February

February

நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை ! நாமல் ராஜபக்ஷ 

நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை ! நாமல் ராஜபக்ஷ

 

பாதாள உலகக் கும்பலை கைது செய்ய பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என கூறிவிட்டு வடக்கு மற்றும் தெற்கில் முகநூல் பதிவுகளுக்காக இளைஞர்களை கைதுசெய்ய பயங்கரவாத தடை சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.

இவ்வாறு அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக விமர்சித்துள்ள அவர், இந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடை சட்டத்தை இல்லாமல் செய்யும் என்ற நம்பிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அரசாங்கம் அவர்களை ஏமாற்றியுள்ளது. எங்களுடைய கட்சி பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டங்களை ஆதரிப்பதாகவும் நாங்கள் அதில் வெளிப்படையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மற்றவர்களை போல நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

 

வரவுசெலவு திட்டம்: பா உ அர்ச்சுனா தமிழரசுக் கட்சி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை ! பா உ செல்வம் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார் ! பா உ கஜேந்திரகுமார் எதிர்த்து வாக்களித்தார் ! 

வரவுசெலவு திட்டம்: பா உ அர்ச்சுனா தமிழரசுக் கட்சி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை ! பா உ செல்வம் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார் ! பா உ கஜேந்திரகுமார் எதிர்த்து வாக்களித்தார் !

2025 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.

இந்த வாக்கெடுப்பில் இராமனாதன் அர்சுனா, ப.திகாம்பரம், தயாசிறி ஜயசேகர இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 பேர் கலந்துகொள்ளவில்லை.

வரவு செலவுத்திட்டத்திற்கு ஆளும் கட்சியில் இருக்கும் 159 பேரில் 154 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

வரவு செலவு திட்டத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, ஜீவன் தொண்டமான் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ரவி கருணாநாயக்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, நாமல் ராஜபக்ஷ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன வாக்களித்தன.

இதேவேளை ஜனநாய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையும் கவனிக்கத்தக்கது.

 

யாழ் நூலகத்தை பாதுகாக்க நூறு மில்லியன் போதாது! வடக்கு கிழக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

யாழ் நூலகத்தை பாதுகாக்க நூறு மில்லியன் போதாது! வடக்கு கிழக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு நூறு மில்லியன் ரூபாய் போதாது என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையிலுள்ள அடிப்படை இனப்பிரச்சினைக்கு காரணம், நாட்டில் காணப்படும் இனவாதமே ஆகும். இந்தநிலையில், அன்று முதல் இன்று வரை தொடர் பிரச்சினைக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்ற நிலையில், தற்போதைய அரசால் சரி அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நினைத்தோம்.

இதனடிப்படையில், கொண்டு வரப்பட்ட வரவு செலவு திட்டத்தில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி வடமாகாணத்திற்கு போதுமானதாக இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரதேசங்கள் உட்பட்ட வறுமையில் உள்ள 10 வீத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பிரஜா சக்தி திட்டம் ! 

தமிழ் பிரதேசங்கள் உட்பட்ட வறுமையில் உள்ள 10 வீத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பிரஜா சக்தி திட்டம் !

 

நாடு முழுவதிலும் உள்ள வறுமையை ஒழிப்பதற்கான “பிரஜா சக்தி” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6 பேரில் ஒருவர் பல பரிமாண வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அந்த மக்கள்தொகையில் 95.3% பேர் கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் வாழ்கின்றனர். கடந்த சில தசாப்தங்களாக, வறுமை ஒழிப்பு நலத்திட்டங்கள் மூலம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும், அவற்றுக்காக செலவிடப்படும் பணத்தின் அளவும் படிப்படியாக அதிகரித்துள்ளது.

2000 ஆம் ஆண்டில், பயனாளிகளின் எண்ணிக்கை 1.10 மில்லியனாக இருந்தது, இது 2010 இல் 1.57 மில்லியனாக அதிகரித்தது. மேலும் அந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 1.79 மில்லியனாக மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலைமை தொடர்வது நாட்டின் பொருளாதார மற்றும் உற்பத்தி செயல்முறைகளை மோசமாக பாதிக்கும் என்பதால், பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மட்டுமே முறையான சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு வழிநடத்துவதன் மூலமும், மீதமுள்ள மக்களை பொருளாதாரச் செயல்பாட்டில் தீவிர பங்கேற்பாளர்களாக ஈடுபடுத்துவதன் மூலமும் முறையாகத் திட்டமிடப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.

அதன்படி, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, பன்முக அணுகுமுறையுடன் கூடிய ஒருங்கிணைந்த திட்டமாக “பிரஜா சக்தி” திட்டத்தை செயல்படுத்துவதற்காக கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

இல்லாத பிரச்சனையை உருவாக்கி நாட்டின் சுற்றுலா பொருளாதாரத்தை அழிக்க முனையும் சஜித் பிரேமதாச !

இல்லாத பிரச்சனையை உருவாக்கி நாட்டின் சுற்றுலா பொருளாதாரத்தை அழிக்க முனையும் சஜித் பிரேமதாச !
கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுதிறது. குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் என்ன..? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலைமை பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமையும் எனவும் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, தேசியப் பாதுகாப்பு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் எதிர்க்கட்சி தலைவர் மாத்திரமே இது குறித்து தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருவதாகக் கூறியுள்ளார். தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக்கூறி கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பலமுறை பதிலளிக்கப்பட்டுள்ள ஒரு கேள்வியைத் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதால் எந்த பயனும் இல்லை எனச் சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அச்சுறுத்தல்கள் அதிகமாகியுள்ளது – பாதுகாப்பு வழங்குமாறு கோருகின்றனர் பா.உ இராமநாதன் அர்ச்சுனாவும் நாமல் ராஜபக்சவும் !

அச்சுறுத்தல்கள் அதிகமாகியுள்ளது – பாதுகாப்பு வழங்குமாறு கோருகின்றனர் பா.உ இராமநாதன் அர்ச்சுனாவும் நாமல் ராஜபக்சவும் !

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நான் செயற்படுவதற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே மாதிரியான கோரிக்கையை நாமல் ராஜபக்சவும் முன் வைத்துள்ளார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் நாமல் ராஜபக்சவை குழிக்குள் அனுப்புவோம் என்று குறியதாக பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளர் சாகச காரியவாசம் தெரிவித்துள்ளார். அதனால் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பில் அர்ச்சுனா மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வலம்புரி ஹோட்டலில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தனது செயலாளர் தாக்கப்பட்டதுடன் இது தொடர்பில் நான் பொலிஸ் முறைப்பாட்டை அளித்திருந்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அத்தோடு, அண்மையில் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்டதுடன் இந்த வாரமே தொடர் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இவ்வாறான சூழலில் என்னுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமாரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – எச்சரிக்கிறது புலனாய்வு !

ஜனாதிபதி அனுர குமாரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – எச்சரிக்கிறது புலனாய்வு !

 

பல்வேறு பேரணிகளின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொது இடங்களில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரச புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஜனாதிபதிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

குறிப்பாக, நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா என்ற சந்தேகம் பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும் அறியப்படுகிறது.

இதன் விளைவாக, தொடர்புடைய பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் ஒரு புற்றுநோய் என கூறிய இனவாதியான ஞானசார தேரர் விடுதலை !

இஸ்லாம் ஒரு புற்றுநோய் என கூறிய இனவாதியான ஞானசார தேரர் விடுதலை !

 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு, மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இஸ்லாம் மதத்திற்கு எதிரான அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு 9 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிராக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்து, வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை, இறுதித் தீர்ப்பு அறிவிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரர் 2016 ஜூலை 16 ஆம் திகதி கொழும்பு, கிருலப்பனை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​“இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதனை ஒழிக்க வேண்டும்” என குறிப்பிட்டு இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டமைக்காக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழினியின் மரணத்தில் சந்தேகம் ! விசாரணையைக் கோரி பொலிஸில் முறைப்பாடு ! பிரித்தானிய தொழிற்கட்சி உறுப்பினர் 

தமிழினியின் மரணத்தில் சந்தேகம் ! விசாரணையைக் கோரி பொலிஸில் முறைப்பாடு ! பிரித்தானிய தொழிற்கட்சி உறுப்பினர்

 

கடந்த பெப்ரவர் 10 திகதி யாழ் தென்மராட்சி சாவகச்சேரி பிரதேசசெயலக உதவி பிரதேசசெயலாளர் தமிழினி சதீஸ் தீயில் எரிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆறு மாதக் கர்ப்பிணியான அவர் சிகிச்சை பலனின்றி பெப்ரவரி 16 இல் உயிரிழந்தார். ஆரம்பத்தில் கணவருடனான மோதலே இந்த சம்பவத்திற்கு காரணம் எனப் பத்திரிகைகளில் தகவல் வெளியாகியிருந்தது.

எனினும் தமிழினி இறக்க முன்னர் கொடுத்த வாக்குமூலம் வேறு மாதிரி அமைந்திருந்தது. படுக்கையறையில் வைக்கப்பட்ட நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால் ஏற்பட்ட விபத்தே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தீக்காயங்களுக்குள்ளான தமிழினியை காப்பற்ற முற்பட்ட அவரது கணவருக்கும் சிறியளவில் தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழினியின் கணவர் அசோகதாஸன் சதீஸ் கோப்பாய் பட்டமேனியில் கிராம சேவகராக பணிபுரிகிறார். இறந்த உதவி பிரதேச செயலாளர் தமிழினிக்கு ஆறு வயதில் இன்னொரு பெண் குழந்தையும் உள்ளது.

தமிழினி சதீஸ் அகாலமரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன. தமிழினியின் மரணத்தின் பின்னணியில் அவரது கணவர் சதீஸ் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழினி மற்றும் சதீஸ் இருவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் ஒன்றாக படித்து பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக காதலே திருமணத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் தமிழினி. திருமணத்தின் பின் நீர்வேலியில் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

தமிழினியை திட்டமிட்டு சதீஸ் தீயிட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. சதீஸ் மது போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. பெண்களுடன் தவறான உறவில் சதீஸ் இருந்தாகவும் கூறப்படுகிறது. பல பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். சதீஸின் நடத்தையால் தமிழினி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

தீ விபத்து நடந்த அன்று தமிழினிக்கும் கணவர் சதீஸ்க்கும் இடையே சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது. தீயில் எரிந்த தமிழினிக்கு உடைமாற்றி அதிகாலை கோப்பாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் கணவர் சதீஸ். கோப்பாயிலிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்பட்டார் தமிழினி. தமிழினியின் சகோதரியின் வாக்குமூலப்படி தமிழினியின் முகமும் முன்பக்கமும் தீயினால் கடுமையாக எரிந்துள்ளது. வைத்தியர்களின் கூற்றுப்படி நுரையிரல் கிட்டத்தட்ட முற்றாகவே சிதைந்து போயுள்ளது .

தமிழினியை வைத்தியசாலையில் அனுமதித்த போது கணவர் சதீஸ் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. யாழ் அரசாங்க அதிபர் நான்காம் நாள் தமிழினியை வைத்தியசாலையில் சந்தித்துள்ளார். எப்படியாயினும் நுளம்புக்கு கொழுத்திய திரியால் தீ விபத்து ஏற்பட்டு மரணம் சம்பவிப்பது மிக அரிதான விசித்திரமான நிகழ்வு. வெளிநாடுகளில் கட்டிடங்கள் எரியக்கூடிய மூலப்பொருட்களைக்கொண்டே கட்டப்படுவதால் தீ விபத்துக்கள் உயிராபத்தானவையாக இருப்பது இயல்பு. ஆனால் இலங்கையில் அவ்வாறான நிலையில்லை. அதுவும் நுளம்புத் திரியால் வந்த நெருப்பு உடலை எரிப்பது ஆச்சரியமானதே.

ஆனால் சில மாதங்களுக்கு முன் திருகோணமலையில் ஒரு பெண் குடிகார கணவனுக்கு பாடம் கற்பிக்க மண்ணெண்ணையை ஊற்றி மிலட்ட எடுத்த முயற்சி மரணத்தில் முடிந்ததை தேசம்நெற் வெளியிட்டு இருந்தமை தெரிந்ததே.

இப்படியான சந்தேக அகாலமரணங்கள் மிகவும் உண்ணிப்பாக விசாரிக்கப்பட வேண்டும். வீட்டு வன்முறைகளின் உச்சகட்டமாக பெண்கள் பரிதாபமாக கொலை செய்யப்படுவது தினந்தோறும் நடக்கும் சம்பவங்கள் ஆகிவிட்டன. இறந்தவர் உயர் பதவி வகித்த உதவிப் பிரதேச செயலாளர். குற்றம்சாட்டப்படும் கணவர் கிராமத்தையே பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க கிராம சேவகர்.

பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் மலிந்து போயுள்ள சமூகத்தில் இவ்வாறன மரண தீர விசாரிக்க வேண்டியது பொலிஸார் கடமை. வைத்தியசாலை நிர்வாகமும் பொறுப்புணர்வோடு நடக்க வேண்டும். பெண்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம் என கூறிக் கொள்ளும் பெண்ணியவாதிகளும் பெண் அரசியல்வாதிகளும் கூட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் தொடர்பில் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழினிக்கு நீதி கேட்டு முகநூலில் “ஊழல் ஒழிப்பு அணி வன்னி’’ என்ற முகநூல் கணக்கினூடாகவே முதன் முதலில் தொடர்ச்சியாக பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தற்சமயம் இந்த விடயத்தில் தமிழினியின் தந்தை சண்முகராசா பொலிஸ் திணைக்களத்திற்கு முறைப்பாடு கொடுத்துள்ளார். ஏற்கனவே கோப்பாய் பொலிஸில் உள்ள முறைப்பாடு தொடர்பில் அவர் விளக்கங்களை கேட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி பிரித்தானியா வாழ் தொழிற்கட்சி உறுப்பினர் துஷாகரன் அமிர்தலிங்கமும் தமிழினியின் மரணத்திற்கு நீதி கேட்டு இலங்கை அரசின் பல்வேறு பிரிவுகளுக்கும் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழினியின் கணவர் சதீஸ் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை, தமிழினியின் அகாலமரணம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை பொலிஸாரும் அரசாங்க அதிபருமே தெளிவுபடுத்த வேண்டும். தமிழினி எரிக்கப்பட்டாரா? என்பதை வீட்டுவன்முறைச் சட்டத்தின் கீழ் சந்தேக மரணமாக எடுத்து சுயாதீன விசாரணைகளுக்கு உத்தரவிட வேண்டும். தமிழினி கணவர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை? ஏதும் அரசியல் செல்வாக்கு விசாரணைகளை திசை திருப்புகின்றதா? என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும். தமிழினியின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

கணவனின் அரசியல் தஞ்சத்திற்கு கடிதம் கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த எம்பி சிறிதரனின் வலதுகரம் வேழமாலிதன்

கணவனின் அரசியல் தஞ்சத்திற்கு கடிதம் கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த எம்பி சிறிதரனின் வலதுகரம் வேழமாலிதன்
தமிழ்த்தேசிய அரசியலின் புதிய காவலனான எம்பி சிறிதரனின் அலுவலகம் மற்றும் கையாட்களின் காமக்களியாட்டங்களால் சமூக ஊடகங்கள் பரபரப்பாகியுள்ளன. சிறிதரனின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட வேழமாலிகிதனின் லீலைகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வெளிநாட்டில் வாழும் கணவரின் அரசியல் தஞ்சத்திற்கு உதவியாக, கடிதம் கேட்டுச் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் வேழமாலிகிதன் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது பிரத்யேக கைத்தொலைபேசியிலிருந்து வட்ஸ்அப் ஊடாக படுக்கைக்கு அழைத்துள்ளார். வேழமாலிதனின் காம உரையாடல்கள் முகநூலில் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த வேழமாலிகிதன். அடியாட்களுடன் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று அஸிட் ஊற்றப்போவதாக மிரட்டியுள்ளார். சிறிதரன் எம்பியும் இந்த விடயத்தை வெளியே சொல்லக்கூடாது என அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
வேழமாலிதனின் கிளிநொச்சி பசுமைப் பூங்கா நிதி மோசடி, காணி அகரிப்பு, பாலியல் இலஞ்சம், கட்டப்பஞ்சாயத்து எனப் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. ‘ஊழல் ஒழிப்பு வன்னி அணி’ என்ற முகநூல் கணக்கில் புகைப்பட ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட முகநூலை நடத்துவோரை தொடர்பு கொண்ட வேழமாலிதன். தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்திகளை நீக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வேழமாலிதனால் ஒரு பெண் தீக்குளித்து இறந்துள்ளார் என்றும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேசம் இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது மக்கள் வேழமாலிதன் பெண் பித்தர் என குறிப்பிடுகிறார்கள். ஊழல் ஒழிப்பு அணி வன்னி முகநூலில் வேழமாலிதனும் அவரது கையாளும் மது போதையில் கைது செய்யப்பட்டு விடுதலையானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனை வேழமாலிதன் மறுக்கிறார். சிறிதரனின் அரசியலுக்கு வேழமாலிதனால் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டதாக சிறிதரன் ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பா உ சிறிதரன் தன்னை தேசியத் தலைவரின் நிலையில் வைத்து தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கின்றார். இவர் போர்த்தியுள்ள புலித்தோல் போர்த்த தேசியத்திற்குப் பின்னால் கள்ள மண் அகழ்வு, கள்ள மரம் கடத்துவது, கசிப்பு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற முடிச்சவிக்கிகள் மொள்ளமாரிகள் எல்லோரும் கூட்டிணைந்துள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்களை அதனை பராமரிக்கும் அமைப்புகளிடம் கொடுக்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்து நிதி மற்றும் அரசியல் வியாபாரம் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் பா உ சிறிதரன் மீது வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறிதரன் தனக்கு எதிரானவர்களுக்குத் துரோகிப்பட்டம் கட்டி தனது தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கின்றார். அண்மையில் உண்ணாவிரதம் இருந்த வனகுலராசாவை றோ ஏஜென்ட் என சிறிதரனின் ஊடகவியலாளர் பிரச்சாரம் செய்திருந்தமை தெரிந்ததே.
ஆனாலும் தற்போது முதற்தடவையாக சிறிதரனின் கிளிநொச்சி தமிழரசுக் கட்சிக் காரியாலயமும் ஒரு அந்தப்புரமாக மாறுகிறதா என்ற சந்தேகத்தை தற்போது அம்பலமாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன
https://www.facebook.com/share/v/12G4evzFruv/