தலைவர் சீமானை அழைத்தது எங்களுக்காக பிரச்சாரம் செய்ய ! ஆனால் சீமான் இப்ப RAW வுக்கு வேலை செய்கிறார் போல் தெரிகிறது ! தவிபு தலைவரின் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாய்வாளர் முல்லை மதி உடன் நேர்காணல்
14
14
மூன்று லட்சம் ரூபா நிலுவைத்தொகையை செலுத்தாத மகிந்த ராஜபக்ச..?
300,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட எந்த தகவலும் உண்மையானது இல்லை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் வெளியிட்ட நீர் வழங்கல் சபை, முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு நீர் விநியோகத்தில் எந்த தடங்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளது. எனினும், மகிந்தவின் வீட்டிற்கு அருகில் உள்ள முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் வசித்து வந்த பகுதியொன்றில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே செய்திகளின் உண்மைத்தன்மை – அதனுடைய பின்னணி எதனையும் நோக்காது தென்னிலங்கை மற்றும் வடக்கு இலங்கை ஊடகங்கள் பலவும் மகிந்த ராஜபக்ச தொடர்பான போலியான தகவல்களை பகிர்ந்திருந்த நிலையிலேயே தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
‘பரீட்சை பாஸ் பண்ணாட்டிலும் தற்கொலை : காதலி பார்க்க வராவிட்டாலும் தற்கொலை’ – சவால்களை எதிர்கொள்ள திணறும் இளைஞர்கள் !
யாழில் காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல குறித்த இளைஞர் அழைத்துள்ளார். இதற்கு காதலி மறுப்பு தெரிவித்ததன் காரணமாக இளைஞர் கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து தர்மபுரம் காவல்துறையினர் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலங்களில் வடக்கு மாகாணத்தில் தற்கொலைகள் மலிந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. போதைப்பொருள் பாவனைக்காக பணம் இல்லை, பரீட்சை பெறுபேறுகளில் திருப்தி இல்லை, பெற்றோர் பைக் வாங்கி தரவில்லை போன்ற சாதாரண காரணங்களுக்கு கூட இளைஞர்கள் தற்கொலை செய்வதை அவதானிக்க முடிகிறது
பயனற்ற தன்மை காரணமாக இலங்கையில் நிறுத்தப்பட்ட எலன்மஸ்கின் திட்டங்கள் !
‘ஸ்பேஸ் எக்ஸ்’ உரிமையாளர் எலொன் மஸ்க்கின் ஆளுகைக்கு உட்பட்ட அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தால் பயனற்றதாகக் கருதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டு திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன.
அமெரிக்காவின் அரசாங்க செயற்திறன் திணைக்களத்தின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலின் பிரகாரம், பயனற்ற செயற்திட்டங்களாகக் கருதப்பட்டு 199 திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
சுமார் 35 முகவரமைப்புக்களின் ஒத்துழைப்புடன் கடந்த இரு தினங்களாக பரந்துபட்ட ரீதியில் ஆராயப்பட்டு இந்த 199 திட்டங்களும் நிறுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவந்த ஆசிய பசுபிக் – இலங்கை காலநிலை மாற்ற சவால்களை இழிவளவாக்கல் செயற்திட்டம் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடல் வலையமைப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறைகளை நடாத்தல் ஆகிய இரண்டும் நிறுத்தப்பட்டுள்ளன.
அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்திலிருந்து வெளியேறியது ! அனுரவின் கிளீன் சிறிலங்காவின் எதிரொலியா?
அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்திலிருந்து வெளியேறியது ! அனுரவின் கிளீன் சிறிலங்காவின் எதிரொலியா?
இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் குறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களைக் காரணம் காட்டி, இன்றுவரை இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இது ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும், இலங்கையில் எதிர்கால திட்டங்களுக்கு தங்கள் நிறுவனம் திறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு புதிய குழு நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதானி குழுமம் மற்றும் இலங்கை அதிகாரிகளின் அதிகாரபூர்வ அறிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி முழுமத்தின் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் சமூக மட்டங்களில் எழுந்திருந்தன. கடந்த 2022ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது மன்னாரில் தொடங்கப்பட இருந்த காற்றாலை திட்டம், எந்த விதமான போட்டியாளரும் இன்றி அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ரணில் விக்ரமசிங்கே அரசும் அந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுத்தது.
இதனிடையே, இலங்கையின் எரிசக்தி துறைக்குள் அதானி நிறுவனம் பின்வாசல் வழியாக நுழைந்து விட்டது என்று அன்றைய எதிர்த்கட்சிகள் குற்றஞ்சாடின. அதேபோல் மன்னார் பகுதிவாசிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், முக்கியமான பறவைகள் சரணாலயம் உயிர்பல்வகைமைக்கான பாதிப்பு மற்றும் பிற சுற்றுச்சூழல் இடர்பாடுகளை சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன.
2024 அக்டோபரில், புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் காற்றாலை மின் திட்டத்திற்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு வழங்கப்பட்ட ஒப்புதல்களை மறுபரிசீலனை செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த முடிவு அக்டோபர் 7, 2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது. நவம்பர் 14 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டி, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இறுதி செய்ய கூடுதல் அவகாசம் கோரியது.
கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதானி குழுமம் மீது முன்வைக்கப்ப்பட்ட ஊழல் குற்றச்சாட்டையடுத்து அனுர அரசு ஜனவரியில் மன்னார் மற்றும் பூநகரியில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்சார திட்டத்திற்கான விலைக் குறித்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீளாய்வு செய்ய குழுவொன்றை அமைத்தது. இந்தப் பின்னணியிலேயே அதானி குழுமம் குறித்த திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது
ஜேர்மனியில் முனிச் நகரில் தொழிற்சங்க ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தில் காரால் மோதி தாக்குதல்
நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் ஜேர்மனியின் முனிச் நகரின் மத்திய பகுதியில் நடைபெற்ற வேர்டிக் என்ற தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தின் நடுவே கார் ஒன்று புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களை இடித்து தள்ளியது.
இத்தாக்குதலில் 28 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளின் படி காரை ஓட்டி வந்த நபர் 24 வயதுடைய ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் . ஜேர்மனியில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.
இத்தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாபேரிய மாநில பிரதம மந்திரி மார்க்கூஸ் சோடர் இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்கிறார். மேலும் அவர் கூறும் போது மினி கூப்பர் வகையான கார் ஒன்றைச் செலுத்தி வந்த தாக்குதலாளிஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்த பொலிஸ் காரை முந்திச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் காரைச் செலுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறுகிறார். அப்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் சிறிய காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை உடனடியாகவே கண்டித்த முனிச் நகரத்தில் செயற்படும் ஆப்கானிஸ்தான் சமூக கலாச்சார அமைப்பு. மேலும் ஆப்கானிஸ்தான் அமைப்பு இத் தாக்குதலை காட்டுமீராண்டித்தனமான தாக்குதல் என சாடியதோடு , இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவர்கள் ஜேர்மனிக்கும் ஆப்கானிஸ்தானுக்குமே ஆபத்தானவர்கள் எனக் கண்டிக்கின்றது.
அதேசமயம் எதிர்வரும் 23 ஆம் திகதி பெப்ரவரி ஜேர்மனியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு இத்தாக்குதலை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம் என அகதிகளுக்கான கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிறிஸ்மஸ் சந்தையில் நடத்த தாக்குதலுக்குப் பின் நடந்த 3வது தாக்குதல் சம்பவஙமாக இதுள்ளது
கைமாறும் தையிட்டி விகாரை: இராணுவத்திடமிருந்து பௌத்த சாசன அமைச்சுக்கு !
யாழ். தையிட்டியில் தனியார் காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதை கருத்தில் கொண்டு, இது தொடர்பில் காணப்படும் குழப்பங்களுக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி.அத்தபத்து குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அத்தபத்து, இராணுவம் தற்போது அந்த விகாரையை நிர்வகித்துவந்தாலும் அரசாங்கம் பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு தன்னால் அதனை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன், இந்த பெயரில் விகாரை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கு நிலம் மட்டுமே உள்ளது. மேலும் இராணுவத்தினரும் கடற்படையினரும் இரண்டு பௌத்த விகாரைகளை நிர்வகிக்கின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்தால் அதனை நிர்வகிக்க முடியாவிட்டால் அதற்கு தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அம்பலமாகிய ஜெனிவாவின் மனித உரிமை அரசியல்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ ஜெனிவாவில் சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டார் !
ஜெனிவாவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு ஒப்பான சட்டத்தின் மூலம் பொஸ்கோ மரியதாஸ் சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக இவருடன் பயணித்த சக மனித உரிமைச்செயற்பாட்டாளரும் உறவினருமானவர் தேசம்நெற்க்கு நேற்றுத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை, மூன்று வாரங்களாகியும் அவரது கைது பற்றிய முழுமையான விடயங்கள் அறிவிக்கப்படவில்லை. அவருடைய ஒன்றுவிட்ட சகேகாதரர் ஒருவர் மரியதாஸ் பொஸ்கோவை தடுப்புக் காவலில் வைத்து சந்தித்து வந்துள்ளார். அவரது தகவல்படி 47 வயதான பொஸ்கோ மங்கலான ஒளியுள்ள அறையில் தடுத்து வைக்கப்பட்டு முறைமைப் படுத்தப்பட்ட உளவியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரியதாஸ் பொஸ்கோவை சிவில் உடையில் வந்தவர்களே கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு 48 மணிநேரங்களுக்குப் பின்னரே அவரது உறவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் பொஸ்கோவை கைது செய்துள்ளனர் என்ற ஆவணரிதியான விபரம் இன்னமும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸ் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்திருக்கலாம் இல்லையே இன்ரபோல் அவரைக் கைது செய்திருக்கலாம் என முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றது.
அவரது கைதுக்கு என்ன காரணம் என்பதும் தெளிவாக இன்னமும் தெரியவரவில்லை. பொஸ்கோ ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களுக்கெல்லாம் ஐநாவில் குரல் எழுப்ப வாய்ப்பை ஏற்படுத்தி வருவதால் அவரது செயற்பாடுகளை முடக்குவதற்காக இக்கைது இடம்பெற்றதாகவும் இலங்கை அரசும் தன்மீதான மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்களை மழுங்கடிக்க முற்பட்டிருக்கலாம் என்றும் பொஸ்கோவின் நட்புவட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன. இவருடைய அழைப்பில் மனிதி உரிமை விடயங்களைப் பேச ஜெனிவா அழைக்கப்பட்டவர்களில் ஓரிருவர் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிச் செல்லவில்லை என்றும், நிதி தொடர்பான சர்ச்சைகள் எழுப்பப்பட்டதாகவும் சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது.
ஆனால் ஐரோப்பிய தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாக அறியப்பட்ட கிருபாகரன், கஜன் மற்றும் பிரித்தானிய தமிழ் போறத்தை சேர்ந்தவர்கள் மரியதாஸ் பொஸ்கோவுக்கு எதிராகச் செயற்பட்டு பொய்க் குற்றச்சாட்டுக்களை வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் முல்லைமதி மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிசா பீரிஸ் ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர்.
தனது 9வது வயதில் யாழ் நாவாந்துறையில் இருந்து பிரான்ஸ்க்குப் புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழும் மரியதாஸ் பொஸ்கோ ஜெனிவாவின் மனித உரிமை அரசியலை நன்கு அறிந்து வைத்திருந்தவர். கடந்த 27 ஆண்டுகளாக ஜெனிவாவில் மனித உரிமைச் செயற்பாடுகளை தனது பதின்ப வயது முதல் மேற்கொண்டுவரும் இவர், அதன் நெளிவு சுளிவுகளை எல்லாம் அறிந்து அதற்கேற்ற வகையில் காய்களை நகர்த்தி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஜெனிவாவில் குரல் எழுப்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு வந்துள்ளார். அதனால் தமிழ் மக்கள் தவிர்ந்த ஒடுக்கபட்ட சமூகங்களின் மத்தியிலும் இவர் நன்கு அறியப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நண்பராகச் செயற்பட்டு வந்துள்ளார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாசின் சட்டத்துக்கு முரணான கைதினை வன்மையாகக் கண்டிப்பதோடுஇ அவரை உடனே விடுதலை செய்யவும் வலியுறுத்துகிறோம் என உலகத் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது.
மனித உரிமைச் செயற்பாட்டாளரும் உலகத் தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளருமான பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கடந்த 16.01.2025 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் சட்டத்துக்கு முரணான வகையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 15 மற்றும் 16 திகதிகளில் யெனீவாவில் இடம்பெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது மாநாட்டின் இரண்டாம் நாளான யனவரி 16 அன்று மதியம் 13:30 இற்கு மாநாட்டு மண்டபத்தில் வைத்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் சட்டத்துக்கு முரணான வகையில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு முதல்நாள் அவர் கலந்துகொண்டிருந்த குறித்த மாநாட்டில் சுவிற்சர்லாந்து நாட்டின் தமிழர் விரோதச் செயற்பாட்டினை வன்மையாக கண்டித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவதற்காக உள்நுழைவு ( விசா ) அனுமதிக்கு விண்ணப்பிக்கும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புகள் உள்ளிட்ட பெரும்பாலான தமிழர்களுக்கு உள்நுழைவு அனுமதியினை கூடுதலாக மறுத்துவரும் சிறீலங்காவில் அமைந்துள்ள சுவிஸ் தூதுவராலயம் சிங்களவர்களுக்கு குறிப்பாக முன்னாள் சிறீலங்கா இராணுவத்தினருக்கு உள்நுழைவு அனுமதியினை தொடர்ந்து வழங்கிவருகிறது. இது குறித்து பல்வேறு ஐ.நா அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் கேள்விகளை எழுப்பிய போதும் சுவிஸ் அரசானது உப்புச்சப்பற்ற பதில்களையே வழங்கியது.
மேலும் கடந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டிற்கு சிறீலங்காவில் இயங்கும் சுவிஸ் தூதுவராலயத்தின் ஒருங்கிணைப்பிலேயே மூன்று தமிழர்களும் மூன்று சிங்களர்களும் பங்கெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதில் லீலாவதி நடராஜா தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி விட்டார் என தமிழ் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது.
மனித உரிமை என்பது அரசியலாக்கப்பட்டதன் விளைவு காஸாவில் அம்பலமாகியது. தற்போது பொஸ்கோ சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதும் அவருடைய கைது தொடர்பில் தமிழ் மனித உரிமைச்செயற்பாட்டாளர்கள் மௌனமாக இருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. இலங்கையில் இருந்து ஜெனிவா மனித உரிமைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வந்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார், எம் ஏ சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், அனந்தி சசிதரன் ஆகியோருக்கு அதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொடுத்தர் மரியதாஸ் பொஸ்கோவே. ஆனால் அவர் தற்போது அனாதரவாக சிறை வைக்கப்பட்டுள்ளார். அவருக்காக குரல்கொடுக்க யாரும் முன்வருவதாக இல்லை.