாசர் விருதை பேராசிரியர் எம்.ஏ.நுஹ{மான், கலாயோகி ஆனந்தகுமாரசாமி விருதை வை.சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி), சின்னத்தம்பி புலவர் விருதை வே. இறைபிள்ளை, முதுதமிழ் புலவர் நல்லதம்பி விருதை அகளங்கன், அறிஞர் சித்திலெப்பை விருதை நா.யோகேந்திரநாதன், தாவீது அடிகள் விருதை டொமினிக் ஜீவா, பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி விருதை திருமதி லீலாம்பிகை செல்வராஜா, ஈழகேசரி பொன்னையா விருதை பத்திரிகையாளர் கானமயில்நாதன், இசைப்புலவர் ந.சண்முகரட்ணடம் விருதை திருமதி விஜயகுமாரி, சிரித்திரன் சிவஞானசந்தரம் விருதை ச.யோகரத்தினம் ஆகியோர் பெறுகின்றனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இருவர் காயம்.

கடந்த 18ஆம் திகதி கிளிநொச்சி பாரதிபுரத்தில் கட்டடம் ஒன்றின் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்த போது குண்டு ஒன்று பெரும் அதிர்வுடன் வெடித்துள்ளது. இதனால் இருவர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சியில் தினமும்  குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்டு வருகின்றன. போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை துப்புரவாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் வெடிபொருட்கள் மீடக்கப்பட்டு அவை செயலிழக்கப்படுவதாலும் தற்செயலாக நிகழும் பல குண்டுகள் வெடிப்புக்களாலும் இச்சத்தங்கள் கேட்டுவருகின்றன. இக்குண்டு வெடிப்பினால் பொதுமக்கள், துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனவர்கள் பாதிப்படைகின்ற நிலையும் ஏற்பட்டள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளில் மேலும் 500 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.

due-00000.jpgபுனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் மேலும் 500 பெண்கள் இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுவர் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர  நேற்று தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடீவுற்ற நிலையில் 11,696  புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றது. ஓகஸ்ட் மாதம் வரை இவர்களில் 4,485 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,881 ஆண்களும் 1,604 பெண்களும் அடங்குகின்றனர். இவ்வெண்ணிக்கையில் 594 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் பெண்கள் கணிசமான அளவில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், இம்மாத இறுதியில் 500 பெண்கள் விடுவிக்கப்பட்டால் 27 பெண்கள் மட்டுமே புனர்வாழ்வு முகாமில் எஞ்சியிருப்பர் எனவும் அவர் குறிப்பட்டார்.