07

07

கடந்த சில மாதங்களில் காணாமல்போன ஆயிரக்கணக்கான பெண்கள் – வெளியான திடுக்கிடும் தகவல் !

இலங்கையில் கடந்த சில மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1500 பெண்கள் காணாமற் போனமை பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன பெண்களில் திருமணமானவர்களும் அடங்குவர். சில பெண்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

காணாமல் போன பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபுகஸ்கந்த பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

“குடும்பமொன்றுக்கு அரைபாதி தேங்காய் மட்டுமே போதுமாம்.” – மரவள்ளிக்கிழங்கை அடுத்து வெளியான புதிய அறிவிப்பு !

இலங்கையில் விலையுயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. அரசாங்கம் மக்களுடைய நிலையை சிந்திப்பதாக தெரியவில்லை.  அண்மையில் ஊடக சந்திப்பு ஒன்றில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் அத்தவருட வரவு செலவுத்திட்ம் பறறி வினவப்பட்ட போது “வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக, பொதுமக்களிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இது போலவே நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச “நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் என தெரிவி்திருந்தார்.

இவ்வாறான கருத்துக்கள்  மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அரசு அடித்தட்டு மக்களை பற்றி யோசிக்காது செயற்படுவது போலவே தோன்றுகிறது.

சரியான முறையில் தேங்காயை பயன்படுத்தினால் குடும்பமொன்றுக்கு நாளொன்றுக்கு அரைபாதி தேங்காய் மட்டுமே போதுமானது என தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்நாட்டு தேங்காய் நுகர்வில் 30% வீதம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் வருடாந்தம் விளையும் தேங்காய் அறுவடையில் 70 வீதம் உள்நாட்டு பாவனைக்காகவே பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கையால் பிழிந்தால் 20-30% தேங்காய்ப்பால் கிடைத்தாலும், 50% தேங்காய்ப்பால் கிறைண்டரில் அரைத்தால் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதிகளில் கண்ணிவெடியகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு !

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடியகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெடியகற்றப்பட்ட காணிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆகியோரால் அண்மையில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

270 குடும்பங்கள் வசிப்பதற்காக இந்தக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்தில் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையின் போது 87 ஆயிரத்திற்கும் அதிகமான மிதி வெடிகளும், ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 985 தோட்டாக்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்லதுதானே.” – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

மக்கள் வெளிநாட்டுக்குச் செல்வது பிரச்சினைக்குரியதல்ல என்றும், அது அவர்களின் எதிர்காலத்திற்குச் சிறந்ததாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தங்களது வாழ்க்கையை மிகவும் சிறந்ததாக்கவும், வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அது தவறான விடயமில்லை. வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் எப்போதும் அந்த நாடுகளிலேயே வாழ்வதில்லை.

இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புகின்றனர். அத்துடன், நாட்டுக்குப் பெருமளவான அந்நிய செலாவணியை அவர்கள் பெற்றுத் தருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.