April

April

யாழ்ப்பாணம், அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நீக்க கோரி பெண்கள் அமைப்பு கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை  வேண்டாம் என்று கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு இன்று(20) வியாழக்கிழமை மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது.

அம்பாறை மாவட்டம்  மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது .

அதன் போது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இந்த கூட்டு முன்னணியின் சுமார் 300 பெண்கள் மும்மொழிகளிலுமான சுலோகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இறுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம் என்ற தலைப்பிலான மகஜரை பகிரங்கமாக வாசித்து கோஷம் எழுப்பி போராட்டத்தை நிறைவு செய்தனர்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் எனவும், கருத்து சுதந்திரம் பறிபோகும் என்றும், இது முற்றுமுழுதாக வேண்டாம் என்பதையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை யாழ்ப்பாணத்திலும் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்பு போராட்டம்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்”, “பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

“குரங்குகளை மட்டுமல்ல காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகளையும் வெளிநாடுகள் கேட்டால் ஏற்றுமதி செய்வோம்.” விவசாய அமைச்சு !

பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கேள்வி ஏற்பட்டால் அவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிராக உள்ள தென்னந்தோப்புக்கு மிகப்பெரிய சேதம் டோக் மக்காக்கள், குரங்குகள் மற்றும் ராட்சத அணில்களால் ஏற்படுகிறது.

2022 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் 93 மில்லியன் தேங்காய்கள் குரங்குகள், மக்காக்கள் மற்றும் ராட்சத அணில்களால் அழிக்கப்பட்டுள்ளன என்றும், 2022 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 180-200 மில்லியன் தேங்காய்களாக உயரக்கூடும் என்றும் அறிக்கைகள் காட்டுகின்றன.

இந்த விலங்குகளினால் ஏனைய பயிர்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குரங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமா என்பதை ஆராய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை அமைச்சரினால் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும், சீனாவுக்கு மாத்திரமன்றி அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் குரங்குகள் ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் சீனாவில் உள்ள 1,000 உயிரியல் பூங்காக்களுக்கு இந்த விலங்கு வழங்கப்படும் என்றும், அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்த விலங்குகளை சீனாவுக்கு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் அமைச்சரவையில் இறுதி முடிவு அல்லது முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“சீனாவுக்கு அனுப்ப வேண்டியது குரங்குகளை அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களையே.” – சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல

ஒரு இலட்சம் குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளையை எடுத்து பச்சையாக சாப்பிடுவதற்காக சீனாவுக்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தங்களால் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம் நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது. இருப்பினும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, அதிக எண்ணிக்கையிலான வன விலங்குகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சட்ட விதிகள் எதுவும் இல்லை. இந்தச் சட்டத்தின்படி, வனவிலங்குகளை விற்பனை செய்வதில் ஈடுபடக் கூடாது என்று ஒப்பந்தம் செய்துள்ளதால், பணத்திற்காக நம் நாட்டில் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது.

வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வது அன்னிய செலாவணியை கொண்டு வர உதவாது. ஆனால், அரச அதிகாரி ஒருவரின் மனைவி திரைமறைவில் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும், குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளையை பச்சையாக சாப்பிடும் சிறப்பு உணவு தயாரிக்கும் முறை சீனாவில் நடந்து வருவதாகவும் அமெரிக்காவிலிருந்தும் அதிக அளவில் குரங்குகளுக்கான முன்பதிவு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குரங்குகள் மனிதர்களின் உடல் அமைப்பைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன, எனவே, அவை இறுதி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும். குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த ரன்வெல்ல, நாட்டை நாசப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றுமதி செய்ய தீர்மானம் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த குரங்குகளால் பயிர்களில் பெரும் பங்கு அழிந்து வருகிறது. எனினும் அவற்றை ஏற்றுமதி செய்வது அதற்கான தீர்வாகாது. பயிர்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளோம், ஆனால் அரசாங்கத்தில் யாரும் அவற்றைக் கேட்கத் தயாராக இல்லை. பயிர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியோர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கே முதலிடம் பெறுவார். எனவே, அவரையும் எங்காவது ஏற்றுமதி செய்யவேண்டும்” எனவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

8 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு 156 ஆண்டுகள் சிறை !

அமெரிக்காவில் 8 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த நபரொருவருக்கு 156 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – இண்டியானா மாகாணத்தை சேர்ந்த டாரெல் குட்லோ என்பவர் 8 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளை மற்றும் வளர்ப்பு நாயை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், இவ்வாறு மொத்தம் 57 குற்ற வழக்குகள் இவர் மீது பதிவாகியுள்ளது.

இந்த வழக்குகள் இண்டியானா மாகாண நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இதில் டாரெல் குட்லோ மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளது.

இதையடுத்து டாரெல் குட்லோவுக்கு 156½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா – ஒருவர் பலி !

கொரோன தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேருக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொவிட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – கண்டுகொள்ளாத அதிபர் – கடமையை செய்யாத வலிகாமம் வலய கல்வி அலுவலகம் !

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியரால் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் முறையிட்ட மாணவியொருவர் பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயர்தர வகுப்பில் வர்த்தக பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே மாணவிகளிற்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவியொருவர் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து, மாணவியை வேறு பாடசாலைக்கு மாற்றுவதென்றால் மாற்றுங்கள் என பெற்றோரிடம், அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மாணவி, வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பிறிதொரு பாடசாலையில் இணைந்துள்ளார்.

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவரும் நிலையில் பாடசாலை நிர்வாகம் பாடசாலைகள் பாதுகாப்பானவை என்ற எண்ணத்தை  பெற்றோருக்கும் – பிள்ளைகளுக்கும்  ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய பாடசாலை அதிபரே பாடசாலையை விட்டு விலகும்படியாக மாணவியிடம் தெரிவித்திருப்பது அபத்தமானது.

இது தொடர்பில் வலிகாமம் கல்வி வலயம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கடந்த வருடம் இதுபோல முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள பிரதானமான பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் உயர்தர ஆண் மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தி அதன் மூலமாக பாடசாலையின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோக்களாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கும் – இதனைக் கண்டு கொள்ளாது இருக்கும் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளுக்கும் எதிராக உறுதியான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் கல்வி கற்ற சமூகம் எடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

இதனைக் கண்டுகொள்ளாது கடந்து செல்வோமாயின் பாடசாலை கல்வியை தொடரும் முன் வரும் பல மாணவிகளின் எதிர்காலமே கேள்விக்கு உள்ளாகும் துப்பாக்கிய நிலை ஏற்படலாம் என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

குரங்குகள் வேண்டாம் என சீனா அறிவிப்பு – சீனாவுக்கு அனுப்ப ஒரு குரங்கிற்கு 25000 ரூபா என விவசாய அமைச்சர் தெரிவிப்பு !

ஒரு குரங்கினை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தோராயமாக 20,000 முதல் 25,000 ரூபா வரை செலவழிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பில் நாட்டில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த திட்டம் சீன நிறுவனத்திடம் இருந்து எங்களிடம் வந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களை அமைச்சரவையில் தெரிவிப்போம்.

இதை செயல்படுத்துவது குறித்து துணைக்குழுவின் ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்படும். அதிகமாக வழங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 1000 உயிரியல் பூங்காக்கள் உள்ளன.

ஸ்டெர்லைசேஷன் திட்டப்பணிகள் செய்யப்பட்டு அனைத்தும் தோல்வியடைந்து விட்டன.

சில மேற்கத்திய நாடுகள் மான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மானை கொல்ல கால அவகாசம் கொடுக்கின்றன. மற்றும் இறைச்சிக்காக விற்கவும். திமிங்கலங்கள் கொல்லப்பட்டு விற்கப்படுகின்றன. கங்காருக்கள் வளரும்போது கொல்லப்படுகின்றன.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூட நாளை மறுநாள் வரை தங்கள் வீடுகளில் இருக்க முடியாது. ஓரிரு நாள் குரங்குக்கு சாப்பாடு கொடுத்த பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொல்வோம். அப்போதுதான் புரியும்.

அவர்கள் உடனடியாக செயல்படுத்தத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த மாதம் சுமார் 1000 குரங்குகளுக்கு அட்வான்ஸ் தர அனுமதி கேட்டார்கள். ஆனால் அப்படி அனுமதி கொடுக்க முடியாது.

இந்த மறுபரிசீலனைப் பணத்தை பறிமுதல் செய்யச் சொன்னார்கள். நான் பார்க்கிறபடி, ஒரு குரங்கை பிடிப்பதற்கு 20,000 முதல் 25,000 ரூபாய் அந்த ஆட்கள் செலவழிக்க வேண்டும்.

நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கூண்டு வகை உள்ளது என்று ஏற்கனவே சொன்னார்கள். விலங்குகளை சேதப்படுத்தக்கூடாது.

இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டு பேசினாலும் இறைச்சிக்கு விலங்குகளை அனுப்ப மாட்டார்கள். ஒரு குரங்கை இறைச்சிக்காக சாப்பிட 50,000 அல்லது 75,000 கொடுக்க அவர்களுக்கு பைத்தியமா? – எனவும் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை நேற்றைய தினம் இலங்கைக்கான சீன தூதரகம் இலங்கையிலிருந்து குரங்குகளை கொள்வனவு செய்வது தொடர்பான எந்த பேச்சுக்களும் அரச தரப்பில் இருந்து இடம்பெறவில்லை என தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் அமைச்சரவையில் தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளமையும் நோக்கத்தக்கது.

இலங்கையில் இருந்து ஏதிலிகளாக 5 பேர் தமிழ்நாட்டில் தஞ்சம் !

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர், தமிழகத்தில் ஏதிலிகளாக நேற்று தஞ்சமடைந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, அவர்கள் தமிழகம் இராமேஸ்வரத்தை அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், மூன்று சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குடும்பத்தினர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

அவர்களிடம் கரையோர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், மண்டபம் முகாமில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்பட்டால்..?” – இலங்கை ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை!

வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வியை பணயக் கைதிகளாக ஆக்குவதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

“தாய் – தந்தை – மகன் இடையே மோதல்” – தந்தையை கொலை செய்த மகன் – கிளிநொச்சியில் சம்பவம் !

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் மகனால் தாக்கப்பட்ட தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.00 மணியளவில் தந்தை – தாய் –  மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவே உயிரிழந்துள்ளார்.

தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இறத்த தந்தையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இறந்தவர் பிச்சைமுத்து இராமசாமி 64 வயதுடையவர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.