October

October

இஸ்ரேலால் முடக்கப்பட்டது சர்வதேச ஊடகமான அல் ஹசீனா !

ஹமாஸுடனான போருக்கு மத்தியில் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் பணியகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அனுமதிக்கும் புதிய விதிமுறைகளுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெருசலேமில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அந்நாட்டின் அரசாங்க செய்தி தொடர்பாளர் அயூப் காரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“அல் ஜசீரா அலுவலகங்களை மூடுவதற்கும் அவர்களின் வேலையைத் தடைசெய்வதற்கும் அரபு நாடுகளின் நடவடிக்கையின் அடிப்படையில் எங்கள் முடிவை மேற்கொண்டுள்ளோம்.

 

வன்முறையை மேற்கொள்ளும் முகமாக இந்த ஊடகம் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன” என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை, அந்நிறுவனம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து தனது தூதரக அதிகாரிகளை மீளப்பெற்றது கனடா !

காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுவிட்டது. இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில்,

“தங்கள் நாட்டில் உள்ள எங்களின் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேற்றப்படாத அதிகாரிகளின் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் ஒருதலைபட்சமாக இந்தியா கூறியிருந்தது. இந்த முடிவு உரிய காரணம் இல்லாதது, முன்னெப்போதும் நிகழ்ந்திராதது, தூதரக அதிகார உறவுகள் குறித்த வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். தூதரக அதிகார விவகாரங்களின் விதிகளை உடைக்க நாம் அனுமதித்தால், இந்த கிரகத்தில் எந்த ஓர் இடத்திலும் எந்த தூதரக அதிகாரியும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்த காரணத்துக்காக நாங்கள் இந்தியாவுக்கு எந்த பதிலடியும் கொடுக்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடனாவின் 41 தூதரக அதிகாரிகளும், 42 உதவியாளர்களும் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் அனைவருமே திரும்ப பெறப்பட்டுள்ளனர்.

 

“திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும்.” – எச்சரிக்கிறார் சரத் வீரசேகர !

விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்ட திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பகுதி, நாட்டில் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் புலிகள் அமைப்பை தோற்கடித்ததையடுத்து, இன்று ஜெனிவாவில் போர்க்குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளினாலேயே நாம் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். இந்த நாடுகள் அன்று எம்மை போர் நிறுத்தம் செய்யுமாறு அறிவித்தன. ஆனால், இன்று காஸா மீது போரைத் தொடருமாறு அமே நாடுகள்தான் தெரிவித்து வருகின்றன. இது உண்மையில் வெட்கத்துக்குரிய விடயமாகும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ்ப் பிரிவினைவாதிகள், இன்றும் ஈழக்கனவுடன்தான் இருக்கிறார்கள். அந்த நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். நாம் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள்.

இந்நிலையில், திவுல்பத்தான கிராமத்திலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டும் என இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவருக்கு ஒன்றை தெரிவிக்க வேண்டும். இந்த விடயத்தில் தேவையில்லாமல் தலையிடாதீர்கள். யுத்த காலத்தின்போது புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் அந்த கிராமத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து தான், அந்த விவசாயிகள் தங்களின் பூர்வீக நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இவர்களின் பெயர் பட்டியல் அனைத்தும் கிராம சேவகரிடம் உள்ளது. இந்த அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்ற நினைப்பது தவறாகும்.

இது மீண்டும் தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு இடமளிக்கும். ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பகுதி, நாட்டில் ஒதுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றுக்கு வரும் முன்னர் பிரபாகரனிடம்தான் பதவியேற்றார்கள். எனவே, நாட்டில் இல்லாத பிரச்சினையொன்றை ஏற்படுத்த வேண்டாம் என் இவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்த இலங்கை சுற்றுலாத்துறை வருமானம்!

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தின் வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலா வருமானம் 242.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியது.

“பெண்களினால் ஆண்களின் உரிமைகள் பாதிக்கப்படுவது தொடர்பாகவும் கதைக்க வேண்டும்.” – நாடாளுமன்றில் ரோஹன பண்டார !

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார்.

இது குறித்து குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா சபையில் விளக்கமளித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“நான் தாக்குதல் நடத்தியதாக டயனா கமகே தெரிவித்தார். அப்படி எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை. நான் கீழே இறங்கும்போது, அவர் அநாகரீகமான வார்த்தைகளால் ரோஹண பண்டார உறுப்பினருடன் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இதன்போது நான், அவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறினேன். இதனைப் பொருட்படுத்தாத அவர் என்மீது தாக்குதல் நடத்தினார். நான் அப்போது அந்தத் தாக்குதலை தடுக்க மட்டும்தான் முற்பட்டேன். இதுதொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டால் டயனா கமகே எவ்வாறு செயற்பட்டார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும் என கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, சபைக்குள் நாம் ஒரு கருத்தை கூறினால், அதுதொடர்பாக வெளியே கதைக்கக்கூடாது.

நான் அமைதியாக மின்தூக்கி அருகில் செல்லும்போது, டயனா கமகே கடுமையான வார்த்தைகள் தூற்றிக் கொண்டிருந்தார். நான் அதனைக் கவனத்தில் கொள்ளாமல் நகர்ந்தபோது, அவர் என் பின்பாக வந்து அநாகரீகமான வார்த்தைகளால் என்னை தூற்றினார்.

பெண் உரிமை தொடர்பாக கதைக்கிறோம். அதேநேரம், பெண்களினால் ஆண்களின் உரிமைகள் பாதிக்கப்படுவது தொடர்பாகவும் கதைக்க வேண்டும்.

நாடாளுமன்றில் நடந்த பிரச்சினையை வெளியே கொண்டு சென்றதே தவறாகும். ஆண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்” என கூறியிருந்தார்.

“இலங்கையில் நடைபெற்றதும் பாலஸ்தீனில் நடப்பதும் ஒன்றுதான்.” -எம்.ஏ,சுமந்திரன்

”இலங்கையில் நடந்த போரும், தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்றுவரும் போரும் ஒன்றுதான்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்று வரும் போர் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையிலான இப்பேரானது அரசியல் மோதலாகும்.
இதனை அரசியல்ரீதியாக தான் தீர்க்க முற்பட வேண்டும்.  உலகில் பல மோல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்களுக்கிடையிலும், தேசங்களுக்கிடையிலும் பல மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் இடம்பெற்றதும் அரசியல் ரீதியான மோதலாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் மோலுக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது என்று பாலஸ்தீன இஸ்ரேல் மோதல் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆனால், அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்நாட்டில் அரசியல் மோதல் இடம்பெற்றபோது, இராணுவத்தின் ஊடாகவே தீர்வு வழங்கப்பட்டது. வன்முறைகள் ஒருபோதும் தீர்வாகாது” இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து அனுப்பும்” – இந்திய பிரதமர் மோடி

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் பேசி இந்திய பிரதமர் மோடி, காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

https://x.com/narendramodi/status/1714986693097664745?s=20

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்

“பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். இந்த உரையாடலின்போது, பாலஸ்தீன பகுதிகளில் வன்முறையினால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதையும், பயங்கரவாம் குறித்த கவலைகளை பகிர்ந்துகொண்டோம். மேலும் இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாடும் மஹ்மூத் அப்பாஸிடம் தெரிவிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து அனுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதில் ஏராளமானோர் உயிரிழந்ததை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன். இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த மோதலில் தொடர்ச்சியாக பொதுமக்கள் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

 

 

நேற்று முன்தினம் இரவு காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் ராக்கெட் குண்டு தாக்குதல்தான் இதற்கு காரணம் என ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம்சாட்டினர். ஆனால், இத்தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தவில்லை என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி பட தெரிவித்தார்.

“தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை இல்லாது செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” – சாள்ஸ் நிர்மலநாதன்

முல்லைத்தீவு- வவுனியா பகுதிகளில், மகாவலி எல். வலயத்தின் ஊடாக தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை இல்லாது செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் உகந்த இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என சீன நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு நான்கு நாட்கள்  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று காலை பீஜிங்கில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட சீன நிதி அமைச்சர் லியு குன்  இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சீனா நன்கு புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்த சீன நிதியமைச்சர், நெருக்கடியை சமாளிக்க இதுவரை இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் வரவேற்றார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா தொடர்ந்து பூரண ஆதரவை வழங்கும் எனவும் சீன நிதி அமைச்சர் உறுதியளித்தார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பணப் பரிமாற்றம் தொடர்பாக நீண்டகாலமாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும், சீனாவுடன் நெருக்கமாகச் செயற்படும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுவதாகவும் சீன நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சவாலான பணியில் இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மிகவும் பாராட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் போட்டித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குமான வேலைத்திட்டம் தொடர்பாகவும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சண்ட்ரா பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி – கிளிநொச்சியில் ஜம்போ கச்சானின் விளைச்சலில் வீழ்ச்சி !

வடக்கில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக ஜம்போ கச்சானின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாதன்குடியிருப்பு, பிரமந்தனாறு, உழவனூர் ஆகிய பகுதிகளிலேயே இந்த ஜம்போ கச்சான் செய்கைக்கு மேற்கொள்ளப்படுகிறது. குறித்த பகுதிகளில் கச்சான் பயிர்செய்கைக்கு சிறந்த இடங்களாக காணப்படுகின்றன.

கடந்த வருடம் ஜம்போ கச்சான் செய்கையில் பாரியளவு விளைச்சலால் விவசாயிகள் அதிக இலாபம் பெற்றிருந்தனர். ஆனால், இவ்வருடம் இந்தநிலைமை அப்படியே தலைக் கீழாக மாறியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக ஜம்போ கச்சான் அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால், சில விவசாயிகள் ஜம்போ கச்சான் அறுவடையை செய்யாது கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஜம்போ கச்சான் தற்பொழுது நான்கு மாதம் கடந்த நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலையில், கச்சானின் விளைச்சலும் பாரிய வீழ்ச்சியாக காணப்படுகிறது.

பல லட்சம் ரூபாய் செலவழித்து ஜம்போ கச்சான் செய்கையில இடுபட்ட விவசாயிகள் ஒருகிலோ கச்சானைக் கூட இவ்வருடம் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய அதிகாரிகள், நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்” – யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம் !

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை (19) காலை மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம்” “ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படடது.