25

25

யார் இந்த யெவ்ஜெனி பிரிகோஸின்..? – வாக்னர் ஆயுதக் குழுவின் பின்னணி என்ன..?

உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட தனியார் இராணுவ கூலிப்படையினர் எனக் கூறப்படும் வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்யாவில் தடை உள்ளது. எனினும், ரஷ்யா – உக்ரைன் போர் உச்சத்தில் இருந்தபோது, பக்முட் நகரைக் கைப்பற்றுவதில் வாக்னர் குழுவினர் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், தற்போது வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ரஷ்யாவுக்கு எதிராக அக்குழுவினர் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது.

வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அதிபர் எச்சரிக்கை - Daily Ceylon

இந்த நிலையில் ’ரஷ்ய ராணுவத் தலைமையை அழிப்போம் என்றும், எங்கள் வழியில் யார் குறுக்கே வந்தாலும் துவம்சம் செய்வோம்’ என்றும் வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே ரஷ்ய ராணுவத்தைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதிக்குள் தங்கள் படைகள் நுழைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்டிருந்த ஆடியோ ஒன்றில், “நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை எதிர்த்து முன்னேறுகிறோம். வழியில் எது தடையாக இருந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம்” என்று எச்சரித்திருந்தார்.

மற்றொரு ஆடியோ ஒன்றில், “புடினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டத்திற்குத் தூண்டுவதாக வாக்னர் தலைவர் பிரிகோஸினை கைதுசெய்ய உத்தரவிட்டுள்ள ரஷ்ய அரசு, சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், “மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேசத்துரோகிகள் ஆவர். ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தின் முதுகில் குத்திவிட்டனர். ரஷ்யாவில் உள்நாட்டுப் போரை அனுமதிக்க முடியாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்தச் சூழலில் தனி நபர்களின் தனிப்பட்ட விருப்ப வெறுப்புகள் தேசத் துரோகமாகும்.

ஆயுதக் கிளர்ச்சியை தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்திடம் சரண் அடைய கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே உக்ரைன் போர் காரணமாக நெருக்கடியில் உள்ள ரஷ்யாவுக்கு இந்த உள்நாட்டுப் பிரச்னை புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர முயன்றது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யாவுக்கு உதவும் வகையில் பணியமர்த்தப்பட்ட தனியார் ராணுவ ஒப்பந்ததாரர்களே வாக்னர் ஆயுதக் குழுவினர். சிரியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் செயல்பாட்டில் உள்ள இந்தக் குழு, போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுக்கும் ஆளானது.

2014இல் ரஷ்யா, கிரிமியாவை இணைத்தபோது வாக்னர் குழு முதலில் செயல்பட்டதாக நம்பப்படுகிறது. ரஷ்ய சிறைகளில் உள்ள குற்றவாளிகளைத் தங்களது குழுவில் வாக்னர் இணைத்துக் கொள்வதாகவும், 2022 நவம்பருக்கு முன்பு, ரஷ்ய சிறைகளில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 23,000க்கும் அதிகமாகக் குறைந்திருப்பதாகவும் தரவு ஒன்று கூறுவதாக பிரிட்டன் அதிகாரிகள் கடந்த 6 மாதத்திற்கு முன்பே குறிப்பிட்டுள்ளனர்.

தவிர, இந்தக் காலகட்டத்தில்தான் வாக்னர் குழு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் பல குற்றவாளிகள் வாக்னருடன் இணைந்ததாக நம்பப்படுகிறது. குழுவில் இணைந்து பணியாற்றும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதோடு, ஆறு மாதங்கள் பணியாற்றிய பின்னர் அவர்களது தண்டனையும் குறைக்கப்படும் என்று அவர்களிடம் கூறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளரான ஜான் கிர்பி, ”இந்தக் குழு இப்போது அதிகாரத்தில் உள்ள ரஷ்ய ராணுவத்திற்குப் போட்டியாக இருக்கும்” என கடந்த 6 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வாக்னர் குழுத் தலைவராக இருப்பவர்தான் யெவ்ஜெனி பிரிகோஸின். இவர் குழுவிலான ராணுவ அமைப்பு, உக்ரைனில் பல பகுதிகளைச் சேதப்படுத்தியதிலும் கைப்பற்றியதிலும் தூணாகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், உக்ரைனில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, யெவ்ஜெனி பிரிகோஸின் உலக நாடுகளின் கவனத்தை பெற்றார். இவர்தான் தற்போது ரஷ்ய அரசுக்கு எதிராக மாஸ்கோ கூலிப்படையை இணைத்துக்கொண்டு உள்நாட்டுப் போரைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்று ரஷ்ய அரசை அச்சுறுத்தி வரும் பிரிகோஸின், கடந்த 1961ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தவர். 1981ஆம் ஆண்டு, கொள்ளை மற்றும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த பிரிகோஸினுக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அதிலிருந்து விடுதலையான அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உணவகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்தச் சூழலில்தான் அப்போது நகரின் துணை மேயராக இருந்த புடினின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன்மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். மேலும் புடினின் நட்பு வட்டத்தால் சமையல் வணிகத்தில் அவர், ரஷ்ய அரசாங்க ஒப்பந்தங்களை அதிகமாகப் பெற்றுள்ளார். இதனால், ’புடினின் சமையல்காரர்’ என்றும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறார்.

ரஷ்ய ராணுவத்தால் செய்ய முடியாத சில சட்டவிரோதச் செயல்களை விளாடிமிர் புடின், வாக்னர் ஆயுதக் குழுவின் மூலம் மேற்கொண்டதாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் குற்றம்சாட்டின. இது ரஷ்யாவுக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. மேலும், உக்ரைனில் டொனெட்ஸ்க் பகுதியில் உப்புச் சுரங்க நகரமான சோலேடரை ரஷ்யா கைப்பற்றியது. ’இந்த நகரை நாங்களே கைப்பற்றினோம். வாக்னர் குழுவின் வெற்றியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பறிக்க நினைக்கின்றன’ என வாக்னர் யெவ்ஜெனி பிரிகோஸின் குற்றம்சாட்டினார்.

மேலும், ‘பக்முட் நகரைக் கைப்பற்றுவதற்கு வாக்னருக்கு போதுமான வெடிமருந்துகளை வழங்க ரஷ்ய ராணுவம் தவறிவிட்டது, ஒருகட்டத்தில் தங்களையே ரஷ்ய ராணுவம் தாக்கத் தொடங்கியது’ எனத் தெரிவித்த வாக்னர் குழு, ’உக்ரைனில் ஏற்பட்ட தோல்விகளுக்கு ரஷ்யாவின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள்தான் காரணம்’ எனவும் குற்றம்சாட்டியது. ரஷ்ய அரசுக்கும் வாக்னர் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட இதுதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

வாக்னரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அக்குழுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதின் செயல்பட ஆரம்பித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. வாக்னரின் குழுவினர் ரஷ்ய ராணுவத்தால் தடுத்தும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் வெகுண்ட அவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்குத் தயாராகி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரம் காட்டியதாகவும், அது தற்போது வெடிக்கத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே உக்ரைனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர், ரஷ்யாவின் தென்பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாகவும், அங்கிருந்து அவர்கள் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ரஷ்ய மக்கள், “இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஆங்காங்கே குண்டு சத்தம் மட்டும் கேட்கிறது. மக்கள் ஆங்காங்கே ஓடுகின்றனர். எங்களுக்கு மிகவும் பதற்றமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் தொடங்கியிருக்கும் உள்நாட்டுப் போர் குறித்து உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ”அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம். ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பெரிய பிரச்னை ரஷ்யாவிற்கு ஏற்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, ரஷ்ய ஜனாதிபதி புடின் சிறப்பு விமானத்தில் தலைநகர் மாஸ்கோவைவிட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. புதின் சிறப்பு விமானம் மூலம் வடமேற்குத் திசையில் புறப்பட்டுச் சென்றதாக அவர்கள் பதிவிட்டுள்ளனர். ஆனால், அந்தச் சிறப்பு விமானத்தில் புதி

ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய யாழப்பாணத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் தேர்தல் !

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகமானது ஒவ்வொரு முறையும் தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்படுகிறது.

Gallery

அந்தவகையில், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றையதினம் இடம்பெற்று வருகிறது.

இந்த தேர்தலானது மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலையில் நடைபெற்று வருகிறது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி யசோதா முன்னிலையில் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் இடம்பெறுகின்றன.

 

Gallery

இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகளில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரதானி வில்லியம் பேர்ன் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழுவினர் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் தங்கியிருந்ததன் பின்னணியில் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளான சுரேன் சுரேந்திரன் (பிரித்தானியா), கலாநிதி சோமா இளங்கோவன்(அமெரிக்கா), கலாநிதி எலியஸ் ஜெயராஜ்(அமெரிக்கா), கலாநிதி வாணி செல்வராஜ்(கனடா), கலாநிதி காருண்யன் அருளானந்தம்(அமெரிக்கா) உள்ளிட்டவர்கள் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ, உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலாளர் அம்பெத் வான், தேசிய பாதுகாப்பு சபையின் இலங்கை,  நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கான பணிப்பாளர், செனட் அலுவலகத்தின் வெளி விவகார குழுவின் சிரேஷ்ட பணிப்பாளர், உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தன.

இந்த சந்திப்பின்போதே அமெரிக்க பிரதிநிதிகள் தரப்பில் மேற்கண்டவாறு உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விடயம் சம்பந்தமாக அமெரிக்க பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் உள்ள நிலைமைகளை தொடர்ச்சியாக உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான ஊக்குவிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

இவ்வாறான பின்னணியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கால எல்லை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில், நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்கான சர்வதேசத்தின் கரிசனை தொடர்ச்சியாக இருக்குமா என்பது தொடர்பில் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.

அமெரிக்காவை பொறுத்தவரையில், இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதற்கான அர்ப்பணிப்பான பங்களிப்பை அளிக்கின்றது.

அதன் பிரகாரம், இலங்கையின் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கை செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் என்பதை உறுதியாக கூற முடியும்.

அத்துடன், இலங்கையில் தற்போது அரசியல், பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை காணப்படுகிறது. இந்த குழப்பான சூழலை ஒரு எதிர்மறையான விடயமாக கருதாமல் அமெரிக்கா அனைத்து இன மக்கள் மத்தியிலும் மேற்கொண்டுள்ள உரையாடல்களின் அடிப்படையில் தற்போதைய சூழலை, நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு எவ்வாறு சாதகமாக பயன்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்த விடயத்தில் வெவ்வேறு இனங்களைக் கொண்ட இலங்கையின் பிரஜைகள் முற்போக்காக சிந்திக்க ஆரம்பித்துள்ளமையை அடையாளம் காண்பதற்கு முடிந்துள்ளது.

இதேநேரம், தமிழ் மக்கள் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்துக்கு பிரதான இடத்தினை கொண்டுள்ளார்கள். அந்த விடயத்தில் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தேசிய இனப் பிரச்சினையின் மைய விடயமான அதிகாரப்பகிர்வு விடயத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

இருப்பினும், இந்தியா தொடர்ச்சியாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குமாறு வலியுறுத்தி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட பிரதான விடயங்களில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளை பரந்துபட்ட அளவில் முன்னெடுப்பதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இம்முறை வழமைக்கு மாறாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் அழைப்பின் பேரில் நாம் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் பங்கேற்றிருந்தோம்.

அச்சந்திப்புக்களின்போது, 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலாவதியான மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவாக வெளிப்படுத்தினோம்.

உள்நாட்டு யுத்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பாதித்தது.

இருதரப்பு மற்றும் சர்வதேச அரங்குகளில் இந்தியா தொடர்ச்சியாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

2006ஆம் ஆண்டு துணைச் செயலாளராக இருந்த ரிச்சட் பௌச்சரும், 2015இல் இராஜாங்க செயலாளராக இருந்த ஜோன் ஹரியும் மட்டுமே அதிகாரப்பகிர்வு விடயத்தினை பற்றி அழுத்தங்களை பிரயோகித்தனர்.

இந்நிலையில், இந்தியாவைப் போன்று அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

புலம்பெயர் மக்கள், ஏனைய முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து பொருளாதார ஆதரவைப் பெறுவதற்கு தமிழ் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வினை காண்பது முக்கியமானதாகும்.

அத்துடன், 2024 செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னரும் இலங்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் நிலைநிறுத்துதல், சர்வதேச சட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா பிரதமரின் உருவ பொம்மைகளை எரித்து வவுனியாவில் போராட்டம் !

வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிங்கள –  தமிழ் – மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தில் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று (24.06.2023) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

‘இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம்’ போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கனடா

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் , ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா , படுகொலை எங்கே நடந்தது.? ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம் , எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ போன்ற கோசத்தினை எழுப்பியவாறும் இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள் , கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம் போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டம் நடைபெற்றிருந்தது.

இவ் போராட்டத்தில் தமிழ் , முஸ்ஸிம் , சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

காதலை ஏற்க மறுத்த திருமணமான பெண் மீது வன்புணர்வு – திருகோணமலையில் சம்பவம்!

காதல் அழைப்பை நிராகரித்த கோபத்தில் வீடு புகுந்து திருமணமான பெண்ணை வன்புணர்வு செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவரை குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை இருவரும், வீட்டிற்குள் நுழைந்து கணவரை தாக்கி, பெண்ணை வன்புணர்வு செய்து, பின்னர் அவரிடம் இருந்த தங்க நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது !

தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – பொரளையில் உயர்தரப் பிரிவு மாணவர்களுக்குக் கற்பிக்கும் 31 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் இன்று காலை வாகனத்தில் சென்ற போது வெல்லம்பிட்டியவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதாகும் போது அவரிடமிருந்து 350 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.