20

20

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது !

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது , தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த வேளை அங்கு முறையான அனுமதியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். குறித்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சவுதிக்கு பணிப்பெண்ணாக சென்ற தமிழ்பெண்ணுக்கு நடந்த கொடூரம் !

பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற எனக்கு இரண்டு மாத சம்பளம் தரவில்லை. பேசியதை விட அதிகமாக வேலை வாங்கி துன்பப்படுத்திவிட்டு நாட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அங்குள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளையையும் மீளுங்கள் என துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தனது அவல நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றேன். அதுவும் மன்னராட்சி நடந்த, சட்டம் நிறைந்த இஸ்லாமிய நாடு என சவுதியை தெரிவு செய்தேன். ஏஜென்சி மூலமாக சட்ட பூர்வமாகவே சென்றேன்.

 

நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியாது. போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை. பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள்.

 

தோட்டம் வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன். நான் சிரமப்பட்டேன். என்னை துன்பப்படுத்தினார்கள். காலில் அடித்தார்கள். இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன். ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை. 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் போன நான் கடைசியாக என்னை துன்பப்படுத்தி அங்கு பொலிசில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.

 

எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்க சென்று தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன். அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது. அதனையும் காப்பாற்ற வேண்டும். எனது இரண்டு மாத சம்பளமும் தேவை எனத் தெரிவித்தார்.

இலங்கை சிறுவர்கள் இடையே வேகமெடுக்கும் எச்.ஐ.வி !

கடந்த 2023 ஆம் ஆண்டில் 40 சிறுவர்கள் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 607 ஆகவும் 2023 ஆம் ஆண்டில் 694 ஆகவும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 694 பேரில் 613 ஆண்கள் உள்ளடங்குகின்றனர்.

 

இந்நிலையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.