இலங்கையின் பழங்குடியின மக்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி முதலாவது தடுப்பூசியை ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோவே பெற்றுக்கொண்டார். கண்டியிலுள்ள வழிபாட்டுத் தலமொன்றில் வைத்து இவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெறவுள்ள பெரகர நிகழ்வில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளமையால் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Read More …