14

14

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே கைது – காரணம் என்ன..?

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷெஹான் மாலக கமகே கைது - ஜே.வி.பி நியூஸ்

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பாக அவர்க கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் மணல் கடத்தல்களில் பொலிசாரின் டிப்பர் வாகனங்கள் !

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிசார், இராணுவத்தினரின் துணையுடனேயே இடம்பெறுகிறது.

பொலிசாரின் டிப்பர் வாகனங்கள் கூட மணல் ஏற்றுவதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பல இடங்களில் மணல், கிரவல் சட்டவிரோதமாக அள்ளப்படுகிறது. பொலிசாரின் டிப்பர் வாகனங்களும் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக மக்கள் சொல்கிறார்கள். அந்த வாகன இலக்கங்களையும் சொல்கிறார்கள்.

பல இடங்களில் இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை கடந்தே மணல் டிப்பர்கள் செல்கின்றன. எப்படி அவை செல்கின்றன. மணல் அகழ்வு பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வழங்கினால், தகவல் தந்தவர்களின் விபரங்களையும் பொலிசார் கடத்தல்காரர்களிற்கு வழங்கி விடுகிறார்கள்.- என தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து கொழும்பிலும் கையெழுத்துப்போராட்டம் !

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் கையெழுத்துதிடும் நடவடிக்கை நாளை கொழும்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத்திற்கு நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

1979 ஆம் ஆண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு தற்காலிக விதிகள் சட்டமாக கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்பாட்டில் உள்ளது. அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான கருத்து வேறுபாடுகளை நசுக்க கொண்டுவரப்பட்ட இச்சட்டம் இன்றும் தொடர்கிறது என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வாரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் வெளிவிவகார அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சையில் குறைவான புள்ளி – குடும்பத்தினரை சுட்டுக்கொலை செய்த 15 வயது பள்ளி மாணவன் !

ஸ்பெயின் நாட்டின் துறைமுக நகரமான அலிகாண்டேவில் இருந்து   20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்சேக் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
15 வயது பள்ளி மாணவன் தேர்வில்  குறைவான மதிப்பெண் பெற்றது தொடர்பாக அவனது தாய் சத்தம் போட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டில் இருந்த வேட்டையாடும் துப்பாக்கியால் முதலில் தாயையும், பின்னர் தனது 10 வயது சகோதரரையும், தொடர்ந்து தனது தந்தையையும் அந்த சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான். தொடர்ந்து 3 நாட்கள் சடலங்களுடன் வீட்டில் அந்த சிறுவன் தனியாக இருந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து வெளியே யாருக்கும் தெரியவில்லை.
3 நாட்களுக்கு பிறகு அந்த வீட்டிற்கு சென்ற உறவுக்கார பெண்ணிடம் அந்த சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றியதுடன் சிறுவனை கைது செய்தனர்.

புனித நூல் பக்கங்களை கிழித்த மனநலம் குன்றியவரை மரத்தில் கட்டி கல்லால் அடித்துக் கொலை செய்த கும்பல் !

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ளது ஜங்கிள் டெராவாலா கிராமம். கடந்த சனிக்கிழமையன்று ஒரு நபர் புனித நூல் பக்கங்களை கிழித்து விட்டதாக தகவல் பரவியதை அடுத்து, கும்பல் ஒன்று அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் உடலை மரத்தில் அவர்கள் தொங்க விட்டனர்.
அந்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் மரத்தில் இருந்து உடலை கீழே இறக்க முயன்ற இரண்டு போலீசார் மீது அந்த கும்பல் கற்களை வீசியதில் அவர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை தெரிவித்துள்ளார். சட்டத்தை பொது மக்கள் கையில் எடுத்துக் கொள்வதை தமது அரசு சகித்துக் கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இது குறித்து பஞ்சாப் காவல்துறைத் தலைவரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் இம்ரான்கான் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

பேஸ்புக் விருந்து – ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் பல இளைஞர்கள் கைது !

கண்டி நகரில் முகநூல் விருந்தில் கலந்துகொண்ட 36 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் முகநூல் அழைப்பு மூலம் மேற்படி விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர்களிடம் வசமிருந்த ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றையும் கண்டிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி விருந்திற்கு வருகை தந்தவர்கள் கண்டியைச் சூழ உள்ள பிரபல வர்த்தகர்களின் பிள்ளைகள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் சொகுசு வாகனங்களில் வந்தே மேற்படி விருந்தில் கலந்து கொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சில் 21 முதல் 24 வயதுடைய நான்கு யுவதிகளும் உள்ளடங்குவதாகத் தெரியவருகிறது.

இதன்படி சந்தேக நபர்களை கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“புலிகளுக்கும் – ஜே.வி.பிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுதரப்பினரும் கொலைகள் செய்தனர்.” – நாமல் ராஜபக்ஷ

“விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் எவ்வித வித்தியாசங்களும் இல்லை. இரண்டு தரப்பினரும் கொலைகளை செய்தனர் ” என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

என்றும் அவர் மேலும்குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜே.வி.பியின் வரலாற்றை நான் பெலியத்தை மக்களுக்கு புதிதாக கூற வேண்டியதில்லை. அவர்களின் அரசியல் சீர்குலைப்பது. அவர்கள் களஞ்சியங்களையும், வைத்தியசாலைகளையும் பிரதேச செயலகங்களையும் தீ மூட்டி எரித்தவர்கள். ஜே.வி.பியே இலங்கை அரசியல் வரலாற்றில் அதிகளவில் தீ மூட்டியுள்ளனர். தற்போது மின்சாரம் இல்லை எனக் கூறுகின்றனர்.

அந்த காலத்தில் மின்மாற்றிகளை தீ மூட்டி எரித்தனர். புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு தரப்பினரும் கொலைகளை செய்தனர்.

இதனால் பழையவற்றை கைவிடுங்கள் என்று ஜே.வி.பியினருக்கு நாங்கள் கூறுகின்றோம். நாட்டை முன்னேற்ற வேண்டும். அரச ஊழியர்கள் என்ற வகையில் எமக்கு பொறுப்புள்ளது. உரிமைகளை மாத்திரம் பேசி பயனில்லை. பெண்கள் ஆதரவளிக்கும் தரப்புக்கே ஆட்சி அதிகாரம் செல்லும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். கூட்டங்களுக்கு பெண்கள் அதிகளவில் வந்திருந்தால், நாங்கள் தென்புடன் வீடுகளுக்கு செல்வோம்.

கூட்டங்களில் ஆண்கள் அதிகமாக இருந்தால், சற்று தளர்வுடன் செல்வோம். கட்சி என்ற வகையில் பெண்களை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.அப்போதுதான் இந்த சமூகத்தை பாதுகாக்க முடியும். சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருங்கள் – தாய் கைத்தொலைபேசி கொடுக்க மறுத்ததால் 12வயது சிறுவன் தற்கொலை !

12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தனது தாய் கைத்தொலைபேசியைக் கொடுக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ள தாக அநுராதபுரம் தஹயியாகம பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் அனுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியின் ஏழாம் தர மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைத்தொலைபேசியில் ‘கேம்’ விளையாடும் பழக்கம் கொண்ட மாணவன் கடந்த 11ஆம் திகதி பாடசாலையைத் தவறவிட்டதால் அவரது தாயார் சிறுவனைத் திட்டிவிட்டு, கைத்தொலை  பேசியை பறித்துச் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒன்லைன் கற்றலின் போது தாயாரின் கைத்தொலைபேசியை பயன்படுத்திய குறித்த மாணவன் அவ்வேளை ‘கேம்’ விளையாட்டில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது.

சிறுவனின் தாயார் அரசாங்க நிறுவனத்தில் எழுதுவினைஞராகவும் தந்தையார் தனியார் பேருந்து நிறுவன ஊழியராகவும் தொழில் புரிந்து வருகின்றனர்.

“இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படவில்லை.” – கொரியாவில் மைத்திரிபால

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகின்ற போதிலும் எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச தராதரத்திலான முழுமையான நல்லிணக்கம் ஏற்படவில்லை உறுதியான அதிகாரப்பொறிமுறை ஏற்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

கொரிய தலைநகரில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான்கிமூனின் அழைப்பின் பேரில் மைத்திரிபால சிறிசேன இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பான்கி மூன் தன்னாலான அனைத்தையும் செய்தார். நான் சமாதானத்திலும் யுத்தத்தை தவிர்ப்பதிலும் நம்பிக்கை கொண்டவன். எந்த பிறழ்வுகளிற்கும் மோதல் பதிலாக அமையக்கூடாது.

சம்பந்தப்பட்ட தரப்புகள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதும் பொருளாதாரத்தை மீளகட்டியெழுப்புவதுமே அவ்வாறான தருணங்களில் அவசியமான நடவடிக்கை.  இதன்காரணமாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லிணக்கத்தின் நான்கு தூண்களை அடிப்படையாக வைத்து இலங்கை நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டது.

சர்வதேச சமூகம் மிகவும் தீவிரமான உடனடி தீர்வாக அமையக்கூடிய நடவடிக்கைகளை எதிர்பார்த்தது – வேண்டுகோள் விடுத்தது. அவைஉயர்ந்த எதிர்பார்ப்புகள் ஆனால் துரதிஸ்டவசமாக எதிர்பார்க்கப்பட்ட வேகம் நல்லிணக்கப்பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் பிரதிபலிக்கவில்லை.

கொரிய தீபகற்பத்தின் மோதல் 70 வருடங்களாக நீடிப்பது. மோதலில் ஈடுபட்ட தரப்பினரின் நலன்கள் குறித்தும் கடந்த காலங்கள் குறித்தும் சமரசம் செய்வது விரைவாக முன்னெடுக்ககூடிய நடவடிக்கையில்லை. காயங்கள் ஆழமானவையாக காணப்படுவதே இதற்கு காரணம்.

எங்கள் மோதல் 2009 இல் முடிவிற்கு வந்தது. 12வருடங்களின் பின்னர் நாங்கள் இன்னமும் உறுதியான அதிகாரப்பொறிமுறையை உருவாக்கவில்லை – எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச தராதரத்திலான நல்லிணக்கம் நிறைவேறவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.