01

01

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமெரிக்க செனட் சபையில் முறைப்பாடு – மன்னிப்பு கோரினார் மார்க் சக்கபேர்க் !

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சக்கபேர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க செனட் சபையில் ஏராளாமான பெற்றோர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றால் தங்களது குழந்தைகள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வதாக கண்ணீர் வடித்திருந்தனர். மேலும், தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன செய்திருக்கிறீர்கள் என கேள்வியும் எழுப்பினர்.

சமூக வலையத்தளங்கள் மூலம் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க செனட் சபையில் குற்றச்சாட்டு முன்வைத்த குடும்பத்தினரிடமே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ நீங்கள் அனைவரும் அனுபவித்த அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் நான் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற விஷயங்களை யாரும் கடந்து செல்லக்கூடாது. குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான தொழில்துறை அளவிலான முயற்சிகளில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விடயம் தொடர்பான விசாரணை அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்றது.

மார்க் சக்கபேர்க் மற்றும் TikTok, Snap, X ஆகிய சமூக ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

தரமற்ற மருந்துகள் கொடுக்கல் வாங்கல் விவகாரம் – கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டு பயணத்தடை !

நாளை (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டுள்ளார்.

 

தரமற்ற இம்யூனோகுளோபுலின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (31) ஆஜராகுமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு வருகை தராமைக்கு முன்வைத்த காரணம் பொய்யானது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரச செலவு முகாமைத்துவ அமைச்சு உப குழுக் கூட்டத்தில் அமைச்சர் நேற்றைய தினம் கலந்துகொள்ளவில்லை என அதன் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

 

விடயங்களை ஆராய்ந்த மாளிகாகந்த நீதவான், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்ததுடன், நாளை காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

கிளிநொச்சியின் இயற்கை வளங்களை சூறையாடும் மணல் மாபியாக்கள்!

கிளிநொச்சி, பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்த பகுதிகளில் மணல் மாபியாக்களால் சட்டவிரோத மண்அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் குறித்த பகுதியானது, இரணைமடு குளத்தின் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை மிக அண்மித்து காணப்படுவதால், எதிர்காலத்தில் மிகப் பெரிய அனர்த்தங்களையும், பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அவர் 10 நாட்களுக்குள் இப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருவதாகக் கூறியதுடன், இதுதொடர்பாக 3 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை அழைத்து விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தார்.

 

இந்நிலையில், குறித்த பகுதிக்கு நேற்று (31) பிற்பகல் சென்ற கண்டாவளை பிரதேச செயலாளர், கள நிலைமைகளை கண்காணித்ததுடன்,சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கிராம மட்ட அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி பகுதியில் மணல் மாபியாக்களில் இயங்கும் பலர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக காணப்படுவதால் மக்கள் அவர்களை எதிர்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்குவதாகவும் அறிய முடிகிறது.

 

இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தல் – 300க்கும் அதிகமானோர் கைது !

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கொள்வனவுக்காக பணம் செலுத்தும் முறைமையாக கடத்தல்காரர்களால் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (31) நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

கைத்தொலைபேசியுடன் தொடர்புடைய 1964 வர்த்தக நிலையங்கள், 2131 அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் 1202 இடங்களில் அடையாளம் காணப்பட்ட வர்த்தக வங்கிகள் தொடர்பில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் வேலணை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்காகப் பயன்படுத்துவதே எனது வழக்கம். அதற்கிணங்க சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக எமது மாவட்டத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குறித்த நிதியை மக்களின் அவசிய தேவைகளுக்கு பயன் படைத்துவதையே நான் விரும்புகின்றேன். அத்துடன் அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இருக்க வேண்டும்” இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அனோஜனின் மரணம்: 25வது வயதைத் தொடமல் மரணத்தை தழுவும் இளைஞர்கள்! லண்டனின் சோகக் கதை !

பெப்ரவரி 1 நாளை கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்த அனோஜன் ஞானசேகரனின் (21) இறுதிநிகழ்வுகள் லண்டனில் நடைபெறவுள்ளது. ஜனவரி 8 இரவு பல்கலைக்கழகம் முடிந்த பின் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்ற போதே இச்சம்பவம் இரவு 11:50 அளவில் ஸ்ரோபரி கில் ரெயில்நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது. இவருடைய பிரிவுத் துயரால் அவருடைய அவருடைய பெற்றோரும் சசோதரனும் தீராத மனவேதனையில் உள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த ஞானசேகரன் தம்பதிகளின் புல்வனான அனோஜன் இங்கிலாந்தில் பிறந்தவர். கணக்கியல் துறையில் மூன்றாம் ஆண்டில் கற்றுக்கொண்டிருந்தார்.

இது பற்றிய தேசம் திரை காணொளி காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!