25

25

“வடக்கின் பிரச்சனையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சனையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும்.”- யாழில் வசந்த முதலிகே !

வடக்கின் பிரச்சனையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சனையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும்  எனஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவரும் வசந்த முதலிகே தெரிவித்தார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக  நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பாக பொதுக்கருத்தரங்கு இன்று யாழில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவருமான வசந்தமுதலிகே தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்துதெரிவிக்கையிலேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவருமான வசந்தமுதலிகே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீதியாக இருக்கும் விடயம் போராட்டம், அதில் ஒன்றிணைந்து போராடுவதே நிலைப்பாடு அதனை பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் நம்புகின்றது. வடக்கில் காணிப்பிரச்சினை, இராணுவ மாயக்கப்பட்ட பிரச்சினை, வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் ஏனைய பிரச்சினைகள் தீர்த்துவைக்ககூடிய முதற்படியின் பயங்கரவாதச்சட்டத்தின் ஊடாக கொண்டுசெல்ல முடியும்.

வடக்கின் பிரச்சினையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சினையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்படவேண்டும். அதுதான் எமது நிலைப்பாடு. அதற்கான முதற்கட்டமாகவே கருத்தரங்கு யாழில் இடம்பெற்றுள்ளது.

இந்த பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கவேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே ஆணித்தரமான கருத்தாகவே காணப்படுகின்றது. கடந்த காலத்தில் மக்கள் அணிவகுப்பில் நின்றதை அவதானித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டம், என்ற விடயத்திற்கு துணைநின்ற எங்களுக்கு அரசின் மூலம் அறிவிக்கப்பட்டது பயங்கரவாதம் என்றனர்.

டிலான் அலெஸ், ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவின் ஒன்று சேர்ந்து பொய்யான சாட்சிகளை உருவாக்கி தடுத்துவைத்து விசாரணை செய்யும் நோக்கில் அவர்கள் இரண்டு வருடங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு உள்ளாக்கினர். 1979 ஆவது ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாதச்சட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரையான காலம் வரை 100க்கு மேற்பட்டவர்கள் இன்னும் தடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்போது அரசாங்க புதிதாக சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் அதில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை கொண்டுள்ளனர். அதில் போராட்டங்களின் போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட முடியாது என்பதை கொண்டுவந்துள்ளனர்.

இப்போது பொஸிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மூலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை நிலைநாட்டமுடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் – என்றார்.

“ராகுல் Vs மோடி மோதலும் – பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியலும்” : அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன்

அண்மையில் நடக்கும் சம்பவங்களை தொகுத்துப் பார்த்தால், இந்த இருதுருவ அரசியல் மோதல் இந்திய நாடாளுமன்ற அதிகாரத்திற்கான போட்டி போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் மாறிவரும் பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல் என்பது ஆழமான பங்கினை வகிப்பது போலுள்ளது.

The many Khalistani attacks on Indian embassies from UK to America

மோடியின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் அதானியின் மீதும், அவர் உருவாக்கிய அதானி குழும சாம்ராஜியத்தின் மீதும், மேற்குலக ஹின்டன்பேர்க் நிகழ்த்திய தாக்குதலும், கிடப்பில் போடப்பட்டிருந்த குஜராத் படுகொலை ஆவணங்களைத் தூசிதட்டி வெளியிட்ட மேற்குலகின் பழம்பெரும் பிபிசி ஊடகத்தின் நகர்வும், அடுத்து வரப்போகும் பூகோள அரசியலின் இராஜதந்திர மோதல்களுக்கு அடித்தளமிட்டது போல் தெரிகிறது. தற்போது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மீண்டும் கிளம்பியுள்ள சீக்கியர்களின் ‘காலிஸ்தான்’ முழக்கங்கள் இதனை மேலும் வலுப்படுத்துகிறது.

ரஷ்யா-உக்ரேயின் போரில், ரஷ்யா மீது கண்டனங்களைத் தெரிவிக்காமல் நழுவல் போக்கினை இந்தியா கடைப்பிடிப்பதாக மேற்குலகம் கருதுவதை, இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ளும் பொதுவெளி ஊடக உரையாடல்களில் வெளிப்படும் கருத்து மோதல்கள் உணர்த்துகின்றன. “ஐரோப்பாவின் பிரச்சினை மட்டுமே உலகத்தின் பிரச்சினையல்ல” என்று ஜெயசங்கர் அவர்கள் கடும் தொனியில், ஊடகச் சந்திப்பொன்றில் கூறியது இம்மோதலை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Germany, Japan seek deeper ties during Scholz visit – DW – 04/27/2022

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை மையம் கொண்ட குவாட்(QUAD) இல் இந்தியா இருந்தாலும், ஆக்கஸ் (AUKUS) என்கிற உயர் தொழில்நுட்பக்கூட்டில் இந்தியாவும் இல்லை. ஜப்பானும் இல்லை. ஆனாலும் சீனாவிற்கு எதிரான QUAD அணியில் இந்தியாவின் வகிபாகத்தைப் பலப்படுத்த G7 இலுள்ள ஜப்பானைப் பயன்படுத்துகிறது அமெரிக்கா. அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜப்பானிய அதிபர், நடைபெறும் போரில் உக்ரேனுக்கு ஆதரவான நிலைப்பாட்டினையும், தென்சீனக்கடலில் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்குமாறு இந்தியாவை வலியுறுத்தினார். இதனை ஜப்பான் ஊடான அமெரிக்காவின் மென்போக்கு அணுகுமுறை என்று கணிப்பிடலாம். ஆகவே இந்தியாவை மையச்சுழல் புள்ளியாகக் கொண்ட, மேற்குலகின் புவிசார் அரசியல் நகர்வுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டதனை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன. இலங்கையிலும் மேற்குலகின் இராஜதந்திரிகள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பதில் அக்கறை கொள்வதைக் காணலாம்.

அடுத்ததாக இந்திய அரசியலில் இதன் எதிர்வினைகள் என்னவென்று பார்க்கலாம். தமது பிராந்திய மூலோபாய நலனிற்குத் தேவையான நாடொன்று, நடுநிலையாகவோ அல்லது எதிரணியில் இருந்தாலோ, அந் நாட்டினை தம் பக்கம் இழுக்க பல நகர்வுகள் மேற்கொள்ளப்படும். அதில் ஆட்சிமாற்றமும் ஒன்று. இவைதவிர புதிதாக ஒரு பொருண்மிய அல்லது இராணுவக் கூட்டினை அமைத்து, அந்த ‘சிக்கலான’ நாட்டினை உள்வாங்கிக் கொள்வார்கள். இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட ஆட்சிமாற்றத்திட்டத்தில், ராகுல் காந்தியின் இந்திய காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கப்படுகிறது. அவரின் அண்மைக்கால புவிசார் அரசியல் கலந்த பேச்சுக்கள் மேற்குலக நிலைப்பாடுகளுக்கு இசைந்து போவதைக் காணலாம். இலண்டனில் நடைபெற்ற இந்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய ராகுல் காந்தி, ‘ இந்தியா மீதான சீனாவின் பாரிய அச்சுறுத்தலை வெளிநாட்டமைச்சர் புரிந்துகொள்ளவில்லை’ என்கிறார். ஆகவே மேற்குலகின் புவிசார் அரசியலோடு இணைந்து, ஹின்டன்பேர்க் அம்பாக மாற, ராகுல் காந்தி வில்லாக மாறி அதானியையும், ‘ஹவாலா’ மோடிகளையும் விமர்சிக்கும் ஒரு இந்தியத் தலைவராக தன்னை இனங்காட்டிக் கொள்ள முனைகிறாரா? என்கிற கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை. இதற்கு அவசர அவசரமாக எதிர்வினையாற்றிய மோடி அரசு, ஹவாலா மோடிகளோடு நரேந்திர மோடியை சரிநிகர் பிம்பமாக சித்தரித்துப் பேசிய ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்து அவரை முடக்கிவிட்டது.

ஆகவே இந்திய நாட்டின் எதிர்க்கட்சியின் நிலை பலவீனமாக இருப்பதால், அரசின் புவிசார் நிலைப்பாட்டில் மாற்றங்களை நிகழ்த்துவது கடினமானதாகவிருக்கும் என்பதே நிதர்சனமாகும். 18 நாடுகள் இந்திய ரூபாவில் வர்த்தகம் செய்ய உடன்பட்டிருப்பதும், BRICS இன் விரிவாக்கமும் அதன் பொது நாணய உருவாக்க முன்னெடுப்பும், உலக எண்ணெய்ச்சந்தையில் ஏற்படும் மாற்றமும், அமெரிக்க- ஐரோப்பிய வங்கிகளின் நிதி மூலதன வெளியேற்றங்களும் சேர்ந்து உலக நிதிக்கட்டமைப்பில் பெருமாற்றங்களை நிகழ்த்தக்கூடிய வாய்ப்புக்களை காண்பிக்கிறது. இதில் இந்தியாவின் பூகோள அரசியல் நிலைப்பாடு குறித்தே மேற்குலகமும் ஜப்பானும் அதிக கரிசனை கொள்கிறது. ஆனாலும் இந்தியா மீதான மேற்கின் மறைமுக அழுத்தங்கள் அதிகரிக்கும் போக்குகளே அதிகமாகும் என்று தெரிகிறது.

இதயச்சந்திரன் (25-03-2023)

வட மாகாண ஆளுநர் நியதிச் சட்டங்களை இயற்றியது தவறு – சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு !

வட மாகாண ஆளுநர் நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்தமை தவறான செயற்பாடு என்று சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டு நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, குறித்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக எதிர்வரும் மே 24ஆம் திகதியன்று மீண்டும் இவ்விடயத்தினை மன்று கவனத்தில் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தன்னிச்சையாக நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்த வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நடவடிக்கைக்கு எதிராக வட மாகாண சபை இல்லாத காலத்தில் சட்ட வரம்பை மீறி ஆளுநர் தன்னிச்சையாக வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்பதை வலியுறுத்தி வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தாக்கல் செய்த தடைகேள் ஆணை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பந்துல கருணாரட்ன மற்றும் எம்.மரிக்கார் அமர்வின் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மனுதாரரான சீ.வீ.கே.சிவஞானம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மற்றும் நிரான் அன்கிட்டல் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அப்போது ஆளுநரின் நியதிச் சட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு தடைவிதித்தும், குறித்த சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தாமல் இருக்குமாறும் எழுத்தாணையை பிறப்பிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், ஆளுநரின் நியதிச்சட்ட வர்த்தமானி அறிவித்தல் தவறானது என்றும் அதனை செயற்பாட்டிலிருந்து நீக்குவதாகவும் மன்றுக்கு அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த செயற்பாடு நடைமுறையில் இடம்பெறுவதை அவதானிப்பதற்காக மீண்டும் மே 24ஆம் திகதி மன்று குறித்த விடயத்தினை கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“மத்திய வங்கி இலங்கை மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி , சர்வதேசத்தின் ஆட்சிக்கு உட்படும்.” – எச்சரிக்கிறார் உதய கம்மன்பில !

“மத்திய வங்கி இலங்கை மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி , சர்வதேசத்தின் ஆட்சிக்கு உட்படும்.” என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தினை சர்வசன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுமீதான இன்று (24) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்ட மூலத்தில் நிறைவேற்றதிகாரம் , சட்டவாக்க சபைக்கு அப்பால் முற்றிலும் சுயாதீன மத்திய வங்கியை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நிர்வாகமும் இன்றி சுயாதீன மத்திய வங்கி ஸ்தாபிக்கப்படுமானால் அதன் மூலம் அசுரன் ஒருவனே தோற்றம் பெறுவான் என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதியரசர்களால் இவ்வாறு பகிரங்கமாக சுட்டிக்காட்டப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதற்கான சட்ட மூலத்தின் ஊடாக நிறைவேற்றதிகாரம் மற்றும் பாராளுமன்றத்திற்கு சமாந்தரமாக அரசமைக்கக் கூடிய அதிகாரம் கிடைக்கப்பெறும் என்பதை நாமும் இதன் போது சுட்டிக்காட்டினோம்.

இதன் ஊடாக நூல் அறுந்த பட்டம் போன்று மத்திய வங்கி இலங்கை மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி , சர்வதேசத்தின் ஆட்சிக்கு உட்படும். எனவே சர்வனவாக்கெடுப்பின்றி இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது என்ற தீர்ப்பினை வழங்க வேண்டும் என நாம் நீதிமன்றத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம் என்றார்.

செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியர் அமெரிக்காவில் கைது !

அமெரிக்காவில் சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் இந்தியாவை சேர்ந்த ஏஞ்சலோ விக்டர் பெர்னாண்டஸ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் பயணித்த ஒரு பயணிக்கு செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பயணியிடம் குழந்தைகளுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள தான் ஏற்பாடு செய்வதாகவும் விக்டர் கூறியுள்ளார். இது தொடர்பான புகாரில் விக்டர் மற்றும் அந்த பயணி கைது செய்யப்பட்டு அமெரிக்காவின் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இதன் தீர்ப்பு வெளியானது. இதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததற்காக விக்டருக்கு 15 வருடம் 8 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை காணவில்லையாம் – விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார்!

யாழ். பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான மின் பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையிலிருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் நீண்டகாலமாக களவாடப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்குள்
சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மின் இணைப்பு வயர்கள், கட்டுக்கட்டாக காணாமல் போயுள்ளன.

இதனை அறிந்துகொண்ட நிர்வாகம் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு குழந்தைகளைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்த லண்டன் வெம்பிளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சதானந்தன்!

லண்டன் வெம்பிளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சதானந்தன் (62) ஒரு வீட்டில் பெண் குழந்தையும் மற்றுமொரு வீட்டில் ஆண் குழந்தையையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை மார்ச் 21 லண்டன் ஜஸ்ல்வேர்த் கிரவுண் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. லண்டனில் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் பாலியல் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டு நான்கு மாதங்களுக்குள் மற்றுமொரு பாலியல் குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். சுப்பிரமணியம் சதானத்திற்கான தண்டனைக்கான நீதிமன்ற அமர்வு யூன் 16 நடைபெற இருக்கின்றது.

பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னும் கலாநிதி நித்தியானந்தன், ஆச்சுவே உயர்வாசற் குன்று முருகன் ஆலயம் உட்பட உட்பட சைவ ஆலயங்களில் முக்கிய உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கி சமூகத்தில் தங்களை அம்பலப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் லாகுர்னேயில் சிவாலயம் நடத்துகின்ற ஜெயந்திரன் வெற்றிவேலு யாழ்ப்பாணத்தில் இளம்பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவர்களுக்கு போதையூட்டி சமூகச் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றார். போதைப்பொருள் தொடர்பில் அவர் மீதும் நல்லூரடியில் உள்ள அவருடைய லகஸ் ஹெட்டல் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. லாக்கூர்னே சிவன் கோவிலில் இருந்து பெறப்படும் பணத்திலேயே ஜெயந்திரன் என்ற குடுமிஜெயா சமூகச் சீரழிவு வேலைகளைச் செய்து வருகின்றார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இவர் தற்போது சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ்ப்பாணத்தின் முக்கிய வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் சதானந்தனின் செயற்பாடுகள் பற்றி தேசம்நெற்க்கு தெரியவருவதாவது குடும்பங்களோடு நெருங்கிப் பழகிய சதானந்தன் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று அப்பிள்ளைகளை பாலிஸ் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

பெண் பிள்ளையை அவர் பன்னிரெண்டு வயதாக இருக்கின்ற போது தன்னுடைய வியாபாரம் சம்பந்தமாக சில ஆவணங்களைத் தயாரிக்க வேண்டும் என்று சொல்லி கணணியைப் பயன்படுத்த என்று சொல்லி அப்பிள்ளையின் படுக்கைஅறைக்கு சென்றுள்ளார். அங்கு ‘இது வேறொருவருக்கும் தெரியத் தேவையில்லை. இது எனக்கும் உங்களுக்கும் உள்ள ரகசியம்’ என்று சொல்லி அப்பிள்ளையை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

அதேசமயம் மற்றைய வீட்டிலும் நம்பிக்கையின் அடிப்படையில் அவ்வீட்டிற்குச் சென்று அந்த ஆண் பிள்ளையையும் ஒன்பது வயது முதல் 13 வயதுவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
ஏப்ரல் 27, 2019இல் சுப்பிரமணியம் சதானந்தத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சும்பிரமணியம் சதானந்தன் மே 10, 2019இல் கைது செய்யப்பட்டார்.

அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிரேமகுமார் ஆனந்தராஜா கைது செய்யப்பட்டிருந்தார். இரு குற்றவாளிகளுமே ஆரம்பத்தில் இருந்து தாங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தே வந்தனர்.
சுப்பிரமணியம் சதானிற்கு எதிராக எட்டு முறையற்று நடந்துகொண்ட குற்றச்சாட்டுகளும் இரண்டு சிறுவர்களோடு முறையற்று நடந்துகொண்ட குற்றச்சாட்டுகளுமாக பத்துக் குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

இவ்வழக்குத் தொடர்பில் கருத்து வெளியிட்ட மெற் பொலிஸின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரி நில் சிமித்சன் “நானும் எனது குழுவும் பாதிக்கப்பட்ட இருவரும் முன்வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸில் முறையிட்டதை வரவேற்கிறோம். அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க, நாங்கள் அவர்களுக்கான உதவியையும் ஒத்துழைப்பையும் விசாரணை முழுவதும் வழங்கி இருந்தோம்.

பாலியல் துன்புறுத்தல்கள் அது பல ஆண்டுகளுக்கு முன் நடந்திருந்தால் என்ன இப்போது நடந்துகொண்டிருந்தால் என்ன, யார் வந்து எங்களிடம் முறையிட்டாலும் நாங்கள் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்போம் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் உங்களை நம்புவோம்” என்று தெரிவித்து இருந்தார்.

பெண் பிள்ளை வளர்ந்து பல்கலைக்கழகம் சென்ற பின்னரேயே ஸ்கைப் மூலமாக தனது பெற்றோருக்கு இச்சம்பவத்தை தெரியப்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆண் பிள்ளையும் தனக்கு நிகழ்ந்ததை வெளிப்படுத்தி இருந்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட இந்தக் கொடிய அனுபவம் பிரேமகுமார் ஆனந்தராஜயாவினால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளையின் அனுபவமும் ஓரே மாதிரியானதாகவே உள்ளது. குடும்பத்தாரோடு நெருங்கிப் பழகி, நம்பிக்கையை உருவாக்கி அதன் பின் பிள்ளைகள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள்.

பாலியல் குற்றவாளிகளான பிரேமகுமார் ஆனந்தராஜாவும் சுப்பிரமணியம் சதானந்தனும் ஒரு சில மைல் தூர வித்தியாசத்திலேயே வாழ்பவர்கள். இவர்கள் ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களா என்பதை இச்செய்தி பிரசுரிக்கும் வரை உறுதிப்படுத்த முடியவில்லை.