13

13

இணைய வசதி சேவையை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அரசாங்கம் அனுமதி !

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக, ஸ்டார்லிங்க் (Starlink) தனியார் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் அனுமதித் பத்திரத்தை வழங்க. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு திருத்தச் சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் இந்த அனுமதி நடைமுறைக்கு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலகப் புகழ்பெற்ற வர்த்தகர் எலான் மஸ்க்கிற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இந்தோனேசியாவில் நடைபெற்றது.

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் வலையமைப்புடன் இலங்கையை இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதன் விளைவாக, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையில் இணைய வசதி சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதுள்ள பைபர் தொழிநுட்ப இணைய சேவையை விட இந்த இணைய சேவையானது பல மடங்கு வேகமானது என்பதனால் உலகில் எந்த இடத்திலிருந்தும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.

இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் தொழில்நுட்பத் துறையில் சிறந்த சூழல் உருவாகும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் !

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நேற்று (12) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு கொக்குவில் சந்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கூறினர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்  திருநெல்வேலி பகுதியில் கடந்த இன்று 8 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷேக் ஹசீனா அரசு ஆட்சி கவிழ்ப்பின் பின் பங்களாதேஷில் சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் !

பங்களாதேஷில் வாழும் இந்துக்களுக்கு எதிராகப் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபை  கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பங்களாதேஷில் உள்ள இந்துக்களைப் பாதுகாக்க முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு எதிராகக் கண்டன பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இந்து, பௌத்த, கத்தோலிக்க ஒற்றுமை குழுவொன்று இந்த பேரணியினை ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில்  ஷேக் ஹசீனா  அரசு கவிழ்ந்ததன் பின்னர் அங்கு கடந்த சில நாட்களில் மாத்திரம் சிறுபான்மையினர் மீது 205 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமஷ்டி அதிகாரத்தை நான் வழங்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சமஷ்டி அதிகாரத்தை நான் வழங்க முடியாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலம்மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என தன்னை சந்தித்த தமிழ்த் தேசிய கட்சியினருக்கு தெரிவித்துள்ளார்.அத்துடன், சமஷ்டி தீர்வு கிட்டும்வரை 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என கூறிய ஜனாதிபதி, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பேசி முடிவு எடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் 13ஆவது திருத்தம் தொடர்பில் தான் தயாரித்து வைத்துள்ள ஆவணம் ஒன்றையும் கட்சியினரிடம் வழங்கியுள்ளார்.

இதன்போது தமிழ்க் கட்சிகள் முன்வைத்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை நிச்சயம் தான் வழங்குவேன் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் அரியாலை பகுதியில் உள்ள தென்னம் தோப்பு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அரியாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,அவர்களிடம் இருந்து 156 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.