18

18

மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் முன்னேற்றகரமான பாதையில் தென்னிலங்கை – போர் தின்ற வடக்கு கிழக்கில் ஆதரவற்றோராக மாற்றுத்திறனாளிகள் !

மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் முன்னேற்றகரமான பாதையில் தென்னிலங்கை – போர் தின்ற வடக்கு கிழக்கில் ஆதரவற்றோராக மாற்றுத்திறனாளிகள் !

 

நாட்டில் 16 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் காணப்படுவதாகவும் அவர்களில் 9 இலட்சம் பேர் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் என அகில இலங்கை பார்வைக் குறைபாடுடையோர் சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்கிரமசிங்க தெரிவித்தார். மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுடன் நடைபெற்ற கலந்துயைாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பின் போது மத்திய மாகாணத்திலுள்ள பார்வைக் குறைபாடுள்ளோரது பிரச்சினைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டன. இக்கலந்துரையாடலின் போது மத்திய மாகாண பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. வெகுவிரைவில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தர முயற்சிப்பதாகவும் ஆளுநர் இங்கு தெரிவித்தார்.

தென்னிலங்கை பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அதீத கவனம் சமூகம் மற்றும் அரசியல் மட்டத்தில் அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை சம காலத்தில் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அண்மையில் பொறுப்பேற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேசியப் பட்டியல் மூலம் நியமித்த பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, ஓர் மாற்றுத்திறனாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி தமிழர் அரசியலில் முழுமையாக மாற்றுத்திறனாளிகளும் அவர்கள் தொடர்பான அரசியலும் முழுமையாக நிராகரிக்கப்பட்ட நிலையே தொடர்கின்றது. முன்னாள் போராளிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்வர்கள் என ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வடக்கில் குறிப்பாக வன்னி மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் காணப்படும் நிலையில் அவர்கள் சார்ந்த அரசியல் என்பது முழுமையாக தமிழ்தேசியம் பேசும் தலைவர்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த கால முப்பது வருடங்களுக்கு மேலதிகமான போர், விடுதலைப் புலிகள், நில உரிமை மீட்புக்கான போர் என்றெல்லாம் பேசி அரசியல் செய்யும் தமிழ்தேசியம் போரால் பாதிக்கப்பட்ட அத்தனை மாற்றுத்திறனாளிகளையும் கைவிட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளையும், அவர்களுக்கான அரசியலை முன்னெடுக்கும்படியும் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதும் கூட செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தொடர்ந்தும் தமிழ்தேசியம் கள்ள மௌனம் காத்து வருதிறது.

யாழில் ஆட்கடத்தி கப்பபம் வேண்டியவர், தப்பிச்செல்லும் போது கட்டுநாயக்காவில் கைது !

யாழில் ஆட்கடத்தி கப்பபம் வேண்டியவர், தப்பிச்செல்லும் போது கட்டுநாயக்காவில் கைது !

 

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் ஆவார். துபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது அவர் கைதாகினார். மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !

தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !

 

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது என்னை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும். இதற்கான காரணம் என்னவெனில், ”சாதாரண தரப் பரீட்சை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற சமய நிகழ்வுகள் குறித்த காலப்பகுதியில் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் அத்துடன் தேர்தல் திருத்தங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பெண்களுக்கு 25 வீதம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலை பின்தள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, எந்த தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்கு நாங்கள் பின்வாங்கியதில்லை. தேர்தல் பிரசார காலப்பகுதி யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வேட்புமனு கோருமாறு கேட்கிறோம் என தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடங்கி மாகாண சபை தேர்தல்கள் வரை அனைத்திலும் என்.பி.பி அலையே தொடரும் என அரசியல் அவதானிகள் கூறி வருகின்றனர். ஆனால் இன்னமும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி பூசல் கூட முடிந்தபாடில்லை. பாராளுமன்றத்தேர்தல்களை போலவே உள்ளூராட்சி தேர்தல்களிலும் தமிழரசுக்கட்சியை விட என்.பி.பி ஆதிக்கம் செலுத்த வாய்புள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்தேசிய கட்சிகளை விட தேசியக்கட்சி ஒன்று தன் ஆதிக்கத்தை பெரும்பான்மை ஆசனங்கள் மூலம் உறுதி செய்திருந்தது. இதனை தொடர்ந்தும் தக்க வைக்கும் நோக்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் என அடுத்தடுத்து ஒவ்வொரு வார இடைவெளியிலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பகுதிகளுக்கு திடீர் விஜயம் செய்து என்.பி.பி தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்திவருகிறது. இதனால் உள்ளூராட்சி தேர்தல் தமிழ்தேசிய கட்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளது.

பழைய நினைப்பில் வீட்டிற்கு சென்று என்.பி.பியினர் மிரட்டுகிறார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் !

பழைய நினைப்பில் வீட்டிற்கு சென்று என்.பி.பியினர் மிரட்டுகிறார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் !

 

இலங்கை அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தையும், தாம் விரும்பும் அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது. இது இந்த நாட்டில் காணப்படும் மனித உரிமையாகும். இந்த அரசாங்கம் இதையும் மீறி நடந்து வருகின்றது என களனி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தின் யடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பிரஜை ஒருவர் தனது கருத்துக்களை முகநூல் ஊடாக வெளிப்படுத்திய போது அரசாங்கத்தையும், மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்த ஒருவர், வீடு சென்று அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கிறார். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத வேளையில், பேச்சு சுதந்திரத்தை மறுக்கும் வகையில் வீடு வீடாகச் செல்லும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் எவருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை அவர்களுக்கு காணப்படுகின்றன. குடி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்நிற்கும். பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் என்பது தனிமனித உரிமைகளாகும். அதில் யாரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க ஆயிரம்மில்லினன் நிதி ஒதுக்கீடு ! பாலத்தை அமைக்காமல் நிதியை திருப்பி அனுப்பும் விளையாட்டு இருக்கக் கூடாது அரசு எச்சரிக்கை !

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க ஆயிரம்மில்லினன் நிதி ஒதுக்கீடு ! பாலத்தை அமைக்காமல் நிதியை திருப்பி அனுப்பும் விளையாட்டு இருக்கக் கூடாது அரசு எச்சரிக்கை !

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பாலத்தை அமைக்காமல் கடந்த காலங்கள் போல் நிதியை திருப்பி அனுப்பும் விளையாட்டுக்கள் இருக்கக்கூடாது என அரசு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இந் நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்துக்கான நிதியை இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கியதற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க, கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோருக்கு முல்லைத்தீவு மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வட்டுவாகல் புனரமைக்கப்படுவது எத்தனை முக்கியமோ அதனை விட முக்கியமானது அந்த பாலம் கூறும் வரலாற்றை பாதுகாப்பது எனவும் குறைந்த பட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் முன்வைத்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ள ஊடகவியலாளர் குமணன், சேதமடைந்த வட்டுவாகல் பாலத்தை புதிதாக அமைக்க அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது, வட்டுவாகல் பாலத்தை மீள அமைக்க வேண்டியது என்பது மிகவும் தேவையான ஒன்று, ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம், எமது வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை அழிக்கும் அபாயமும் உள்ளது என்ற கவலை தோன்றியுள்ளது . பழைய வட்டுவாகல் பாலம் தமிழ் மக்களின் மீள்தன்மை மற்றும் துயரத்தின் கதையைச் சொல்கிறது ( resilience and misery ) – இது தமிழர் போராட்டத்தின் சின்னம் மற்றும் நாம் தாங்கிய துயரத்தின் சாட்சி .

ஜெர்மனியின் பெர்லின் சுவரின் எச்சங்கள் ஜெர்மனியின் கடந்த காலத்தையும் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சக்திவாய்ந்த நினைவூட்டலாகச் செயல்படுவது போல, வட்டுவாகல் பாலம் தமிழர்களின் கூட்டுப் பயணத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது.

குறைந்தபட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்கலாம். இது தொடர்பில் எமது மக்கள் பிரதிநிதிகள் கவனம் எடுத்து அரசோடு பேச வேண்டும்.முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .

போரின் நினைவு எச்சமாகவும் மிச்சமாகவும் ( War memorial ) போர் சார்ந்த சுற்றுலாவில் எமது முக்கிய அடையாளமாகிய (War tourism ) இந்த வரலாற்று அடையாளத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/share/p/1HG2BPgCWR/

 

மக்களின் கவனத்தை ஈர்த்த உண்ணா விரதப் போராட்டம் – பா உ சிறிதரன் அணி அச்சத்தில் !

மக்களின் கவனத்தை ஈர்த்த உண்ணா விரதப் போராட்டம் – பா உ சிறிதரன் அணி அச்சத்தில் !

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளியான அழகரத்தினம் வர்ணகுலராசா பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை பெப்ரவரி 14 ஆம் திகதி தொடக்கம் நடத்தி வந்தார். நீர் மற்றும் உணவு தவிர்த்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவர் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளில் அரைவாசி தானும் நிறைவேறினால் போதும் என்ற நிலைப்பாட்டுடன் வர்ணகுலராசாவின் சாகும்வரை போராட்டம் முன்னாள் போராளிகளின் தலமையிலான மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக அமைப்பால் நீர்ராகரம் கொடுத்து நேற்றைய தினம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்முனைப்போடு ஈடுபட்ட முன்னாள் போராளிக்கு பல தரப்பிலிருந்தும் தமிழ் மக்கள் இடத்திலிருந்தும் ஆதரவு பெருகி வந்திருந்தது. உண்ணாவிரதம் இருந்த அழகரத்தினத்தின் உடல்நிலையை கருதி அவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட இருப்பதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்த தீபன் கருத்து தெரிவித்தார்.

இந்த விடயத்தில் கிளிநொச்சி எம்பி சிவஞானம் சிறிதரனின் சார்பு ஊடகவியலாளர் ஒருவர் மூக்கை நுழைத்து கேள்வி கேட்பதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சர்சையை உருவாக்கினார்.

பெரும் காசு கொலிக்கும் மாவீரர் துயிலுமில்ல வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் எம்பி சிவஞானம் சிறிதரனிடமிருந்து மாவீரர் துயிலும் இல்லங்களை மீட்க மல்லுக்கட்டும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக அமைப்பினர் அழகரத்தினம் வர்ணகுலராசாவின் உயிரில் காட்டிய அக்கறையை கேலிக்குள்ளாக்கினார்.

அவருடைய கேள்விகளை இடைமறித்த மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக உறுப்பினர் ”நான் மூன்று நாளாக இங்கே நிற்கிறேன், நீர் இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, றோவினால் நடத்தப்படும் போராட்டம் என பதிவு போட்டு வருகிறீர்’’ என காட்டமாக பதிலளித்தார். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக் கொண்டுவரப்ட்டுள்ளது. வர்ணகுலராசா முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பிலான போராட்டங்கள் மாற்றுவழியில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.