15

15

ராஜபக்ஷ கோ ஹோம் (go home)’ அன்று ‘யூலி ஜங் கோ ஹோம் (go home)’ இன்று – நாமல் ராஜபக்சவை சந்திக்கின்றார் அமெரிக்க தூதுவர் !

ராஜபக்ஷ கோ ஹோம் (go home)’ அன்று ‘யூலி ஜங் கோ ஹோம் (go home)’ இன்று – நாமல் ராஜபக்சவை சந்திக்கின்றார் அமெரிக்க தூதுவர் !

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் பொதுஜன பெரமுன இ கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமெரிக்க தூதர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பும் நடைபெற்றது. சீன சார்பு ராஜபக்ஷ குடும்பத்தை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் அமர்த்தியதில் யூலி ஜங்கின் ஈடுபாடு கணிசமானது எனத் அன்று செய்திகள் வெளிவந்திருந்தது.

இதன் பின்னணியில் யூஎஸ்எய்ட் ஓரினச்சேர்க்கையாளர்களை பாதுகாக்கும் அமைப்புகளுக்கு நிதி வழங்கியதை கலாச்சாரச் சீரழிவாகக் காட்டி தீவிர சிங்கள தேசியவாதிகள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தற்போதைய டொனால் ட்ரம்மின் அரசு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை திருப்பி அழைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ‘யூலி ஜங் கோஹோம்’ என்ற பதாகைகளையும் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, கோட்டபாய ராஜபக்ச பதவியிறக்கப்பட்டதற்குப் பின்னால் அமெரிகத் தூதுவர் யூலி ஜங் நின்றார் என்றும் குற்றச்சாட்டுக்களை போராட்டகாரர்கள் முன்வைத்தனர். இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க தூதுவர் யூலி ஜங் நாமல் ராஜபக்சவை நேற்றுச் சந்தித்துள்ளார். அனுர அரசின் கரங்கள் ராஜபக்சக்களை நெருக்குவதுடன் அவரை தற்போது குடியிருக்கும் வீட்டிலிருந்து கிளப்பவும் அனுர முயற்சி எடுக்கின்ற நிலையிலேயே இந்தச் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.

இந்த நாட்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ள USAID நிதியுதவி தொடர்பாகவே இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவ்விடயம் பற்றி பேசுவதற்கு இவர்கள் இருவருக்குமே ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் இவர்கள் வேறு விடயங்களையே பேசியிருக்க வேண்டும் என அவதானிகள் கருதுகின்றனர்.

அத்துடன்இ தங்களுடைய ஆட்சியை கலைத்ததை மனதில் இருத்தி, இச்சந்திப்பில்இ அமெரிக்கா தலையிடாத வெளிநோக்குக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும்இ அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் பயன்படுத்தப்படும் விதத்தில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதையும் நாமல ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக இலங்கையின் உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளில் USAIDஉள்ளிட்ட அமெரிக்க தனியார் நிறுவனங்கள் பாரிய தலையீடு செய்ததாகவும் , அவற்றினுடைய கணக்கு வழக்குகளை இலங்கை அரசாங்கம் முறையான விசாரணைகளுக்குட்படுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ கோரியிருந்த நிலையில், அமெரிக்க தூதுவரின் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்கும் திட்டங்களுக்கு USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

மேலும் பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் பாரிய பேசுபொருளாக நேற்று மாறியிருந்த நிலையில் , அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட். நிறுவனம் விவகாரம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபையில் குறிப்பிட்டுள்ளார்.

 

10.9: அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் ‘இலங்கை, பங்களாதேஸ்,உக்ரைன், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 09 நாடுகளின் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்காக யு. எஸ். எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 260 மில்லியன் டொலரை செலவு செய்துள்ளதாக’ பதிவேற்றம் செய்துள்ளார் என்ற தகவல் உலக நாடுகளிடையே பாரிய பேசுபொருளாக மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்தை தேசம்நெற் அரகலய போராட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது

பேஸ்புக் உரிமையாளர் மார்க் சுக்கம்பேர்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்க கோரிக்கை !

பேஸ்புக் உரிமையாளர் மார்க் சுக்கம்பேர்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்க கோரிக்கை !

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் உரிமையாளரான மார்க் சுக்கம்பேர்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க் கூறியதாவது: உலகின் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைத்தளமான பேஸ்புக் பயன்பாட்டில் உள்ளது. ஏராளமானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப பேஸ்புக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றன. அவற்றுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் பேஸ்புக்கிற்கு உள்ளது. இந்நிலையில் முகம்மது நபியின் ஓவியத்தை பேஸ்புக்கில் யாரோ ஒருவர் வரைந்ததற்காக பாகிஸ்தானில் சிலர், எனக்கு மரண தண்டனை விதிக்க முயன்றனர்.

அது அவர்களின் கலாசாரத்தில் மதத்தை அவமதிக்கும் செயல் என்று கூறினர். இதற்காக என் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க தொடங்கினர். நான் பாகிஸ்தானுக்கு செல்ல போவதில்லை. அதனால் அதுபற்றி கவலைப்படவில்லை.

உலகில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நாடுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை பாதுகாக்க அமெரிக்க அரசு உதவ வேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்று.என்று கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடுவோரை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தினால் தெரியப்படுத்துங்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

போராட்டத்தில் ஈடுபடுவோரை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தினால் தெரியப்படுத்துங்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

 

போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது புலனாய்வு பிரிவு மற்றும் அரச தரப்பினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களால் பல பட்டதாரிகள் போராட்டத்தில் இருந்து ஒதுங்குகின்றனர் எனவும் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் சந்திரசேகரிடம் ஊடகங்கள் வினவியவேளை, “புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது. புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்துவது அந்தக் காலத்தில் இருந்தது. அவர்களுக்கு போராடுவதற்கு உரிமை உள்ளது. போராடுவதற்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுப்பதில்லை. அப்படி அச்சுறுத்தல் விடுப்பார்களாக இருந்தால் அது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இதுவரை நாட்களும் இந்த பட்டதாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்களா? விளையாட்டாக செயல்படுபவர்களிடம் நீங்கள் இது குறித்து கதைக்காதீர்கள். நாங்கள் உங்களது பிரச்சினைகள் குறித்து நிச்சயமாக உள்வாங்கி செயற்படுவோம்” என தெரிவித்தார்.

இதேவேளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கூடிய முதலாவது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், பா.உ இராமநாதன் அர்ச்சுனாவை வேலையில்லா பட்டதாரிகள் சந்தித்ததிருந்தனர். இதன் போது வெளிநாட்டில் இருந்தும் முதலீடுகளை வரவழைத்து பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பா.உ அர்ச்சுனா தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

அனுர அரசாங்கம் வடக்கு அபிவிருத்தியில் அக்கறை கொண்டுள்ளது – ஆளுநர் வேதநாயகன் !

அனுர அரசாங்கம் வடக்கு அபிவிருத்தியில் அக்கறை கொண்டுள்ளது – ஆளுநர் வேதநாயகன் !

 

மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எமது மாகாணத்தை நாம் துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான palliative care கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய ஆளுநர், “ மாகாண அபிவிருத்திக்கான இது போன்றதொரு சந்தர்ப்பத்தை நாம் இழக்கக் கூடாது.சுயநலம் மலிந்த இந்தக் காலத்தில் மற்றையவர்களுக்கு உதவி செய்பவர்கள் அருகிச் செல்கின்றனர்.

அவ்வாறானதொரு நிலைமையில் மருத்துவமனைக்கு உதவியைச் செய்வதற்கு முன்வந்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. புலம்பெயர்ந்து சென்றாலும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்பும் அவர்களது எண்ணம் மிகப்பெரியது. தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைகள் இன்னமும் நிறைய இருக்கின்றன. அவையும் விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு துருக்கி அழைப்பு !

இலங்கை ஜனாதிபதிக்கு துருக்கி அழைப்பு !

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் துருக்கிக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும், துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட்டுக்கும் இடையிலான சந்திப்பின் போது தூதுவர் செமி லுட்பூ டர்கட் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.

துருக்கியில் கல்வி கற்பதற்கு இலங்கை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 15 புலமைபரிசல் கோட்டா 25 ஆக அதிகரிக்கப்படும் என்று உறுதியளித்துள்ள தூதுவர் ,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்துக்கு துருக்கி குடியரசின் பாராட்டினைத் தெரிவித்த தூதுவர் ‘ டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய மக்களின் வறுமையை மட்டுப்படுத்துவதற்கு’ அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பட்டுள்ளார்.

யாழ்.செம்மணியில் எலும்புகூட்டு எச்சங்கள் மீட்பு !

யாழ்.செம்மணியில் எலும்புகூட்டு எச்சங்கள் மீட்பு !

யாழ். செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

அதனை அடுத்து, கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர், அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில், கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது

எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதை தொடர்ந்து, 1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு , செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பல விடயங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள் குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்றைய பிரதித் தலைவர் மாத்தையாவோடு கைது செய்யப்பட்ட அவருடைய விசுவாசிகள் செம்மணியில் வைத்தே படுகொலை செய்யப்பட்டதாக மாத்தையா அணியைச் சேர்ந்த ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

விகாரையை இடிக்க அழைத்த துண்டுப்பிரசுரம் – பா.உ கஜேந்திரகுமாருக்கு ஒரு இலட்சம் ரூபா சொந்த பிணை !

விகாரையை இடிக்க அழைத்த துண்டுப்பிரசுரம் – பா.உ கஜேந்திரகுமாருக்கு ஒரு இலட்சம் ரூபா சொந்த பிணை !

 

தையிட்டியில் கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக பாலாலி பொலிஸார் கொடுத்திருந்த வழக்கு தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை வழங்கப்பட்டது.

தையிட்டி விகாரை கட்டப்படும் போதோ அதன் பின்போ அதற்கு எதிராக எவ்வித வழக்கையும் தாக்கல் செய்யாது, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக விகாரை கட்டப்பட்டது என்று பிரச்சாரம் செய்த பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு எதிராக பொலஸார் வழக்குத் தாக்கல் செய்து தற்போது அவர் ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக வலைத்தளங்களில் துண்டுப் பிரசுரத்தை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினரை ஒரு இலட்சம் ரூபாய் சொந்த பிணையில் விடுவித்த நீதவான் வழக்கை ஜீன் 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை, குறித்த துண்டுப்பிரசுரம் சமூக வலைத்தளங்களில் பரப்பபட்ட நிலையில் அது போலியானது என தெரிவித்து ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெளிவுபடுத்தியதுடன் தனது சமூக வலைத்தளத்திலும் போலிச் செய்தி என குறிப்பிட்டு பகிர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

காணிகளை விடுவிக்க தயார் என தையிட்டி விகாரை நிர்வாகம் அறிவிப்பு !

காணிகளை விடுவிக்க தயார் என தையிட்டி விகாரை நிர்வாகம் அறிவிப்பு !

உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில், தையிட்டி விகாரை விவகாரம் விரைவில் முடிக்கப்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை அது ஏற்படுத்தும். உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்பவிடக் கூடாது. அதனால் அடிப்படையில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகுவதை அனுமதிக்க முடியாது.

விகாரை விவாகரத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள், அப்பிரதேச மக்கள், மத தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் முதலிய தரப்பினர்களுடன் விரைவில் பேசவுள்ளோம். விகாரை கட்டப்பட்டுள்ள காணியை மாத்திரம் தருமாறும், விகாரையை சுற்றியுள்ள ஏனைய காணிகளை மக்களிடம் மீள கையளிக்கத் தயாராக உள்ளதாகவும் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே, விகாரை விவகாரத்தில் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் அதனை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

தெற்கில் வலைத்தளங்களில் நிதி திரட்டிய இருவர் கைது – வடக்கில் எப்போது..? 

தெற்கில் வலைத்தளங்களில் நிதி திரட்டிய இருவர் கைது – வடக்கில் எப்போது..?

 

லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற போலி கணக்கின் மூலம் சமூக வலைகளில் 2.9 மில்லியன் ரூபா மோசடி செய்ததற்காக சமூக ஆர்வலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கணக்கின் மூலம் நன்கொடைகளை வசூலிப்பதன் மூலம் சந்தேக நபர்கள் பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கிலும் நன்கொடை என்ற பெயரில் கோடி ரூபாய்கள் வரை மோசடி செய்யப்படுவதும் கவனிக்கத்தக்கது. யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்களில் தங்களை தமிழ்தேசியவாதிகளாகவும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தொகைகள் வழங்குவதாகவும் கூறி பலர் புலம்பெயர் தேசங்களில் வசிப்போரிடம் இருந்து நிதி உதவிகளை பெற்று மோசடியில் ஈடுபடுவதுடன் குறித்த பணத்தை பயன்படுத்தி ஆடம்பரமான வாகனங்கள், வீடுகள் கூட கட்டும் அசம்பாவிதங்கள் தமிழர்கள் பகுதிகளில் அண்மை காலமாக நடந்தேறுவதையும் பல தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ஆறுதிருமுருகனின் உறவுகளால் நிர்வகிக்கப்படும் சிவபூமி நிறுவனமும் கோடிக்கணக்காண பணத்தையும் சொத்துக்களையும் புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் திரட்டி வருகின்றது. ஆனால் இவற்றுக்கான முறையான பொறுப்புக் கூறல் இல்லாததுடன் ஆறுதிருமுருகன் தனது புகழுக்காக வினைத்திறனற்ற செயற்திட்டங்களில் நிதியைச் செலவிட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்

வலம்புரியில் அடித்தவரும் ஆடிவாங்கியவரும் கட்டி அணைத்தனர் !

வலம்புரியில் அடித்தவரும் ஆடிவாங்கியவரும் கட்டி அணைத்தனர்: சாட்சிக்காரனிடம் செல்லாமல் சண்டைக்காரனிடம் பேசி முடித்த பா உ அர்ச்சுனா !

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதனிடமும் சட்டத்தரணி கௌசல்யா நரேனிடமும் வலம்புரி ஹோட்டல் உணவகத்தில் வம்பிழுத்து அடி வாங்கிய நபர் பொலிஸ் நிலையத்தில் பிரச்சினையை சுமூகமாக முடித்தார். இதனை எம்பி அர்ச்சனா தனது உத்தியோகபூர்வ யுரீயூப் சனலினூடாக அறிவித்துள்ளார்.

எம்பி அர்ச்சுனாவின் பொறுமையை சீண்டி அவரிடம் அடி வாங்கிய இளைஞர் இந்த விடயம் தொடர்பாக தான் கொடுத்த பொலிஸ் முறைப்பாட்டை மீளப்பெற்றுக் கொண்டு தன்னுடைய செயலுக்கு மனம் வருந்தினார் என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.

அதேசமயம் அர்ச்சுனா தான் உயிரை காக்கும் வைத்தியராக இருந்து கொண்டு தற்காப்புக்காகவும் ஒரு பெண்ணின் மானத்திற்காகவும் தாக்குதலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலைக்கு தான் தள்ளப்பட்டதற்கு தான் வருந்துவதாகவும் குறிப்பிட்டார்.

வலம்புரி உணவு விடுதிச் சம்பவத்தில் தன்னிடம் அடி வாங்கியவர் ஒரு சாதாரண சாரதி எனவும். ஜேர்மனியில் இருந்து விடுமுறையில் வந்திருந்த புலம்பெயர் தமிழரான இரத்தினம் ஶ்ரீஹரனிடம் சம்பந்தப்பட்ட இளைஞன் சாரதியாக பணியாற்றுகிறார் என குறிப்பிட்ட அர்ச்சுனா, நடந்த விவகாரத்திற்கு முழுமையான பொறுப்பையும் இரத்தினம் ஶ்ரீஹரனே எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். புலம்பெயர் தமிழரான இரத்தினம் ஶ்ரீஹரன் வழக்கு நடவடிக்கைகளிலிருந்து தப்ப முடியாது எனவும் இவ்விடயம் அறிவிக்கப்பட வேண்டிய இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஒருவழியாக பரஸ்பரம் பொலிஸ் முறைப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டு பிரச்சினை தீர்ந்தது. பா உ அர்ச்சுனாவுக்கு இன்னுமொரு வழக்கு வராமல் தவிர்த்துக்கொண்டுள்ளார்.