19

19

“மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்பட்டால்..?” – இலங்கை ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை!

வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வியை பணயக் கைதிகளாக ஆக்குவதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

“தாய் – தந்தை – மகன் இடையே மோதல்” – தந்தையை கொலை செய்த மகன் – கிளிநொச்சியில் சம்பவம் !

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் மகனால் தாக்கப்பட்ட தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.00 மணியளவில் தந்தை – தாய் –  மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவே உயிரிழந்துள்ளார்.

தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இறத்த தந்தையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இறந்தவர் பிச்சைமுத்து இராமசாமி 64 வயதுடையவர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும்வகையில் இலங்கையின் அதிகாரத்துவ அமைப்பு எளிமையாக்கப்பட வேண்டும் – எரிக்சொல்ஹெய்ம்

சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும்வகையில் இலங்கையின் அதிகாரத்துவ அமைப்பு எளிமையானதாகவும் எளிதானதாகவும் இருக்கவேண்டும் என சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் துரிதமாக முதலீட்டாளர்களை கவரவிரும்பினால் அதிகாரத்துவம் என்பது எளிமையானதாகவும் இலகுவானதாகவும் காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர்  முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளிநாட்டு நாணயங்களிலேயே மேற்கொள்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை நோக்கி திருப்புவது என்றால் இரண்டு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் முதலாவது அதிகாரத்துவ முறைமை இதனை இலகுவானதாகவும் எளிமையானதாகவும் மாற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு முதலீடு செய்வதற்காக முதலீட்டாளர்கள் வரும்போது அவர்கள் 15 அமைச்சுகளிற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படக்கூடாது அவர்கள் ஒரு இடத்திலேயே முதலீடு தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் பூர்த்தி செய்யும் நிலைமை காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியா சீனாவுடன் நெருக்கமாக இணைந்து செயற்படவேண்டும்,உலகின் 80 வீதமான சோலர் பனல்கள் மின்சார பற்றறிகள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன உலகின் 74 வீதமான மின்சார கார்கள் சீனாவிலேயே தயாரிக்கப்படுகி;ன்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வரவேண்டும் என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்;ம் அதானி நிறுவனம் மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை ஆரம்பிக்கும் யோசனையை முன்வைத்துள்ளது,மேலும்; திருகோணமலையில்  சூரிய மின்சக்தி திட்டம் ஒன்றிற்கான யோசனையும் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இதனை பயன்படுத்தி இந்தியா சீனாவின்முதலீடுகளை பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின்கடன்மறுசீரமைப்பிற்கான உறுதிமொழி போன்றவை காரணமாக இலங்கை எதிர்காலம் குறித்து சிந்திக்கலாம் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உரியகொள்கைகளை உருவாக்காவிட்டால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்காக வேறு நாடுகளிற்கு செல்வார்கள் என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் சர்வதேச நிறுவனங்களால் பல நாடுகளில் முதலீடு செய்ய முடியும் இலங்கை அதிகளவு அதிகாரத்தன்மை கொண்டதாக காணப்பட்டால் அவர்கள் வேறு நாடுகளிற்கு செல்வார்கள் எனவும்தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க பசுமை பொருளாதாரம் குறித்தும்  காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் அதிக அர்ப்பணிப்புடன் உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரானின் தோட்டத்தில் புதையல் தோண்டிய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது !

பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமுக்குச் சொந்தமான புத்தளம், வண்ணாத்தவில்லு தவில்லுவ, லாக்டோ தோட்டத்தில்  உள்ள  இடம் ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் இருவர், இன்று (19) அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப் படை தெரிவித்துள்ளது.

புதையலை  பெற்றுக்கொள்வதற்காக யாகம் செய்ததாகக் கூறப்படும் பூசகர் சோதனை நடத்தப்பட்டபோது தப்பிச் சென்றதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய நபரை கைதுசெய்ய விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குருணாகல் முகாமை சேர்ந்த அதிரடிப்படையினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதுளை தல்தென பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் முனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் – பின்னணியில் ஆவா குழு என தகவல்!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது நேற்றைய தினம் இரவு இனம் தெரியாத நபர்களால் வெடி குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது, மேலுமொரு வெடி குண்டும், எச்சரிக்கை கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கும் ஆவா குழுவினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பிரான்சில் வசிக்கும் நபர் ஒருவர் அங்கு வசிக்கும் பெண் ஒருவரிடம் காசோலையை கொடுத்து பணம் பெற்றுள்ளார். அவ்வாறு காசோலையைப் பெற்றுக்கொண்ட பெண், யாழில் உள்ள ஆவா குழுவினரிடம் அந்த காசோலையைக் கொடுத்தே பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், காசோலையைப் பெற்றுக்கொண்ட குழுவினர், அதனை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த காசோலை பணம் பெறமுடியாமல் முடக்கப்பட்டுள்ளதாக வங்கியில்அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட குழுவினர், ஆத்திரமடைந்து இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆகவே, தம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தினை திரும்ப கையளிக்கம் வரை, பிரான்சில் பணம் பெற்றுக்கொண்ட நபரும், குறித்த குழுவினருக்கு காசோலையை வழங்கிய பெண்ணும் இலங்கைக்கு திரும்ப முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை பணத்தைப் பெற்றுக்கொண்ட நபர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட வாகன திருத்தக உரிமையாளரின் மருமகன் என்பதால், கடன் பிரச்சினையை தீர்த்து வைக்கும் வரை உரிமையாளரின் குடும்பத்தினரையும் நின்மதியாக வாழ விடமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் குறித்த கடிதம் எழுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் இறுதியில் தம்மை ஆவா குழுவினர் என அடையாளப்படுத்தியுமுள்ளனர்.

இவ்வாறு வெடி குண்டு மற்றும் கடிதம் என்பவற்றை மீட்ட காவல்துறையினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

“கர்தினாலுக்கு எந்த அதிகாரமும் இல்லை.” – தலதாமாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் கர்தினாலுக்கு வழங்கப்படவில்லை.” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (19) காலை சென்று வணக்கம் செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அதிபர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதற்குரிய அதிகாரம் நீதித்துறை அல்லது பிரதம நீதியரசர் ஆகியோருக்கே உள்ளது.”

தொடர்ந்து பேசிய அவர்,

“நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அபராதம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அபராதத்தை செலுத்தாவிட்டால், என்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

இதற்குரிய அதிகாரம் நீதித்துறைக்கு அல்லது பிரதம நீதியரசருக்கு உள்ளது, கர்தினாலுக்கு கிடையாது.” எனவும் தெரிவித்துள்ளார்.

சனத்தொகையில் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் – ஐ.நா கணிப்பு!

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் 1,425.7 மில்லியனுக்கு எதிராக இந்தியாவின் மக்கள்தொகை 1,428.6 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமது அண்டை நாடான சீனாவை விட இந்தியா 2.9 மில்லியன் மக்களைக் கொண்டிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரு நாடுகளினது சனத்தொகை, 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், 2011 க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாததால், இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒரு கணிப்பாகும்.

மேலும், தங்கள் மதிப்பீட்டில் சீனாவின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹொங்கொங் மற்றும் மக்காவ் மற்றும் தாய்வானின் மக்கள் தொகை கணக்கிடப்படவில்லை என்று ஐ.நா. கூறுகிறது.

எனினும், தாய்வான் தனது சொந்த அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் சீன நிலப்பரப்பில் இருந்து வேறுபட்டதாகக் கருதுகிறது.

கடந்த வருடம் நவம்பரில், உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியது. எனினும், வளர்ச்சி முன்பு போல் வேகமாக இல்லை என்றும், 1950க்குப் பிறகு இப்போது மிகக் குறைந்த வேகத்தில் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தங்கள் கருவுறுதல் விகிதத்தில் சரிவைக் கண்டுள்ளதாக ஐ. நா. தரவுகள் குறிப்பிடுகின்றன.

தென் கடற்பரப்பில் 179 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் ஏழு நாட்கள் விசாரணை!

தென் கடற்பரப்பில் 179 கிலோகிராம் ஹெரோயினுடன் சனிக்கிழமை (15) கைது செய்யப்பட்ட 6 பேர் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் பொலிஸார் தடுப்புக்காவல் உத்தரவை பெற்றுக்கொண்டனர்.

தென் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் சுமார் 179 கிலோ 654 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை சனிக்கிழமை கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு சேவையின் தகவலின் அடிப்படையில் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில், சுமார் 179 கிலோ 654 கிராம் (பொதிகள் உட்பட) ஹெராயினை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகு 132 கடல் மைல் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்திரரக்ஷா’ என்ற கப்பலால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த போதைப்பொருள் தொகையும் சந்தேகநபர்களும் திங்கட்கிழமை (17) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 3,593 மில்லியன்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நகுலுகமுவ, குடாவெல்ல, நெடோல்பிட்டிய மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் வெளிநாடுகளில் இருந்து கையாளப்படுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் இருந்து செயற்படும் போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து எந்த குரங்குகளும் எமக்கு வேண்டாம் – சீனா அறிவிப்பு!

ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம் வினவிய போதும், அவர்கள் அதனை அறிந்திருக்கவில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அழிந்து வரும் உயிரினங்கள், தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒரு பங்காளியாக தமது நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீன அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை வழங்குவதாகவும், அதற்கான சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுவதாகவும் தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட யோசனை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரச தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டதுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்களம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பகலில் கூட வெளியே வர அச்சப்படும் மாணவிகள் – வன்முறைகள் நிறைந்த பகுதியாக மாறிக்கொண்டிருக்கும் கிளிநொச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் சமூக சீர்கேடுகளை எடுத்துக் காட்டும் ஒரு சம்பவம் அண்மையில் செல்வா நகர் பகுதியில் கோவில் திருவிழாவின் போது பாடசாலையில் கல்வி கற்கும் இளைஞர் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல்.

வடபகுதியில் குறிப்பாக கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் திரும்பும் திசையெல்லாம் இராணுவ முகாம்களும் காவல் நிலையங்களும் காணப்பட்டும் கூட இந்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக இந்த வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் கைதாவோர் இளைஞர்களாக காணப்படும் அதேவேளை போதைப் பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டவர்களாகவும் – கசிப்பு காய்ச்சுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவுமே அடையாளம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் காணப்படும் வன்முறையான நிலை ஆக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதே உண்மை.

இதனை கடந்தகால செய்திகளின் தலைப்புக்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

கிளிநொச்சியில் பரபரப்பு : செல்வாநகர் ஐயப்பன் கோயிலில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு. (07.05.2022)

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் கெரொயின் மற்றும் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது. (28.07.2020)

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் வாள்வெட்டு – கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் படுகாயம். (29.05.2019)

கிளிநொச்சியில் உள்ள தனது காணியை பார்வையிட வந்த அமெரிக்க பிரஜை ஒருவர் அடித்துப் படுகொலை (7.05.2018)

டியூசனுக்கு படிக்க சென்றாலும் ஐந்து மணிக்கு பிறகு எந்த பாடங்களிலும் பங்கு கொள்வதில்லை. ஏனெனில் ஆறு மணிக்கு முன்பாக ஊருக்குள் நுழைந்தால் தான் பாதுகாப்பாக வீடு செல்ல முடியும் என்ற துர்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.” என அந்த மாணவி தெரிவித்தார்.