14

14

ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 76 இலங்கை பணிப்பெண்கள் தஞ்சம் !

ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 76 இலங்கை பணிப்பெண்கள்ஞ்ச தஞ்சமடைந்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் 36 பேர் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு சென்று பணிபுரிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பணியகத்தில் பதிவு செய்யாது, வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளுக்காக செல்வோருக்கு, எதிர்வரும் காலத்தில் பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சம் வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாது தொழில் வாய்ப்பிற்கு செல்வது, நாட்டின் சட்டங்களை மீறும் செயலாகும்.

 

ஓமானில் பாலியல் தொழிலாளர்களாக ஏலம் விடப்பட்ட இலங்கை பெண்கள் – விசாரணைகளை ஆரம்பித்தது ஆரம்பித்தது ஐ.நா !

ஓமானில் பாலியல் தொழிலாளர்களாக ஏலம் விடப்பட்ட இலங்கை பெண்கள் – விசாரணைகளை ஆரம்பித்தது ஆரம்பித்தது ஐ.நா !

 

ரஷ்ய தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக நோர்வே குற்றச்சாட்டு!

ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் தங்களது நாட்டில் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின.

மேலும் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவும் மறுக்கப்பட்டது. இதேபோல் தற்போது ரஷ்யாவின் அண்டை நாடான நோர்வேயிலும் அரங்கேறி உள்ளது. அதாவது நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் ரஷ்ய தூதரகம் செயல்படுகிறது. அங்கு பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக நோர்வே கருதியது. எனவே அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையிலும் அவர்களது செயல்பாடுகள் ராஜதந்திர நடவடிக்கைகளுடன் பொருந்தவில்லை என நோர்வே முடிவு செய்தது.

இதனையடுத்து நோர்வேயில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள் 15 பேரை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை நோர்வே அரசாங்கம் வெளியிட்டது.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அன்னிகென் ஹூய்ட்பெல்ட் கூறுகையில், “ரஷ்யாவின் உளவுத்துறை நடவடிக்கைகளின் நோக்கத்தை எதிர்ப்பதற்கும், அதன் மூலம் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கும் இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும்’ என தெரிவித்தார். கடந்த ஆண்டிலும் இதுபோல 3 தூதரக அதிகாரிகளை நோர்வே வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. நோர்வே அரசாங்கத்தின் இந்த செயலுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் கூறியதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்தது.

சீனாவுக்கு சொந்தமாகவுள்ள இரணைமடு குளத்தை அண்மித்துள்ள 500 ஏக்கர் நிலம் !

கிளிநொச்சி இரணைமடு குளத்துக்கு தெற்குப் புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணியும் சீனாவுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு  தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கிட்டத்தட்ட 500 ஏக்கர் காணிகளை தனது கடன்களை சீர்செய்வதற்கு இரணைமடுவிற்கு தெற்குப் புறமாக சீனாவிற்கு வழங்குவதற்கான முழு முயற்சியையும் இலங்கை அரசு எடுத்திருப்பதாக அறிகின்றேன்.

இரணைமடுவின் தெற்கு புறமாகவும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையாக உள்ள இயக்கச்சி பகுதியில் மண்டலாய் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருக்கின்ற கிட்டத்தட்ட 200 ஏக்கருக்கு அதிக காணியையும் சீன நாட்டுக்கு வழங்குவதற்காக அவர்கள் சில திட்டங்களை முன்னெடுத்திருப்பது அவர்களின் செயற்பாடுகளிலும், நடவடிக்கைகளிலும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பல நிலப்பகுதிகள் இவ்வாறு நாடுகளிற்கு விற்கப்படுகின்றன. அதில் கூடுதலாக கடலை தரையாக்கி சீனாவிற்கு விற்றல், கடலோரங்கள் மற்றம் தரைகளை சீனாவிற்கு விற்கும் செயற்பாடுகளில் அரசு இறங்கியுள்ளது.

இந்தியாவிற்கு தான் நல்லபிள்ளை போன்று நடித்துக்கொண்டாலும், தன்னுடைய வேலைத்திட்டங்களை சீனாவை வைத்தே கையாளுகின்ற பெரும் யுத்திகளை இலங்கை அரசு கையாளுகின்றது.

இது பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையிலும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஈழத்தமிழர்களின் இருப்பு என்பதும் பெரிய அளவிலே பாதிப்புக்குள்ளாகும் நிலை இருக்கின்றது.

இரணைமடுகுளத்தின் தெற்கு பகுதியில் 500 எக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதும், இயக்கச்சி பகுதியை அண்மித்து 200 ஏக்கர் காணியை சீன அரசுக்கு வழங்கு வதற்கு இலங்கை அரசு எடுத்திருக் கின்ற முயற்சி மிகவும் அபாயகரமானது.

கிடைத்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் இரணைமடுவின் தெற்கு பகுதிக்கு மகாவலி திட்டத்தை கொண்டு வருதல், சிங்கள குடியேற்றங்களை கொண்டுவருதல் என்ற போர்வையில் பாரிய வேலைத்திட்டங்களிற்காகவும், நீண்டகால அடிப்படையில் தமிழ் மக்களுடைய இனத் தனித்துவத்தை இல்லாது செய்து ஓர் சிங்கள மயப்படுத்துலாது செயற்பாடுகளில் அவர்கள் முன்னின்று உழைக்கின்றார்கள் எனத் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளின் பின்னணியில் எம்.பி சிறீதரன்.!

கிளிநொச்சியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளின் பின்னணியில் எம்.பி சிறீதரன் இருப்பதாக  முருகேசு சந்திரகுமார் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

சமகால விடயங்கள் தொடர்பில் முன்னாள் எம்.பியும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு . சந்திரகுமாருடன் தேசம் நடத்திய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நேர்காணலை காண..!

நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான  செயல்முறையை ஆரம்பிக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவுடன் இணைந்து இந்த முக்கியமான கூட்டத்தை ஆரம்பித்து வைத்தமைக்கு ஜப்பானிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டில்  ஏற்பட்டுள்ள  பொருளாதார  நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக இரு தரப்பு கடன் வழங்குநர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் ஆரம்பத்தை இது குறிப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாட்டில் கூடிய விரைவில் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கான உதவிகளை வழங்குவதற்கு   கடன்வழங்குநர்கள் முன்வழங்குவார்கள் என  எதிர்பார்த்துள்ளதாகவும்   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா..!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின்னர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை விடுதி ஒன்றில் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு மேலாக காய்ச்சலால் அவதிப்பட்ட பெண் ஒருவர் பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியாலைக்கு மாற்றப்பட்டார்.

இப்பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றுப் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப் பட்டதாக யாழ்.போதனா வைத் தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சி.ஜமுனானந்தா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் வேறு தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர். நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர் எனவும் அவர் கூறினார். இப்பெண் கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களே தொற்றுக்குள்ளாகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும் பொதுமக்கள் தொற்றுநோய் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பொது இடங்களில் முககவசம் அணிந்துகொள்வது அவசியம் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சி.ஜமுனானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

வைத்தியத் துறையும் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்று நோய் குறித்த மேலதிக ஆய்வுகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் விடுதிகள் தற்போது இல்லை. கொவிட் தொற்று உச்சத்தில் இருந்த போது அமைக்கப்பட்ட விடுதிகள் தொற்று நோய் குறைந்த பின்னர் அகற்றப்பட்டுவிட்டன.

இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்ட நோயாளி விடுதி ஒன்றிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.