28

28

தம்மிக்க பெரேராவின் சொந்த செலவில் யாழில் குடிவரவு – குடியகல்வு அலுவலகம் !

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

 

தனியார் ஊடக நிகழ்வு ஒன்றில்  கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐந்து மாகாணங்களில் மேலும் ஐந்து குடிவரவு – குடியகல்வு அலுவலகங்களைத் திறக்குமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலாவதாக தனது சொந்தப் பணத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகமொன்றை திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்த வேலையும் செய்யாதோரின் எண்ணிக்கை திடீர் உயர்வு!

நாட்டில் குறைந்தபட்சமாக வேலைத் தேடுபவர்களை விட எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டிற்கான நாட்டின் வேலைப்படை தரவுகளின் படி, நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் உள்ள மக்கள் தொகை சுமார் 8.55 மில்லியன் ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் அல்லாதோர் சுமார் 8.58 மில்லியனாகவும் காணப்படுகிறது.

அவர்களில் , 73 சதவீதமானேர் பெண்களாக உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு கால அவகாசம் வழங்குங்கள் – ஐ.தே.க கோரிக்கை!

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையளித்தால் ஆறு மாதம், ஒரு வருடம், ஐந்து வருடத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என கூறும் எதிர்கட்சிகள் அந்த கால அவகாசத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்க மறுப்பது ஏன் ? என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர், ருவான் விஜயவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழில் வல்லுநர்களுடன் இன்று (28ம் திகதி ) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ருவான் விஜயவர்த்தன இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று இன்னும் இரண்டு மாதங்கள் பூர்த்தியாகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ருவான் விஜேவர்தன, இரண்டு வருடங்கள் சீரழிக்கப்பட்ட நாட்டை சில நாட்களிலேயே நாட்டை கட்டியெழுப்ப கூறுவது, இந்த நெருக்கடி சூழ்நிலையில் அரசியல் இலாபம் தேட முற்படுபவர்களே தவிர நாட்டை நேசிப்பவர்கள் அல்ல எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.

நாட்டை மீளவும் கட்டியெழுப்ப, முன்பிருந்த நிலைக்கு நாட்டை கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு குறிப்பிட்டளவு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என ருவான் விஜயவர்த்தன் கோரியுள்ளார்.

இலங்கை சிறுவர்களின் போஷாக்கான உணவுக்காக 20மில்லியன் அமெரிக்க டொலர்கள் – பைடன் அறிவிப்பு !

இலங்கையில் உள்ள சிறுவர்களும் உணவு பாதுகாப்புக்காக அமெரிக்காவினால் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஜீ – 7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 800,000க்கும் மேற்பட்ட இலங்கை சிறுவர்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் எதிர்வரும் 15 மாதங்களில் 27,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்குதல், அத்துடன் பாடசாலை ஊட்டச்சத்து திட்டத்திற்கு ஆதரவளிப்பதும் இந்த நிதியுதவியின் நோக்கமாகும்.

அத்துடன், உணவு உற்பத்தியை அதிகரிக்க 30,000 விவசாயிகளுக்கு விவசாய உதவி மற்றும் நிதி உதவியை வழங்குதலும் இந்த திட்டத்தில் உள்ளடங்கும். அதேபோல், இந்த 20 மில்லியன் மனிதாபிமான உதவியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் முகவரகத்தினால் (USAID) வழங்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் பசியை போக்கு முடியவில்லை என்றால் முடியவில்லை என்றால் பதவி விலகுவேன் என்கிறார் தம்மிக !

எதிர்வரும் 6 மாதங்களில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தமது இலக்கு என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பசியை போக்கு முடியவில்லை என்றால், அதிகாரத்தில் இருப்பது அர்த்தமில்லை என தனது தாய் தெரிவித்ததாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டொலர்களை உள்ளீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார். வங்குரோத்தடைந்த கம்பனிகளை பொறுப்பேற்று, அதனை கட்டியெழுப்பும் நிர்வாக திறன் என்னிடமுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டு மக்கள் பசியில் இருக்கும் போது நான் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. ஆக, சென்று எதையாவது செய் எனக்கூறியே அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்.

அதனை 6 மாதங்களுக்குள் செய்ய முடியாவிட்டால் அமைச்சு பதவியை துறக்குமாறு மனைவி அறிவுரை கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவியில் இருந்து நாட்டில் மாற்றத்தை செய்யத் தவறினால் ‘தாத்தா கம் ஹோம்’ என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் எச்சரித்துள்ளனர்.