22

22

இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்த பாராளுமன்ற விசாரணை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு !

இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்த பாராளுமன்ற விசாரணை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு !

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையே இவ்வாறு சமர்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமலி வீரசேகர தலைமையின் கீழ், அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும், இந்த அறிக்கை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் என்று சபாநாயகர் மேலும் அறிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்து சபாநாயகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவ்வப்போது விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்தாக தெரிவித்த சபாநாயகர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபரை கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

 

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். அண்மையில் சமூக வலைத்தளங்களில், “தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் …” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன.

குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பொன்றை நடாத்தி அவை போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம், “விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன், அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர், குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது பொலிஸ் நிலையத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அதேவேளை தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி பொலிஸார் வாக்கு மூலம் வழங்க என நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் 02 மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பை வெட்டிவிட்டது தமிழரசுக்கட்சி !

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பை வெட்டிவிட்டது தமிழரசுக்கட்சி !

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பதிலளித்துள்ளது.

தமிழரசின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அண்மையில் நேரில் சென்று சந்தித்து கூட்டாக செயற்படுவதற்கான அழைப்பு கடிதத்தை வழங்கியிருந்தனர். இந்த அழைப்பிற்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் வழங்கிய பதில் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழரசுக் கட்சியை உடைக்கும் திடடம் பலிக்காது என்பதை தேசம்நெற் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தது. எம் ஏ சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி போடும் கணக்கு பலிப்பதற்கான வாய்ப்பில்லை. மாறாக எம் ஏ சுமந்திரன் மீண்டும் கட்சிக்குள் பலம்பெற்று வருகின்றார்.

சிவஞானம் வழங்கிய பதில் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாலும் அதற்கான முன்வரைவு எதையும் சமர்ப்பிக்காத நிலையிலும், நாம் அரசமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாகக் காணப்படவில்லை என உணரப்பட்டது.

மேலும் எமது கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து வலியுறுத்தி வரும் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு இன்னும் வலுவுள்ளதாகவே பேணப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அரசாங்கம் அதன் அரசமைப்பு உருவாக்க முன்மொழிவை துரிதமாக முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசியல்வாதிகளே பாதாள உலக குழுக்களை வளர்த்து விட்டார்கள் – அனைவரும் களையெடுக்கப்படுவார்கள் – அமைச்சர் விஜேபால !

அரசியல்வாதிகளே பாதாள உலக குழுக்களை வளர்த்து விட்டார்கள் – அனைவரும் களையெடுக்கப்படுவார்கள் – அமைச்சர் விஜேபால !

 

கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்தால் பாதாள உலகம் வளர்க்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பாதாள உலகத்திற்கு கடந்த காலங்களைப் போல அரசியல் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றும் எந்தவொரு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சரோ பாதாள உலகத்துடன் தொடர்புகளைப் பேணுவதில்லை என்றும் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாதாள உலகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக சில நடவடிக்கைகளை வெளியிட முடியாது என்றும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

பாதாள உலக குழுக்களின் தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையில் எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என முன்னதாக தெரிவித்துள்ளார்.

சாரதியை ‘கழுதை வாடா – பூருவா, வரேன்’ என அழைத்த அனுர தரப்பு எம்.பி – வலுக்கும் கண்டனங்கள் !

சாரதியை ‘கழுதை வாடா – பூருவா, வரேன்’ என அழைத்த அனுர தரப்பு எம்.பி – வலுக்கும் கண்டனங்கள் !

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியை கழுதை என அழைத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை பேசுபொருளாகியுள்ளது.

பாதாள உலக குழுவை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விடயங்களை ஆராய சுனில் வட்டகல புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார். இதன்போது, அவரை சூழ்ந்த ஊடகவியலாளர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் திறன் குறித்து கேள்வி எழுப்பினர்.

இவற்றுக்கு பதிலளிக்க மறுத்த பிரதி அமைச்சர், ‘பூருவா, வரேன்’ (கழுதை, இங்கே வா) என கடும் தொனியில் தனது சாரதியை தொலைபேசி மூலம் அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுனில் வட்டகல தனது ஓட்டுநரை பூருவா (கழுதை) என்று அழைத்தமை குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வருத்தம் தெரிவித்திருந்ததுடன் குறித்த சந்தர்ப்பத்தில் பிரதியமைச்சர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

கொலைகாரன் லவ் க்ரஷ் மெட்டீரியல் ஆக்கிவிட்டீர்கள். விசாரணை எப்போது…? பாராளுமன்றில் சாமர சம்பத் துப்பாக்கியைக் கொடுத்த பெண் இந்தியாவிலா ?

கொலைகாரன் லவ் க்ரஷ் மெட்டீரியல் ஆக்கிவிட்டீர்கள். விசாரணை எப்போது…? பாராளுமன்றில் சாமர சம்பத் துப்பாக்கியைக் கொடுத்த பெண் இந்தியாவிலா ?

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நாடாளுமன்றில் கேள்வி பதில் நேரத்தில் நேற்று அவர் கருத்து தெரிவிக்கையில், புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு பிரதான சந்தேக நபரை 8 மணித்தியாலங்களில் கைது செய்தாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் கூறினார். பொலிஸ் திணைக்களம் 8 மணித்தியலங்களில் திறமையாக சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் மற்றைய சந்தேக நபரான பெண்ணை இதுவரை கைது செய்யவில்லை. அந்தப் பெண் நீர்கொழும்புக்கு சென்று துப்பாக்கிதாரியிடம் இருந்து பிரிந்து தனியாக சென்றுள்ளார். ஆனால் பிரதான துப்பாக்கிதாரி மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் நீங்கள் இவ்வாறு கூறினாலும் ஊடக செய்திகளில் டுபாயில் இருந்து துப்பாக்கிதாரி காட்டிக்கொடுக்கப்பட்டமையினாலேயே துப்பாக்கிதாரியை கைது செய்தாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இது எமது திறமையால் அன்றி டுபாயில் இருந்து பாதாள கும்பலால் காட்டிக்கொடுத்தமை ஊடாகவே அவர் கைதாகியுள்ளார். இப்படிதான் ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை சந்தேக நபரின் படங்களை வெளியிட்டு நாட்டுக்கு வீரராக்கியுள்ளீர்கள். இவ்வாறு புகைப்படங்களை பகிர்வதற்கு இடமளிக்க வேண்டாம். அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினரை பார்த்து சிரித்து, காதல் கொள்வது போல் காணொளிகள், படங்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் எவ்வாறு சமூக வலைத்தளங்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளியாகின என்பது தொடர்பில் விசாரணை செய்யுங்கள் என்றார் சாமர சம்பத்.

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கியைக் கடத்தி வந்த பெண் சில சமயங்களில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகங்களும் தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரின் தாகம் வெள்ளாள சாதியத் தாயகம்: Jaffna College – யாழ்ப்பாணக் கல்லூரியில் வண பிதா பத்மதயாளனுடன் முரண்படும் பழையமாணவர்கள் !

தமிழரின் தாகம் வெள்ளாள சாதியத் தாயகம்: Jaffna College – யாழ்ப்பாணக் கல்லூரியில் வண பிதா பத்மதயாளனுடன் முரண்படும் பழையமாணவர்கள் !

வட்டுக்கோட்டை சாதியத்தின் கோட்டையாகி தவறான காரணங்களுக்காக பிரபல்யம் அடைந்து வருகின்றது. அங்குள்ள சில சாதி வெறியர்களோடு யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் தங்கள் சாதிய முகத்தைக் காட்டியுள்ளனர். தற்போதைய பிசப் வண பிதா பத்மதயாளன் கல்வியில் முன்நிற்கும் வெள்ளாளர் அல்லாத சமூகத்தவர். இதனைக் காரணமாக வைத்து பழைய மாணவர் சங்கத்தினர் அவருக்கு எதிராகக் காய்களை நகர்த்துகின்றனர். இந்தச் செயற்பாடுகளுக்குப் பின்னணியில் வண பிதா தியாகராஜா இருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

தற்போதைய அதிபர் ஓய்வுபெறும் நிலையில் புதிய அதிபரை நியமிக்கும் பொறுப்பு வண பிதா பத்மதயாளனுக்கு உள்ளது. பழைய மாணவர் சங்கத்தினர் தங்களுடைய யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வெள்ளாளரல்லாத ஒருவர் அதிபராக வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக உள்ளனர்.

ஆறுமுகநாவலர், வெள்ளாளர் அல்லாதோருக்கு பெண்களுக்கு கல்வியை மறுத்துவந்தவர். ஆனால் கத்தோலிக்கத்தின் வளர்ச்சியால் வெவ்வேறு சமூகங்களிலுள்ளவர்களும் கல்வியில் வளர்ச்சி கண்டனர். அதன்பின் கன்னங்கராவின் இலவசக் கல்வித் திட்டத்தால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மத்தியிலும் கல்வி வளர்ச்சி ஏற்பட்டது. யுத்ததைத் தொடர்ந்து வசதிபடைத்த வெள்ளாளர் சமூகம் பெரும்பாலும் புலம்பெயர ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விகிதம் யாழ் மண்ணில் அதிகரித்தது. யாழில் தற்போது வெள்ளாளரல்லாத சமூகத்தவர் 60 வீதம் வரை காணப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. இருந்தாலும் கல்விக்க மற்றும் கட்டமைப்புகளின் முக்கிய பொறுப்புக்களில் வெள்ளாளரல்லாதோர் வருவது இன்னமும் போராட்டமாகவே உள்ளது. அது யாழ்ப்பாணக் கல்லூரியிலும் எதிரொலிக்கின்றது.

கல்வி மற்றும் தகமைகளில் மேன்மையானவர்கள் இருந்த போதும் அவர்கள் பொறுப்பான பதவிகளுக்கு வருவதை வெள்ளாள சமூகத்தினர் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். அதே சமயம் தகுதியற்றவர்கள் வெள்ளாள சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டால் அதைப் பற்றி மௌனமாகவே இருக்கின்றனர். யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபர் இந்திரகுமாரை அவர் மேலதிக தகுதி பெற்றிருந்த போதும், வெள்ளாளர் அல்ல என்பதால், அவரை பதவியிலிருந்து அவரை வெளியேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது சிவபூமி அறக்கட்டளையூடாக் கோடிக்கணக்கில் பணம் சேர்க்கும் அதிபராவதற்கான தகுதியற்ற ஆறு திருமுருகன் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் அதிபராக இருந்த போது அவரை வெளியேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ஸ்கந்தவரோதயா மாணவர்களின் பெற்றோர் ஆறுதிருமுருகனை பாடசாலையிலிருந்து விரட்டினர்.

வட்டுக்கோட்டை சாதிய வெறியாட்டங்களின் பின் முக்கிய புள்ளியாக நின்றவர் தன்னை வேளாள வட்டுர் குருவி என்று சாதியை முன்நிறுத்தி அழைத்தவரும் யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரே. இந்த வட்டூர் குருவி மீது அடிதடி, கொள்ளை, கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளது. இருந்தாலும் சங்கரத்தை பத்திராளி கோயிலில் இவர் முடிசுடா மன்னனாக தனது மோட்டார் சைக்கிளில் குருவி என்று எழுதி, தன்னுடைய சாதியத் திமிரைக் காட்டி வருகின்றார். தேசம்நெற் இல் செய்தி வெளியானதையடுத்து இவர் தனது முகப்பக்கத்தில் சாதிய கோசத்தை நீக்கியுள்ளார்.

தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் மனித உரிமைகள் பற்றி எவ்வளவு ஓங்கிக் குரல்கொடுத்த போதும் தம்மோடு வாழ்கின்ற 60 வீதமான ஒடுக்கப்பட்ட சமூகங்களை இன்னமும் சரிசமானமாக நடத்தவில்லை. சிங்களவர்கள் தங்களைச் சரிசமானமாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தங்களுக்குள் 60 வீதமானவர்களை மிக மோசடாக இன்றும் அடக்கி ஒடுக்கி கேவலப்படுத்தி வருகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் இவர்கள் அப்போராட்டத்தை முன்னெடுத்த தலைவர் வே பிரபாகரனின் சமூகத்தில் கை நனைக்க மாட்டார்கள், பெண் எடுக்க மாட்டார்கள் பெண் கொடுக்க மாட்டார்கள். தமிழரின் தாகம் வெள்ளாள சாதியத் தாயகம் மட்டுமே.