09

09

மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது துணைவி மீது முட்டைகள் வீச்சு !

பிரித்தானியாவின் யோர்க் பகுதியில் இன்று பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது துணைவியரான ராணி கமீலா மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்தால் மன்னர் அதிர்ச்சியடைவில்லையென்றாலும் அவருக்கு மிக அருகில் இந்த முட்டைகள் வீழ்ந்துள்ளன. முட்டைகளை வீசிய நபரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளனர்.

இன்று யோர்க்ப்குதியில் அண்மையில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியான தனது தாயின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்தபின்னர் அங்குள்ள மக்களை சந்தித்தபோது இந்தசம்பவம் இடம்பெற்றிருந்தது.

பிரித்தானியாவின் யோர்க் பகுதியில் இன்று பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது துணைவியரான ராணி கமீலா மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்தால் மன்னர் அதிர்ச்சியடைவில்லையென்றாலும் அவருக்கு மிக அருகில் இந்த முட்டைகள் வீழ்ந்துள்ளன. முட்டைகளை வீசிய நபரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளனர்.

இன்று யோர்க்ப்குதியில் அண்மையில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியான தனது தாயின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்தபின்னர் அங்குள்ள மக்களை சந்தித்தபோது இந்தசம்பவம் இடம்பெற்றிருந்தது.

யாழில் ஆலய நிர்வாகத்தினர் பண மோசடி – வடமாகாண ஆளுநரிடம் முறையிட்டவர் மீது வாள்வெட்டு !

ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரிய வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பிய அந்நாட்டு பிரஜை ஒருவர் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் புதையலை தேடி விசேட அதிரடிப் படையினர் அகழ்வுப் பணி !

விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட நகைகள் அல்லது ஆயுதங்கள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு தேவிபுரம் “அ” பகுதியில் உள்ள வீட்டுக் காணி ஒன்றில் அகழ்வுப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளால் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வுப் பணியில் காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர், கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் !

கடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களில் மூவர் 14 வயதிற்கு உட்பட்டவர்களாவர். அதேவேளை 78 பேர் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களாவர்.

ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருட்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானவை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க புதிய சட்டங்கள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

பாடசாலைகளில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

மாணவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதற்கு,  தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் மாணவர்கள் தாக்கப்படுவது தொடர்பான சட்டங்கள் தொடர்பில்  பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையில், சிறுவர்கள் தொடர்பான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி மாதம்  விசேட குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் கூறினார்.

குறிப்பாக, 1995 ஆண்டின் 22 ஆம் இலக்க 308 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களுக்கு மேலதிகமாக உப சரத்துகளை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளன.  மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டவுடன், அதனை பொதுமக்கள், சிவில் அமைப்புகள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு கையளித்து இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டு, சட்ட வரைஞரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் மாணவர்கள் தாக்கப்படுவதுடன், சில மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நிலைமைகள் காணப்படுவதாக  உதயகுமார அமரசிங்க கூறினார்.

அதேபோன்று, மாணவர் தலைவர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் சம்பவங்களும் பதிவாவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்தவுடன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட பொலிஸ் விசாரணை பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான  நீண்டகால தீர்வாக பாடசாலை சமூகத்தை தௌிவுபடுத்தும் நடவடிக்கை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் அனுமதியுடன் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக பாடசாலை சமூகத்தை தௌிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க குறிப்பிட்டார்.

இலங்கையில் குரங்குகாய்ச்சல் நோயுடன் மேலுமொரு நபர் அடையாளம் !

மங்கிபொக்ஸ் (monkeypox) எனப்படும் குரங்கம்மை தொற்றுறுதியான இரண்டாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த குறித்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக டுபாயிலிருந்து நாடு திரும்பியிருந்த ஒருவர், மங்கிபொக்ஸ் தொற்றுடன் கடந்த 3 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார்.

இவர் குரங்கம்மையுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நபராவார்.

களனி பகுதியைச் சேர்ந்த 20 வயதான அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகிறார்.

வியட்நாம் கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐ.நாவிடம் பாரப்படுத்த வேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

வியட்நாம் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

குறித்த 303 பேரையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பாரா ளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று பாரா ளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த 303 பேரில் 264 ஆண்களும் 19 பெண்களும், 20 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைத்தால் அவர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் பொறுப்பளிக்க முடியும் என்று நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் கைதான தனுஷ்க குணதிலகவும் நாமல் ராஜபக்சவும் – நாமல் விசனம் !

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கும் கீர்திக்கும் மேலும் சேதம் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு விளையாட்டு நிர்வாகத்தில் தலையிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலேயே இது தொடர்பான பதிவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  வெளியிட்டுள்ளார்.

காணாமலாக்கப்பட்டோருக்கான விசாரணைகளை எதிர்க்கும் தமிழ் மக்கள் – நீதியமைச்சரை வரவேற்கும் எம்.ஏ.சுமந்திரன் !

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளுக்காக நடமாடும் சேவைகள் நீதியமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அதனை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.

 

இதே நேரம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக உருவாக்கப்பட்ட அலுவலகத்தின் தலைவர் எவருமே காணாமலாக்கப்ப்டவில்லை என தெரிவித்துள்ளார். அவருடைய கருத்து தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் “எவரும் காணாமலாக்கப்படவில்லை என காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் கூறியிருக்கிறார். மறுபக்கம் எங்களிடம் எவரும் சரணடையவில்லை என இராணுவம் கூறுகிறது. இதுபோன்ற கருத்துக்களால் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையை இழக்கின்றனர்.” என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும்போதே சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நீதி அமைச்சர் வட மாகாணத்தில் நடமாடும் சேவைகளை முன்னெடுப்பதை நான் வரவேற்கிறேன். இது வடக்கு மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சபையில் உரையாற்றிய நீதி அமைச்சர் இந்தியாவிலிருந்து வந்து மீள்குடியேறியவர்கள் தொடர்பில் பேசியிருந்தார். உண்மையில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியாவிலிருந்த வந்து இலங்கையில் மீள் குடியேற விருப்பத்துடன் இருக்கிறார்கள்.

எனினும் நாட்டின் தற்போதைய சூழல், மீள் குடியேறுவதாக இருந்தால் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாட்டுக்கு வருவதில் அவர்கள் தயங்கி வருகிறார்கள். எனவே இது தொடர்பில் நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதேவேளை காணாமலா க்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் நாட்டில் எவரும் காணாமல் போகவில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவே இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. எனினும் விசாரணைகளை மேற்கொள்ளாது இதுபோன்ற கருத்துகளை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சுயாதீனமான, நேர்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.