12

12

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன – சர்வதேச அரச உச்சிமாநாட்டில் ஜனாதிபதி அனுர !

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன – சர்வதேச அரச உச்சிமாநாட்டில் ஜனாதிபதி அனுர !

 

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன. சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்தில்  நடைபெற்று வரும் சர்வதேச அரச உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

உலகில் எந்த நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான அக்கரையும் அதன் மீதான தாக்கமும் எமது நாட்டு மக்களுக்கு என்றும் இருக்கும்.  எமது மக்கள் பண்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, மாற்றத்தை விரும்பும் ஒரு சமூக அமைப்பாகவும் காணப்படுகிறார்கள்.  உலகிலேயே அதிக கண் தானம் செய்யும் நாடு என்ன என்று இணையத்தில் நீங்கள் தேடினால், இலங்கையின் பெயர்தான் பதிலாக வரும்.

வறுமையான நாடுகளில் 60 வீதமான நாடுகள் இன்று கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளன.  சர்வதேச நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்களுடன், வளர்ந்துவரும் உலகுக்கு ஏற்ற வகையில், முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.  இலஞ்ச – ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை நோக்கி நாம்  பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.  எமது நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டால், எமது நாட்டை சூழவுள்ள கடலை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

,துப்பாக்கித் தோட்டா மற்றும் விமானத்தில் வெடிக்கும் வெடி குண்டைவிடவும் சமகாலத்தில் சைபர் தாக்குதலால் அதிக அழிவுகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆயுதம் தாங்கிய யுத்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க சர்வதேச ரீதியாக சட்டத்திட்டங்கள் காணப்பட்டாலும், சைபர் யுத்தங்களிலிருந்து மக்களை காக்க எந்தவொரு சட்டமும் கிடையாது. இதனால், சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பலம் வாய்ந்த சட்டக்கட்டமைப்பு ஒன்று அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனப் படுகொலைகளை ஆரம்பிக்க டொனால் ட்ரம் பச்சைக்கொடி காட்டியுள்ளார் ! தாக்குதலுக்கு தயாராகின்றது இஸ்ரேல் !

பாலஸ்தீனப் படுகொலைகளை ஆரம்பிக்க டொனால் ட்ரம் பச்சைக்கொடி காட்டியுள்ளார் ! தாக்குதலுக்கு தயாராகின்றது இஸ்ரேல் !

 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாகவும் அதனால் மறுஅறிவித்தல் வரை பணயக் கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்துவதாகவும் ஹமாஸ் கூறியிருந்த நிலையில்இ காஸாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் போர்நிறுத்தத்தை இரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாகவே காஸாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி காஸாவை சுற்றுலாவிடுதியாக்கும் திட்டத்தை டொனால் டரமினுடைய மருமகன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு போன்றோர் ட்ரம் ஜனாதிபதியாக முன்பே திட்டம் போட்டிருந்தனர். தற்போது அதனை நடைமுறைப்படுத்தப் போவதாக டொனால் ட்ரபை வோஷிங்டன் சென்று சந்தித்த இஸ்ரோலிய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகுவிடம் டொனால் ட்ரம் பத்திரிகையாளர் முன்னிலையில் தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இஸ்ரோல் யுத்த நிறுத்த மீறல்களை ஆரம்பித்து படுகொலைகளையும் முடுக்கி விட்டுள்ளது.

தங்களிடம் உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்தால் தங்களுக்கு எவ்வித பிடியும் இல்லாமல் போய்விடும் என்ற நிலையில் ஹமாஸ் மேற்கொண்டு கைதிப் பரிமாற்றத்தை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்றே தெரிகின்றது.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், காஸாவை பொறுப்பேற்பது தொடர்பான தனது தீர்மானம் உறுதியானது. காஸாவிற்கு வெளியே பலஸ்தீன மக்கள் வாழ்வதற்கு வெவ்வேறு இடங்கள் தெரிவு செய்யப்படும். பலஸ்தீனர்கள் மீண்டும் காஸாவுக்கு திரும்ப முடியாது. பாலஸ்தீனர்களை ஜோர்தான்இ எகிப்து ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த நாடுகளுக்கான உதவிகளை நிறுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்பின் காஸா தொடர்பான தீர்மானங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை, அரேபியா உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களும் மனித உரிமை குழுக்களும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொனால் ட்ரம் இன் இந்த முடிவு இஸ்லாமிய நாடுகளுக்கும் மத்திய கடல் பிரதேசத்தில் உள்ள அரபு நாடுகளுக்கும் மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளும் வெட்கித் தலைகுனியும் நிலையை டொனால் ட்ரமின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. ஒரு தெருப்பொறுக்கி உலகத்தை ஆண்டாள் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது உலகமே பார்த்துக்கொண்டுள்ளது. ரஷ்யாவும் சீனாவும் ஒரு துரும்பையும் அசைக்காமலே டொனால் ட்ரம் அண்ணாந்து படுத்துக் கொண்டு காறித் துப்புவதைக் காணலாம்

 வசூல் ராஜா ஆறுதிருமுருகன் மீண்டும் லண்டன் வருகின்றார் !

 வசூல் ராஜா ஆறுதிருமுருகன் மீண்டும் லண்டன் வருகின்றார் !
வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்து அதனை பொறுக்கித் தன்னை மட்டும் வளர்த்துக்கொள்ளும் ஆறுதிருமுருகன் மீண்டும் நிதி வசூலுக்காக லண்டன் வருகின்றார். புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தை வசூல் செய்து அதனை அர்த்தமில்லாத வகையில் வினைத்திறனற்று செலவு செய்வதில் ஆறு திருமுருகனுக்கு நிகர் ஆறுதிருமுருகனே. இந்த வெளிநாட்டு பணத்தில் ருசி கண்ட ஆறுதிருமுருகன், தற்போது இதனை நம்பியே தனது அறக்கட்டளையை இயக்குகின்றார்.
இத்தடவை வசூல் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தை முன்நிறுத்தி நடைபெறுகின்றது. கடந்த காலங்களில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயகத்தில் பெறுமதிமிக்க கல்வித் திட்டங்களைத் தாயகத்தில் முன்னெடுத்து வந்தது. ஆனால் தற்போது ஆறுதிருமுருகனின் வினைத் திறனற்ற செயற்திட்டங்களுக்கே பெருமளவு நிதியை லண்டன் தமிழர்கள் வழங்குகின்றார்கள்.
ஆறுதிருமுருகனின் சிவபூமி அறக்கட்டளை அவராலும் அவரது குடும்ப உறுப்பினர்களாலுமே நடத்தப்படுகின்றது. அதற்கு எவ்விதமன பொறுப்புக் கூறல்களும் கிடையாது. இவரது செயற்பாடுகளால் பலன்பெற்றவர்கள் என்று சொல்லுமளவிற்கு யாரும் இல்லை. ஆறுதிருமுருகனால் வெளிநாடுகளில் இருந்து சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான நிதியில், தாயகத்தில் சிவபூமிக்கு எழுதி வாங்கப்பட்ட வயோதிபர்களின் காணிகள் எதுவுமே வினைத்திறனுடன் செய்யப்படவில்லை. அரசியல்வாதிகளை, அரச அதிகாரிகளை மேடைக்கு அழைத்து மாலையைப் போட்டு தனக்கு எதிராக எந்தச் செய்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பார்த்துக்கொள்கின்றார். மற்றும்படி இவரிடம் எவ்வித திறமையும் கிடையாது.
இன்றும் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடியவர்கள் உடலும் உள்ளமும் ஊனமுற்றவர்களாக, வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஆறுதிருமுருகன் வசூலிக்கும் கோடிக்கணக்கான நிதியில் இவர்கள் பயன்பெறவில்லை. மாவீரர்களானவர்களின் பெற்றோர் தேடுவாரற்று வாழ்கின்றார்கள் அவர்களுக்கு ஒரு வாழ்விடம் அமைக்கவில்லை, போராட்டத்தில் தங்களது வாழ்வைத் தொலைத்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு ஒரு தொழில்வாய்ப்பை ஏற்படுத்வில்லை, போதைப் பொருள் பாவனைக்கு இளைஞர்களைச் செல்லாமல் தடுக்கும் விளையாட்டுத்துறை விருத்தி கல்வி விருத்தி பற்றியும் ஆறுதிருமுருகன் கண்டுகொள்வதில்லை.
ஆகவே புலம்பெயர் தமிழர்கள், ஆலயங்கள் உருப்படியான திட்டங்களுக்கு மட்டும் நிதியை தங்களுடைய மேற்பார்வையில் வழங்க வேண்டுமே ஒழிய ஆறுதிருமுருகன் தன்னுடைய குடும்பத்துக்கும் பரம்பரைக்கும் சொத்துச் சேர்க்கவும் தன்னுடைய புகழைப் பறைசாற்ற அர்த்தமற்ற கட்டிடங்களைக் கட்டவும் அனுமதிக்கக் கூடாது. தமிழ் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்தச் செல்லக் கூடிய கல்வி வளர்ச்சி, தொழிலகங்களை உருவாக்குவது போன்றவற்றிற்கே நிதி செலவிடப்பட வேண்டும். தனிநபர் புகழைப் பறைசாற்றும் கட்டிடங்கள் அவசியமில்லை.

போதையில் பொலிஸார் – 17 பேர் பணி நீக்கம் !

போதையில் பொலிஸார் – 17 பேர் பணி நீக்கம் !

ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களை உட்கொண்டதற்காக கடந்த நான்கு மாதங்களில் 17 அதிகாரிகளை இலங்கை பொலிஸ் பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இலங்கை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளின் பட்டியலை புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு தொகுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

குறித்த அதிகாரிகள் பரிசோதிக்கப்பட்டு பொலிஸ் திணைக்களத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகள் மீது விசாரணைகள் நடந்து வருவதாகவும், அவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்எஸ்பி மனதுங்க உறுதிப்படுத்தினார்.

இதேவேளை வடக்கு மாகாணத்தின் பல நகர்ப்புற பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை மிகத் தீவிரமாக போதைப்பொருள் பாவனை பரவி வருவது தொடர்பிலும் இவற்றை கட்டுப்படுத்த வடக்கு மாகாண பொலிஸார் பாராமுகமாக செயற்படுவதாகவும் பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

மீள வடக்கு நோக்கி அபிவிருத்தி திட்டங்கள் – புனரமைக்கப்படவுள்ள வடக்கு கிழக்கின் 2000 கிலோமீட்டர் கிராமப்புற வீதிகள் ! 

மீள வடக்கு நோக்கி அபிவிருத்தி திட்டங்கள் – புனரமைக்கப்படவுள்ள வடக்கு கிழக்கின் 2000 கிலோமீட்டர் கிராமப்புற வீதிகள் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2,000 கி.மீ கிராமப்புற வீதிகளை புனரமைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வடக்கு மாகாணத்தில் 1,500 கி.மீ மற்றும் கிழக்கு மாகாணத்தில் 500 கி.மீ வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன. இது அனைத்து பிரதேச செயலகங்களிலும் மோசமான நிலையில் உள்ள வீதிகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படவுள்ளது.

பொதுமக்களின் பங்களிப்பு, சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் உள்ளீடுகளுடன் சேர்ந்து, வளர்ச்சிக்கான முன்னுரிமை அடிப்படையில் சாலைகளை புனரமைக்க உதவும். இந்த திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் சமர்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

இலங்கையில் 35 நாட்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் – இருநூற்றுக்கும் அதிகமான உயிர்கள் பலி ! 

இலங்கையில் 35 நாட்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் – இருநூற்றுக்கும் அதிகமான உயிர்கள் பலி !

 

கிளிநொச்சி பரந்தன் பகுதியில்A9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பரந்தன் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கருணாரத்தினம் இந்திரன் சம்பவ இடத்தில் பலியானார், வீதியில் நடந்து சென்றவரை ஆடை தொழிற்சாலை பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்தில் பலியானதாக தெரியவருகின்றது.

இவ்வருடத்தின் ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தனர்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்திருந்துள்ளனர் எனவும் 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் மனோஜ் ரணகல.

மிகக்குறைந்த சனத்தொகையை கொண்டுள்ள இலங்கையில் அதிகப்படியான விபத்து உயிரிழப்புகள் இடம்பெறுவது அபத்தமானது எனவும் மனித உயிர்களின் பெறுமதி தொடர்பில் மக்களிடையே அக்கறையீனம் அதிகமாக உள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த ஆண்டு மக்களுக்கு வழங்கிய உரையில் தெரிவித்திருந்தார்.

உலக வங்கியின் அறிக்கையின்படி, நாட்டில் வருடாந்தம் சுமார் 38,000 விபத்துகள் இடம்பெறுகின்றன. இதனால் சுமார் 3,000 பேர் உயிரிழக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகில் அதிக சனத்தொகையான 140 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 10 தொடங்கி 11 வீதி விபத்து மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வது போலவே 2 கோடி மக்கள் தொகையை கொண்ட இலங்கையிலும் ஒரு லட்சம் பேருக்கு 10 தொடங்கி 11 வீதிவிபத்து மரணங்கள் நிகழ்வது தீவிரமான தன்மை என்கின்றன ஆய்வுகள்

விகாரையை இடிக்க வாரீர் ! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாக நீதிமன்றம் அழைப்பாணை

விகாரையை இடிக்க வாரீர் ! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாக நீதிமன்றம் அழைப்பாணை

 

“ பொதுமக்களை திரட்டி பலாலி திஸ்ஸ மகாராம பௌத்த விகாரையினை சேதப்படுத்த சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டமை” தொடர்பில் பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மல்லாகம் நீதிமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும்படி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பெப்ரவரி 11 ஆம் திகதி அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நீதிமன்ற அழைப்பாணை கிடைத்தமையை உறுதிப்படுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார். இவ் விவகாரம் தொடர்பில் கூறிய அவர், தான் ஜனாதிபதி அநுர கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்கும்படியே கூறியதாகவும், விகாரையை இடிக்க வாரீர் என சமூக வலைத்தளங்களூடாக மக்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

இது திட்டமிட்ட விசமப் பிரச்சாரம் எனவும், இவ் விடயம் தெரிந்ததும் தான் தனது உத்தியோக பூர்வ சமூக ஊடகங்கள் மூலமாக இதனை மறுத்ததாகவும் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டு விகாரை உடைப்பை தொடக்கி வைத்தில் இருந்து அவருடன் சமீப காலத்தில் பயணிக்கும் எம்பிமார்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் என எல்லோரும் விகாரை உடைப்பை வழிமொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தையிட்டியில் தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் ஒரு பொலிஸ் முறைப்பாடோ அல்லது நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகளோ கஜேந்திர குமார் பொன்னம்பலம் உட்பட சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் பொலிஸார் தையிட்டி விகாரை தொடர்பில் விரைந்து சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டாக்டர் அம்பேக்கார் வழியில் யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உள்ளது ! விகாரையும் உள்ளது !

டாக்டர் அம்பேக்கார் வழியில் யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உள்ளது ! விகாரையும் உள்ளது !

தமிழ் தேசியவாதிகளால் நூற்றாண்டு காலங்களாக ஒடுக்கப்படும் தமிழ் சமூகங்களுக்கும் உரிமைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதும் பௌத்தம் அதனால் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமங்களில் பௌத்த மதப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு அம்மக்கள் ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டனர் எனத் தெரிவிக்கின்றார் டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரமுகர் தர்மு தர்மகுலசிங்கம். இவர் நேற்று தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் கரவெட்டி கன்பொல்ல, புத்தூர் உட்பட 5 கிராமங்களில் பௌத்த மதப் பாடசாலைகள் அமைக்கப்பட்டதாகவும் கரவெட்டி கன்பொல்ல கிராமத்தில் பௌத்த விகாரைக்கான இடம் தேசிய பௌத்த சங்கத்திடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

டொனால் ட்ரமின் பாணியில் அதிதீவிர வலதுசாரித்துவம் பேசும் தமிழ் தேசியவாதிகள் சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்து மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் செய்ய முனைவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஒடுக்கி வாழ்பவர்கள், இவர்கள் யாருக்கும் மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு எவ்வித தகுதியும் இல்லை எனத் தெரிவித்தார் தர்மு தர்மகுலசிங்கம்