09

09

தலைவர் பிரபாகரன் அடுத்த தலைவரை காட்டாமல் விட்டது தவறு !தலைவர் இருக்கும் போதே சீமானைக் கழுவி ஊத்திவிட்டார்.

தலைவர் பிரபாகரன் அடுத்த தலைவரை காட்டாமல் விட்டது தவறு !தலைவர் இருக்கும் போதே சீமானைக் கழுவி ஊத்திவிட்டார்.

சீமான் – தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான தொடர்பின் உண்மைத்தன்மை, தமிழகம் உண்மையிலேயே ஈழத்தமிழர்களை அணைக்கிறதா..? ஈழத்தின் தமிழ்தேசியம் பெரியாரையும் உள்வாங்கியிருந்தததா..? சீமான் ஈழத்தில் பேசியது என்ன..? உள்ளிட்ட போராட்ட கால வரலாற்றின் வடுக்களையும், தடயங்களையும் தேசம் திரையுடன் மீள ஒரு தடவை பகிர்ந்து கொள்கிறார் தலைவர் பிரபாகரனோடு உரையாடிய பெண் ஆளுமை மாவீரர்களின் தாய், ஒரு போராளி – தமிழ்கவி அம்மா

அரகலயவை பயன்படுத்தி இழப்பீடு பெற்ற பா.உக்கள் – விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள என்.பி.பி !

அரகலயவை பயன்படுத்தி இழப்பீடு பெற்ற பா.உக்கள் – விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள என்.பி.பி !

கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது தங்களது வீடுகள் சேதமாக்கப்பட்டதாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவில் இழப்பீட்டை பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த காலங்களில் இழப்பீடுகளை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், குறித்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக நாடாளுமன்றத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும்.

கொழும்பு துறைமுக மனிதப்புதைகுழி – இரு சிறுவர்கள் உட்பட கொன்று புதைக்கப்பட்ட 16பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு !

கொழும்பு துறைமுக மனிதப்புதைகுழி – இரு சிறுவர்கள் உட்பட கொன்று புதைக்கப்பட்ட 16பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு !

கொழும்பு துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில் இதுவரை 16 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். இவற்றில் இரு சிறுவர்களது எலும்புக்கூடுகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளாவது, இதுவரை 13 முழுமையான எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கணிசமான எண்ணிக்கையில் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மேலும் மூவரின் எலும்புக்கூடும் அடையாளம் காணப்படவுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட விதம் அவர்கள் கொலை செய்யப்பட்டதைக் காட்டுகின்றது. உயிரிழந்த காலகட்டம் விஞ்ஞானரீதியிலான ஆய்வுக்குப் பிறகு தீர்மானிக்க முடியும். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி அறிக்கைகள் வழங்கப்படும் என்றார் பேராசிரியர் ராஜ் சோமதேவ.

கடந்த ஆண்டு ஜூலை 13ம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டும் போது கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது இதன் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுகள் இடம்பெறுகின்றன.

கொழும்பு துறைமுகம் பல நூற்றாண்டுகளாக போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் போது ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது. சிலர் குறிதத்த புதைகுழி காலனித்துவ கால மோதல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள், சிலர் இவர்கள் இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போதான வன்முறைகளின் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடுகின்றனர்.

ஹெலிகாப்டர் இருக்குது எதற்காக ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? – எம்.பி ரவி கருணாநாயக்க

ஹெலிகாப்டர் இருக்குது எதற்காக ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? – எம்.பி ரவி கருணாநாயக்க

யாழ்ப்பாண விஜயத்தின்போது எதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க 12 மணிநேரத்தை வீதியில் வீணாக்கினார் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (07.02.25) கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி என்பவர் ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். ஹெலிகாப்டர் இருக்கும்போது எதற்காக அவர் ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? இது நவீன உலகம். நான் பிரதமருக்கும் அதையே பரிந்துரைக்கின்றேன். தனிப்பட்ட ரீதியில் ஹரிணி அமரசூரிய என்று இல்லாமல் நாட்டின் பிரதமர் என்ற பதவியில் இருக்கும் போது ஏன் நீங்கள் இதை பாவிக்கின்றீர்கள் இல்லை? இது ஒரு இழப்பு இல்லை. நீங்கள் ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழித்து இழக்கும் பணமே நாட்டுக்கு வீண்விரயமானது. எதிர்க்கட்சியாக நான் இதை முன்மொழிகிறேன். இவ்வாறானவை தேவையற்ற செலவீனங்கள் இல்லை. இதுதான் நீங்கள் நாட்டை முன்னேற்றும் வழி” என்றார்.

ரவி கருணாநாயக்கவின் கருத்தை பலரும் சமூகவலைத்தளங்களில் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதி உட்பட்ட முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் தம்முடைய நேரம் தொடர்பில் அதீத கவனம் எடுக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேவேளை இன்னொரு சாரார் வான்வழியால் பயணித்தால் நாட்டின் தலைவரால் மக்களின் நிறைகுறைகளை அறியமுடியாது என்றும், இவ்வாறான பயணங்களின் ஊடாக அனுர சாமான்ய மக்களின் நிலையை அவதானிக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

குளத்தின் நடுவே ஒன்றல்ல இரு தடவைகள் மைதானம் கட்ட நிதி ஒதுக்கிய சாணக்கியன் – மோசடி !

குளத்தின் நடுவே ஒன்றல்ல இரு தடவைகள் மைதானம் கட்ட நிதி ஒதுக்கிய சாணக்கியன் – மோசடி !

மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கிருஸ்ணபிள்ளை வதனகுமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி எருவில் கிழக்கில் மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவலை பெற்றோம், இருந்த போதும் அவ்வாறு இல்லாத மைதானத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தோம்.

அந்த நிதி அவர்களது ஆதரவாளர்கள் மூலம் பிரச்சார வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுடைய வரிப்பணம் மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது

இவ்வாறானவர்களை மக்கள் தெரிவு செய்வதால் எமது பிரதேசத்தில் இன்றும் மக்கள் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மோசடி தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்

மாகாண சபை தேர்தல்கள் குறித்து சகல கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு 

மாகாண சபை தேர்தல்கள் குறித்து சகல கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு

“மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அண்மைய தேர்தல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், “உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அவை விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்க முடியும்.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உண்டு என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம். தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களில் கலப்புத் தேர்தல் முறைமை குறித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் உண்டு” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்

 “ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை – எதிர்க்கட்சியின் ஹேஷா விதானகே !

“ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை – எதிர்க்கட்சியின் ஹேஷா விதானகே !

“ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தெடுக்கவே பார்க்கிறார்கள். இதனால் தான் நிரந்தர தீர்வு எடுக்கவில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், புதிய அரசாங்கத்தில் மலையக பெண் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். பெருந்தோட்ட மக்களுக்கு தற்காலிக தீர்வு வழங்காமல், நிரந்தர தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்காலத்திலும் அரசியலுக்கு பயன்படுத்துவதை இனியேனும் நிறுத்த வேண்டும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அரசியல் பொம்மைகளாக்கி அதனூடாக ஆட்சியை கைப்பற்றும் செயற்பாடுகள் மாத்திரமே இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் ஆதரவு இருந்தால் வெற்றிப் பெற முடியும் என்று குறிப்பிட்டுக் கொண்டு அவர்களுக்கு பிரத்தியேக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அமைச்சுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. ஆனால் உறுதியான தீர்வு கிடைக்கவில்லை.

பெருந்தோட்ட மக்களை லயன் அறையில் இருந்து வெளிக்கொண்டு வந்து அவர்களை முழுமையான சுதந்திரத்துடன் வாழ வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

தையிட்டி விகாரையை இடித்தழிப்போம் – கஜா குழுவினருடன் கைகோர்த்தார் பா.உ சிறிதரன் !

தையிட்டி விகாரையை இடித்தழிப்போம் – கஜா குழுவினருடன் கைகோர்த்தார் பா.உ சிறிதரன் !

தையிட்டி விகாரை இடித்தழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் தான் முப்பது வருடங்களுக்கு மேலதிகமாக தம்புள்ளையில் இருந்த காளி கோயில் இடித்தழிக்கப்பட்டது என கூறுகிறார்கள். தற்போதைய ஜனாதிபதி அநுர சட்டம் அனைவருக்கும் சமமானது என கூறி வருகிறார். சட்டத்தின் அடிப்படையில் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் எனவும் பா உ சிறிதரன் கூறியுள்ளார்.

பா.உ கஜேந்திரகுமார் உள்ளிட்ட அவருடைய சைக்கிள் கட்சியினர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தமது அரசியலை உறுதி செய்ய மீள தையிட்டி விகாரையை கையிலெடுத்துள்ளனர் என குற்றச்சாட்டினை முன்வைக்கும் தேசம் ஜெயபாலன் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறுவது மீள ஓர் இனவாத தீயை கொழுந்து விட்டு எரிய வைத்து அதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்ட முனையும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மைய தேசம் திரை நேர்காணலில் கலந்து கொண்டிருந்த மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோருக்கு மக்களின் பொருளாதார பிரச்சினைகள் கண்ணுக்கு தெரியாத நிலையில் தையிட்டி உள்ளிட்ட அரசியல் செய்யக்கூடிய பிரச்சினைகளில் தான் அதிக கவனம் செல்கிறது எனவும் இந்த குறுந்தேசியவாதிகள் எதிர்வரும் காலங்களிலும் மக்களால் நிராகரிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே தனிக்கட்டையாக பாராளுமன்றத்தில் உள்ள பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என்ற கருத்துடன் கைகோர்த்திருக்கிறார் பா.உ சிறிதரன். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் பலரை தேசியம் என்ற பெயரில் உசுப்பேற்றி வரும் பா.உ சிறிதரன் தையிட்டி விகாரையை வைத்து தனது அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்திருக்கிறார்.

இதேவேளை விகாரை அமைக்கப்பட்டு முழுமையடையும் வரை அமைதியாக இருந்துவிட்டு விகாரை முழுமையடைந்ததும் அதனை இடித்தழிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறி மீள ஓர் வன்முறை கலாச்சாரத்தை ஆரம்பித்து வைக்கின்றனர் என இணக்க அரசியலை விரும்பும் தரப்பினர் கருத்து வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் !

அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் !

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தாக்குவதற்காக அண்மையில் காணொளி ஒன்றில் பா.உ இராமநாதன் அர்ச்சுனா “நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள்” என மலையக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான மொழியாடல்களை பயன்படுத்தியிருப்பது பலரையும் அருவருப்படைய வைத்துள்ளது.

பா உ அர்ச்சுனா ஊசி அர்ச்சுனாவாக இருந்த போதே தன்னுடைய சாதியத் திமிரை அப்பப்போ காட்டியதை தேசம்நெற் பல தடவைகள் அம்பலப்படுத்தியிருந்தது. 42 பாகை வெப்பநிலையிலும் ரை கட்டிவரும் அர்ச்சுனா தன்னை எப்போதும் கண்காணியாகவே கனவு காண்கின்றார். மற்றவர்களை முட்டாளாகவே காண்கின்றார். பெரும்பாலான முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என்று விளங்குவதற்கான அறிவு கூட இருப்பதில்லை. அந்த ரகத்தைச் சேர்ந்த டொக்கடர் முட்டாள் தான் இந்த அர்ச்சுனா என்கிறார் சமூக செயற்பாட்டாளர் சோலையூரான். இவ்வாறானவர்களைத் தெரிவு செய்கின்ற அளவுக்கு யாழ்ப்பாணத் தமிழ் தேசியத்திடம் அரசியல் வற்றிப் போய்விட்டது எனவும் சோலையூரான் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இவ்வாரம் பாராளுமன்ற அமர்வின் போது பா.உக்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, கழுதைகள் குதிரைகளோடும் தான் யாழ் மக்கள் போட்டோ எடுப்பார்கள் ஆனால் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், சந்திரசேகருக்கு தமிழ்பேச தெரியாது, என்.பி.பியின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் கத்தரி தோட்டத்து வெருளிகள் என பல வேண்டத்தகாத விடயங்களை கூறினார் இராமநாதன் அர்ச்சுனா. இதே கருத்துப்பட ஐபிசி யும் கீதபொன்கலனும் உரையாடல்களில் கருத்து வெளியிட்டு இருந்ததை தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்றத்துக்கு வெளியிலும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தமிழ் ஒழுங்காக பேச தெரியாதவர், மலையக பின்புலத்தை சேர்ந்தவர் வசைபாடியுள்ளார் பா.உ இராமநாதன் அர்ச்சுனா. குறிப்பாக நீங்கள் கப்பலில் வந்த வெள்ளைக்காரர்கள் தான் உங்களை கொண்டு வந்தார்கள் போன்ற சொற்பிரயோகங்களை பயன்படுத்தி வழமையான யாழ்ப்பாண சாதிய மேலாதிக்க தமிழ்தேசிய தலைமைகளின் எண்ண ஓட்டத்துக்குள் தானும் இணைந்தவர் என்பதை மீள உறுதிப்படுத்தியுள்ளார் பா.உ அர்ச்சுனா.

கிளிநொச்சியில் உள்ள அதிகப்படியான மலையக தமிழ் மக்களின் வாக்குகளில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பா.உ சிறீரன் கிளி ஊடகவியலாளர் தமிழ்செல்வனை தோட்டக்காட்டான் என குறிப்பிட்டு தன் யாழ்ப்பாண சாதிய திமிரை காட்டியிருந்ததார். மேலும் மலையக பின்னணியை சேர்ந்த யாருமே தமிழரசுக்கட்சியின் அரசியலுக்குள் நுழைந்துவிடாமலும் கச்சிதமாக பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் வழமையான மலையக தமிழர்களை அடக்கி ஒடுக்கும் தமிழ்தேசிய வாதிகளின் கூட்டணியில் பா.உ அர்ச்சுனாவும் இணைந்துள்ளார் என பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதேவேளை, புலம்பெயர் தமிழர் எல்லாம் கழிப்பறை கழுவத்தான் செல்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்தமைக்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அர்ச்சுனா அமைச்சர் சந்திரசேகரை நோக்கி கூறிய “இக்கூற்றுக்காக முழுத் தமிழினமும் இலங்கைத் தமிழர்கள் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனென்றால் இதை அமைச்சர் ஒருவருக்கு எதிரான கூற்றென்று ஒதுக்கி விட முடியாது. ஒரு சமூகத்துக்கு எதிரான கூற்று” என்கிறார் கனடாவில் இயங்கும் பதிவு இணையத் தளத்தின் ஆசிரியர் நவரட்ணம் கிரிதரன்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “உண்மையில் அவர் கூறியிருந்திருக்க வேண்டியது ‘நாங்கள் கப்பலோட்டியவர்கள். நீங்கள் எமக்கு வழிகாட்டியாகவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மண்ணிலிருந்து வந்தவர்கள்’ என்றே.

சுதந்திரமடைந்த நாட்டில் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். அதற்கு எம் தமிழ்த் தலைவர்கள் , ஜி.ஜி.பொன்னம்பலம் உட்படப் பலரும் உடந்தையாகவிருந்தார்கள் என்பது வரலாறு. வடகிழக்கு எல்லைகளில் குடியேறி அதன் காரணமாகவும் துன்பத்தினை அனுபவித்தவர்கள் அவர்கள். இந்நிலையில் இவ்வாறானதொரு கூற்று அம்மக்கள் மீது ஏவிவிடப்பட்ட கேவலமான, துவேசம் மிக்க வசையாகவே கருதப்படும்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நீண்ட காலமாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர். ஒரு புரட்சிகர அமைப்பின் போராளியாக இருந்தவர். இந்நிலையில் அவரைப்பார்த்து இவ்விதம் வசை பாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது. மன்னிப்புக் கேட்கப்பட வேண்டியது. கூறியவர் கேட்காதிருந்தாலும் , நாம் அனைவரும் மலையக மக்களிடம் மன்னிப்புக் கேட்போம்: ‘எம்மை மன்னித்து விடுங்கள்’ என்கிறார் கனடாவில் இயங்கும் பதிவு இணையத் தளத்தின் ஆசிரியர் நவரட்ணம் கிரிதரன்.

அர்ச்சுனாவுடைய கூற்று ஈழத்தமிழ் சமூகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதுடன் வெட்கித் தலைகுனியவும் செய்துள்ளது. ஈழத்தமிழர்களின் பல்வேறு தளங்களில் செயற்படுபவர்களும் பா உ அர்சுனாவின் சாதியவாதம், பிரதேச வாதம், இனவாதம் என்பனவற்றை மிக வன்மையாகக் கண்டித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அர்ச்சுனா இதுவரை பல்வேறு கழிசறையான மொழியாடல்களைக் கையாண்ட போதும் தற்போது பயன்படுத்திய வார்த்தைகள் அர்ச்சுனா எப்படிப்பட்ட மனிதர் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. தமிழ் தேசியத்தை முன்நிறுத்தும் அர்ச்சுனா மலையகத் தமிழர்களை கள்ளத் தோணிகள் என்கிறார், சிறிதரன் வடக்கத்தையான் என்கிறார், கஜேந்திரகுமாரோ மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தவர்களின் பரம்பரையில் நின்று அரசியல் செய்கின்றார்.

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவை சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களைத் தடுத்து அவர்களை அவமதித்து திருப்பி அனுப்பும் திட்டத்தோடு பா உ சிறிதரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயற்பட்டதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி சர்வதேச பத்திரிகையாளர் டிபிஎஸ் ஜெயராஜ் டெய்லி எப்ரி இணையத்தில் பெப்ரவரி 7இல் எழுதிய கட்டுரையிலும் குற்றம்சாட்டியுள்ளார். பெப்ரவரி 2இல் மாவையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள கறுப்புச்சட்டை அணிந்த கூட்டம் கிளிநொச்சியிலிருந்து இறக்கப்பட்டதாகவும் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த 18 பேரைக் குறிவைத்திருந்ததாகவும் டிபிஎஸ் ஜெயராஜ் தன்னுடைய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பா உ சிவஞானம் சிறிதரன் அண்மையில் மாவீரர் துயிலும் இல்லங்களை ஒரே நிர்வாகத்தின் கீழு; கொண்டு வரும் முயற்சியை தனது கையாட்களை வைத்து குழப்பினார் என்ற குற்றச்சாட்டுக்களை மாவீரர் துயிலும் இல்ல நிர்வாகம் முன்வைத்திருந்தது. மேலும் சிறிதரன் சட்டவிரோத சக்திகளை வைத்து கிளிநொச்சியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் பா உ முருகேசு சந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இந்தப் பட்டியலில் தற்போது மவையின் இறுதி நிகழ்வை குழப்பிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மாவையின் குடும்பத்தினர் குறிப்பாக மாவையுடைய மனைவி பவானி சேனாதிராஜா, தன்னுடைய கணவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொள்ளும் யாரையும் தடுக்க வேண்டாம் என்று கேட்டிருந்ததாகவும் ஆனால் அதனை இறுதி நிகழ்வு விடயங்களை முன்நின்று நடத்திய பா உ சிறிதரனோ மற்றவர்களோ கருத்தில் கொள்ளவில்லை என்றும் பவானி சேனாதிராஜாவின் விருப்பத்திற்கு மாறாகவே அவர்கள் செயற்பட்டதாகவும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

மாவையுடைய இறுதிநிகழ்வை வைத்து இலங்கைத் தமழரசுக் கட்சியின் மத்திய குழுவில் இருந்தவர்களைப் பழிவாங்க பா உ சிறிதரன் அணி முழு முயற்சி எடுத்தது. குறிப்பாக மத்திய குழுவிலிருந்த 18 பேருக்கு எதிராகவும் அவர்கள் தான் மாவையின் மரணத்துக்குக் காரணம் என்று பொருள்பட தயாரிக்கப்பட்ட பெரும் போஸ்டர்கள் இறுதிநிகழ்வு நடைபெற்ற தச்சன்காடு மயானத்தில் கட்டப்பட்டு இருந்தது. தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டில் குளிர்காயும் கஜேந்திரகுமார் அணி மற்றுமொரு போஸ்டரை தெல்லிப்பளைச் சந்தியில் கட்டியது.

எம் ஏ சுமந்திரன் குடும்பத்தினர், கறுப்புச்சட்டை அணிந்த வெறிக்குட்டிகள் போதை மயக்கத்தில் உறக்கத்தில் இருந்த காலை வேளையில் பவானி சேனாதிராஜாவையும் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துவிட்டு வந்தனர். ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

மாவையின் உடலைப் பொறுப்பேற்று சகல ஆயத்தங்களையும் செய்வித்து தனது அரசியலை ஸ்தீரனப்படுத்த முயன்ற சிறிதரன் கடைசி வரைக்கும் கட்சி அலுவலகத்திற்கும் மவையின் உடல் செல்வதற்கு ஏற்பாடு செய்யவில்லை. அங்கு நிகழ்த்தப்பட்ட இறுதி உரைகள் கூட தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குவதற்கான களமாகவே பயன்படுத்தப்பட்டது.

மரணச் சடங்கிலாவது அத்மாவை அமைதியாக உறங்கவிடுவோம் என்ற மனநிலையில் பா உ சிறிதரன் செயற்படவில்லை. மாவையின் இறுதி நிகழ்வு தன்னுடைய எதிரிகளைப் பழிவாங்குவதற்கான நிகழ்வாக உரைகள் அமைந்தது. மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன், யாழ் பல்கலை விரிவுரையாளர் மாணிக்கவாசகம் இளம்பிறையன், மாவையின் இளைய சகோதரர் சோமசுந்தரம் தங்கராஜா ஆகியோர் மற்றவர்களை தாக்குகின்ற விமர்சிக்கின்ற உரைகளை வழங்கினர்.

நிகழ்வை ஏற்பாடு செய்த பா உ சிறிதரன் இவற்றையெல்லாம் அனுமதித்தார். தடுக்க முயற்சிக்கவில்லை என்கிறார் மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒரு அரசியல் தலைவருடைய இறுதி நிகழ்வு எப்படி நடத்தப்படக் கூடாது என்பதற்கு மாவையுடைய இறுதி நிகழ்வு நல்ல உதாரணம் என சவுதஏசியன் அபயர்ஸ் என்ற இணையத் தளத்திற்கு நேற்று எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்