March

March

பாடசாலை புத்தகப் பையின் எடை காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

பாடசாலை புத்தகப் பையின் சுமையை குறைப்பதற்கு கல்வி அமைச்சால் புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

 

மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்களைத் தவிர, பாடசாலைக்கு கொண்டு வரப்படும் பாடப்புத்தகங்களை குறைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பாடசாலை புத்தகப் பையின் எடை காரணமாக, முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அதன்படி, மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுப்பாக அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

கல்வி அமைச்சின் செயலாளர் அனைத்து அதிபர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களுடன் சுற்று நிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை வகுப்பறையில் பாதுகாப்பாக வைக்க திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் குறித்து சுற்றுநிருபத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் தொடரும் அரச பேருந்து சாரதிகளின் கவனயீனமான செயற்பாடு – பாடசாலை மாணவன் விபத்தில் பலி !

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிாிழந்துள்ளார்.

 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

 

சம்பவத்தில் கல்வி பொதுத்தராதர உயா்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடா்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் சாரதிகளின் கவனயீனத்தால் A9 சாலைகளில் அண்மையில் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலை சிற்றுண்டி உணவக பெண்னை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய பாடசாலை அதிபர் கைது !

பாடசாலை சிற்றுண்டியின் உரிமையாளரான பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில், அப்பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மொனராகலை கலபெத்த மகா வித்தியாலய அதிபர், பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தொம்பகஹவெல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

கலபெத்த அலபொத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இந்த பெண், கடந்த (28) உணவகத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் பாடசாலையின் ஆசிரியை ஒருவர் வந்து, சிற்றுண்டிச்சாலையில் விளக்குகள் அணைக்கப்படவில்லை என்று கூறினார். மாலை 3.40 மணியளவில் பாடசாலைக்கு விளக்குகளை அணைக்கச் சென்றுள்ளார். விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டுக்குச் செல்ல இருந்தபோது அதிபரால் பாலியல் வன்கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் தொம்பகஹவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.