07

07

சமூகப்போராளி வ.சிவஜோதியின் நினைவாக “சிவஜோதி எனும் ஆளுமை” – என்னும் நினைவேடு வெளியீடு! 

சமூகப்போராளி வ.சிவஜோதியின் நினைவாக “சிவஜோதி எனும் ஆளுமை” – என்னும் நினைவேடு வெளியீடு!

சமூகப் போராளி வயிதீஸ்வரன் சிவஜோதியின் நினைவு நிகழ்வு இன்று [ஞாயிறு மார்ச் 7ம் திகதி] இடம்பெற்றது.

கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘மக்கள் சிந்தனைக் கழகமும் லிற்றில் எய்ட் அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

அமரர் சிவஜோதி மக்கள் சிந்தனைக் கழகத்தின் உருவாக்கத்தில் சிவஜோதி முக்கிய பங்கெடுத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவஜோதி 2017 முதல் லிற்றில் எய்ட் அமைப்பின் இணைப்பாளராகப் பணியாற்றி அதன் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தவர். இன்று எல்லோர் மனங்களிலும் சமூகப்போராளியாக ஒரு முன்ணுதாரணமாக வாழ்கின்றார்.

இந்நிகழ்வில் ‘சிவஜோதி எனும் ஆளுமை…’ என்ற தலைப்பிலான சிவஜோதியின் வாழ்க்கை மற்றும் சமூகப் போராட்டத்தை பற்றிய நினைவுகளைத் தாங்கிய நூல்  வெளியிடப்பட்டது. இந்த நினைவு நூலினை சமூகப்போராளி சிவஜோதியின் மனைவியான ஹம்சாகௌரி சிவஜோதி அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது

இந்நூலுக்கான பதிப்பு அனுசரணையை யா. விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் பொறுப்பேற்றிருந்ததுடன் இந்நூலை லிற்றில் எய்ட் நிறுவனம் சார்பாக சமூகப்போராளி சிவஜோதியின் மனைவியான ஹம்சாகௌரி சிவஜோதி அவர்கள் வெெளியிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் சமூகசெயற்பாட்டாளர்கள், பாடசாலை அதிபர்கள், கலை-இலக்கிய செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் லிட்டில் எய்ட் நிறுவனத்தின் உறுப்பினர்கள், அமரர் சிவஜோதியின் பாடசாலை நண்பர்கள்,  அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

சிவஜோதி எனும் ஆளுமை… நூலின் இணைப்பு:

ஆளுமை பற்றி…

‘சிவஜோதி எனும் ஆளுமை…’ ஒரு ஆளுமையாக எண்ணப்படுவதற்கு முதற்காரணம் அவ்வாளுமை தான் சார்ந்த சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கமே. இன்றைய காலகட்டத்தில் உலகத் தலைவர்களே கோமாளிகளாக, பொறுப்பற்றவர்களாக, வினைத்திறனற்றவர்களாக, ஏன், மோசடியாளர்களாகவும், பாதகம் செய்பவர்களாகவும் இருப்பதால் ஆளுமைகளை வரலாற்றில் தான் தேட வேண்டியுள்ளது. கீழைத்தேச நாகரிகத்தின் – இந்தியாவின் மோடியில் இருந்து, மேலைத்தேச நாகரீகத்தின் – அமெரிக்காவின் ட்ரம் வரை, இவர்களிடம் இருந்து எதைத்தான் நாளைய தலைவர்கள் கற்றுக் கொள்வது? இம்மண்ணில் பிறக்காத உயிரின் (pசழ டகைந) உரிமைக்காகப் போராடும் அமெரிக்கர்கள் பள்ளிகளில், கல்லூரிகளில் கொல்லப்படும் மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற, துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கு கூடத் தயாரில்லை. பொறுப்பற்ற இந்த பொதுப்புத்தி மனிதர்களை நாம் ஆளுமைகளாகக் கொள்ள முடியாது.
உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் பட்டினியில் வாடுகிறார்கள். பள்ளிச் சிறுமிகள் மாதவிடாய் அங்கிகளை வாங்குவதற்கு வசதியில்லாததால் பாடசாலைக்குச் செல்வதில்லை. ஆனால் பிரித்தானிய அரசு ஆயதத் தளபாடங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து உள்ளது.

இன்று வல்லரசுகள் வைத்துள்ள அதிநவீன ஆயுதங்களால் ஒரு கொரோனா வைரஸைக் கூட சுட்டு வீழ்த்திவிட முடியாது. ஆனால் இந்த நவீன அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவும் பாதுகாக்கவும் இந்த வல்லரசுகள் பல பில்லியன் டொலர்களைச் செலவிட வேண்டியுள்ளது. ஆனால் மருத்துவர்களையும் தாதிகளையும் உருவாக்குவதற்கு, அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளை வழங்குவதற்கும் கூட இந்த உலகத் தலைவர்கள் தயாரில்லை.

இந்தக் கொரோனா தாக்கத்தினால் 270 மில்லியன் மக்களின் ஒரு நேர உணவே கேள்விக்குறியாகி இருக்க, 2200 பில்லியனெர்கள் 2020 ஏப்ரல் முதல் 2020 ஜூலை வரையான நான்கு மாதங்களில் 2.7 ரில்லியன் டொலர்களைச் சம்பாதித்து உள்ளனர். இந்த சம்பாத்தியத்தில் வெறும் 20 பில்லியன் டொலர்களை வழங்கினால் அந்த 270 மில்லியன் மக்களின் வறுமையைப் போக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள்.
அரசுகளும் அரசுத் தலைவர்களும் செய்ய முடியாத, செய்ய விரும்பாத விடயங்களை தனிநபர்கள் தங்கள் தோள்களில் சுமக்கின்றனர். சமூகம் என்ற கட்டமைப்பு ஒன்றில்லை, அவரவர் தங்கள் தங்கள் நன்மைகருதிச் செயற்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் தன்னலம்சார்ந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பு; தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. சமூகம் என்பதன் அவசியம் இன்று உலகெங்கும் உணரப்படுகின்றது. இந்த சமூகத்தில் சராசரி மனிதர்கள் ஆற்றுகின்ற பங்கின் முக்கியத்துவம் உணர வைக்கப்பட்டுள்ளது.

பள்ளியில், கல்லூரியில், பல்கலையில் உயர்புள்ளி பெற்றவர்கள் எல்லாம் சமூகத்தைவிட்டு ஒதுங்க, சராசரியானவர்களே சமூகத்தின் சுமைகளைத் தங்கள் தோள்களில் சுமந்தனர். அவ்வாறு சுமந்ததனாலும் அந்த சமூகத்திற்கு வழிகாட்டியதனாலுமே நாங்கள் இத்தன்னலமற்ற மனிதர்களை ஆளுமைகளாக கணிக்கின்றோம். அவ்வாறான ஆளுமைகளே மக்களோடு மக்களாக நின்று அவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கின்றனர். அவ்வாறான ஒரு ஆளுமையே இந்த ‘சிவஜோதி எனும் ஆளுமை…’

சிவஜோதி தனது 49 ஆண்டுகால குறுகிய வாழ்க்கைக் காலத்தில் தனது பன்முக ஆளுமையை பல கோணங்களில் வெளிப்படுத்தி உள்ளார். கலை, இலக்கியம், நாடகம், கல்வி, சமூக செயற்பாடுகள் என சிவஜோதி பதித்த தடங்கள் குறிப்பிடத்தக்கன. இத்தடங்களைப் பதிப்பதற்கு சாதி, மத, இன எல்லைகள் எதுவும் தடையாக இருக்கவில்லை. இந்த எல்லைகளைத் தாண்டி மக்களின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் சிவஜோதி பயணித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு வருகின்றனர்” – மணிவண்ணன் குற்றச்சாட்டு !

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு வருகின்றனர்” என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப யாழ் மாநகர சபையினை கலைத்து அரசிற்கு சார்பாக இந்த மாநகர சபையை பொறுப்பேற்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு வருகின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச  ஐனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் குறித்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என திரிந்தவர்கள், அதேபோல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் கோத்தபாய ராஜபக்சவை வெல்ல வைப்பதற்காக பல பிரயத்தனங்களை செய்தவர்கள்.

தற்போது மாநகர சபையினை கலைப்பதற்காக மஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“தமிழர் பிரச்சினைகளை தீராப்பிரச்சினையாக வைத்திருப்பதே தமிழ்தரப்புகளின் எண்ணம்” – அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா 

“தமிழர் பிரச்சினைகளை தீராப்பிரச்சினையாக வைத்திருப்பதே தமிழ்தரப்புகளின் எண்ணம்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா அரச விருந்தினர் விடுதியில்  இடம்பெற்ற கட்சியின் உறுப்பினர்களிற்கான கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அமைச்சர்களிற்கு தனிப்பட்ட நிலைப்பாடுகள் விருப்பு வெறுப்புகள் இருக்கலாம் எனவும் அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக நாம் அறிவிக்கமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று எமது மக்கள் துன்பங்களை அனுபவிக்கும் வகையிலான செயற்பாடுகளையே தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருகின்றனர். கோழி கூவி விடியாது. ஆனால் விடியும் நேரத்தை பார்த்து கோழி கூவும்போது மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் ஏற்ப்படலாம். பிரச்சினைகளை தீராப்பிரச்சினையாக வைத்திருப்பதே தமிழ்தரப்புகளின் எண்ணம்.

அவர்களின் பாதை தவறு என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. அன்று நான் சொன்னதை கேட்டிருந்தால் இந்த இழப்புகளும் அழிவுகளும் வந்திருக்காது. நாம் சரியாக தான் பயணிக்கிறோம். எமது கருத்துக்கள் போதிய அளவு மக்கள் மத்தியில் செல்லவில்லை.

அதுவே எங்களுடைய குறைபாடு. அப்படி சென்றிருந்தால் இழப்புகள் குறைந்திருக்கும். தமிழ்மக்கள் முள்ளிவாய்க்காலுக்கே சென்றிருக்கவேண்டிய தேவை வந்திருக்காது. எனவே கிடைக்கின்ற சந்தர்பங்களை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

நாங்களும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும்..தேசிய நல்லிணக்கத்திற்கூடாகவே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். அந்த இலக்கினை நோக்கிய கொள்கைகளை ஏற்ப்படுத்தி தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறோம்.

அண்மையில் பல்கலைகழக மாணவர்கள் எமது கடற்படையை விமர்சித்து, இந்தியகடற்தொழிலாளர்கள் தமிழர்கள் என்றபடியால் தான் கொல்லப்பட்டார்கள் என்ற ஒரு பொய்யான ஒன்றை, விளக்கம் இல்லாமல் சொல்லியிருந்தார்கள்.

ஆனால் 1971, காலப்பகுதியில் அரசிற்கெதிராக ஆயுதம் தூக்கியது மக்கள் விடுதலை முண்ணணி. அதில் அங்கம் வகித்தவர்கள் அனைவரும் சிங்கள இளைஞர் யுவதிகள் தான். அவர்களையும் தமிழர்கள் என்றா கொன்றது? இல்லையே. அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கியதால் அடக்கப்பட்டார்கள்.

எனவே மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு அதிக வாக்குகளையும் ஆசனங்களையும் தந்தால் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற விடயத்தை செய்துகாட்டுவேன். செய்யாமல் நான் எதனையும் சொல்வதில்லை.

இந்த நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியமாக உள்ளது. அந்தவகையில் தீவுப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் சீன நிறுவனம் ஒன்றிற்கு கிடைத்துள்ளது. அது தற்செயலாக நடந்த ஒன்று.

இந்தியாவும் அதற்கு விண்ணப்பித்திருந்தது. அதை தீர்மானித்தது அரசாங்கம் அல்ல ஆசிய அபிவிருத்தி வங்கியே. பூகோள அரசியலுக்காக அது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது” – பிரித்தானியா திட்டவட்டம்

“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது” என பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் போதுமான ஆதரவு இல்லாமையால் இந்த நிலை ஏற்பட்டதாக பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு கோரி 13,500 இற்கும் மேற்பட்ட கையொப்பங்களுடன் அனுப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி.யை நிறுவிய ரோம் சட்டத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவினால் மாத்திரமே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியும் என்பதுடன் அத்தகைய பரிந்துரையை வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளே செய்யலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் இடைக்கால நீதிக்கு அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாகக் கூறினாலும், பிரித்தானியா தொடர்ந்தும், இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரித்து வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா தொடர்ந்தும் அழைப்பு விடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் நிகழும் அனைத்து மீறல்கள் மற்றும் முறைகேடுகளுக்கும் ஒரு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை பிரித்தானியா வலியுறுத்தும் என்றும் அறிவித்துள்ளது.

இதேவேளை ஜெனிவா அரங்கில் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக சீனா பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இரா.சம்பந்தனால் தயாரிக்கப்பட்ட மாதிரி வரைபிலே நாம் கோரிக்கை விடுத்த முக்கியமான விடயங்கள் உள்வாங்கப்படாமலும், முந்தைய பிரேரணைகளிலிருந்த உறுதியான பல சரத்துக்கள் இல்லை” – ரெலோ அறிக்கையைை மறுப்பு !

மனித உரிமைச் சபையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரைக்கு பதில் அளிக்கும் முகமாக சம்பந்தர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை சம்பந்தமாக எமது நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்.

அவ்வறிக்கையில் கூட்டமைப்பாக எமது தலைவரின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தபோதிலும், எமது பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படாது வெளியிடப் பட்டமை வருத்தத்துக்குரியது என டொலோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொலோவின் ஊடக பேச்சாளர் கு. சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜெனிவா கூட்டத்தொடரில் மனித உரிமைச் சபையின் அமர்வில் தமிழ் மக்களுக்காக நீதிகோரி கொண்டுவரப்பட இருக்கின்ற பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய கோரிக்கையை மூன்று தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டுத் தலைமைகள், சமூக அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தோம்.

இருப்பினும் மாதிரி வரைபிலே நாம் கோரிக்கை விடுத்த முக்கியமான விடயங்கள் உள்வாங்கப்படாமலும், முந்தைய பிரேரணைகளிலிருந்த உறுதியான பல சரத்துக்கள் தவிர்க்கப்பட்டமையையும் அவதானித்து இருந்தோம்.

சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணை பலமான உறுதியான சரத்துக்களை உள்ளடக்கியதாக அமையுமிடத்தில் தான் நம்முடைய இனத்திற்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற வகையில் அதை பலப்படுத்தும் வகையாக தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருப்பவர்களும், சர்வதேச உறவுகள்மற்றும் சமூகமும், இணை அனுசரணை நாடுகளும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த இக்கட்டான, இறுதி வரைவின் வடிவம் என்னவென்று தெரியாமல் இருக்கின்ற சூழ்நிலையிலே இருக்கின்ற வரைபை பிரேரணையாக வெற்றிகரமாக நிறைவேற்றும்படி இணை அனுசரணை நாடுகளை கோருவது எமது முயற்சியை பலமிழக்கச் செய்வதோடு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல் எமது மக்களின் நீதிக்கான போராட்டத்தினையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைப்பதையும் பலவீனமடையச் செய்யும்.

ஆகவே இந்த அறிக்கைக்கு நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம்.

மனித உரிமைச் சபையில் அங்கத்துவ நாடுகளிடம் எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையான பலமான சரத்துக்களை உள்ளடக்கிய பிரேரணையை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைப்பதுதான் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி நிற்கும் எமது மக்களுக்கு நாம் செய்யும் தலையாய கடமையாக இருக்கும். தவிர அரச பிரநிதிகள், அமைச்சருடைய கருத்துக்களுக்கு பதில் அளிப்பதில் நேரம் கடத்துவது சரியான ஒன்றாக இந்த நேரத்தில் அமையாது.

எமது ஒன்றிணைந்த கோரிக்கைகளயும், ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரது அறிக்கையிடப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாக மனித உரிமைச் சபையில் எமது மக்களுக்கான நீதியை உறுதிப்படுத்துவதாகவே சமர்ப்பிக்கப் படுகின்ற பிரேரணை அமைய வேண்டும் எனவும் அதை வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் அங்கத்துவ நாடுகளை நாம் கோருகிறாம். இதுவே எமது நிலைப்பாடு.

எமது மக்களின் நீதிக்கான உரிமைக்கான போராட்டத்தில் எமது கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும் என தெரிவித்துள்ளார்.

“46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்”- தமிழ்தேசியகூட்டமைப்பு 

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரின் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 23, 24 ஆம் திகதிகளில் ஜெனிவா அமர்வையொட்டி இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆற்றிய உரைக்குப் பதிலளித்து வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயங்களை சம்பந்தன் உட்பட கூட்டமைப்புத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த விடயத்தையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட சில அம்சங்கள் வருமாறு:-

1.ஏற்கனவே இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 30/01, 34/01, 40/01 தீர்மானங்களில் இருந்து வெளியேறுவதான இலங்கையின் அறிவிப்பு அர்த்தமற்றது. அத்தகைய பொறுப்பிலிருந்து இலங்கை வெளியேற முடியாது.

2.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான இப்போதைய அறிக்கையை நிராகரிக்கின்றார் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் கூறுவது அர்த்தமற்றது. இந்த அறிக்கை பெரும்பாலான அங்கத்துவ நாடுகளால் வரவேற்கப்பட்டுள்ளது.

3.உலக நாடுகளில் மனித உரிமை நிலைவரத்தை ஆராய்ந்து வெளிப்படுத்துவது மனித உரிமைகள் ஆணையாளரின் சட்டபூர்வமான செயற்கடமை. அந்தச் சட்டபூர்வச் செயற்பாடு நாட்டின் இறைமையையோ, ஆள்புல ஒருமைப்பாட்டையோ மீறும் நடவடிக்கை அல்ல.

4.2015 மார்ச்சில் இலங்கை தொடர்பாக நிறைவேறப்பட்ட 30/01 இலக்கத் தீர்மானத்தை இலங்கையும் சேர்த்து ஆதரித்து அனுசரணை வழங்கியமையை, 2019 இன் ஈஸ்டர் ஞாயிறுக் குண்டுத் தாக்குதலுடன் இலங்கை அரசு இப்போது தொடர்புபடுத்தி, நம்ப முடியாத இட்டுக்கட்டும் கதைகளை அவிழ்த்து விடுகின்றது.

5.எனினும், போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரம் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விளக்கம் ஏதும் கூறுகின்றார் இல்லை.

6.இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்ட இலங்கை எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவேயில்லை.

7.புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக 2016இல் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக எட்டப்பட்ட தீர்மானத்தை முன்னெடுக்க இலங்கை ஆக்கபூர்வமாகச் செயற்படவில்லை. அதற்கு எதிரான போக்கே இப்போது முன்னெடுக்கப்படுகின்றது.

8.1971 மற்றும் 1988/ 89 இல் தென்னிலங்கையில் பல பத்தாயிரம் இளைஞர்கள் சட்ட விரோதமான முறையில் கொன்றொழிக்கப்பட்டனர். அப்போதும் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டன. அவை எவற்றுக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேயில்லை.

என்று கூட்டமைப்பு தனது அறிக்கையில் கோரியுள்ளது.

இந்நிலையில் இந்த அறிக்கை வலிமையானதாக அமைந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ள த.தே.ம.முன்னணி இனியெப்போதும் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியாது எனவும் கூறியுள்ளமையும் நோக்கத்தக்கது.

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் இணைந்து செயல்படாது” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் இணைந்து செயல்படாது” என கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (07.03.2021) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின் போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும் கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு  இலங்கைக்கு எதிரான  பிரேரணைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆதரித்து கையொப்பமிட்டு அரசுக்கு  ஆதரவு வழங்கியுள்ளார்.

இது தமிழ் மக்கள் மீது மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகில் குத்திய ஒரு செயற்பாடாகும். எனவே இவ்வாறான தமிழ்தேசிய கூட்டமைப்போடு ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக அனைத்து கட்சியையும், இணைப்பதாக  இனி எந்த சிவில் சமூகத்தினரோ மதகுருமாரோ முன் வர வேண்டாம்.

எனவே அவ்வாறான முயற்சிகளை கைவிட வேண்டும் அத்தோடு நாமும் நாடாளுமன்றத்தில் அல்லது வேறு செயற்பாடுகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்றிலிருந்து சேர்ந்து பயணிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தங்களது உரிமைகளுக்காக எழுந்து நிற்பார்கள்” – எம்.ஏ சுமந்திரன்

“தமிழ் மக்கள் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தங்களது உரிமைகளுக்காக எழுந்து நிற்பார்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும், பங்குத்தந்தையர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்கள் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தங்களது உரிமைகளுக்காக எழுந்து நிற்பார்கள் என்பதற்கு இந்த இரணைதீவு மக்களுடைய பிரயத்தனமும் வெற்றியும் சான்றாக அமைகின்றது.

“தமிழ் மக்கள் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தங்களது உரிமைகளுக்காக எழுந்து நிற்பார்கள்”

இரணைதீவு பகுதியில் குடியேறிய மக்களுக்கு வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் கூட இல்லை. வசதிகளைப்  பெற்றுத் தருவதற்கு தொடர்ந்தும் பல முயற்சிகளை நாங்கள் பல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்றோம்.

முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எந்தவிதமான விஞ்ஞான ரீதியான பிரச்சினைகளும் இல்லை. உலக நாடுகளிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர். இவ்வாறு உயிரிழப்பர்களை உலகில் 188 நாடுகளில் புதைப்பதற்கான அனுமதிகள் கொடுத்திருந்தபோதும் இதனை ஓர் இனவாதச் செயலாக இலங்கை அரசு தடுத்தது.

இவ்வாறான இனவாதப் போக்கைப் கொண்டிருந்த இலங்கை அரசு ஐ.நாவில் இலங்கை மீது கொண்டுவரப்படும் பிரேரணைக்கு எதிராக இருந்த முஸ்லிம் நாடுகள் ஆதரவாக வாக்களிக்கும் அல்லது விலகி விடும் என்ற காரணத்தால்தான் ஜனாஸாவை அடக்கம் செய்யும் எண்ணத்தைத் திடீரென மாற்றிக் கொண்டது.இலங்கை அரசு பெரும்பான்மையின மக்களைத் திருப்திப்படுத்த செய்த ஒரு விடயமே தவிர விஞ்ஞான ரீதியான பிரச்சினை இல்லை” என்றார்.