25

25

இலங்கையில் பால்வினைத் தொழில் : சந்தியா (யாழ்ப்பாணம்)

இலங்கையில் சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.

சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.

பால்வினை தொழில் என்பது இன்று நேற்று உருவாகியதல்ல மிகப்பழமையான தொழில் என்றும் இந்தியாவில் அக்காலத்தில் பாலியல் தொழிலுக்கென கணிகையர் என்றொரு குலமே இருந்ததாகவும் கோயில்களில் கூட தேவதாசிகள் என்ற தனிக்குலத்தினர் இப்பணியை இறைபணியாக மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தனர் என்றும் அரபு நாடுகளில் அக்காலத்தில் பெண்கள் அடிமைகளாக சந்தைகளில் விற்கப்பட்டதாகவும், பண்டைய கிரேக்கர்களும் மத்திய ஜப்பானியர்களும் இந்தியர்களும் கணவன்மார் இறந்ததும் அல்லது திருமண வயது பிந்தியதும் பிரபுக்கள் மட்டத்தில் பாலியல் தொழிலைச் செய்யும் நிர்ப்பந்ததுக்கு உள்ளாhனர்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன.

தீபா மேத்தாவின் வோட்டர் திரைப்படத்தில் கூட காசியில் பால்வினைத்தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படும் கணவனையிழந்த பெண்களின் அவல வாழ்க்கையை கதைப்பொருளாக அமைந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்த மட்டில் இத்தொழில் தற்போது செய்யப்பட்டதொன்று  ஆனால் சிங்கப்பூர் தாய்லாந்து பாங்கொக் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும்  இந்தியாவின் சில பகுதிகளிலும் பால்வினைத் தொழில்  தொழிலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் இத்தொழில் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அனுமதிக்கபட்டது போன்றே இத்தொழில் நடைபெற்று வருகின்றது. கொழும்பில் தொடங்கி கரையோரப் பகுதிகளான  கதிர்காமம் வரையிலும் இத்தொழில் வியாபித்திருக்கிறது.  அதுமட்டுமன்றி கிராமங்களில் மிக இரகசியமாகவும் இந்தத் தொழிலை செய்து வருகின்றார்கள். ஆனால் இலங்கையில் சட்டரீதியாக அனுமதிக்கப்படாவிட்டாலும் சர்வதேச ரீதியாக இலங்கை இத்தொழிலுக்கு பேர் போன இடமாகத்தான்  விளங்குகிறது. நெதர்லாந்திலிருந்து வரும் SPARTACUS என்ற சஞ்சிகை இலங்கை ஒரு பாலியல் தொழிலுக்கான தளம்  என்று எழுதியுள்ளது. சிறுவர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தும் நாடுகளில் முக்கியநாடாக இலங்கை உள்ளதாகவும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் சுமார் 63 பால்வினை தொழில் விடுதிகள் இயங்குவதாகவும் இவற்றுள் 30 க்கும் மேலான இடங்களில் பகிரங்கமாகவே  நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு பிரச்சினை என்னவென்றால் இத்தொழிலை நடத்துபவர்கள் சட்டத்தரணிகளாகவும் பொலிஸ் உத்தியோகத்திலிருப்பவர்களுமே இத்தொழிலை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களனியில் ஒரு பால்வினைத் தொழிலை ஆரம்பித்து நடத்துபவர் சட்டத்தரணி  ஒருவர் என அறிய வருகிறன்றது.

அங்கு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு 8000 தொடக்கம் 18000 ரூபா வரை வழங்கப்படுவதாகவும் அதே போல் நுகேகொடையில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் இத்தொழிலை நடத்தி வருகின்றமை பற்றியும் இவ் ஆய்வில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.  இப்படி சட்டம் யார் கையில் இருக்கிறதோ அவர்களே இத்தொழிலின் உரிமையாளர்கள். இவர்களுக்கு  அரசாங்கத்தின் அணுசரணையுடன்  தான் இத்தொழிலை செய்வதாகவும் அறிய வருகிறது.

இத்தொழிலில் ஆண்களும் ஈடுபடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 3230 ஆண்கள் பால்வினைத்தொழிலில் ஈடுபடுவதாகவும் இவர்கள் பெரிய புள்ளிகளுடனேயே அதிகமாய் தொடர்பு வைத்திருக்கிறார்கள் எனவும் ஆய்வின் படி தெரியவருகிறது.

அத்துடன் யுத்தம் முடிவடைந்த நிலையில் யுத்தத்தாலத்தில்  கணவனையிழந்து தொழில் வாய்ப்பு இல்லாதவர்களை தொழில் எடுத்து தருவதாக கூறி அழைத்து  வந்து பால்வினத்தொழில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் சிலர் இராணுவத்தின் உதவியுடன் கணவனையிழந்த பெண்களை வலுக்கட்டாயமாக இத்தொழிலில் ஈடுபடுத்துவதாகவும்  பல புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இவ் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் இத்தொழில் சட்ட விரோதமாக நடத்தப்படுவதால் பல குற்றச் செயல்களுக்கு வழிகாட்டியாக அமையக்  கூடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ள அதே வேளை பால்வினைத் தொழிலை (பாலியல் தொழில்)  சட்டரீதியாக்கினால்  பல பிரச்சினைகள் தீரும் என்ற நோக்கில் வெளிநாடுகளில் சட்டரீதியாக்கியுள்ளதைப் போல் இலங்கையிலும் செய்தால் இத்தொழிலில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அப் பெண்கள் பாதிப்படைவது கொஞ்சம் என்றாலும் குறையலாம் என்று அவ் ஆய்வில் சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.

நன்றி: ஊடறு

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

Wells_Lack_of_Waterமுல்லைத்தீவு,  முள்ளியவளை பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பிரதேசங்களில் கடும் வரட்சி காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதோடு, பல கிணறுகள் மாசடைந்து துப்புரவாக்கப்படாமலும் காணப்படுகின்றன. இதனால் அங்கு மீள் குடியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் குறிப்பிட்ட சில கிணறுகளையே பயன்படுத்தி வருகிறனர் குடிநீரை இக்கிணறுகளில் எடுத்து வர நீண்ட தூரத்திற்கு செல்ல வேண்டிய சிரமமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் குடிநீரை பணம்கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதையும் காணமுடிகிறது.

இதேபோல் கிளிநொச்சிப் பகுதிகளிலும் பல கிணறுகள் துப்புரவாக்கப்படாமல் உள்ளதால் மக்கள் குடிநீருக்கு வேறு இடங்களில் உள்ள கிணறுகளைத் தேடிச் செல்ல வேண்டி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வன்னியில் உள்ள பொதுமக்களின் கிணறுகள் பல மண் கிணறுகளாக காணப்படுவதால் அவை மாசடைந்து காணப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளில் நீர் இறைத்துக் கொடுக்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் கட்டுக்கிணறுகளை மட்டுமே இறைத்துகொடுப்பதாகவும் மண்கிணறுகளை இறைத்துக் கொடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ். குடாக்கடலில் தடைசெய்யப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களால் தொல்லை.

Net_Fishingயாழ். குடாக்கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் சிலர் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி வருவதால் சிறுவலைகள் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தாங்கள் இதனால் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

தடை செய்யப்பட்டுள்ள இழுவை டித்தொழில், தங்கூசி வலைத்தொழில், ‘டைனமைற்’ மூலம் மீன்பிடித்தல் ஆகியவற்றில் சில மீனவர்கள் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக குருநகர், பாசையூர், நாவாந்துறை, சாவல்கட்டு, பகுதி மீனவர்கள் இதனால் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த 19ம் திகதி மண்கும்பான கடற்பகுதியில் ‘டைனமைற்’ பயனபடுத்தி மீன்பிடித்த குருநகர் மீனவர்கள் சிலர் அவ்வழியில் ரோந்து வந்த கடற்படையினரல் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கையில் கைத்தொலைபேசி வைத்திருக்கும் ஒருவர் ஐந்து ‘சிம்கார்டு’களை மட்டுமே வைத்திருக்க முடியும்.

Mobile_Simஇலங்கையில் கையடக்கத் தொலைபேசி வைத்திருக்கும் ஒருவர் ஐந்து ‘சிம் கார்டு’களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்கிற நடைமுறை எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமுலுக்ககு வரவுள்ளதாக தொலைபேசித் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்லிட்ட தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு விதிகளை கருத்தில் கொண்டே இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் பத்துக்கும் மேற்பட்ட ‘சிம்’களை வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் டிசெம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் தாம் பயன்படுத்தும் ‘சிம்’களை தங்களது பெயரில் பதிவு செய்து கொள்ளவேண்டும் எனவும் அவ்வாறு பதிவு கொள்ளப்படாதவர்களின் ‘சிம்’கள் டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதியில் சிசுக் கொலை; ரிஸான நபீக்கு தண்டனை உறுதி

naaa.jpg2005 ஆம் ஆண்டில் இலங்கை வீட்டுப்பணிப் பெண் ஒருவர் சவூதியில் சிசுவினை கொலை செய்தார் என்பதனை விசாரணையின் பின் ரியாத் உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  ரிஸான நபீக் என அழைக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண், நைப் ஜிஷியன் ஹலாப் அல் ஒடபீ என்பவரின் 4 மாத குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அப்துல்லா அல் ரொசாமி தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட டவடாமி உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

நபீக்கிற்கு வேலை வழங்குனரின் மனைவி அவரது குழந்தைக்கு பால் வழங்குமாறு குழந்தையை வழங்கியுள்ளார் இதன் பின்னரே அவர் குழந்தையை கொன்றுள்ளார் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நபீக் செய்ததாக கூறப்படும் கொலையினை மறுத்து நபீக் மனு தாக்கல் செய்யலாம் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு மேலும் வேலை வாய்ப்புக்கள் – அவுஸ்திரேலியாவுடன் இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழில் அமைப்புகளுடன் நேற்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் காமினி லொக்குகே, வடபகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேலும் பல தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், ஊழியர் சேமலாப நிதியத்தைப் பெறுவதில் வட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும். இதற்காக வவுனியாவில் தற்பொழுது நடமாடும் சேவையொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் ஜகத் பாலசூரியவும் கலந்து கொண்டிருந்தார்.

யாழ். வசாவிளான் கல்லூரி ரூ. 50 இலட்சத்தில் புனரமைப்பு – ஜனவரியில் கல்வி நடவடிக்கை ஆரம்பம்

யாழ். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் உடனடியாக புனரமைக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளினதும் மேற்படி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தப் பாடசாலை கடந்த மாதம் 29ம் திகதி பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்பட்ட இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்தல், புனரமைப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேல் மாகாண தமிழ் சாகித்திய விழா இன்று

மேல் மாகாணத் தமிழ் சாகித்திய விழா பிரதான நிகழ்வுகள் இன்று மாலை மூன்று மணிக்கு கொழும்பு- 10 மருதானை- எல்பின்ஸ்ரன் மண்டபத்தில் நடைபெறுகிறது. நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப்பினரும் சாகித்திய விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எஸ். இராஜேந்திரன் தலைமைதாங்குவார்.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண கலாசார அமைச்சர் உபாலி கொடிகார, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், முன்னாள் எம். பீ. மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ந. குமரகுருபரன், முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பீ. பீ. தேவராஜ், மேல் மாகாண பிரதம செயலாளர் விக்டர் சமரவீர, மேல் மாகாண கலாசார அமைச்சின் செயலாளர் ஏ. ராமநாயக்க ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் சோ. சந்திரசேகரன், லேக் ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத், தொழில் அதிபர்கள் சுந்தரம் பழனியாண்டி, ஜே.பி. ஜெயராம் ஜே.பி. ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.

மேல் மாகாணத்தின் தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன், 25 பேர் சாகித்திய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். நம் நாட்டு கலைப் படைப்புகளைப் பிரதிபலிக்கும் இசை நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் விழாவைச் சிறப்பிக்கும். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் இராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த வருடம் விருது பெற்றவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப் படுகிறது.

புனர்வாழ்வு நிலையங்களின் பராமரிப்புக்கு ரூ. 100 மில். செலவு

புனர்வாழ்வு நிலையங்களில் பராமரிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உணவுக்காக மட்டும் நாளொன்றுக்கு நூறு மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறதென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை 306 முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மார்ச் மாதம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைக்குரிய தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்தத் தேர்தலில் நீங்களும் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியும். அதன் வழியாக அரசியல் பலமும் அரச பலமும் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதுவரையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐயாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து கொண்டுள் ளனர்.

வளர்முகநாடுகளின் நிலைக்கு சமனான முறையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போரின்போது வெற்றிகொண்ட இராணுவத்தினர் சரண் அடைந்த போராளிகளையும் மனித நேய அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகின்றது. புனர்வாழ்வு நிலையங்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 306 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். 200 பெண்களும், 106 ஆண்களும் அடங்கியிருந்தனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இவர்களை பொறுப்பேற்றனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் எஸ். சதீஸ்குமார், செயலாளர் எம். திசாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.