16

16

யாழ் பல்கலைக்கழகம் புதிய சிந்தனைக்கு திறக்கப்பட வேண்டும் ! புதிய தலைமை வேண்டும் !

யாழ் பல்கலைக்கழகம் புதிய சிந்தனைக்கு திறக்கப்பட வேண்டும் ! புதிய தலைமை வேண்டும் !

 

பாலியல் சுரண்டல் , பாலியல் இலஞ்சம் கோரும் யாழ் பல்கலை நிர்வாகம் கிளீன் செய்யப்பட வேண்டும்

யாழ் பல்கலைக்கழக முதலாவது மாணவர் ஒன்றியத்தை ஆரம்பித்தன் பின்நின்ற சமூக அரசியல் செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன்

 

வடக்கில் இளைஞர்களிடையே வேகமெடுக்கும் வெளிநாட்டு மோகம் – கோடிகளை குவிக்கும் மோசடியாளர்கள் !

வடக்கில் இளைஞர்களிடையே வேகமெடுக்கும் வெளிநாட்டு மோகம் – கோடிகளை குவிக்கும் மோசடியாளர்கள் !

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய், கிளிநொச்சி உள்ளிட்ட பொலிஸ்நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி, வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்தை மோசடியாக கும்பல் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி வருகிறது.

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளையோர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் ஊடாக பயண ஏற்பாடுகளை செய்து சட்ட ரீதியான முறையில் செல்ல வேண்டும்.

இது தொடர்பில் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இவ்வாறான மோசடி சம்பவங்களில் இருந்து அவர்கள் தப்பிக்கொள்ள முடியும். இல்லையெனில் பெருந்தொகை பணத்தினை இழக்க நேரிடும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

இந்தியாவில் தொடரும் பா.ஜ.க அடக்குமுறை – விகடனை முடக்கிய மோடி !

இந்தியாவில் தொடரும் பா.ஜ.க அடக்குமுறை – விகடனை முடக்கிய மோடி !

 

இந்திய பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட காரணத்தால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் ஊடக நிறுவனமான விகடன் நூற்றாண்டினை தாண்டி இயங்கி வரும் நிலையில், அவர்களது வார இதழுக்கான அட்டைப்படத்தில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக சித்திரம் வரையப்பட்டிருந்தது.

முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் பெப்ரவரி 10ஆம் திகதி, அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது.

அந்த சித்திரத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தியதாக கூறி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக-வினர், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணாமலை புகார் அளித்திருந்தார். இந்த சூழலில், அண்ணாமலை புகாரின் அடிப்படையில் விகடன் செய்தி நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை சித்தரித்து வரையப்பட்ட கார்ட்டூனுக்கு எதிராக விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலரும் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்று தெரிவித்து வருகின்றனர்

அதானி குழுமம் மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையை கைவிட்டது என்கிறார் ரணில் – புலம்பெயர் தமிழர்களை முதலிட அழைக்கிறது அனுர அரசு !

அதானி குழுமம் மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையை கைவிட்டது என்கிறார் ரணில் – புலம்பெயர் தமிழர்களை முதலிட அழைக்கிறது அனுர அரசு !

 

அதானி இலங்கையில் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டதன் மூலம் இந்தியா இலங்கையை கைவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதானி குழுமம் வெளியேற்றத்தால் எதிர்காலத்தில் இலங்கை சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் 484 மெகாவாட் திறனுடைய காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நாட்டின் பசுமை ஆற்றல் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் எனவும், அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் பா.உ இராமலிங்கம் சந்திரசேகர் தெரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பா.உ இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து !

 

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர், அவரது உதவியாளர் மற்றும் வாகனத்தின் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவரது உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

போதைப்பொருள் , குற்றச்செயல்கள் தொடர்பாக 30000 பேர் கைது !

போதைப்பொருள் , குற்றச்செயல்கள் தொடர்பாக 30000 பேர் கைது !

 

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு அமைய 30,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளதன்படி,

அத்துடன் இந்த நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட 920 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 14,000 பேரும், போதைப்பொருள் குற்றங்களுக்காக 16,000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 11,757 பேருக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சுற்றிவளைப்புகளின் போது 197 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அவற்றில் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும் அடங்குகிறது.

போதைப்பொருள் சோதனைகளின் போது, 14 கிலோ கிராம் ஹெராயின், 20 கிலோ கிராம் ஹஷிஷ், 33 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 1,123 கிலோ கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பா.உ சிறிதரனை கைது செய்ய வேண்டும் – ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் !

பா.உ சிறிதரனை கைது செய்ய வேண்டும் – ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் !

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜனாதிபதி அநுர கூறியதை போன்று சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் – தையிட்டியில் உள்ள திஸ்ஸ ராஜ மகா விகாரையை இடிப்பதாக மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கைது செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்துகள், அரசியலமைப்பை மீறுவதாகவும், அரசாங்கம் இதுபோன்ற சூழ்நிலைகளைப் புறக்கணித்தால், அது வன்முறையை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள ஜகத் டயஸ் இந்த சூழ்நிலையில் உடனடியாகவும் தீர்க்கமாகவும் செயல்படத் தவறினால், அரசாங்கம் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் துணைவியாரை தேடிச்சென்ற பிரதமர்

தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் துணைவியாரை தேடிச்சென்ற பிரதமர்

 

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயமளித்த பிரதர் ஹரினி அமரசூரிய வட இலங்கையின் முக்கியமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர் தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சுழிபுரம் கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தையும் பார்வையிட்டதுடன் அவரின் துணைவியாரையும் சந்தித்து நலன் விசாரித்தார்.

தோழர் கே ஏ சுப்பிரமணியம் ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய திருமணத்தால் சொந்தங்களை இழந்தார். சொந்த தாயின் மரணத்துக்கும் அழைக்கப்படவில்லை. தெரிவிக்கப்படவும் இல்லை. போராட்டங்களால் இருந்த வேலைகளையும் இழந்தார். வறுமை வரவேற்று இறுக அணைத்தபோதும் கொள்கை மாறாத மனிதராக வாழ்ந்து மறைந்தவர்.அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை பிள்ளைகள் பொதுமக்கள் பாவனைக்கான நூலகமாக மாற்றி பயன்பாட்டுக்கு விட்டுள்ளனர். 1966 ஒக்டோபர் 21 இல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் தோழர் மணியம் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஹரிணியின் யாழ்.விஜயம் – பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு

பிரதமர் ஹரிணியின் யாழ்.விஜயம் – பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு

 

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று சமூகத்துடன் ஊடாடினார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றுக் காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதேவேளை, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன், கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு மதியம் சமூகமளித்த பிரதமர் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார். இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தொடர்ந்து சுழிபுரம் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார்

நுவரெலியாவிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்பாணம் பறித்துவிட்டது – அமைச்சர் சந்திரசேகர்

நுவரெலியாவிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்பாணம் பறித்துவிட்டது – அமைச்சர் சந்திரசேகர்

 

மதுபாவனையில் நுவரெலியாவிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்பாணம் தட்டிப்பறித்துவிட்டது என கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நேற்று யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர்,

உலகத்தில் இரண்டாவது குடிகார நாடு இலங்கையாக உள்ளது. ஒரு காலத்தில் இலங்கை என்கின்ற இரண்டாவது குடிகார நாட்டில் கூடுதலான குடிகாரர்கள் நுவரெலியாவில் இருந்தார்கள். அது எங்களுடைய மாவட்டம். ஆனால் இன்றைக்கு எங்களிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்ப்பாணம் தட்டிப் பறித்து விட்டது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்குப் பின்பும் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைப் பெண்களின் ஓலம் ஒன்றும் கேட்கின்றது. அன்று 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து அனாதை இல்லங்களில் இருக்கின்றார்கள்.

அண்மையில் என்னை சந்தித்த அனாதை இல்லம் ஒன்றின் தாயார், எங்களுடைய பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் எங்களுடைய பண்புகள் பெண் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் நாங்கள் தவிக்கின்றோம் அவர்கள் சீரழிக்கப்படுகின்றார்கள் என்று கூறினார். கடந்த காலங்களில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் எங்களுடைய பெண்கள் எல்லாரையும் தேடித் தேடி கடன் வழங்கின. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களில் கூடுதலானோர் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுதான் இன்று எங்களுடைய வட மாகாணம்.

பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களில் 99 வீதமானோர் வாழ்க்கையில் ஒரு நாளாவது பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகின்றது. அதில் தான் எங்களுடைய மனைவி, தங்கைகள், மகள்கள் பயணிக்கின்றனர். இந்த நிலை நாளைக்கு தொடர வேண்டுமா? அந்த அளவுக்கு நிலைமை சீரழிந்து போயுள்ளது என்றார்