May

May

நேபாள விமான விபத்து – 22 பேரின் சடலங்களும் மீட்பு !

நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே பலியாகி விட்டனர். நேற்று காலையில் விமானம் விழுந்த பகுதியை நேபாள மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.

நேற்றே 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. ஒருவரது உடல் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது. அதனையும் மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். இனி அதனை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உட்பட ஆறு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் !

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ளது காரவலி கிராமம்.  இந்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார்.
அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்ட போது அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் அடங்கும்.  அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் வெறுப்படைந்த அவர், பெற்ற தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

“ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த இடமளிக்க முடியாது.”- சரத்வீரசேகர

ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு  ஆதரவளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு தாம் ஆதரவளிக்கவில்லை எனவும், அவ்வாறே 21ஆவது திருத்தச் சட்டத்துக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின்  அதிகாரங்கள் குறைக்கப்படுவதில் தனக்கு உடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாசியாவின் மிகப்பெரும் கோபுரம் உள்ள ஆசியாவின் ஆச்சர்யமான இலங்கை நாட்டில் – வெள்ளப்பெருக்கின் மத்தியில் நின்று பரீட்சை எழுதிய மாணவர்கள் !

இன்று (31) காலை கொழும்பு பிரதேசத்தில் பலத்த மழை பெய்ததையடுத்து சி. டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியதால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம், கொழும்பு மாநகர சபையின் மாவட்ட 3 அலுவலகம் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து சுமார் இரண்டு மணித்தியாலங்களில் பரீட்சையை நடத்துவதற்கு கடுமையாக உழைத்ததாக பாடசாலை அதிபர் சம்பிக்க வீரதுங்க தெரிவித்தார்.
பாடசாலையின் பிரதான வாசலில் இருந்து பரீட்சை நிலையத்துக்குச் செல்ல தீயணைப்புப் படைக்குச் சொந்தமான வாகனம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கொழும்பு கல்விப் பணிப்பாளர் ஜி. என். சில்வாவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள் ளப்பட்ட இந்த நடவடிக்கையின் காரணமாக, தாமதமின்றி பரீட்சையை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
………………………………………………………………………………………………………………….
No photo description available.
இது போல பல சிரமங்களுக்கு மத்தியிலேயே மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். ஒரு பக்கத்தில் எரிபொருள் நெருக்கடி – கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மின்சார தடை என பல தடைகளால் மாணவர்களின் இயல்பான கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மழைக்காலமும் சேர்த்து மாணவர்களை இன்னமும் வாட்யுள்ளது.
தென்னாசியாவின் மிகப்பெரிய தாமரைக்கோபுரத்தை அமைத்ததாக கொண்டாடித்தீர்க்கும் நமது நாட்டில் தான் மழகை்கு ஒழுக்கு இல்லாத – வெள்ளம் நிரம்பாத பாடசாலை கட்டிடங்களை அமைக்க முடிவதில்லை. நகர்ப்புற பாடசாலைகளிலும் இதே நிலை தான். கிராமப்புற பாடசாலைகளிலும் இதே நிலைதான்.
May be an image of 1 personசண்டையே இல்லாத நிலையில் பாதுகாப்பு – இராணுவ ஒதுக்கீடு – தேவையற்ற பாரிய பாதை அமைப்பு என்பனவற்றை விடுத்து பாடசாலைகளில் மாணவர்கள் காலநிலை மாற்றங்களில் இருந்து பாதுகாப்பாக கற்பதற்கான – பரீட்சை எழுதுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி்கொடுக்க இனிவரும் காலங்களில் சரி கல்வி அமைச்சும் – அரசாங்கமும் முயற்சிகளை மேற்கொண்டு இலங்கை இலவச கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த முன்வர வேண்டும.

வவுனியாவில் சிறுமி சடலமாக மீட்பு – கணேசபுரம் பகுதியில் பதற்றம் !

வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில் வசித்து வசந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டிற்கு அமைவாக நெளுக்குளம் பொலிஸார், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியினை தேடும் நடவைடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது அப் பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து இரவு 7.30 மணியளவில் குறித்த சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
கிணற்றிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டதுடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தஞ்சம் அடைந்திருந்தது.
குறித்த பாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்கள் மற்றும் கயிறும் காணப்பட்டுள்ளது. இரவு 11.45 மணியளவில் தடவியல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்திருந்து பொதுமக்களின் உதவியுடன் சிறுமியின் சடலத்தினை கிணற்றிலிருந்து மேலே எடுத்து வந்தனர்.
குறித்த பகுதியில் இராணுவத்தினர் பாரியளவில் குவிக்கப்பட்டமையினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலமை காணப்பட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் மரண விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தமையுடன் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸர் முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் !

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க கூறுகிறார்.

சராசரியாக, தேசிய மருத்துவமனையில் ஒரு நாளைக்கு நான்கு இதய சத்திரசிகிச்சைகள் செய்யப்படுகின்றன, மேலும் அந்த எண்ணிக்கை இப்போது குறைக்கப்பட்டுள்ளது.

இதய நோயாளிகளுக்கு அத்தியாவசியமான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் இதய நோயாளிகள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதய சத்திர சிகிச்சையின் போது வழங்கப்படும் பல அவசர மருந்துகளுக்கு வைத்தியசாலையில் தட்டுப்பாடுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் மருந்துகள் வழங்கப்படாவிட்டால், மற்ற சத்திரசிகிச்சைகள் தடைப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் – சிரட்டை அலங்கார உற்பத்திகளில் ஈடுபடும் முல்லைத்தீவு பெண் முயற்சியாளர் !

இலங்கையில் இன்னமும் செய்தால் அரச வேலை மட்டுமே செய்வோம் என பலர் அரச வேலைக்காக மட்டுமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையே நீடிக்கின்றது. மேலும் அதிகமானோர் இலங்கையில் வேலை செய்வதற்கான முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் கூட வெளிநாடுகளை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இலங்கை போன்ற நாடுகளில் பல பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய வாழ்க்கையை திருமணத்துடன் முடக்கி கொள்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்பட்டு கொண்டிருக்கிறார் முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் சிரட்டை கைத்தொழில் தொடர்பான அலங்கார பொருட்களை உற்பத்தி செய்துவரும் நிதர்சனா என்ற பெண்மனி.

கந்தசாமி கிரிதரன் என்ற முகநூல் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த ஒரு பதிவில் குறித்த சிரட்டை அலங்கார பொருட்கள் உற்பத்தி பற்றிய விடயங்களை காணக்கிடைத்ததன் அடிப்படையில் தேசம் இணையதளத்திலிருந்து குறித்த தொழில்முயற்சியாளரை தொடர்பு கொண்டிருந்த போது அவர் ,

No photo description available.

தானும் தன்னுடைய கணவருமாக இணைந்து குறித்த தொழில்முயற்சியை மேற்கொள்வதாகவும் – குறித்த தொழிலை செய்வது மனதுக்கு நிறைவானது எனவும் குறித்த முயற்சியாளர் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த உற்பத்திகளை நேரடியாக சென்று பெற்றுக்கொள்ள முடிவதுடன் உங்களுக்கு ஏற்றாற் போல அலங்காரங்களிலான உற்பத்திகளையும் பெற்றுக்கொள்ள முடியும். வடமாகாண பகுதிகளுக்கு ஓர்டர் செய்து பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.

பிறந்தநாளுக்கும் ஏனைய கொண்டாட்டங்களுக்கும்  நாம் ஏதோவொரு பொருட்களையும் – வெளிநாட்டு உற்பத்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரிசில்களை தெரிவு செய்யாது நமது உள்நாட்டு உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

உற்பத்திகளை பெ்றுக்கொள்வதற்கு தொடர்புகளுக்கு –

நிதர்சிகா 0768915974

மாதவிடாய் வலியால் வெற்றியை தவறவிட்ட வீராங்கனை – ஆணாக இருந்திருக்கலாம் என வேதனை !

மாதவிடாய் காரணமாக கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் பிரெஞ்ச் ஓபனில் அதிர்ச்சியூட்டும் வெற்றி வாய்ப்பை இழந்த சீன வீராங்கனை ஜெங் கின்வென், தான் ஒரு ஆணாக இருந்திருக்கலாம் என வேதனை தெரிவித்துள்ளார்.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான போலந்து நாட்டைச் சேர்ந்த இகா ஸ்விடெக்கிற்கு எதிராக பிரெஞ்ச் ஓபன் தொடரில் வெற்றி பெற்று அனைவரையும் அதிர்ச்சியடைய செய்யவேண்டும் என்ற தனது நம்பிக்கையை, கடுமையான வயிற்றுப் பிடிப்புகள் சிதைத்துவிட்டதாக சீனாவின் ஜெங் கின்வென் கூறினார்.

உலக தரவரிசையில் 74-வது இடத்தில் இருக்கும் 19 வயதே ஆகும் ஜெங், திங்கட்கிழமையன்று முதல் முறையாக ரோலண்ட் கரோஸ் அரங்கத்தில் விளையாடினார். அதுவும் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்விடெக்கிற்கு எதிரான போட்டியாக அமைந்தது.

 

இந்த போட்டியில் இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் ஜெங்கிற்கு, தனது காயம்பட்ட வலது காலில் மருந்து கட்ட மருத்துவ கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால், அதைவிட பெரிய கவலைகள் இருந்ததாக அவர் வெளிப்படுத்தினார்.

“அது பெண்களின் விஷயங்கள்” என்று ஜெங் தனது மாதவிடாய் வலியைக் குறிப்பிடுகிறார்.

“முதல் நாள் எப்போதுமே மிகவும் கடினமாக இருக்கும், பின்னர் நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும், முதல் நாளில் எனக்கு எப்போதும் மிகவும் வலி இருக்கும். “என் இயல்பிற்கு எதிராக என்னால் செல்ல முடியவில்லை, நான் ஒரு ஆணாக இருக்க விரும்புகிறேன், அதனால் நான் கஷ்டப்பட வேண்டியதில்லை” என்று கூறிய அவர்,இப்போது ஒரு பெண்ணாக மிகவும் கடினமாக இருக்கிறது என்று கூறினார்.

கால்வலி விளையாட்டைகடினமாக்கியது, ஆனால் வயிற்றுவலியுடன் ஒப்பிடும்போது அது ஓரணும் பெரிதல்ல, வயிறு மிகவும் வலியாக இருந்ததால் தன்னால் டென்னிஸ் விளையாட முடியாது என்கிறார்.

பிள்ளைகளுக்கு கொடுக்க உணவு இல்லை – அயல்வீட்டில் ஈரப்பலாக்காய் பறித்த தாய்க்கு நேர்ந்த சோகம் !

ஈரப்பலாக்காய் மரமொன்றிலிருந்து ஈரப்பலாக்காய்கள் இரண்டை பறித்து, அவ்விரு காய்களையும் விற்று கிடைத்த 100 ரூபாவில், அரை கிலோகிராம் அரிசியைக் கொள்வனவுச் செய்து வீட்டில் பட்டினியுடன் இருந்த குழந்தைகளுக்கு பசியைப் போக்கிய பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரப்பலாக்காய் மரத்துக்குச் சொந்தக்காரரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் வெலிகேபொல பொலிஸில், முறைப்பாடு செய்துள்ள அப்பெண், தன் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர், தனது உறவினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் தன்னுடைய சிறிய பிள்கைளுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை. இந்நிலையில், தன்னுடைய உறவுக்காரருக்குச் சொந்தமான ஈரப்பலாக்காய் மரத்திலிருந்து இரண்டு காய்களை பறித்து, அதனை விற்று, அரை கிலோகிராம் அரிசியை கொள்வனவுச் செய்து, சமைத்துக்கொடுத்தேன் என்றும் அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவின் ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடை நிறுத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

2012 இல் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலின்போது கொழும்பு, முல்லேரியா பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. பாரதலக்‌ஷ்மன் பிரேமசந்திர மற்றும் துமிந்த சில்வாவின் சகாக்களுக்கிடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதில் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உட்பட மேலும் சிலர் கொல்லப்பட்டனர். துமிந்த சில்வா உள்ளிட்டவர்கள் காயமடைந்தனர்.

குறித்த கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் பொது மன்னிப்பின்கீழ் கடந்த வருடம் விடுவிக்கப்ட்டிருந்தார்.

இந்தநிலையில் , துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஹிருணிகா மற்றும் அவரது தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தோடு துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்துள்ளது.