28

28

சொந்த மகளை பாலியில் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த தந்தைக்கு விளக்கமறியல் !

மட்டக்களப்பு தலைமையக காவற்துறை பிரிலுள்ள பிரதேசத்தில் 13 வயதுடைய சொந்த மகளை பாலியில் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த கைது செய்யப்பட்ட  தந்தைக்கு எதிர்வரும் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் இன்று வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.

மீன்டிபி தொழிலை மேற்கொண்டுவரும் 38 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் சம்பவதினமான நேற்று புதன்கிழமை மதுபோதையில் இருந்துள்ளதுடன் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததோடு தன்னுடன் படுக்கவருமாறு அழைத்ததையடுத்து குறித்த சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து காவற்துறையிரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்துகாவற்துறையினர் குறித்த நபரை உடனடியாக கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

“நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது” – எச்சரிக்கின்றார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய !

“நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது” என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார் .

நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக புதிய அரசமைப்பில் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை வென்றெடுக்கும் பொறுப்பு சிவில் அமைப்புகளைச் சார்ந்தது.

அடுத்த தேர்தலின் பின்னர் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவைப்படும். அதனை வலியுறுத்த சிவில் சமூகங்களின் முழுமையான ஆதரவு தேவைப்படும்.

புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும்.” என தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்” – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் !

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, அதனை சர்வதேச தரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இணைய வழியாக நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகியன இணைந்த ஆணைக்குழுவின் 23 ஆவது சந்திப்பில் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தகுந்த திருத்தங்களைச் செய்யும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளை மீள்பரிசீலனை செய்வதற்கு இலங்கை அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச் சூழல் மற்றும் நல்லாட்சி தொடர்பான ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டத்தின் கீழ் உள்ள 27 சர்வதேச சாசனங்களைச் திறம்படச் செயற்படுத்தவுள்ளதாகவும் இலங்கையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேநேரம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியிருப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு சமூகங்களிடையே நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியான சகவாழ்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

“கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தனியார் துறைக்கு அனுமதியில்லை” – அரசு திட்டவட்டம் !

இலங்கைக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தனியார் துறைக்கு அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளைக் கையாளும் ஜனாதிபதியின் குழு இந்தத் தகவலை  வெளியிட்டுள்ளது.

களஞ்சிய வசதிகள் உள்ள தனியார் துறையினர் கொரோனாத் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தயாராகி வருகின்ற நிலையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளைக் கையாளும் பொறுப்பை அரசு கொண்டுள்ள நிலையில், தனியார் துறைக்குத் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பது பாதுகாப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தனியார் துறை கோரிக்கை விடுத்த போதிலும், இறக்குமதி செய்யவோ, விற்பனை செய்யவோ அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி – தடுப்பூசிகளை போடும்பணி வெள்ளிக்கிழமை ஆரம்பம் !

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

No description available.

5 இலட்சம் தடுப்பூசிகள் இதன்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஜ – 281 விமானத்தின் ஊடாக இன்று காலை 11.35 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

42 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரம் , கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளன
பொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை கொழும்பு தெற்குபோதனா வைத்தியசாலை கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை ஹோமாஹம ஆதார வைத்தியசாலை முல்லேரியா வைத்தியசாலை மற்றும் தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தவாரம் ஏனையவைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.