18

18

இலங்கையில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் – எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் !

ஒமிக்ரோன் பிறழ்வால் நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

நீண்ட வார இறுதியில் பொது ஒன்றுகூடல்களால் அடுத்த இரு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

ஒமிக்ரோன் பிறழ்வால் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவில் நோய்த்தொற்று விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையிலும் நோய்த்தொற்றுகள் சிறிதளவு அதிகரித்துள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வின் அதிகம் பரவும் தன்மையால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் ஒரு உயர்வு ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

தடுப்பூசி திட்டத்தின் வெற்றியினால் , தொற்றுநோயுடன் தொடர்புடைய  இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 12-15 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் தொடர்பில் தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார், மேலும் இதுபோன்ற கூற்றுக்கள் அறிவியல் சோதனைகள் மூலம் சரிபார்க்கப்படவில்லை.

எனவே வைரஸுக்கு எதிராக கணிசமான பாதுகாப்பை வழங்குவதால், அனைத்து நபர்களும் தடுப்பூசியைப் பெறுமாறும் அவர் வலியுறுத்தினார். கொரோனா வைரஸின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருப்பதால், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் புதிய பிறழ்வுகளை அடையாளம் காணும் சோதனையை முன்னெடுப்பதற்கு நாட்டின் பிற பல்கலைக்கழகங்களிலும் வசதியை ஏற்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மாத்திரமே தற்போது இலங்கையில் தொடர்புடைய சோதனைகளை முன்னெடுக்கும் ஒரே இடம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் எரித்துக்கொலை செய்யப்பட்ட இலங்கையர் – நட்டஈட்டை வழங்கிய பாகிஸ்தான் !

பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கானோரினால் தீ வைக்கப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளது.
பிரியந்த குடும்பத்திற்கு பாகிஸ்தான் கோடிக்கணக்கான ரூபாவை வழங்கியது
பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான PTI அறிவித்துள்ளது.

இதன்படி, 100,000 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா. 20252320.00) மற்றும் அவரது முதல் மாத சம்பளமான 1667 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா.337606.17) பணம், பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு வங்கி கணக்குக்கு வைப்பிலிட்டமைக்கான ஆவணங்களை PTI கட்சி, வெளியிட்டுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி தொடர் வெற்றி !

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே 52 ஓட்டங்களைப் பெற்று கொடுத்தார்.