2022

2022

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதான மதபோதகருக்கு 8 ஆயிரத்து 658 ஆண்டுகள் சிறை தண்டனை !

துருக்கியில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மத போதகர் ஒருவருக்கு 8 ஆயிரத்து 658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்  தண்டனை!அங்காரா நகரைச் சேர்ந்த அட்னான் அக்தார், ஏ9 என்கிற ஆன்லைன் தொலைக்காட்சி சேனல் வழியாக மதப்பிரச்சாரம் நடத்தி வந்தார்.

கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீட்டில் அக்தார் உட்பட மேலும் 10 பேருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஓமான் நாட்டில் நடைபெற்ற விழாவில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்கப்பட்ட இலங்கை பெண்கள் !

ஓமானில் நடைபெற்ற விழா ஒன்றில், அபுதாபிக்கு வீட்டுப்பணிப் பெண்களாக அழைத்துச் செல்லப்பட்ட 12 இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன​ர் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு சபைக்கு அறிவித்தார்.

மேலும், அபுதாபியில் வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அழைத்துச் செல்வதாக 12 இலங்கைப் பெண்கள் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஓமானில் நடைபெற்ற விழா ஒன்றில் இப்பெண்கள் பாலியல் தொழிலுக்கு பகிரங்க ஏலத்தில் விற்னை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ளாது தமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள், பொருளாதார நெருக்கடியை சரி செய்ய அவர்களின் தன்மானத்தை அடகு வைக்க முடியாது எனவும், இது தொடர்பில் நீதி அமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் விதிமுறைகளை மீறி செயற்படுகின்றன. இப்படியான நிலையால் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன் என்றார்.

இலங்கைப் பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் – ஆய்வில் அதிர்ச்சி !

இலங்கைப் பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே இந்த நிலைமையை நிவர்த்தி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் அமைக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

“பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பொலிஸில் புகார் அளிக்க சரியான சூழல் இல்லை. ஒரு பெண் ஒரு ஸ்டேஷனுக்கு துன்புறுத்துதல் பற்றி புகார் கொடுக்க வரும்போது பொலிஸ்துறையில் உள்ள அனைவரும் கூடிவிடுகிறார்கள். ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் இரகசியத்தன்மையை உறுதி செய்ய குறைந்தது 13 பெண் காவலர்கள் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் கூறினார்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்வதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“இலங்கையில் 29 இலட்சம் பேர் புதிதாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.” – பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

“பெருந்தோட்ட பகுதியில் 52 சதவீதமானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன். 29 இலட்சம் பேர் புதிதாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.” என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதியால் சமர்பிப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலா தயாரிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. அரச வருமானத்திற்கும்,அரச செலவினத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

வரவு செலவுத் திட்டத்தில் திறைசேரியில் கணக்கறிக்கை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கபடவில்லை.சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு இது ஒரு தடையாக அமையும்.பொறுப்புக் கூறல் தொடர்பில் நாணய நிதியம் கேள்வியெழுப்பும்.நாட்டின் உண்மை பொருளாதார நிலையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் குறிப்பிட வேண்டும்.

அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமானதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.எரிபொருளுக்கு வரி அதிகரிப்பை அரச வருமானமாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடவில்லை.

எரிபொருளுக்கு வரி அதிகரித்தால் மின்சாரம் மற்றும் போக்குவரத்து சேவையின் கட்டணங்கள் பாதிக்கப்படும்.பல்வேறு காரணிகளினால் நாட்டில் எரிபொருள் பாவனை 40 சதவீதத்தாலும்,மின் பாவனை 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் வீத மற்றும் உட்கட்டமைப்பு அதிகரிப்பிற்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீதியை அபிவிருத்தி செய்யும் நிலையில் நாடு இல்லை.

துறைசார் நிறுவனங்களின் செலவுகளை குறைந்தப்பட்சம் 10 சதவீதத்திலாவது குறைத்துக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தப்படுவதால் மாத்திரம் அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாது.இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சமூக பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு வரி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும்.வரி அதிகரிப்பால் நடுத்தர மக்கள் எதிர்க்கொள்ளும் நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் துறைசார் நபர்களுடன் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும்;.

அரச செலவுகளை குறைத்துக் கொள்ளாமல் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியாது.சமூக கட்டமைப்பு தொடர்பான தகவல்களை புள்ளிவிபரவியல் திணைக்களம் தரப்படுத்துவதை அரசாங்கம் தடுத்துள்ளது.

நாட்டில் தொழிலின்மை 2 மடங்காக அதிகரித்துள்ளது. மறுபுறம் ஏழ்மை நிலை 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த நிலைக்கு சென்றுள்ளது. பெருந்தோட்ட பகுதியில் 52 சதவீதமானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன்,நாட்டின் ஏழ்மை நிலை 26 சதவீதமாக காணப்படுகிறது. 29 இலட்சம் பேர் புதிதாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வாரான பயங்கரமான சூழ்நிலையில் அரசாங்கம் மக்கள் கலவரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

கட்டுமாண கைத்தொழில் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.படித்த தொழிற்துறையினர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.நாடு படித்த மனித வளமற்ற பாலைவனத்தை நோக்கி செல்கிறது.

ஊழல் மோசடிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் ஆண்டு முதல் எந்த சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் என்றார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – பிரபாகரனை அடுத்து முதல்நிலை குற்றவாளி விடுதலையான நளினி தான் – முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் உயிரிழந்ததன் பின்னர் நளினிதான் முதல்நிலை குற்றவாளி என முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார்.

நளினி ஒரு துரோகி; சட்டம் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறது!"- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி அனுசுயா | retired police officer anushya slammed nalini at chennai press meet

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அந்த குற்றத்திற்கு பொறுப்பான அனைவரையும் கொண்டு வந்து, வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, இறுதியாக ராஜிவ் காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் வரையில் குற்றவாளிகளை அழைத்து வந்ததும் நளினிதான்.

எனவே இங்கு நளினிதான் முதலாம் நிலை குற்றவாளி. அப்போது, முதல்நிலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அகிலன், பொட்டு அம்மான் உள்ளிட்டவர்கள் நாடு கடத்தி இங்கு அனுப்புமாறு கூறப்பட்டது. எனினும் அவர்கள் இங்கு வரவேயில்லை. இறந்து விட்டனர். அப்போது, இங்கு நளினிதான் முதல் நிலை குற்றவாளி.

குற்றவாளிகள் அனைவரையும் இங்கு வரவழைத்து, எப்படி செல்ல வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொடுத்ததுடன், அதற்கு முதல் நடந்த ஒரு கூட்டத்தில் ஒத்திகையும் பார்த்தார் நளினி.

அனைவரும் இணைந்து இந்த திட்டத்தை தீட்டுகிறார்கள், அதற்கு உடந்தையாக தமிழ்நாட்டில் இருந்தது நளினிதான் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். ஆனால் கூட்டமைப்புக்கு ஒரு நிபந்தனை.” – அமைச்சர் மஹிந்த அமரவீர

முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ள இந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் அவநம்பிக்கையை துறந்து ஒருசில விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டமைப்பும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.

நாட்டின் தேசிய பிரச்சினையாகவுள்ள தமிழ் மக்களின் பிரச்சசினைகளுக்கு இந்த அரசில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கனேடியத் தமிழர் பேரவையின் கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தம்மோடு இணைந்து பணியாற்ற சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைப்பும் விடுத்துள்ளார்.

குறித்த 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று கனேடியத் தமிழர் பேரவையினால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது.

இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் நீதி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகள் தமது அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடிய வகையில் தாம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

“கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தரப்பினர் விரைவில் உங்களுடைய உள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுங்கள்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுரை!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழர் தரப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகளும், உட்கட்சி முரண்பாடுகளும் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பலவீனப்படுத்தியிருகின்ற அனுபவத்தினை மறந்துவிடக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பில், கொள்கை ரீதியான உடன்பாடுகள் ஏதுமின்றி, தேர்தல் வெற்றிகளை இலக்காக கொண்டே கட்சிகள் இணைந்திருக்கின்ற என்பது வெளிப்படையானது.

எனினும், கடந்த காலங்களில் தலைமைக்கான போட்டிகளும், அதனால் உருவாகிய முரண்பாடுகளுமே தமிழ் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டமும் வலுவிழந்து போனமைக்கான பிரதான காரணமாக அமைந்திருந்ததுடன், கிடைத்த சந்தர்ப்பங்கள் பல கைநழுவிப் போவதற்கும் காரணமாக இருந்தது.

எனவே, தற்போது உருவாகியுள்ள சூழலையும் தவறவிடாது பயன்படுத்திக் கொள்வதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட அனைத்து தரப்பினரும், காலத்தை வீணடிக்காது விட்டுக்கொடுப்புக்களின் மூலம் தமக்கு உள்ளே இருக்கின்ற பிரச்சினைகளையும், தமக்கு இடையிலான பிரச்சினைகளையும் தீர்த்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றம் – குவைத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை !

குவைத் இராச்சியத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய பெண் ஒருவர், குவைத் பெண் ஒருவர், மூன்று குவைட் ஆண்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் அந்நாட்டில் கூட்டாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறையாகும்.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட குழுவினருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி – விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1 !

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்தது. முதற்கட்டமாக மனிதர்கள் இல்லாமல் ஆர்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன.

இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து ராக்கெட்டை விண்ணில் ஏவ கடந்த ஆகஸ்டு மாதம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று முன்தினம் (14ம் திகதி) ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்திருந்த நிலையில் சூறாவளி புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து 16ம் திகதி (இன்று) ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா தெரிவித்தது. அதன்படி நேற்று நள்ளிரவில் புளோரிடாவில் உள்ள கேப் கானவரல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாரான நிலையில் திடீரென்று ஹைட்ரஜன் வாயு கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ராக்கெட்டை ஏவுவதற்காக கவுன்ட்- டவுன் நடந்தபோதும் மறுபுறம் வாயு கசிவை சரி செய்யும் பணி நடந்தது. இதனால் ஆர்டெமிஸ் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. கோளாறை சரிசெய்தபின் இன்று மதியம் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வாயு கசிவு காரணமாக ராக்கெட் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர்.

நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது. விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.