08

08

சர்ச்சைக்குரிய பங்களாதேஷ் பொதுத்தேர்தல் – ஷேக் ஹசீனா நான்காவது தடவையாக வெற்றி !

பங்களாதேஷில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா நான்காவது தடவையாக வெற்றி பெற்றுள்ளார்.

300 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில்  223 ஆசனங்களை ஷேக்  ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தேர்தலை பகிஷ்கரித்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஒரு மோசடி ஏமாற்று நாடகம் என எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.

40 வீதமான வாக்காளர்களே வாக்களித்தனர் என உத்தியோகபூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இதனை விட குறைவு என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

2018 பொதுத்தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களித்திருந்தனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் பத்திரிகையாளரான தனது மகனையும் இழந்த அல்ஜசீரா ஊடகவியலாளர் வயல்டாவ்டோ !

இஸ்ரேலின்தாக்குதலில் ஏற்கனவே தனது குடும்பத்தவர்கள் பலரையும் இழந்த அல்ஜசீரா ஊடகவியலாளர் வயல்டாவ்டோ  இஸ்ரேலின் தாக்குதலில்  பத்திரிகையாளரான தனது மகனை இழந்துள்ளார்.

Rania on X: "Journalist Mustafa Thurayya was executed alongside Hamza Dahdouh. https://t.co/NQAjdb2pvJ" / X

காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் வயல்டாவ்டோவின் மகன் ஹம்சாவும் ( 27)  முஸ்தபா டுரையா என்ற ஊடகவியலாளரும்  கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசாவின் தென்மேற்கில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள அல் மவசிக்கு அருகில்உள்ள பகுதியை நோக்கிவாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

குண்டுவீச்சினால் இடம்பெயர்ந்த மக்களை பேட்டி காண்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தவேளையே ஹம்சாவின்  வாகனம் தாக்கப்பட்டுள்ளது.

தனது மகனின் உடலை அடக்கம்செய்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள வயல்டாவ்டோ இன்று காசாவில் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து நாளாந்தம் விடைபெறுபவர்களில் தானும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தில் மற்றுமொருவரை இழந்த துயரத்தை அனுபவிக்கின்ற போதிலும்  காசாவில்  என்ன நடக்கின்றது என்பதை உலகிற்கு தெரியப்படுத்தும் பாதையை தொடரப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்சாவே எனக்கு அனைத்துமாகயிருந்தான் எனதுமூத்த மகன் இதுஇழப்பின் கண்ணீர் பிரிதலின் துயரத்தின் கண்ணீர் என  அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஊடகவியலாளர்களையும் மௌனிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார் –

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அனைத்து ஊடகவியலாளர்களையும் மௌனிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் கொல்லப்பட்டதாகவும், அவர் கொல்லப்பட்டு 15 வருடங்கள் கடந்தும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரிகள் தவறியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

லசந்த 15 வருடங்களுக்கு முன்னர் இன்று போன்ற ஒரு நாளில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார் என்றும், இன்றுவரை ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன தெரிவித்துள்ளார்.

“அரசாங்க அதிகாரத்தை திணிப்பதன் மூலம் பத்திரிகையாளர்களை மௌனமாக்க முயல்வது, கருத்து மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கலாம்” என சிரேஷ்ட வழக்கறிஞர் கூறியுள்ளார்.

“ஜனநாயகத்தின் தூண்களில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால், இதுபோன்ற கொடூரமான கொலைகள் ஒரு சமூகத்தில் நடைபெறாது. ஆசிரியர் விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஒரு உள்நோக்கம் இருந்தது. இதன் மூலம் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் வாயடைத்து விடலாம் என அதிகாரிகள் நினைத்தனர்,” என்றார்.

கொலை நடந்து 15 ஆண்டுகள் ஆன பிறகும், குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்களுக்குத் தண்டனை பெற்று, நீதியைக் காப்பாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் ஒருவராக லசந்த விக்கிரமதுங்க போன்றவர்கள் பெரிதும் தவறவிடப்படுவார்கள் என சட்டத்தரணி நவரத்ன தெரிவித்தார்.

location-tracking technology உருவாக்கம் – பிரித்தானிய அரசரின் மதிப்பளிக்கும் பட்டியலில் இலங்கை தமிழர் !

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சபேசன் சிதம்பரநாதன், ஒரு பொருள் இருக்கும் குறிப்பிட்ட இடத்தை கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியதற்காக (location-tracking technology), பிரித்தானிய அரசரின் புதுவருட மதிப்பளிக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவருடைய லொகேஷன் ட்ராக்கிங் தொழில் நுட்பத்தை, பிரித்தானிய தேசிய மருத்துவ சேவை, மருத்துவமனைகள், விமானம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் போன்றோர் பயன்படுத்துகின்றார்கள்.

images/content-image/2023/12/1704366353.jpgஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் சபேசன் சிதம்பரநாதன் தொழில் நுட்ப கண்டுபிடிப்பு, அறிவியலை முன்னேற்றியது, பொறியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை முன்னேற்ற பாடுபட்டதற்காக இவ்வாறு சேர் என்ற பட்டம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் சபேசன் சிதம்பரநாதன் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் தனது பல்கலைக்கழக கல்வியை ஆரம்பித்து, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக, கார்பஸ் சிகிரிஸ்டி கல்லூரியில் ஆராய்ச்சி கல்வியை முடித்தார். (PhD at Corpus Christi College, Cambridge)

இந்த பட்டம் பெறுவது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “நான் இந்த நாட்டுக்கு சிறுவனாக கல்வி கற்பதற்கு வந்தேன், தனிப்பட்ட ரீதியில் எனக்கு கனவு நினைவானதாக நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டப் பேரணி !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி ஜெனிற்றா விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரியும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் ஜனாதிபதி வருகையின்போது நியாயம் கேட்கச் சென்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு புனித இராஜப்பர் தேவாலயத்துக்கு முன்பாக ஆரம்பமானது.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சென்று நிறைவு பெற்றிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘பொலிஸ் அராஜகம் ஒழிக’, ‘விடுதலை செய் விடுதலை செய் ஜெனிற்றாவை விடுதலை செய்’, ‘சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு’, ‘ரணில் அரசே நட்ட ஈடு வழங்கி எமது பேராட்டத்தை நிறுத்தக் கனவு காணாதே’, ‘பாதிக்கப்பட்ட உறவான ஜெனிற்றாவை உடன் விடுதலை செய்’, ‘ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்வதுதான் ரணில் அரசின் நல்லிணக்கமா?’, ‘சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பினை வெளிப்படுத்தி கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

இப்போராட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

“வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள் – குறைவடையும் பிறப்பு வீதம்” – வீழ்ச்சியடையும் இலங்கையின் சனத்தொகை !

எதிர்வரும் காலங்களில் நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பிறப்பு வீதம், 25 வீதம் குறைவடைந்துள்ளமை பிரதான காரணங்களில் ஒன்று என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

“நம் நாட்டில் ஆண்டு பிறப்புகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. உதாரணமாக, 2013 இல் நம் நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 90,000 குறைந்துள்ளது. வேறுவிதமாகக் கூறினால், 2013 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கையுடன் 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இது 25% குறைந்துள்ளது.

பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை இறப்பு எண்ணிக்கையை நெருங்குகிறது.” என்றார்.

இளம் சமூகம் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது உட்பட பல காரணிகளால் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் சனத்தொகை குறையலாம் என பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

“நம் நாட்டில் ஏராளமான இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஒருபுறம் பிறப்புகள் குறைந்து இறப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. சென்றவர்கள் திரும்பி வருவதில்லை. நமது மக்கள்தொகை எதிர்காலத்தில் குறையும் போக்கைக் காட்டுகிறது.” என மேலும் சுட்டிக்காட்டினார்.

2023ஆம் ஆண்டு காய்கறி இறக்குமதிக்காக இலங்கை $326.5 மில்லியன் செலவிட்டுள்ளது !

2023 ஜனவரி முதல் நவம்பர் வரை காய்கறி இறக்குமதிக்காக இலங்கை $326.5 மில்லியன் செலவிட்டுள்ளது – இது 2022ல் இதே காலப்பகுதியில் செலவிடப்பட்ட தொகை $297.2 மில்லியன் ஆகும்.

29 டிசம்பர் 2023 அன்று இலங்கை மத்திய வங்கியின் (CBSL) செய்திக்குறிப்பின்படி, ஜனவரி முதல் நவம்பர் 2023 வரையிலான காய்கறிகளின் இறக்குமதி செலவினம் 326.5 மில்லியன் டொலர்களாகும், நவம்பர் மாதத்திற்கான செலவு 29.3 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் நவம்பர் 2022 வரை, காய்கறிகள் இறக்குமதிக்காக $ 297.2 மில்லியன் செலவிடப்பட்டது. இது உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயம் மற்றும் திராட்சை, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்றவற்றுக்காக செலவிடப்பட்டது,” என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

CBSL இன் படி, 2023 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் $ 1,541 மில்லியன் உணவு மற்றும் பானங்கள் (முக்கியமாக தானியங்கள் மற்றும் அரைக்கும் தொழில் பொருட்கள், பால் பொருட்கள், காய்கறிகள், கடல் உணவுகள், சர்க்கரை மற்றும் தின்பண்டங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள்) இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மொத்தம் 1,478 மில்லியன் டொலர்கள் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. இதேவேளை ஜனவரி-நவம்பர் 2023 காலப்பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி வருவாய் $ 397 மில்லியனாக குறைந்துள்ளது – 2022 இல் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட வருவாய் $ 418.8 மில்லியன்களாகும்.

2023 ஆம் ஆண்டில் மீன் மற்றும் மீன் தயாரிப்புகளின் ஏற்றுமதி மூலம் இலங்கை $ 274.8 மில்லியன் ஈட்டியுள்ளது, ஆனால் 2023 ஜனவரி முதல் நவம்பர் வரை கடல் உணவு இறக்குமதிக்காக $71.4 மில்லியன் செலவிட்டுள்ளது.

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் – எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன..?

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து ஐக்கியமக்கள் சக்தி ஆராயவுள்ளது.

இது தொடர்பான கட்சியின்கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லைஎன தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்ர ரஞ்சித் மத்துமபண்டார மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என தீர்மானிப்போம் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆராய்வதற்கான கட்சியின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்தும் ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக புதிய சட்டங்கள் அவசியம் என்றால் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் எனினும் உத்தேச பயங்கரவாத சட்ட மூலத்திற்கு திருத்தங்களுடன் கூட எந்த ஆதரவையும் அளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்

இலங்கையில் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிப்பு !

மின்கட்டணம் செலுத்தாதமையினால் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் மேற்பார்வை குழுவில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வசதிகளை வழங்குவதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை தமது பொறுப்பைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அந்த குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய மின் கட்டணத்தை, செலவுக்கு ஏற்ற வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.

நோர்வேயில் பல்வைத்தியராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்துப்பெண் சுட்டுக்கொலை – காதலன் கைது !

நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது முன்னாள் காதலனினால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே பொலிஸாரிடம் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார்.

இருப்பினும் நோர்வேயின் Elverum என்ற இடத்தில் குறித்த பெண்ணை அவரது முன்னாள் காதலன் சுட்டுக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 30 வயதான வரதராஜன் ராகவி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், குறித்த பெண்ணின் முன்னாள் காதலன் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி கைது செய்யப்பட்ட நோர்வே இளைஞரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நோர்வே பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.