21

21

இளவயது திருமணங்கள் : வெளித்தெரியாத பக்கங்கள்

சமூக அடிக்கட்டுமானத்தின் மிக முக்கிய அளவீடு அச்சமூகத்தில் பெண்களின் நிலை. அதனால் தான் பெண்களுடைய கல்வி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலை வரலாற்றுக்கு முந்திய காலத்திலும் சரி, கடந்து வந்த போராட்ட காலத்திலும் சரி அதற்குப் பிந்தைய காலத்திலும்; சரி இப்போதும் சரி கீழான நிலையிலேயே உள்ளது. உலகத்தில் 100 மில்லியன் பெண் குழந்தைகள் பதினெட்டு வயதுக்கு முன்னரேயே திருமணமாகின்றனர். இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டமே இளவயதுத் திருமணங்கள் கூடுதலாக இடம்பெறும் மாவட்டமாக உள்ளது.

 

பிபிசி செய்திகளின் படி கிழக்கு மாகாணத்தில் இளவயதுத் திருமணங்கள் 14 வீதத்தில் இருந்து 22 வீதமாக அதிகரித்துள்ளது. உலகில் இளவயதுத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக தெற்காசியா காணப்படுகின்றது. இலங்கையில் இந்நிலை மோசமானதாக இல்லாவிட்டாலும் சில சமூகங்களில் இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. இலங்கையில் திருமணவயது 18 ஆக இருந்த போதும் 12 வீதமானவர்கள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்கின்றனர். இவர்களில் இரண்டு வீதமானவர்கள் பதினைந்து வயதை எட்ட முன்பே திருமணம் செய்கின்றனர் என Protecting Environment andChildren Everywhere (PEaCE)  அமைப்பு தெரிவிக்கின்றது. ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தாலென்ன கல்வி இன்றியமையாதது. ஆனால் ஒரு பெண்ணுக்குரிய கல்வி அச்சமூகத்தின் அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்தி சமூகத்தின் நாட்டின் பொருளாதாரத்தை வளம்படுத்தி ஏற்றத்தாழ்வுகளை மிகக்குறைக்கும்.

 

பெண்களுடைய தலைமையில் நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தையும் சிறந்த நிர்வாகத்தையும் கொண்டிருந்தன. ஜேர்மனியில் ‘மம்’ என்று பிரியமுடன் அழைக்கப்பட்ட அஞ்சலா மேர்க்கல், நியூசிலாந்தில் ஜசின்டா ஆர்டன், பின்லாந்தில் சான மரின் போன்றவர்கள். சிறுமி கிரேற்ரா துன்பேர்க் சுற்றாடல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி உலகத் தலைவர்களையே சற்றுத் திரும்பிப் பார்க்கச் செய்தார். ஆனால் இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளில் வடக்கு மாகாணமும் முன்னிலையில் உள்ளது.

தேசம் திரை காணொளியில் மேலதிக விடயங்கள்

உலகின் மகிழ்ச்சியான நாடு தரவரிசைப் பட்டியலில் நாத்திகர்கள் அதிகமாக வாழும் பின்லாந்து முதலிடம். – காரணம் ஏன் தெரியுமா..?

உலகின் மகிழ்ச்சியான நாடு’ தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதலிடம் வகிப்பதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்தி அதனை அறிக்கையாக வெளியிடுவதை ஐ.நா. வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

அந்த அடிப்படையில் தற்போது வெளியான அதன் அறிக்கையில், மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையும், அதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஐரோப்பிய நாடான பின்லாந்து தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க் 2-வது இடத்தையும், ஐஸ்லாந்து 3-வது இடத்தையும், இஸ்ரேல் 4-வது இடத்தையும், நெதர்லாந்து 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்வீடன், நோர்வே, ஸ்விட்சர்லாந்து, லக்செம்பர்க், நியூசிலாந்து முறையே 6 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.

கனடா 13-வது இடத்தையும், அமெரிக்கா 15-வது இடத்தையும், ஜெர்மனி 16-வது இடத்தையும், இங்கிலாந்து 19-வது இடத்தையும், பிரான்ஸ் 21-வது இடத்தையும் பிடித்துள்ளன. சிங்கப்பூர் 25-வது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரகம் 26-வது இடத்தையும், சவூதி அரேபியா 30-வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஜப்பான் 47-வது இடத்தையும், பிரேசில் 49-வது இடத்தையும், சீனா 64-வது இடத்தையும், நேபாளம் 78-வது இடத்தையும், பாகிஸ்தான் 108-வது இடத்தையும், இலங்கை 112-வது இடத்தையும், மியான்மர் 117-வது இடத்தையும், வங்கதேசம் 118-வது இடத்தையும், இந்தியா 126-வது இடத்தையும் பிடித்துள்ளன. கடைசி இடமான 137-வது இடத்தை ஆப்கனிஸ்தான் பிடித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளான பின்லாந்து , சுவீடன்,  டென்மார்க், நோர்வே, போன்ற நாடுகள் தொடர்ந்து இந்த பட்டியலில் இடம்பிடித்து வருகின்றன. இதே நாடுகளில் தான்  நாத்திகம் பற்றிய கருத்தாடல்களை கொண்டவர்கள் அதிகமாக காணப்படுவதுடன், நாத்திக கருத்துக்களை  அல்லது மத சகிப்புத்தன்மையை கொண்டவர்களும் அதிகமாக வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் பின்லாந்து மக்களின் வாழக்கை பற்றியும் நோக்குதல் அவசியமாகிறது. பின்லாந்தை விட சிறந்த காலநிலையை கொண்ட பல நாடுகள் இருக்கின்றன, பணக்கார நாடுகள் பல இருக்கின்றன, மக்கள் தொகை அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள நாடுகள் பல இருக்கின்றன. ஆனால் ஏன் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து இருக்கின்றதுப் என்பதைக் காணலாம்.

இயற்கை சூழல் 

அங்கு பல பழமையான காடுகள், பளிங்கு போல தெளிவான ஏரிகள், வன விலங்குகள் இருக்கின்றன. காற்றிலும் நீரிலும் மாசு மிகக் குறைவு. இங்குள்ள மக்கள் எப்போதும் இயற்கைவளங்கள் சூழ்ந்த பகுதியிலேயே வசிக்க விரும்புகின்றனர். வீட்டுக்குள் அடைந்து கிடைப்பதை அவர்கள் விரும்புவதில்லை, இதுவும் மகிழ்ச்சிக்கான ரகசியங்களில் ஒன்று.

ஒற்றுமை

மிகவும் சுதந்திரமான மற்றும் நிதானமான வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்றுகின்றனர். இறுக்கமான சட்டங்கள் இல்லை என்றாலும் மிகவும் அமைதியான நாடாக இருக்கிறது பின்லாந்து.

பின்லாந்து கலாச்சாரம் மற்றொரு காரணம். மக்கள் போட்டிப்போடுவதை விட ஒன்றாக இணைந்து செயல்படுவதே ஊக்குவிக்கப்படுகிறது.

திணிக்கப்படாத கல்வி முறை

பின்லாந்து மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாக இருக்க காரணம் அங்கு குற்றங்கள் மிகக் குறைவு என்பதுதான். மேலும் பின்லாந்தின் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட கல்வி முறை மற்றோரு காரணம்.

பின்லாந்தின் பள்ளி அமைப்பு ஐரோப்பியாவில் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது இளைஞர்கள் அதிக வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது. மேலும் பின்லாந்தில் சிறந்த மருத்துவ அமைப்பும் இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்து இங்குள்ள மக்கள் உயர்தரமான வாழ்க்கையை அனுபவிக்க உதவுகிறது.

சமத்துவமான கல்வி முறை

பின்லாந்து மக்கள் மகிழ்ச்சிக்கான மிக முக்கிய காரணமாக கருதப்படுவது ஏற்றதாழ்வுகள் இல்லாமை தான். வேற்றுமைகளைக் கடந்து சமத்துவத்தை முன்னிருத்தும் போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான உதாரணமாக பின்லாந்து திகழ்கிறது.

சமூகத்தின் எந்த பொருளாதார பின்னணியில் இருந்து வருபவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது.

சகிப்புத்தன்மையுடைய மதக்கட்டமைப்பு 

மகிழ்ச்சி சுட்டெண்ணில் முதலிடம் வகிக்கும் பின்லாந்து உலகில் நாத்திகர்கள் அதிகம் வசிக்கும் நாடாகவும் உள்ளது. அதே நேரம் மதம் தொடர்பான சகிப்புத்தன்மை இந்த நாட்டு மக்களிடம் அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை சட்டக் கல்லூரியில் ஆங்கிலமொழி பரீட்சை – தோற்கடித்தது பாராளுமன்றம் !

இலங்கை சட்டக் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) காலை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் இடம்றெ்ற வாக்கெடுப்பின் போது குறித்த யோசனை தோற்கடிக்கப்பட்டது.

ஆங்கில மொழமூலத்தில் பரீட்சைகளும் பாடநெறிகளும் நடத்தப்படவேண்டுமென்ற யோசனைக்கு ஆதரவாக 1 வாக்கும் எதிராக 113 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சட்டக் கல்லூரி பரீட்சைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என சட்ட அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பேரில் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி 2020 டிசம்பரில் ஒருங்கிணைந்த சட்டக் கல்வி கவுன்சிலால் வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்க்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் உட்பட பல தரப்பினரும் இந்த நடவடிக்கையை விமர்சித்ததோடு, இது பெரும்பான்மையான மாணவர்களுக்கு நியாயமற்றது என்றும் கருதியமை குறிப்பிடத்தக்கது.

‘நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்த பின்னர் கடன் வாங்கியதற்கு பெருமைப்படுகிறார்கள்.” – லக்ஷ்மன் கிரியெல்ல

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்போது கடன் வாங்கிவிட்டதாக தற்பெருமை பேசி பயனில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் கையிருப்பை பூஜ்ஜியமாக குறைத்த இந்த அரசாங்கம் அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே கடனைப் பெற்றதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணத்தை வழங்குவதற்கான நிபந்தனைகள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நாட்டின் நீதித்துறை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊடகவியலாளர்களை நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி நசுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

21 திருத்தத்தின் மூலம் நீதித்துறை மற்றும் உயர் அதிகாரிகளின் சுதந்திரம் தற்போது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி அழிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழில் 15 வயது சிறுமிக்கு மதுபானம் பருக்கி கூட்டு பாலியல் வன்புணர்வு – இரண்டு இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 15 வயது சிறுமியை மதுபானம் பருக்கி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். அச்சுவேலியில் மதுபானம் பருக்கப்பட்டு சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார் என்று நேற்று முன் தினம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமியை பொலிஸார் மருத்துவமனையில் சேர்ப்பிக்கவில்லை. தாயாரை சேர்ப்பிக்குமாறு கூறியிருந்தனர். இந்த நிலையில் இரவு 8 மணி வரை சிறுமி மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக அறிந்த மனித உரிமைகள் ஆணைக்குழு சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்தே அவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனையில் சிறுமி போதையால் பாதிக்கப்பட்டமையும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையும் தெரிய வந்தது.

இதனிடையே அச்சுவேலி பொலிஸார் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவம் தொடர்பில் 22, 31 வயதான இருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் நேற்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இருவரையும் நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

“IMF நிதி வசதி (EFF) பற்றிய உண்மைகள் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட மாட்டாது.”- அமைச்சர் பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பெறப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய உண்மைகள் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட மாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.

இன்று (21) காலை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் அது தொடர்பான அனைத்து விடயங்களும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியளித்துள்ளார். நேற்றிரவு (20) இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிவசதி குறித்து கருத்து தெரிவித்த பந்துல குணவர்தன, உடன்படிக்கையின்படி, அடுத்த 48 மாதங்களுக்குள் யார் ஆட்சிக்கு வந்தாலும், சம்பந்தப்பட்ட அரசாங்கம் விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும் என்று விளக்கினார்.

அரசியல் கருத்துக்களால் சூழப்பட்டிருந்தாலும், திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நாங்கள் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளின்படி செயல்படாமல் இதற்கு முன் 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றிவிட்டோம் இம்முறையும் அது நடந்தால் நாடு மிகப் பெரிய பாதாளத்தில் விழும்.

எனவே, அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்படுவதற்கு மாறாக, வேலைத்திட்டத்திற்கு இணங்கிப் பணியாற்றுவதில் தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று நான் நம்புகிறேன் என்றார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்துக்கு எதிரான அரசியல் கட்சிகள் இது தொடர்பான மாற்று ஆலோசனைகள் மற்றும் சாத்தியமான தீர்வுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் அதன் பின்னர் விவாதம் அல்லது வாக்கெடுப்பு நடத்த முடியும் என்பதும் தனது தனிப்பட்ட கருத்து என்றும் அமைச்சர் கூறினார்.

இதே நேரம் “இலங்கை தசாப்த காலப்பகுதியில் அனுபவித்த மிக மோசமான நாணய நெருக்கடி காரணமாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலிருந்த அமைச்சர்களிற்கு தற்போது  சர்வதேச நாணயநிதியத்தின கடனை தொடர்ந்து புதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.” என ஜே.வி.பி கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

‘ஊழல் அரசாங்கங்களை பிணையெடுப்பதற்கே IMF நிதி வழங்குகிறது.”- ஜே.வி.பி சாடல் !

சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான நிதி உதவி திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள ஜே.வி.பி ஊழல் அரசாங்கங்களை பிணையெடுப்பது மாத்திரமே சர்வதேச நாணயநிதியத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் தற்போது அனுமதியளித்துள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கையின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தசாப்த காலப்பகுதியில் அனுபவித்த மிக மோசமான நாணய நெருக்கடி காரணமாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலிருந்த அமைச்சர்களிற்கு தற்போது  சர்வதேச நாணயநிதியத்தின கடனை தொடர்ந்து புதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.