04

04

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதலாவது மனு நீதிமன்றத்தின் முன் தாக்கல் !

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதலாவது மனு நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனகரத்நாயக்கவிற்கு எதிராக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினர் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்கவேண்டும் என்ற நிபந்தனை உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

இந்த மனுவை தாக்கல் செய்திருந்த ஜனகரத்நாயக்க மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தனிப்பட்ட விபரங்களை இணையவழிமூலம் பரிமாறிக்கொள்கின்றனர் அல்லது பரிமாற முயல்கின்றனர் என குறிப்பிட்டிருந்தார்

 

நான் இலக்குவைக்கப்பட்டுள்ளேன் மேலும் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நபர் வேண்டுமென்றே பிழையான தகவல்களை பரப்புவதன் மூலம் என்னை துன்புறுத்துகின்றார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

யுக்திய பொலிஸ் கைது நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் தொடரும் வாள்வெட்டுக்குழுக்களின் அட்டகாசம் – வாள்வெட்டுக்கு துணைபோகின்றனரா வடக்கின் அரசியல்வாதிகளும் – பொலிஸாரும்..?

அண்மைய நாட்களில் தினசரி 1000க்கும் குறையாத கைது நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் தினசரி இடம்பறெ்று வருவதுடன் வடக்கின் பல பகுதிகளிலும் யுக்திய எனும் போதைப்பொருள் ஒழிப்பின் ஒரு கட்டமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகின்றது. இதனால் 24 நேரத்திலும் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைகள் ஓய்வில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படியான ஒரு இறுக்கமான பொலிஸ் கெடுபிடி கால கட்டத்தில் கூட யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களும் – கட்டப்பஞ்சாயத்துக்களும் – போதைப்பொருள் கடத்தல் நகர்வுகளும் குறைவில்லாமல் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

 

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!