20

20

ரூபாய் ஒரு லட்சம் விருதை இயல்-இசை-நாடகக் கலைஞர் பார்வதி சிவபாதம் வெற்றிகொண்டார்! ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ பத்து பெண் ஆளுமைகள் பற்றிய நூல் வெளியிடப்பட்டது!!

2022 சிவஜோதி ஞாபகார்த்த விருதான ரூபாய் ஒரு லட்சம் பணப்பரிசையும் விருதுக்கான கேடயத்தையும் இயல்-இசை-நாடகக் கலைஞர் பார்வதி சிவபாதம் வெற்றிகொண்டார். இன்று நவம்பர் 20, கிளிநொச்சி திருநகரில் லிற்றில் எய்ட் ஆல் நடத்தப்பட்ட வருடாந்த சிவஜோதி ஞாபகார்த்த நிகழ்வில் இவ்விருதை பார்வதி சிவபாதம் அவர்களுக்கு, கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலாவும் சிவஜோதியின் தந்தையும் இணைந்து வழங்கினர். இவ்விருதுக்கு சிபார்ஸ்சு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் விந்தன் செல்லத்துரை, வள்ளிபுரம் ஏழுமலைப்பிள்ளை, கணேஸ் விஜயசேகரன் ஆகியோருக்கு ரூபாய் 5000 பணப்பரிசும் அவர்களது சேவையை கௌரவிக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வையொட்டி இலைமறை காயாக, நாளாந்த வாழ்வோடு சேர்ந்து சமூகத்தின் முன்னுதாரணங்களாகவும் வாழ்ந்த, வாழ்கின்ற பத்து பெண் ஆளுமைகள் பற்றிய ஹம்சகௌரி சிவஜோதியின் ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை வளர்ந்துவரும் பெண் ஆளுமைகளே தலைமையேற்று நூலை அறிமுகம் செய்து விமர்சனமும் செய்தமை நிகழ்வுக்கு வந்திருந்த அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நூலில் பல்துறைசார்ந்த பன்முக ஆளுமைகள் பதிவு செய்யப்பட்டனர்: பெண்ணியம் (செல்வி திருச்சந்திரன்), கல்வி (ஜெயா மாணிக்கவாசகன், சசிகலா குகமூர்த்தி, வலன்ரீனா இளங்கோவன்), இலக்கியம் (தாமரைச்செல்வி,), பொறியியல்துறை (பிரேமளா சிவசேகரம்), கலைத்துறை (பார்வதி சிவபாதம், வலன்ரீனா இளங்கோவன்), அரசியல், கலை, இலக்கியம் (கலாலக்ஷ்மி தேவராஜா), விளையாட்டுத் துறை (அகிலத்திருநாயகி சிறிசெயானந்தன்) இவர்களோடு பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு இனவெறியர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராடியவர் நாகம்மா செல்லமுத்து.

‘2022 சிவஜோதி ஞாபாகர்த்த விருது’ சிவஜோதி என்ற ஆளுமை – கலைஞன் சமூத்தை நேசித்தை கொண்டாடுவதற்காக கலைத்துறையில் தங்களை அர்ப்பணித்து சமூக நேசத்துடன் செயற்பட்டவர்களுக்கு வருடாவருடம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டு, 2021 சிவஜோதியின் முதலாம் ஆண்டு நினைவுமுதல் வழங்கப்பட்டு வருதாகத் தெரிவித்த லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன், சிவஜோதியின் இறுதியாண்டுகள் கிளிநொச்சி மண்ணில் நிலைபெற்றதால் இந்த ஆண்டுக்கான விருதை கிளிநொச்சி மண்ணில் இயல்-இசை-நாடகத்துறையில் வாழ்நாள் சேவையாற்றிய ஒருவருக்கு வழங்க சிவஜோதி ஞாபகார்த்தக் குழு தீர்மானித்து இருந்ததாகத் தெரிவித்தார். “தனது குழந்தைப்பருவம் முதல் இயல் இசை நாடகத்துறையில் தடம் பதித்து பதின்ம வயதிலும் அதில் ஈடுபட்டு கலைத்துறையிலேயே வாழ்க்கைத் துணையையும் தேர்ந்து கலைத்துறையில் தன் அடுத்த தலைமுறையையும் தடம்பதிக்க வைத்தமைக்காக இயல் இசை நாடகத்துறையில் அவரும் அவருடைய குடும்பத்தினரும் ஆற்றிய பங்களிப்பை கௌரவிப்பதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக காணொலியூடான தன்னுடைய பகிர்வில் குறிப்பிட்டு பார்வதி சிவபாதம் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலா தலைமையில் சிவஜோதியின் ஞாபகார்த்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் கருணாகரன் சமத்துவக் கட்சியின் செயலாளர் மு சந்திரகுமார் ஆகியோர் சிவஜோதியின் நினைவுகளை மீட்டினர். ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ நூல் அரங்குக்கு வர்ஷனா வரதராஜா தலைமை தாங்கினார். வெளியீட்டுரையை விராஜினி காயாத்திரி இராஜேந்திரன் வழங்கினார். உறுதி கொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம் எனும் தலைப்பில், யாழ்.பல்கலைக்கழக முகாமத்துவ பீட முதலாம் வருட மாணவி செல்வி ஹார்த்தியாயினி இராஜேஸ்கண்ணாவும், உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவி செல்வி மயூரகா ஸ்ரீஸ்கந்தராசாவும் உறுதிகொண்ட நெஞ்சினாள்களின் பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை எனும் தலைப்பில் ஆய்வாளரும் எழுத்தாளரும் மனிதம் அமைப்பின் உருவாக்குநர் சபை உறுப்பினருமான நிவேதா சிவராஜாவும் நூல் ஆய்வை மேற்கொண்டனர். இந்நூல் அரங்கு முற்றிலும் பெண்களால் அரங்கேற்றப்பட்டது என்பதும் இளம் தலைமுறைப் பெண்கள் அதனைத் திறம்பட மேற்கொண்டதும் அங்கு முன்ணுதாரணமாக அமைந்தது. அத்தோடு இந்நிகழ்வின் வெற்றிக் கேடயத்தைத் தட்டிச் சென்றவரும் ஒரு பெண்ணாகவே அமைந்ததும் நிகழ்வின் சிறப்பம்சமாகியது.

மேலும் இளம் பெண்களுக்கு புத்துணர்வூட்டுவதாக அமைந்த இந் நிகழ்வில்  200க்கும் மேற்பட்ட கலை, இலக்கிய, நூல் ஆர்வலர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றத்தின் விளைவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி – கோப்-27 முடிவு !

எகிப்தில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான உலக நாடுகளின் சந்திப்பு ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவால் இழப்பு மற்றும் சேதங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவியை வழங்குவதற்காகன திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதற்காக ஒரு நிதியத்தை ஸ்தாபிக்க எகிப்தில் இடம்பெற்ற கோப்27 அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

முன்னதாக பேச்சுவார்த்தையாளர்களிடையே அதிருப்தி இருப்பதாக கோப்27 இன் எகிப்திய தலைவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் “சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு” அவர்களுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தலுக்கு அமைவாக இணக்கப்பாடு காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கைத்தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட அதிகரித்துள்ள 1.5C வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் இலக்கு நிலைநிறுத்தப்படுமா என்பது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கைத்தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட அதிகரித்துள்ள 1.5C வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் இலக்கு நிலைநிறுத்தப்படுமா என்பது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு மேல் வெப்பநிலை அதிகரித்தால் மில்லியன் கணக்கான மக்களுக்கு அழிவுகரமான காலநிலை தாக்கங்கள் ஏற்பட சாத்தியம் உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் வரலாற்று ரீதியாக பெரும் பங்காற்றியதால், நூற்றாண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டியேற்படும் என்ற அச்சத்தில், செல்வந்த நாடுகள் 30 ஆண்டுகளாக நிதியுதவி பற்றிய விவாதத்தை எதிர்த்தன.

ஆனால், அண்மைய ஆண்டுகளில் பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் பிற இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கங்கள் சமநிலையை குறைத்துள்ளன.

இந்த நிலைமையே உயர்ந்து செல்லும் வெப்பநிலையால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து செல்வந்த நாடுகள் இறுதி பேச்சுவார்த்தைக்கு வருவதற்கான ஏதுநிலையை ஏற்படுத்தியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக பிரச்சாரம் செய்த நால்வர் கைது – மக்களே போலியானவர்களை நம்பி ஏமாறும் மக்கள்!

ருமேனியாவில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி பதுளை மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

ருமேனியாவில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு உரிய ஆட்கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (20) காலை குறித்த தனியார் ஹோட்டலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஓமானில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பெண்கள் – தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் பணிநீக்கம்!

ஓமானில் பணிக்குச் சென்ற இலங்கை பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மனித கடத்தலுக்கு எதிராக தான் செயற்பட்டு வருவதாகவும், தனக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு மூன்றாவது செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம், மானிப்பாய் அந்தோனியார் தேவாலயத்தின் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது சமூகத்தினர் மத்தியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ்போதைப்பொருள் பாவனை – தினசரி 400 கைதுகள்!

ஐஸ் போதைக்கு அடிமையான சுமார் 400 பேர் தினமும் விளக்கமறியலில் வைக்கப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை தற்போது 26,000ஐ தாண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் நெகிழ்வுப்போக்கு மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெகிழ்வாக இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (19) வவுனியாவில் இடம்பெற்ற, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலக திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை.

இன்று நீங்கள் ஜனாதிபதியாகி விட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும். அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும்.

நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.

நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

 

“நாட்டை பிளவுபடுத்தாமல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க திட்டமிடுகிறேன்.” வவுனியாவில் ஜனாதிபதி ரணில் !

வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75 ஆவது சுதந்திர தின விழாவின் போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை நேற்று (19) வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்கள் பல்வேறு காரணங்களால் சிரமப்படுவதாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க தாம் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

இந்த அலுவலகத்தில் இருந்தபடி வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியும். யாழ்பாணத்திற்கு மட்டுமே அனைத்தும் வழங்கப்படுவதாக அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். தற்போது வவுனியாவிலும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.

அமைச்சுக்களிலுள்ள அதிகாரிகளும் இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு முற்படுவார்கள் என நான் நம்புகின்றேன். அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் வடக்கு மக்களுக்குள்ள பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை வழங்க வேண்டும். அதேபோன்றே, இலங்கை சமூகத்தில் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. மலையக மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற சமூக கருத்து நிலவுகிறது.

எனவே இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே சிறந்த சந்தர்ப்பம். இந்தப் பிரச்சினைகள் முறையாகத் தீர்க்கப்பட வேண்டும். இது தொடர்பில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடவும் நாட்டைப் பிளவுபடுத்தாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

முதலில் மக்களின் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயற்படும்போது அந்த சந்தேகம் நீங்கிவிடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும். 83 இல் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அதுபோன்றே 2009 இல் இருந்தும் வெகுதூரம் வந்துவிட்டோம். எனக்கு தேசிய கீதத்தின் ஒரு வரி நினைவுக்கு வந்தது. அது, “ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ்வது” என்பதாகும். 75வது சுதந்திரதின விழாவின் போதாவது ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

இங்கு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 2015ஆம் ஆண்டு வடக்கு மக்களுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். எனினும் ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும். நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த வகையில் நெகிழ்வாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வாறாயினும் நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்து மிகவும் மகிழ்ச்சி. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் இவ்வாறானதொரு அலுவலகத்தை ஸ்தாபித்தமைக்காக ஜனாதிபதிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் நாம் நம்புகின்றோம்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை. இன்று நீங்கள் ஜனாதிபதியாகிவிட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும் அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.

FIFA 2020 – இன்று ஆரம்பமாகிறது உலகின் இரண்டாவது பெரிய விளையாட்டுத் திருவிழா – முழுமையான விபரங்கள்!

உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ம் திகதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது.

மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

 

A பிரிவு – கட்டார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

B பிரிவு – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

 

C பிரிவு – அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

D பிரிவு – பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

 

E பிரிவு – ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

F பிரிவு – பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

G பிரிவு – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

H பிரிவு – போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2-ம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நொக் அவுட்டுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 முதல் 6-ம் திகதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும். டிசம்பர் 9 மற்றும் 10-ம் திககளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ம் திகதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ம் திகதி நடக்கிறது. உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. ஏ பிரிவில் உள்ள கட்டார்-ஈக்வடோர் அணிகள் மோதுகின்றன.

இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.