30

30

அம்மான் படையணி அமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ளேன் – விநாயகமூர்த்தி முரளிதரன்

அம்மான் படையணி எனும் புதிய அமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் நேற்று(29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

இந்த செயற்பாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த குடும்பத் தலைவிகளும், விடுதலைப் புலிகள் மாத்திரமல்லாது அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் வாழ்வாதாரமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

அவர்களுக்காக புது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அம்மான் படையணி அமைப்பு போராளிகளின் நலம் பேணுவதற்காக உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் வட மாகாணத்திலேயே தற்போது செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கிழக்கு மாகாணத்திலும் அதன் செயற்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகக் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருள் ஒழிப்பு ஆலோசகர்களாக பயிற்றுவிக்கும் திட்டம் ஆரம்பம் !

பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருள் ஒழிப்பு ஆலோசகர்களாக பயிற்றுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

 

யுக்திய சுற்றிவளைப்பு திட்டத்திற்கு அமைவாக, இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொஹொலன்கே தெரிவித்துள்ளார்.

 

இதற்கமைவாக, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் இருந்து 200 மாணவர்கள் பயிற்றுவிக்கப்படவுள்ளதாகவும் இந்த திட்டத்தை பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

 

இதனிடையே, யுக்திய சுற்றிவளைப்பிற்கு இணையான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் எதிர்வரும் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பயிற்சியை பெற்றுக்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களை பாடசாலை மட்ட ஆலோசகர்களாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

ஶ்ரீ ஜயவர்தனபுர மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் 400 மாணவர்களுக்கு இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சடுதியாக அதிகரித்துள்ள சமூக ஊடகங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் !

சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பேஸ்புக் ஊடாக இடம்பெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

கடந்த வருடத்தின் முதல் 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில், ​​இணையத்தளம் ஊடான மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளில் சற்று அதிகரிப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலும் – அவற்றுக்கான பின்னணி தொடர்பிலும்   அண்மையில் தேசம் திரை காணொளியில் நளினி ரத்னராஜா அவர்களுடன் இடம்பெற்ற முழுமையான உரையாடலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!