2022

2022

பெண்களே கவனம் – இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் மார்பக புற்று நோயாளர்கள் எண்ணிக்கை !

இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த இரண்டு தசாப்தங்களில் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, உள்ளூர் அளவில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,.

மேலும் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளை சிகிச்சைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

……………………………………………………………………………………………………………………………………………………………………………..

பெண்கள் அனைவரும் மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை பெற்று இருக்க வேண்டும்.

அதாவது, தொடக்க நிலையில் மார்பில் வலியற்ற சிறு கட்டியாகத் தோன்றும்போது அதை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

நாளடைவில் அந்தக் கட்டி வளர்ச்சியடைந்து, வலி நிறைந்த பெரிய கட்டியாக மாறும் போது தான் பெண்கள் மருத்துவ உதவியையே நாடுகின்றனர்.

அதற்கு மார்பக புற்றுநோய் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. மார்பக புற்றுநோய்களில் என்னென்ன வகைகள் உள்ளன அவற்றின் அறிகுறிகள் என்னென்ன என்பதை காணலாம்.

​மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்
இப்பொழுது எல்லாம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவது சர்வ சாதாரணமாகி விட்டது.
வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது மார்பக புற்று நோய் பாதிப்பை பெருமளவில் ஏற்படுத்துகிறது.
மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை எல்லாப் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
அதே மாதிரி மார்பக புற்றுநோய் பரிசோதனையையும் தொடர்ச்சியாக செய்து வருவது உங்களை மார்பக புற்று நோய் அபாயத்தில் இருந்து காக்கும்.
ஆனால் பல பேருக்கு இது தெரிவதில்லை. மார்பக கட்டி வளர்ந்த பிறகே மருத்துவரை நாடிச் செல்கின்றனர்.

பெண்ணின் மார்பக காம்புகளில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். மார்பக புற்று நோய் எடுத்த எடுப்பிலேயே வருவதில்லை.

முதலில் அதற்கான அறிகுறிகள் தென்படும். பின்னரே அதன் பாதிப்பு பலமடங்கு பெருக ஆரம்பிக்கும். வெவ்வேறு வகையான மார்பக புற்று நோய் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக பால் குழாய்களில் கட்டிகள் வருவதை இன்வேசிவ் டக்டல் கார்சினோமா என்றும் பால் உற்பத்தி செய்யும் சுரப்பிகளில்

உருவாகும் கட்டிகளை இன்வேசிவ் லோபுலர் கார்சினோமா என்றும் அழைக்கின்றனர். இது மார்பக பகுதியை தடினமாக்குகிறது.

​மார்பக புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்
இந்த மாதிரியான மார்பக கட்டிகள் நபருக்கு நபர் மாறுபட்டு காணப்படும். மார்பக புற்று நோய் வருவதற்கு முன் சில அறிகுறிகள் தென்படுகின்றன.
சரும நிறம் மாறும், வீக்கம், சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். மார்பகத்தின் வடிவம், அளவு மாறும், இரண்டு மார்பக காம்புகளில் அல்லது ஒரு காம்பில் மாற்றங்கள் தென்படலாம்.
தாய்ப்பாலைத் தவிர முலைக்காம்பில் கசிவு ஏற்படும்.
 
மார்பகத்தின் எதாவது ஒரு பகுதியில் வலி உண்டாகுதல், மார்பகத்தின் உட்பகுதியில் கட்டிகள் தோன்றுதல்,

இன்வேசிவ் மார்பக புற்றுநோய் அறிகுறிகள் (மார்பகத்தின் உள்ளே ஏற்படும் அறிகுறிகள்) எரிச்சல் அல்லது மார்பகங்களில் அரிப்பு ஏற்படுதல், மார்பக நிறத்தில் மாற்றம், மார்பக வடிவில் அல்லது அளவில் அதிகரிப்பு ஏற்படுதல். மார்பகத்தை தொடரும் போது கடினமாக அல்லது சூடாக உணர்தல்,

மார்பக காம்புகளின் சிவத்தல் ஏற்படுதல், மார்பக கட்டி கடினமாகுதல், சிவந்து போதல் அல்லது மார்பக சருமம் ஆரஞ்சு நிறத்தில் தோன்றுதல். சில நேரங்களில் மார்கத்தில் ஏற்படும் தொற்று காரணமாக கூட சிவந்து போகலாம். மார்பக காம்புகள் வீங்கி இருப்பதும் தொற்று காரணமாக இருக்கலாம்.

எனவே அதற்காக கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். இன்வேசிவ் மார்பக புற்று நோய் அறிகுறிகள் (மார்பகத்தினுள் ஏற்படும் அறிகுறிகள்), மார்பகத்தில் கட்டி அல்லது கனமாக உணர்தல் மார்பகத்தின் எல்லா பகுதியும் வீக்கத்துடன் தென்படுதல்,

தோல் எரிச்சல் அல்லது சுறுசுறுக்கென்ற வலி மார்பகம் அல்லது மார்பக காம்புகளில் வலி ஏற்படுதல், முலைக்காம்பு உள் நோக்கி திரும்புதல், மார்பக சருமம் சிவந்து, செதிலாக அல்லது தடினமாக மாறுதல், முலைக்காம்பு வெளியேற்றம், அக்குள் பகுதியில் நிணநீர் வீக்கம். லோபுலர் கார்சினோமா அறிகுறிகள்

இந்த புற்றுநோய் எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. மேமோகிராம் மூலம் கூட இதை பார்க்க இயலாது. இதை மார்பக பயாப்ஸி மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

ஒரு வேளை ஒரு நபருக்கு லோபுலர் கார்சினோமா செல்கள் இருந்தால் நுண்ணோக்கி வழியாக பார்க்கும் போது அதன் அசாதாரண வளர்ச்சி தெரியும்.

மார்பக குழாய்களில் ஏற்படும் அறிகுறிகள்

மார்பக குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் எந்த வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. இதனால் இதை சீக்கிரமே கண்டறிவது கடினம்.  மார்பக குழாய்களில் ஏற்படும் கட்டியை கொண்டு நீங்கள் உணரலாம். இல்லையென்றால் மேமோகிராம் மூலம் கண்டறியலாம்.

அழற்சி வகை மார்பக புற்று நோய் அறிகுறிகள்

இந்த அழற்சி வகை மார்பக புற்று நோய் கட்டிகளை அரிதாகவே உண்டாக்குகிறது.  இதையும் மேமோகிராம் வழியாக நீங்கள் பார்க்க இயலாது. ஒரு சில அறிகுறிகளை கொண்டு நீங்கள் கண்டறியலாம்.

சிவந்து போதல், வீக்கம் உண்டாதல், எரிச்சல் அல்லது அரிப்பு கொண்ட மார்பகங்கள், மார்பகத்தின் சருமத்தில் ஆரஞ்சு நிறம் தோன்றுதல், குழி போன்று தென்படுதல்,

மார்பகம் கனமாக இருத்தல், எரிதல் மற்றும் வலித்தல், ஒரு மார்பகம் மற்றொரு மார்பகத்தை விட பெரிதாக தென்படுதல்,

மார்பகப் காம்புகள் உள்நோக்கி திரும்புதல், மார்பக பரிசோதனை மூலம் எதையும் கண்டறிய இயலாது,

அக்குள் பகுதியில் அல்லது காலர் எலும்புக்கு கீழ் பகுதியில் நிணநீர் வீக்கம் தென்படுதல்.

​முலைக்காம்பு அழற்சி
மகப்பேறு பெற்ற பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் கால கட்டத்தில் சிவத்தல், அரிப்பு மற்றும் புண்கள் போன்ற முலைக்காம்பு அழற்சியை பெறுவார்கள்.

இதை நீங்கள் ஆன்டி பயாடிக் சிகச்சை மூலம் சரி செய்யலாம். உங்களுக்கு மகப்பேறோ அல்லது கருவுறாமல் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

ஆன்டி பயாடிக் மருந்துக்கு பிறகு ஏற்படும் மாற்றங்கள்
அழற்சி மார்பக புற்று நோய் மற்ற மார்பக புற்றுநோய் கட்டிகளை போன்று இருக்காது. இது கட்டிகளை உருவாக்குவதில்லை.
அதனால் மருத்துவ பரிசோதனை மற்றும் மேமோகிராம் மூலம் இதை நாம் கண்டறிய இயலாது.

அல்ட்ரா சவுண்ட் மூலம் கூட இதை தெளிவாக கண்டறிய முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆனால் இந்த புற்று நோயினால் ஏற்படும் மாற்றங்களை கண்கூடாக காண முடியும். இதன் அறிகுறிகள் விரைவாக தோன்ற ஆரம்பிக்கும்

மேலும் நோய் விரைவாக வளர ஆரம்பிக்கும். உங்கள் மார்பின் வடிவம் அல்லது தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள்.

​மெட்டாஸ்டேடிக் மார்பக புற்று நோய் அறிகுறிகள்

இந்த புற்றுநோய் எந்த இடத்தில் ஆரம்பமாகிறது மற்றும் எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்பதை பொருத்தது. சில நேரங்களில் இந்த புற்றுநோய் எந்த வித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை.

மார்பக சுவரில் பாதிப்பு ஏற்பட்டால் வலி, மார்பக காம்புகளில் மாற்றம், கட்டிகள், மார்பகம் தடினமாகுதல், அக்குள் பகுதிகளில் வீக்கம் போன்றவை தென்படலாம்.

எலும்புகள் பாதிக்கப்பட்டால் வலி, எலும்பு முறிவு, மலச்சிக்கல், கால்சியம் அளவு குறைதலின் அறிகுறிகள் தோன்றலாம். இதுவே புற்றுநோய் கட்டிகள் நுரையீரலை பாதித்து இருந்தால் மூச்சு விட சிரமம், இருமல், மார்பக சுவரில் வலி அதிகப்படியான சோர்வு போன்றவை தோன்றும்.

கல்லீரலில் புற்று நோய் பாதிப்பு இருந்தால் குமட்டல், சோர்வு, அடிவயிற்றில் வலி, பாதங்களில் கைகளில் வீக்கம், மஞ்சள் நிற சருமம், கண்கள் மஞ்சளாகுதல், சருமத்தில் அரிப்பு போன்றவை ஏற்படும்.

இதுவரை மார்பக புற்று நோய் மூளைக்கு பரவினால் முதுகுத் தண்டுவடத்தில் கட்டிகள் உண்டாகும்.

வலி, குழப்பம், நினைவிழப்பு, தலைவலி, கண்பார்வை மங்கலாகுதல், பேச்சில் கடினம், வலிப்பு போன்றவை நேரலாம்.

​பாப்பில்லரி புற்றுநோய் அறிகுறிகள்
பாப்பில்லரி புற்றுநோயை நீங்கள் மேமோகிராம் மூலம் கண்டறியலாம். நிறை மாற்றம் இந்த புற்றுநோயில் கட்டிகள் 2 செ. மீ முதல் 3 செ. மீ வரை மாறும்.

கைகளால் தொட்டு பார்த்து அறிந்து கொள்ளலாம். முலைக்காம்பில் மாற்றம் 50 சதவிகித மாற்றங்கள் முலைக்காம்பின் அடிப்பகுதியில் நிகழ்கின்றன.

ஏற்பிகளின் நிலையில் மாற்றம்
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன், ஹெச்இஆர்2 போன்ற ஏற்பிகளின் சோதனை எதிர்மறையாக வெளிப்படும்.
ஹார்மோன்களிலே மாற்றம் ஏற்படுவதால் ஹார்மோன் தெரபி வேலைக்கு வராது.

இதற்கு கீமோதெரபி, கதிரியக்க பரிசோதனைகள், இலக்கு தெரபி போன்ற மூன்று பரிசோதனை களை செய்யலாம்.

​ஆக்ரோஷமான மார்பக புற்று நோய்
சிகிச்சை கொடுத்த பிறகு இதன் வீரியம் கொஞ்சம் குறைகிறது. செல்வகை மற்றும் தரத்தை பொறுத்து இந்த வகை புற்றுநோய் செல் மார்பக குழாய்களின் அடியில் உண்டாகிறது.
புற்றுநோய் செல்கள் ஆரோக்கியமான செல்களை ஒத்திருக்காது.

இலங்கையில் சிறுவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் முகமாக சிறப்பு பிரிவு ஆரம்பம் !

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு,  சிறுவர்களின் உரிமைகளை  பாதுகாப்பதை உறுதி செய்யும் முகமாக சிறப்பு பிரிவொன்றினை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவின்  தலைமைத்துவத்தின் கீழ், இந்த புதிய பிரிவு, உலக சிறுவர் தினத்தை மையப்படுத்தியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் விதமாக இந்த புதிய பிரிவு பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.

ஹிஜாப் அணியாத உணவகம் சென்ற பெண் கைது !

ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப் அணிய மறுத்த மாஷா அமினி என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது அவர் திடீரென இறந்தார். போலீசார் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் அவரை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது. இந்த போராட்டத்தின் போது 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இந்தநிலையில் ஈரானை சேர்ந்த டோனியோ ராட் என்ற பெண் தனது தோழி பணிபுரியும் கம்பெனியில் உள்ள உணவகத்துக்கு காலை சிற்றுண்டி சாப்பிட சென்றார். அப்போது அவர் தலையில் முக்காடு அணியாமல் சாப்பிட்டார். இந்த படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இது வைரலாக பரவியது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் விளக்கம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து டோனி யோராட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாக அவரது சகோதரி டினா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு – பிரதம பௌத்த மதகுருவுக்கு பிணை !

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் பிணைகாரர்கள் வருகை தராமையினால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன் மீண்டும் குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று (30) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், இரு தரப்பினர் சார்பிலும் ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு சந்தேக நபரான பௌத்த மதகுரு தொடர்புபட்ட 3 வழக்குகளில் தலா 3 பேர் வீதம் 9 பேர் கொண்ட 5 இலட்சம் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல வேண்டும், மாதத்தின் 4 வாரம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடுதல் குறித்த வழக்கின் சாட்சிகள் குடும்பத்தினரை அச்சுறுத்துதல் வழக்கு தொடர்பிலான தலையீடு செய்யாதிருத்தல் வேண்டும், வெளிநாடு செல்வதற்கு தடை அதாவது கடவுச்சீட்டினை மன்றிற்கு ஒப்படைத்தல் வேண்டும், அவ்வாறு தன்னிடம் கடவுச்சீட்டு இல்லை எனின் உரிய தரப்பினரின் உறுதிப்படுத்தி மன்றிற்கு தெரிவிக்க வேண்டும், கிராம சேவகரின் நலச்சான்றிதழ் சமரப்பிக்க வேண்டும் என்ற கடும் நிபந்தனையுடன் குறித்த பௌத்த மதகுரு பிணையில் விடுவிக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மறுவிசாரணைக்காக குறித்த வழக்கினை கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள் கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் செப்டம்பர் 13 ஆந் திகதி கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதியாக ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்ற அழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் கைதான சந்தேக நபரை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆந் திகதி வரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (30) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை மற்றும் வழக்கின் விசாரணை தொடர்பில் இரு தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் நீண்ட நேர சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டதுடன் சந்தேக நபரான தேரரின் பிணை கோரிக்கை ஏற்கப்பட்டு மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆந் திகதி வரை வழக்கினை நீதிவான் ஒத்தி வைக்க உத்தரவிட்டார்.

மேலும் குறித்த பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பிரதான சந்தேக நபராக குறிப்பிடப்படும் கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி சார்ப்பில் ஆஜரான முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான ஸ்ரீயானி விஜேவிக்கிரம தலைமையிலான சட்டத்தரணிகள் குழு பிணைக் கோரிக்கை முன்வைத்து ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

“இங்கு தமிழர்களுக்கு பிரச்சினைகளே இல்லை. அவர்களே பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.”- சரத் வீரசேகர

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளிவரும் செய்திகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிப்போம் என உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தெரிவித்திருந்தனர். அதேவேளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இதயசுத்தியுடன் அரசு நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மூன்று தலைவர்களினதும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மூவின மக்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் இருப்பதாகவும் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். தேசிய பேரவையில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வைக் காணும் பேச்சை அரசாங்கம் இதயசுத்தியுடன் நடத்த வேண்டும் என எவ்வாறு கோரமுடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.

தமிழ் மக்களுக்கு நாட்டில் சுதந்திரம் காணப்படும் நிலையில், சிங்கள மக்களுக்கு எதிராகவும், பௌத்த மதத்துக்கு எதிராகவும்தான் தமிழ் மக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

நிகழ்வுகளுக்காக மாணவர்களிடம் இருந்து நிதி அறவிட வேண்டாம் – கல்வி அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாடசாலை அதிகாரிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் முறைசாரா வகையில் நிதி அறவிடுவதை தடைசெய்து 2015/5 சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் பெற்றோர்கள் இருக்கும் நிலையில், தேவையற்ற சுமைகளை அவர்கள் மீது சுமத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவர் குறிப்பாக அதிபர்கள் இவற்றை செயற்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

அந்த வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,080,000 பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான நடவடிக்கை – ஜனாதிபதி ரணில்

அரசாங்கத்தின் செலவில் சமச்சீர் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப கட்டமாக 1,080,000 பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக குழந்தைகள் மற்றும் முதியோர் தினம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

​​சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஒப்புதலுடன் சமச்சீர் உணவை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாககும் தெரிவித்தார்.

மேலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மேலதிக மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

குழந்தைகளின் இன்பமான குழந்தைப் பருவத்தையும், நாட்டின் நலனையும் காக்க பெரும் தியாகங்களைச் செய்த முதியோர் சமூகத்தை கவனிப்பது நமது கடமை. இது நமது கலாசாரத்துடன் தொடர்புடையது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உணவு, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, ஓய்வு, தூக்கம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவை குழந்தைகளின் தேவைகளில் சில மாத்திரமே. இந்த வசதிகளை உறுதி செய்வதற்கு கலாசார ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த தேவைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தை தவிர அனைத்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் பொறுப்பு என்பது எனது கருத்து. பெரியவர்கள் வாழும் சமகால உலகம் குழந்தைகள் பார்க்கும் உலகம் அல்ல. இது மிகவும் எளிமையானது மற்றும் மென்மையானது.

அவர்கள் ஆர்வத்திற்காக தாகம் கொள்கிறார்கள். பெரியவர்களாகிய நாம் இதை புத்திசாலித்தனமாக புரிந்துகொண்டு அவர்களுக்கென ஒரு தனித்துவமான உலகத்தை உருவாக்க உறுதிசெய்ய வேண்டும். கடந்த சில வருடங்களாகப் பார்த்தால், சில வருடங்களுக்கு முன் குழந்தைகள் வாழ்ந்த சமூகப் பின்னணியில் இருந்து தற்போதைய சமூகம் மிகவும் மாறுபட்டு இருப்பது புலனாகிறது.

இது குறித்து ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய பின்னணியில், நாட்டின் அனைத்துக் குழந்தைகளும் சரியான அளவு கலோரிகள் அடங்கிய சரிவிகித மற்றும் சத்தான உணவைப் பெறுவதை உறுதிசெய்வது அரச தலைவர் என்ற முறையில் எனது கடமையாகும்.

இந்த மண்ணின் எதிர்கால சந்ததியினருக்காக ஒரு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே இந்த தருணத்தில் எனது நோக்கம்.

நான் முன்வைத்த கொள்கை அறிக்கையின் அடிப்படையில், ஏழ்மை நிலையில் உள்ளோர் மற்றும் சலுகை பெற்ற பிரிவினரின் பராமரிப்புக்கு தேவையான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் கருணையுடன் கவனித்துக் கொள்ளப்படும் ஒரு சகாப்தத்தை உருவாக்க நாம் அனைவரும் கைகோர்ப்போம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம் – ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் உறவுகள் வேணடுகோள் !

காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம் என நாங்கள் உறுதியாக உள்ள நிலையில் நடைமுறையில் நாம் நிரூபித்தவாறு ஓ.எம்.பியை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்காதீர்கள் என ஐ.நா மனித உரிமைகள் பிரதான அமர்வில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை பேரவையில் நேற்று (30.09.2022) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளர்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நிலைப்பாட்டை நிரூபிப்பதற்காக வலுவான ஆதாரங்கள் மூலம் ஓ.எம்.பி ஆதாரங்களுடன் காணாமலாக்கப்பட்ட 5 நபர்களின் விவரங்கள், அவர்கள் ஒப்புக்கொண்டபடி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு வழக்குக்கு தீர்வு காண வேண்டும்.

ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் ஒரு வழக்கைக் கூட இதுவரை நிரூபிக்க முடியவில்லை.

ஓ.எம்.பி உடனான எமது முரண்பாடு நீடித்து வரும் நிலையில் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் என்றால் தாங்களாகவே காணாமல் போனவர்கள் என்று அர்த்தம் போதிப்பதா, ஆனால் எங்கள் உறவுகள் விடயத்தில் அவர்கள் சரணடைந்து எங்களால் முறையாக ஒப்படைக்கப்பட்ட பின்னர் விருப்பமின்றி காணாமல் போயுள்ளனர்.

கடந்த 13 ஆண்டுகளாக நிகழ்ச்சி நிரல் 2 இன் கீழ் தீர்மானங்கள் உள்ளன. ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் கட்டாயக் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த ஒரு உறுதியான மாற்றமும் இல்லை.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கான ஒரு சிறப்பு அறிக்கையாளரை நிகழ்ச்சி நிரல் 4 இன் கீழ் இரண்டாவது தீர்மானத்தின் கோர் குழு நாடுகளை, குறிப்பாக ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவிடம் கேட்டுக்கொள்கின்றோம். எமக்கான நீதியை பெறுவதற்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே.? – சிறுவர் தினத்தையொட்டி உறவுகள் போராட்டம் !

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

சிறுவர் தினமான இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது உறவினர்களான சிறுவர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குடும்பமாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு என்ன நடந்தது உள்ளிட்ட விடயங்களில் சர்வதேசம் நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், கால நீடிப்பினை வழங்கக் கூடாது எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது !

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊதுகாவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நிஜாம் பாக்கு கொண்டு சென்ற மாணவனை பொலிஸார் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.